Friday, October 22, 2010

மீண்டும் பதிவுலகம் திரும்புகிறேன்.

ஒரு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவுலகம் திரும்புகிறேன்.
தொடர்ந்த தோல்விகளால் ஏற்பட்ட மனத்தொய்வும், சலிப்பும் படிப்பதற்கும்
எழுதுவதற்கும் மனமில்லாமல் போனது...என்ன பெரிசா சொல்லிடபோறோம்
என்ற உறுத்தல் வேறு..

எவ்வளவு பெரிய சாதனையாளனாக இருந்தாலும், வீட்டுக்காரிக்கு புருஷன் தான்..குழந்தைக்கு தகப்பன் தான். பணம் சம்பாதிப்பது தான் மரியாதை....பணத்தை திங்க முடியாது தான். ஆனால் பணம் இல்லாமலும் திங்க முடியாது. எல்லாத்துக்கும் பணம் வேண்டும்...?

சில கசப்புகள் வெளிச்சத்துக்கு வருவதேயில்லை. அதில் ஆண்களின் கண்ணிர்கதைகளும் பல உண்டு...

மற்றபடி நண்பர்கள் அனைவரும் நலமா...அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Wednesday, March 31, 2010

விளம்பர கம்பனியில் மார்கெட்டிங் வேலைவாய்ப்பு

கோவை நகரில் இயங்கிவரும் EX MEDIA என்ற விளம்பர நிறுவனத்திற்கு Marketing Executives தேவை.

Job Designation : Marketing Executives
Qualification : Any Degree / டிப்ளோம
Experience : 1 to 3 years (Freshers can also apply)

Salary : 7500 to 25000 (Depends upon the experience )
Contact No : + 91 9790850298
Mail to : exmediaa @gmail.com

உடன் தொடர்பு கொள்ளவும். உங்கள் நண்பர்கள் யாரவது வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால் உதவலாம்.

Saturday, March 13, 2010

பதிவர் மாத இதழ் வெள்ளிநிலா Vs பதிவர்கள் - ஒரு விமர்சனம்


நமது பதிவர் மாத இதழ் வெள்ளிநிலா குறித்து ஒவ்வொரு மாதமும் பத்திரிகை வெளிவந்தவுடன், விமர்சனம் அதாவது அந்த மாத இதழின் நிறை குறைகளை பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. இது பத்திரிக்கை மெருகேருவதர்க்கும் உதவியாக இருக்கும் மேலும் படைப்பாளிகளை ஊக்கபடுத்துவதாகவும் இருக்கும் என்பது என் எண்ணம்.

இந்த மாத விமர்சனத்தை நான் தொடக்கி வைக்கிறேன். அடுத்து அடுத்து பிரபல பதிவர்கள் வெள்ளிநிலாவை நோக்கி விமர்சன கணைகளால் துளைப்பார்கள் என்று நம்புகிறேன். வெள்ளிநிலா சர்புதீன் ஜாக்கிரதை.

முதலில் இதழின் அமைப்பு குறித்து சில வார்த்தைகள்.

1. பத்திரிக்கை முழுவதும் ஒரே வகையான எழுத்துரு (Font ) உபயோகபடுத்தினால் நன்றாக இருக்கும். (விளம்பரங்களை தவிர)

2. ஒவ்வொரு பதிவிலும் எழுத்து பிழைகள் இருக்கிறது. சர்புதீன் சாருக்கு இன்னும் கொஞ்சம் விளக்கெண்ணை தேவைபடுகிறது. கண்ணில ஊற்றி தேடத்தான்....இதை கொஞ்சம் கவனித்தால் தேவலை...

3. பல இடங்களில் படைப்பிற்கும், புகைப்படங்களுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. மொக்கைசாமி பேசுவதற்கு வெள்ளைக்காரன் படம் எதற்கு சார்....? பதிவு பற்றாகுறையால் படங்களை சில இடங்களின் பெரிதுபடுத்தி மெகா சைசில் போட்டிருகிறீர்கள் என நினைக்கிறேன்.

4. இசுலாமிய பத்திரிக்கை இல்லை என்று சர்புதீன் கதறினாலும் ஆங்கங்கே தலை நீட்டி விடுகிறது. விளம்பர நிறுவன பெயர்கள், ஈரானிய திரைப்பட விமர்சனம், காயல்பட்டின கல்லூரி விழா செய்திகள், FORM IV தகவல்கள் என...இசுலாமிய வாடை. வணிக ரீதியாக இதை எல்லாம் தவிர்க்க முடியாது தான். (விளம்பரம் தரணுமே..) பதிவர்கள் எல்லோரும் மனது வைத்து சந்தா செலுத்தினால் இதை வரும் காலங்களில் தவிர்க்கலாம்.

5. மாதம் ஒரு பரிசு திட்டத்தை வைத்து, புதிய, பழைய பதிவர்களை ஊக்கபடுதலாம். பரிசு கனமா இருக்கணும். சும்மா ஒரு சீப்பு, 100 கிராம் நல்லெண்ணெய் பரிசென்றால் யாரும் வர மாட்டார்கள். பரிசு பெற்றவர் விபரத்தை நாங்கள் செக் பண்ணுவோம்....உஷாரு..!

இனி படைப்புகளை பார்ப்போம்...

இந்த வாரமும் தலையங்கம் போல் அமைந்திருந்தது ஈரோடு கதிரின் "சினிமாவும் மூச்சுதினறலும்" என்ற ஆக்கம். கொஞ்சம் பழைய மேட்டர் என்றாலும் தமிழுலகை பொறுத்தவரை இது சாக வரம் பெற்ற மேட்டர் என்பதால் எக்காலத்திற்கும் பொருந்தும்.

\\தினம் தினம் நாற்றம் பிடித்த நம் வீதிகளில் முகம் சுழிக்காமல் சாக்கடை அள்ளியெடுக்கும் துப்புரவு தொழிலாளி...இரசாயனம் கலந்து மலடான பொட்டல் காட்டின் மத்தியில், குடிக்க சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் சாமானியன்... " என்று இவர் பட்டியலிடும் நமது பாட்டாளி வர்க்கம் ஒரு சினிமா நடிகன் போலவோ, அல்லது நடிகை போலவோ தங்கள் குறையைச் சொல்ல முதல்வரை இப்படிச் சந்தித்திட முடியுமா?\\ என்ற நியாயமான கேள்விக்கு எப்போதுமே பதில் கிடைக்காது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரின் மன ஆதங்கத்தை இறக்கி வைத்ததோடு வேலை முடிந்துவிட்டது. வேறு என்ன செய்ய...?

"எண்பது-தொன்னூறு வயதாகியும் வெறும் எலும்புக் கூடாய் உழைக்கும் கிழவனுக்கொ, கிழவிக்கோ வாழ்நாள் உழைப்பாளி என்று விருது கொடுக்கவோ இங்கு ஒரு நாதியும் இல்லை". ஆளும் வர்க்கத்தை நச்சென்று கொட்டியிருக்கிறார். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. இந்த வரிகளுக்கு ஆட்டோவோ, அரிவாளோ வந்தாலும் வரும். பார்த்து கதிர் சார்..

கோவை எம். தங்கவேலின் (தனக்கு நேர்ந்த) அனுபவத்தை படிக்கையில் வேதனையாக இருந்தது. யதார்த்தம் இது தான். என்ன சொல்வது ..நாமாவது எங்காவது இறக்கி வைக்கிறோம். பலபேர் வெளியே சொல்லகூட அஞ்சி மனதுள் மருகிகொண்டிருகிறார்கள். Survival of Fittest எனும் தியரிபடி வரும்காலத்தில் ஆளும் வர்க்கத்தை எதிர்க்க திராணி இல்லாமல் நாம் அழியவேண்டியது தான்.

வார்த்தைகளின் அவசியம் குறித்த சுரேகாவின் பதிவு நன்றாக இருந்தது.

சிரிப்பு போலிசு காமெடியின் உச்சம். IPL டிக்கெட் இல்லாம வண்டி ஒட்டின பைனா...? இது நாலாயிருக்கே.. ஏற்கனவே நம்ம போலிசுக்கு காரணம் சொல்ல தெரியாது. ஷாஜஹான் போட்டுகொடுதிட்டார்.

ஆதிமூலகிருஷ்ணாவின் நினைவுகளின் ஆழத்தில் உறைந்திருக்கும் சொல்லப்படாத சில நன்றிகள் எல்லோரையும் ஒரு கணம் யோசிக்க வைத்திருக்கும். யார் யாருக்கு நன்றி சொல்ல மறந்தோமோ வாழ்வில். இதை ஒரு தொடர் பதிவாக போட்டிருந்தால் ஒரு வாரம் ஓடியிருக்கும்.

பதிவர்கள் புத்தக திருவிழா மீண்டும் ஒருமுறை பார்க்க நேர்ந்தது. சந்தோசம். அப்படியே ஒரு சந்தேகமும். கடைசி வரிகளில் \\கேபிள், பரிசல் எழுத்தாளர் உருவம் எடுத்திருப்பதை எல்லா பதிவுலக நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறோம்\\ என்றிருந்தது. புத்தகம் வெளியிட்டாதான் எழுத்தாளர்களா...பதிவுலகில் எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் கிடையாதா..என்னா போங்கு சார் இது...

ஜவகர்லாளின் உப்புமாவும் சிக்குமாவும் படிக்க நன்றாக இருந்தது. நல்ல நடை சார்... ஆனால் அரைப்பக்கத்தில் முடிக்க வேண்டிய கதையை ஏன் ஒரு பக்கத்திற்கு இழுத்தார்கள் என தெரியவில்லை.

பட்டபெயர் குறித்த உழவனின் ஆக்கம் நன்றாக இருந்தது. எனக்கு ஏதும் பேர் போட்ட்ராதிங்கோ சார். .ஜீவன் சிவமே இருக்கட்டும்.

இந்த இதழின் திருஷ்டி பரிகாரமாக இருந்தது சண்டிகார் குறித்த கட்டுரை. ஏனோ இந்த இதழுக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் இருந்தது போலிருந்தது. படங்கள் வேறு பெரிது பெரிதாக. பதிவரை தப்பு சொல்லவில்லை சார்...அதுவேற பிரச்னையாகிட போகுது..

சஞ்சயின் பிரபல பதிவாரவது எப்படி...கொஞ்சம் உபயோகமான விஷயம் தான். ஆனால் இன்னும் உள்குத்து விஷயங்கள் நிறைய இருக்கு சார்...அதையும் சொல்லியிருந்தா கொஞ்சம் நேர்மையான பதிவா இருந்திருக்கும். பதிவர் மதாருக்கு இப்ப பிரபல பதிவர் ஆவது எப்படி என்று புரிந்திருக்கும்..என நினைக்கிறேன்.

தேனீர் கதையம்சம் நன்றாக இருந்தது..ஆனால் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்க முடியும் என நினைக்கிறேன்.

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக எனும் தலைப்பிட்டு விட்டு, குழந்தை வளர்ப்பு பற்றி தகவல் இருந்தது. சறுக்கியது யார் பதிவரா...ஆசிரியரா...

சஹானா பதில்கள் நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் சேர்த்து கொடுங்க சார்...அடுத்த மதன் உருவாக்கிட்டு இருக்கார்.

பட்டர்பிளை சூர்யா சார் கொஞ்சம் ரஷ்ய, பிரெஞ்சு படங்களை பற்றியும் தகவல்களை தாங்க சார்...நன்றாக இருக்கும்.

இவன் என்ன பெரிய புடுங்கியா எல்லோரையும் பற்றி விமர்சனம் பண்ணுவதற்கு என்று யாரும் கொதித்துபோய் என்னை தேட வேண்டாம். அடுத்த மாதம் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போ சும்மா கிழி கிழின்னு கிழிங்க... அப்ப இந்த வார மார்க் போட்ரலாம....

இப்ப தான் மூன்றாம் பிறை விரைவில் முழு நிலவாக வாழ்த்துகள்

35/100 JUST PASS…. இன்னும் வளரனும் சார்...

ஆமாம்...ஊரே அல்லோல கல்லோல பட்ட, பதிவுலகமே வெகுண்டெழுந்த நித்தி, சாரு மேட்டர் பத்தியெல்லாம் ஒண்ணுமே வரலையே....ஒரு பெட்டி செய்தியாவது போட்டிருக்கலாமே....(கொலைவெறியோட சர்புதீன் என்னை தேடுவார்னு நினைக்கிறேன்.)

Thursday, March 4, 2010

யார் ஞானி...? தொடர் பதிவு

ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்டால் ஆன்மிகம் செத்துபோயவிடும். மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது இங்கே ஏதோ ஒன்னு இருக்கு என்ற சம்சயம் எல்லோருக்கும் வருவதுண்டு. கடவுளை குறித்த தேடலுக்கு சரியான வழிகாட்டி அமைவது மிக முக்கியம். இல்லையென்றால் நித்ய போன்ற போலிகளிடம் நம்பி ஏமாறவேண்டியது தான்.

உண்மையான ஒரு சித்தனோ, ஞானியோ, சந்யாசியோ, சாதுவோ எப்படி இருப்பார்கள் என்பது குறித்து ஒரு தொடர் பதிவு போட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அது மட்டுமல்ல தாசியிடம் படுத்தவனின் தரசான்றிதழ் குறித்து மூன்று நாட்களாக படித்து படித்து மண்டையெல்லாம் படுக்கையறை காட்சிகளும், சரியான நேரத்தில் விளக்கை அனைத்து விட்டாளே சண்டாளி என்று கொந்தளித்த பல நண்பர்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய இந்த தொடர்பதிவு.

உங்கள் அனுபவத்தில் ஏதாவது ஒரு உண்மையான சாதுவை கண்டிருகிறீர்களா... அவர்களின் குணாதிசயம் என்ன...ஒரு ஞானி எப்படி இருப்பார் என்பது குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன..?

இதோ என் எண்ணங்கள்..யார் ஞானி...?

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.
2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.
3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.
4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.
5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.
6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.
7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி
அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.
9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். 10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து உங்கள் எண்ணங்களை இங்கு பதிவு செய்யுங்கள். உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு பயன்படலாம்.

ரிஷபன்
சைவகொத்துபரோட்டா
SUREஷ்
பலாபட்டரை சங்கர்
மங்குனி அமைச்சர்
பிரியமுடன் வசந்த்
வெள்ளிநில சர்புதீன்
வேலன் அண்ணாச்சி
யுவகிருஷ்ணா
பித்தனின் வாக்கு
ஜோதிஜி
பழமைபேசி
ஐயா ஜெயராஜன்
தோழி பவி
பெயர் விடுபட்ட எல்லா நண்பர்களுக்கும்.

கதவை திறவுங்கள்.... நித்யா நாற்றம் போகட்டும்

சிக்கிகொண்ட ஒரு கருப்பு ஆட்டின் இரத்தத்தை எல்லா நரிகளும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருக்கையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று தான் யோசித்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லா நரிகளும் இங்கு உத்தமர் வேஷம் பூண்டிருப்பதை சௌகர்யமாக நாம் மறந்து விடுகிறோம். ஏற்கனவே இவர்கள் சாமியார்கள் அல்ல என்னும் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். வழக்கம் போல அது உண்மையை பேசியதால் சொல்லிகொள்ளும்படி பின்னூட்டத்தையோ, ஓட்டுகளையோ பெறமுடியாது ஒரே நாளில் இணையத்தில் முடங்கிவிட்டது. அதன் கோபத்தில் நான் எழுதிய ரம்பாவுக்கு கல்யாணம் என்னும் பதிவு தமிலிஷில் பிரபலம் ஆகி ஓட்டுகளையும், பின்னூட்டத்தையும் வாரி குவித்தது வேறு கதை.

அதனால் வெகுஜன ரசிப்புதன்மை என்பது எது என்பது எனக்கு ஓரளவு புரிந்தது. மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்ட தொழில் போட்டியை சமாளித்தாக வேண்டிய கட்டத்தில் இன்றைய எல்லா ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. பல சமயங்களில் அதன் தரத்திலும் பல படிகள் இறங்கி வந்து போட்டியை சமாளிதாகவேண்டிய கட்டாயம்.

மிக எளிதில் மக்களை ஆட்கொள்ளும் விஷயங்கள் இரண்டு. அவ்வபோது சினிமா, எப்போதும் ஆன்மிகம்.

நடிகைக்கு மிகவும் பிடித்த உள்ளாடையின் நிறம் என்ன என்பதிலிருந்து, எல்லாவிதமான பேட்டிகளும், நடிகன் "குசு" விட்டால் கூட ஆளும்கட்சிக்கு எதிராக கொடிபிடிப்பவன் என கட்டம் கட்டி பரபரப்பு கூட்டி, கல்லா கட்டும் வியாபார உத்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. கூடிய விரைவில் அம்பானிகளை பின்னுக்கு தள்ளும் திறமை நம்மாட்களுக்கு உண்டு என்பது உலகிற்கு தெரியவரும். மிகவும் பிரபலமான ஒரு குடும்ப கட்சியிலிருந்தே அத்தகைய தொழிலதிபர் வரக்கூடும்.

அடுத்து ஆன்மிகம். ஒவ்வொரு சேனலும் கலந்து கட்டி அடிக்கும் கூத்து. பல நூறு வருடங்களாக பின்பற்றி வரும் நம்பிக்கைகள் நடந்தது என்ன...நிஜம் என்ற பெயரிலெல்லாம் களங்கபடுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க முடியாது. எதையாவது புதிது புதிதாக செய்தாக வேண்டும் என்ற வாழ்வாதார பிரச்சனைக்கு முன்னால் பாரம்பர்யம், சாதரனர்களின் நம்பிக்கைக்களுக்கு எல்லாம் மதிப்பு கொண்டுத்துகொண்டிருக்க யாரும் தயாரில்லை. ஊடகங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் செல்வாக்கு சாதரனர்களின் வாயை அடைத்துவிடுகிறது.

அபரிமிதமான தொழில் வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு இணையான இந்திய கல்வி முறையின் வளர்ச்சி எல்லாம் இருந்தும் நம் சமயத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, அதன் தத்துவார்த்த உண்மைகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டிருப்பதையே உணர்த்துகிறது. கருப்பர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை எப்படி வெள்ளையர்கள் உலகம் முழுவதுமே ஏற்படுத்தினார்களோ அதை போல. எந்த ஒரு இந்தியருக்குள்ளும் ஏன் பிற மதத்தவராக இருந்தாலும் அவரிடம் இந்து மத நம்பிக்கைகள் உள்ளோடியிருப்பதை காணமுடியும். தன மகள் திருமணதிற்கு ஜாதகத்தை தூக்கி அலையும் எத்தனையோ இஸ்லாமிய / கிறிஸ்தவ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த நம்பிக்கைகளையும், சாதரனர்களின் தேடல்களையும் தான் நித்தியானந்தன் போன்றவர்களை கபடதாரிகளாக்குகிறது. ஒரு சாதாரண அன்றாடங்காய்ச்சிகளுக்கே பெண் சுகம் தேவைப்படும்பொழுது, கோடிகளில் புரளக்கூடிய, ஏசி, லேப்டாப் வசதிகளுடன் சகல மரியாதைகளுடனும் திரியும் இவனை போன்றவர்களுக்கு "அரிப்பு" ஏற்படாது என்று நம்புவர்கள் தான் முட்டாள்கள். அது சாருவாக இருந்தாலும் சரி,சாதரனர்களாக
இருந்தாலும் சரி. "எல்லோரையும் போல் நானும் நம்பினேன். அதற்காக நான் தற்கொலையா செய்துகொள்ள முடியும்" என்று ஒரு அப்பாவியாய் கேள்வி கேட்டு ஒரு சமூக பொறுப்புள்ள எழுத்தாளன் தப்பித்து கொள்ள முடியாது. மாங்கு மாங்கென்று உருகி உருகி பதிவில் எழுதியதெல்லாம் ஒரு delit option - ல் இல்லையென்று ஆகிவிடாது.



கொலைவழக்குகளில் அடிபட்ட ஜெயந்திரன், கருவறையின் புனிதத்தை கேவலபடுத்திய தேவநாதன், தாசிகளை தழுவி மோட்சம் தேடும் நித்யனந்தர்களையும் உருவாக்குவது இன்றைய சமூக சூழல்தான். பேராசை, சுயநலம், காமவெறி கொண்டலைபவர்களுக்கு ஆன்மிகம் இறுதி அடைக்கலம் என்ற நிலைமை மாற வேண்டும். உண்மையான ஆன்மீகத்தையும், போலி சாமியார்களையும் பிரித்தறியும் வழிவகைகளை அறிவது மிக முக்கியம். நானொரு சாமியார் அல்ல. ஆனால் ஆன்மிகம் குறித்த தேடல் உள்ளவன். அந்த தேடலின் விளைவாக பல சன்யாசிகளையும், ஆன்மீக புத்தகங்களையும் வாசித்தரிந்தவன். என் பார்வையில் ஒரு ஞானியோ, சித்தனோ இப்படிதான் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர்களுகென்று சில குண ஒற்றுமைகள் உண்டு. அது..

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.
2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.
3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.
4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.
5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.
6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.
7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி
அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.
9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். இன்னும் சில காரணிகளை வைத்து நாம் ஞானிகளை கண்டறிய முடியும்.
10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

இந்த பதிவு ஒரு கோபத்தில் எழுதினாலும் முடிக்கையில் வெறுமையும் வேதனையுமே மிஞ்சுகிறது. உண்மையை ஏற்றுக்கொள்ளவோ, நல்லதை நாலு பேருக்கு சொல்லவோ யாருக்கும் நேரமும் இல்லை. மனமும் இல்லை. பணமே இங்கு பிரதானமாகிவிட்டதில் நாம் இழந்தது நிறைய. அமைதியான ஆன்மீகமான வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, பெண்களின் குண்டியை நக்கி கொண்டிருப்பவனைஎல்லாம் (நன்றி சாரு) கடவுள் என்று நம்பி மோசம் போய்கொண்டிருக்கிறோம்.

Monday, March 1, 2010

உங்கள் வாரிசுகள் ஜாக்கிரதை...!!

சமீபத்திய ஒரு ஆஸ்திரேலிய மருத்துவர்களின் ஆராய்ச்சி குறிப்பு " உடற்பருமனான குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு முன்னரே இறக்க கூடும் " என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. பொதுவாகவே நம் இந்திய தாய்மார்கள் தங்கள் குழந்தையை கொழு கொழு என்று வைத்திருப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். குழந்தையின் வயதிற்கு மீறிய, அவசியத்திற்கும் மேற்பட்ட அதிகமான சத்து நிறைந்த உணவு வகைகளை கொடுப்பதால் அவர்களின் எதிர்கால ஆரோக்கியம் முற்றிலும் கேள்விக்குறியாகிறது.

தவறான உணவு பழக்க வழக்கங்களுக்கு குழந்தைகள் அடிமையாக பல சந்தர்பங்களில் அவர்களின் பெற்றோரே காரணமாக இருக்கின்றனர். குழந்தைகளின் வாயை கட்டுவதை விட கடுமையான காரியம் பெற்றோர்களின் வாயை கட்டுவது என்ற நிலையில் Child Obesity தவிர்க்க முடியாததாகிறது.

எல்லாவற்றிலும் வேகம் வேகம் என்று ஓடிகொண்டிருக்கிறோம். வெந்ததை வேகாததை தின்றுவிட்டு கணினி முன் மணிகணக்கில் கழிகிறது வாழ்க்கை. பொறுமையாக ஆற அமர உண்பதோ, ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி என்பதோ சாத்தியமில்லாத வாழ்க்கைமுறையாக மாறிகொண்டிருக்கிறது.



குறைந்தபட்சம் உங்களின் வாரிசுகளையாவது கொஞ்சம் கன்ட்ரோல் செய்வது அவசர அவசியம். எப்படின்னா..

1 . சமச்சீர் உணவு அதாவது உங்கள் குழந்தையின் வயது, எடை, மற்றும் அதன் செயல்பாடுகளை (Physical Activities) பொறுத்து உணவுகளை தேர்ந்தெடுக்க உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2 . ஆரோக்கியமான உணவு எவை என்பது குறித்து, (பாட்டி சொன்னது) அவ்வப்போது உங்கள் ஜூனியர் காதில் போட்டு வையுங்கள்.

3 . அதிக எடையுள்ள குழந்தைகள் பெரும்பாலும் தாழ்வுமனப்பன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. எனவே எக்காரணம் கொண்டும் அவர்களை இளைக்க வைக்கிறேன் பேர்வழி என்று எதையும் வலுக்கட்டாயமாக திணிக்காதிர்கள்.

4 . குழந்தைகள் சாப்பாடு விஷயத்தில் அவர்களின் பிடிவாதத்திற்கு வளைந்து கொடுக்காமல், அவர்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள்.

5 . ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், அவர்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அல்லது வெளியிடங்களின் விற்கும் தரம் குறைந்த உணவுகளை சாப்பிட்டு பழகாமல் பார்த்து கொள்வது பெற்றோர்களின் தலையாய கடமை.

ஏதோ ஊதாரசங்கை ஊதிட்டேன். மற்றபடி ராசா உன் சமத்து.

Friday, February 26, 2010

கீழ்த்தரமான மருத்துவர்கள்

சமீபத்தில் ஒரு மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. தர்மபத்தினி படியில் கால் சறுக்கி எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. நகரின் புகழ் பெற்ற எலும்பு நிபுணர். வழக்கமான ஸ்கேன் பரிசோதனை எல்லாம் முடித்து மாவு கட்டு போட்டார்கள். வலி குறைவதற்காக மாத்திரை எழுதிகொடுத்தார். கையில் கொண்டுபோன பணம் பற்றவில்லை என்பதால் மாத்திரையை அப்புறம் வாங்கி கொள்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.

வீட்டிற்கு வந்தபின் பணம் எடுத்துகொண்டு ஒவ்வொரு மருந்துகடையாக ஏறி இறங்கியும் அந்த டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரைகள் எங்கும் கிடைக்கவில்லை. கடைக்காரர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.

சார்...இது எங்கே ட்ரை பண்ணாலும் கிடைக்காது. அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் அல்லது அருகில் இருக்கும் மருந்துகடையில் தான் கிடைக்கும். இவர் எழுதி இருப்பதில் Tablet - ஐ குறிக்கும் T மட்டும்தான் தெரிகிறது. மற்ற எழுத்துகள் எதுவும் புரியவில்லை. இது ஒரு வியாபார தந்திரம். சிரமம் பார்க்காமல் அங்கேயே போய் வாங்கிகொள்ளுங்கள் என்றார்.


(அந்த டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டு)

மருத்துவர்களின் கையெழுத்து புரியாமல் இருப்பதற்கு அவர்கள் மெத்த படித்தவர்கள் என்பது தான் காரணம் என்று நினைத்திருந்தேன். ஒரு டிவி பேட்டியில் கூட பிரபல மருத்துவர் ஒருவர், நோயாளியின் தன்மையை பொறுத்து, அவர்களை குனபடுத்த கூடிய ஒரு 100 மருந்துகளின் பெயரையாவது மனம் ஞாபகபடுத்தும். அதில் சரியானவற்றை தோன்றும் போது வேகமாக எழுதுவதால் அவ்வாறு மருத்துவர்களின் கையெழுத்து கோணலாக இருக்கிறது என்றார். வியாக்யானம் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் அதற்க்கு பின்னால் இருக்கும் உள்குத்து, வியாபார புத்தி இப்போது தான் இந்த மரமண்டைக்கு எட்டியிருக்கிறது.

இதைவிட கொடுமை என்னவென்றால் ஒரு அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரின் அனுபவம். இவரும் ரொம்ப பிரபலமானவர் தான். இவரின் சிகிச்சைக்காக காத்திருக்கும் அமெரிக்கர்கள் ஏராளம். இவர் ஒரு நாள் விடுமுறை என்றாலும், அவர் வந்தபிறகு சிகிச்சைக்கு வருவதாக சொல்லும் அளவுக்கு அவர் கைராசிக்காரர். இந்நிலையில் அமெரிக்க வாழ்க்கை அலுப்பு தட்டவே இந்தியா வந்து செட்டிலாகும் ஆசையில் இந்தியா வந்திருக்கிறார். அவரின் பெருமையை பற்றி அறிந்திருந்த இங்குள்ள மருத்துவமனைகளின் முதலாளிகள் வழக்கம் போல், அவரை வளைத்து போட்டு கல்லா கட்ட முயற்சிதிருக்கிறார்கள்.

ஆறு இலக்க சம்பளம், கார், வீடு என்று சலுகைகளை அடுக்கி இருக்கிறார்கள். இவரும் பிரபலமான ஒரு மருத்துவமனையில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்க்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிய appointment letter கண்டதும் அதிர்ந்து பின்னங்கால் பிடரியில் பட அமெரிக்காவிற்கே ஓடி விட்டாராம். அதிலிருந்த விபரம் இது தான், ஒரு நாளைக்கு அவர் பரிந்துரை செய்ய வேண்டிய
ஸ்கேன் - 15 ,
இரத்த / சிறுநீர் பரிசோதனை - 10
ECG / ECP / இருதய பரிசோதனை - 5
ஆபரேஷன் - வாரம் 2
எழுதிதரவேண்டிய மருந்துகள் மற்றும் உபகரணங்களின் விபரம்.

மக்கள் சேவை மகேசன் சேவை என்ற போர்வையில் உலாவரும் வெள்ளுடை தரித்த கருப்பாடுகளின் லட்சணம் இது தான். கேட்டால் படிப்பதற்கே 50 லட்சம் செலவாகிறது. மருத்துவமனை கட்ட கோடி கணக்கில் செலவளித்த பணத்தையெல்லாம் நங்கள் எப்படி எடுப்பது என்ற கேள்வி வேறு. சாதாரண மக்களின் உயிரைபற்றி கவலைப்பட இங்குயாரும் இல்லை. சீட்டுக்கு 40 லட்சம் வாங்கும் கல்லூரி முதலைகள் பெரும்பாலனோர் மக்கள் தேர்ந்தெடுத்த அரசியவா(ந்தி)திகள் தான். வசூல்ராஜா M B B S என்ற படத்தின் பெயர் தங்களை கேவலபடுத்துவதாக உள்ளது என்று போர் கொடி தூக்கிய மருத்துவர்கள், ரமணா படத்தில் செத்த பிணத்தை வைத்து இவர்கள் செய்யும் அட்டூழியத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பொழுது வாய்மூடி கொண்டுதானே இருந்தார்கள்.




முன்பெல்லாம் நடுத்தர, சாதாரண மக்கள் பல சிரமங்களுக்கிடையில் நன்கு படித்து டாக்டராக உயர்ந்தார்கள். இன்றெல்லாம் அப்படியில்லை. புறம்போக்கு, பொறுக்கி, அரசியவாதி, உஊரையடிது உலையில் போடுவனின் வாரிசுகள் தான் டாக்டருக்கு படிக்க முடிகிறது. பின் எங்கிருந்து இவர்களிடம் சேவையை எதிர்பார்க்க முடியும்.

தங்கள் மகனையோ, மகளையோ டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற கனவோடு அரைவயிறு கஞ்சி குடித்து பணம் சேர்க்கும் வெகு சாதாரண மக்களே உங்களக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் நினைப்பது போல் டாக்டர் தொழில் ஒன்றும் அத்தனை புனிதமான நிலையில் இன்று இல்லை. அறைவயிரோடு நீங்கள் காணும் கனவெல்லாம் கோடி கொட்டி கட்டிய பணமுதலாளியின் மருத்துவமனை சுவர்களில் சிமெண்டிற்கு பதிலாக பூசப்படும். உங்கள் வாரிசு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கும் அரைவயிறு கஞ்சி என்றாலும் பரவாயில்லை. பணத்திற்காக நாளை அவனும் நம் போன்றோரின் இரத்தத்தை குடிக்கும் பணவெறி பிடித்த இரத்த காட்டேரியாக மாறாமல் இருந்தால் போதும்.

Wednesday, February 24, 2010

சச்சினின் உலக சாதனை...


நடந்து வரும் இந்திய - தென்னாப்பிரிக்க ஒருநாள் கிரிகெட் போட்டியில் அண்ணாத்தே
சச்சின் டபுள் செஞ்சுரி அடித்து உலக சாதனை புரிந்திருக்கிறார். தன்னை தாத்தா என்று கிண்டல் செய்த யுவராஜ்கும், எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கும் பல நிருபர்கள் மற்றும் கிரிகெட் ஜாம்பவான்களுக்கும் சரியான பதிலடி கொடுத்திருகிறார். இதுவரை யாருமே செய்யாத உலக சாதனை இது. இந்தியாவே தலைவணங்கி அவரை பாராட்டும் என நினைக்கிறன். முதல் பதிவாக இங்கே என் பாராட்டுகளை பதிவுசெய்கிறேன்.

நீண்ட நாட்களாக நமக்கொரு குறை ஒரு நாள் போட்டியில் கபிலின் அதிகபட்ச ரன், ரிச்சர்ட்சால் முறியடிக்கப்பட்டு, பின் அதுவும் சயத் அன்வரால் இந்தியாவிற்கெதிராக முறியடிக்கப்பட்டது. கபிலின் இழந்த பெருமை மற்றும் சயத் அன்வரின் இந்தியாவிற்கெதிரான சாதனை சச்சினாலோ, சேவாகலோ முறியடிக்கபடாத என்று. வந்தது அதற்கான நாள். உலக அரங்கில் இனி இந்தியனின் கொடி உயரபறக்கும். சாதனைகள் முறியடிக்கப்படும். அது எப்போதும் இந்தியனால் என்று தான் இருக்கும் இருக்கவேண்டும்.

இனிமேல் யாரும் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்காமல்
இருந்தால் சரி.

Monday, February 22, 2010

ரஜினி தலைமையில் அஜித் புதிய கட்சி துவக்கம்..!


போற போக்க பார்த்த வெகுவிரைவில் இது நடக்கும் போல தெரியுது...ரஜினியின் அமைதி யாரின் சிக்னலுக்காகவோ வெய்ட் பன்ற மாதிரி தெரியுது. சிக்னல் கிடைச்சிட்ட அப்பறம் அடி தூள் தான். ரஜினியின் ஆன்மிகம் மற்றும் அனுபவம் + அஜித்தின் இளமை கூட்டணி ஆட்சி கட்டிலை பிடித்தாலும் பிடிக்கும்.

அஜித் சொன்னது எந்த விதத்திலும் தவறில்லை. சொன்ன இடம் குறித்து நெருடல் ஏற்படத்தான் செய்கிறது. அதே சமயம் அந்த இடத்தை தவிர வேறு எந்த இடத்தில சொல்லியிருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்போ, விமர்சனமோ எழுந்திருக்காது. நேரிடையாக வீட்டில் சந்தித்து விளக்கமும் கொடுத்தாயிற்று..திரும்ப திரும்ப ஒரு நடிகரின் திருப்திக்காக இதை பெரிதுபடுத்தி, ரஜினி அஜித்க்கு ரெட் கார்ட் என்பதெல்லாம்
ஆளுங்கட்சிக்கே பிரச்சனையை கொடுத்தாலும் கொடுக்கும்.

ஊடகங்களின் வளர்ச்சி மக்களுக்கு எல்லா விஷயத்தையும் வெட்டவெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எந்த விஷயத்தால் ஒரு சாதாரண வாக்காளன் உணர்ச்சி வசப்படகூடும் என்பது புரியாத புதிர். ஒருவேளை ரஜினியை அரசியல் கட்சிகள் கட்டம்கட்ட ஆரம்பித்தால் ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பொங்கிவிடுவார்கள். ரஜினியின் இமேஜ் அப்படி.

இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ...

Thursday, February 18, 2010

பருத்தி பூக்கள்...!



அட...!! செடிகூட
முட்டையிட்டிருகிறதே...

எந்த நாகம் தீண்டியதோ..
நுரைதள்ளும் இச்செடியை

கதிரவன் தலை தூக்க
பனியெல்லாம் கரைகிறது.
கரையாத பனியாவென்று
கதிரவன் அனல் கக்க
வானம் பார்த்து பல்லிளிக்கும்
பருத்தி பூக்கள்...!

ஊருக்கே
உடையளிக்கும் இப்பூக்கள்
வெட்டவெளியில் அம்மணமாய்

Saturday, February 13, 2010

இலக்குகள் மிச்சமுண்டு இதயம் சிதறியபின்னும்..!!



நிகழ்வுகளின்
நெருக்குதல்களில்..
கைபிடித்த உறவும்
கைகொட்டி சிரித்தபின்
ஒளிந்துகொள்ள வழியின்றி..
தோல்வியை ஒப்புகொண்டாயிற்று

அம்மனமானபின்
கைகொண்டு எதைமூட...

சா(கு)ம் பிணங்கள்
சாவிற்கு அழும்,
பிணங்கள் அழுததுண்டா..!!

கல்வீசி சென்றவர்கள்
எல்லோருக்கும்
முகமோ முதுகோ
காட்டிவிட்டேன்.

நிராயுதபாணியின் தோல்வியில்
ஆதாயம் தேடிய முகங்களின்
கைகோர்த்து சிரித்த
பழையமுகவரிகள்
பத்திரமாகத்தான் இருக்கிறது

இலக்குகள் மிச்சமுண்டு
இதயம் சிதறியபின்னும்..!!

அம்மணத்தை தின்றவனின்
கைகொரு வைரகாப்பு
முதுகு பார்க்க
முப்பரிமான கண்ணாடி
கல்வீசிய சிநேகிதர்கெல்லாம்

என் செலவில் பரிசளிக்க
எனக்கான ஒரு நாளில்
நானே வருவேன்
மீண்டு(ம்)

பதிவர்களுக்கான மாத இதழ் வெள்ளிநிலாவில்
இக்கவிதை பிரசுரிக்கபட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

Friday, February 12, 2010

நான் தான்டா செங்கிஸ்கான்..!! (இது தமிழ்படம் பாகம் - 2 அல்ல)

செங்கிஸ்கானுக்கு இருப்பே கொள்ளவில்லை. ஒரே படபடப்பாக இருந்தது..இதுவரை இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியாகி விட்டது. ஒன்றும் முடிவாகவில்லை. ரிலீஸ் தேதி வேறு நெருங்கிவிட்டது. இன்று கடைசிகட்ட பேச்சவார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது டீல் ஓகே ஆக வேண்டும்.

செங்கிஸ்கானின் உண்மையான பெயர் நமக்கு தேவையில்லை. அகில உலக, அண்ட பேரண்ட, பிரபஞ்ச நாயகன் ஒருவர் உண்டென்றால் அது செங்கிஸ்கான் தான் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் புது புது பட்டங்கள் சூட்டி அழகு பார்ப்பது ரசிகர்களின் வழக்கம்...இதில் போட்டி வேறு யாரின் பட்டம் மிக உயர்ந்தது என்று. தேர்வு பெரும் பட்டதை சூட்டியவருக்கு நடிகரின் கையால் மோதிரமோ செயினோ நிச்சயம்..

பட்டங்களையும், கோடிகளையும் அள்ளியவர் அடுத்தடுத்த இரண்டு படங்களின் தோல்வியால் மிகவும் தடுமாறி போய்விட்டார். ஜால்ரா கூட்டம் வேறு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது...புது புது சுள்ளான்கள் எல்லாம் கூட்டம் சேர்த்து கொண்டு, தனக்கு பின்புறத்தை காண்பிப்பது போல் அடிக்கடி கனவு வேறு..

மிகப்பெரிய பட்ஜெட்டில் தானே ஒரு படத்தை தயாரித்து இழந்த இடத்தை பெறுவது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கிவிட்டார். கதைகென்று ஒரு 100 பேர் அடங்கிய குழு ஓன்று... உலகின் எல்லா திசைக்கும் பறந்தது. இறுதியில் ஒரு சீனா படத்திலிருந்து கதையின் ஒன் லைனையும், ஆப்ரிக்கா படத்திலிருந்து காமெடி காட்சிகளையும், ரஷ்ய படத்திலிருந்து சண்டை காட்சிகளையும், அமெரிக்க படத்தின் பிரம்மாண்டத்தையும் சுடுவதென தீர்மானிக்கப்பட்டு பூசையும் போடப்பட்டது. படத்தின் பேரில் ஒரு பயர் வேண்டுமென்றும், இன்றைய சுள்ளான்களுக்குகெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுத்து " நான் தாண்டா செங்கிஸ்கான் " என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சூட்டிங் மிக மிக ரகசியமாக நடத்தப்பட்டு காட்சிகள் வேக வேகமாக எடுக்கப்பட்டதற்கு ஏதோ ஏதோ காரணங்கள் வெளியே கசிந்தது. அதில் ஓன்று எந்தெந்த படத்திலிருந்து காட்சிகள் சுடப்பட்டது தெரிந்து விடக்கூடாது என்பது. மற்றொன்று இந்த படம் வெளிவருவதற்குள் திருட்டு DVD வந்து காரியத்தை கெடுத்து விடகூடாது. இந்த படம் புட்டுகிச்சுன்னா " அண்ணாதே கதி அதோ கதி தான்..."

எல்லாம் முடிந்து ரிலீஸ் தேதியும் குறித்தாகி விட்டது..ஆனாலும் ரஷ் பார்த்த நடிகர் திருப்தி படவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்...தனக்கு இனிமேல் எந்த பட்டமும் தேவியில்லை என்றும், பட்டங்களை இனி என் ரசிகர்கள் சூட்டவேண்டாமென்றும்.

உடனே நெருப்பு பத்திகொண்டது. கோடம்பாக்கம் முதல் ஹாலிவூட் வரை இதே பேச்சாக இருந்தது...பட்டம் இல்லாத கோலிவூத் நடிகரா..அதிசயம் என்று எல்லா தமிழ், தெலுங்கு, ஆங்கில, ஹிந்தி சேனல்கள் அலறின...ஆனால் எல்லாம் ஒரு இரண்டு நாள் தான். பின் அதை எல்லோரும் மறந்து விட்டார்கள். ரிலீஸ் இன்னும் ஒரு வாரம் இருந்தது...ஏதாவது செய்தாக வேண்டும்...?

அப்போது தான் எதிர்க்கட்சி தலைவரின் கைதடி ஓன்று தன்னை வந்து சந்தித்து ஒரு அருமையான திட்டம் சொன்னது...தனக்கும் சரி என்று படவே ஓவர் போனிலேயே டீல் நடந்தது...ஒரே இழுபறியாக இருக்கவே இன்று ரகசிய சந்திப்பிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செங்கிஸ்கானுக்கு அது தான் ஒரே டென்ஷன்..இன்று எப்படியாவது டீல் முடியவேண்டும்...சரியாக 11 .00 மணிக்கு தலைவர் வந்துவிட்டார். ஒருமணி நேர பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது..அட்வான்ஸ் தொகையாக 5 கோடி கைமாறியது..

அதன்படி அமெரிக்க அதிபர் பற்றி காரசாரமாக பேட்டி கொடுக்கவேண்டுமென்றும், தமிழ் நடிகைகளுடன் அவர்க்கு இருக்கும் தொடர்பு பற்றி அம்பலபடுத்த போவதாகவும் ஒரு பேட்டியில் செங்கிஸ்கான் கருத்து தெரிவித்தார். உடனே அமெரிக்கா முதல் அமைஞ்சிகரை வரை பற்றிகொண்டது...எதிர்க்கட்சி தலைவர் இதை ஒரு பெரிய தன்மான பிரச்சனையாக எடுத்துகொண்டார். எம் தமிழ் நடிகைகள் என்ன கற்பு இல்லாதவர்களா..ஒரு அமெரிக்கனின் ஆசைநாயகிகளா..ஐயகோ என் இரத்தம் கொதிக்கிறது...? எப்படி சொல்லலாம் அவர்...?

ஹாலிவூட் நடிகர்கள் வேறு வெள்ளைமாளிகை நோக்கி பேரணி நடத்தி மனு கொடுத்தார்கள். அமெரிக்கா இதில் மூக்கை நுழைத்து, ஆளுங்கட்சிக்கு பெரும் தொல்லை கொடுத்தது..... எதிர்பார்த்த மாதிரி படம் ரிலீஸ் ஆனது...கூட்டம் அலைமோதியது.. இரண்டொரு வசனங்கள் வேறு தீபொறி பறப்பதாக இருந்தது..ரசிகர்கள் உயிரை கொடுத்து படத்தை பார்த்தார்கள். செங்கிஸ்கானின் வசனங்கள் டீக்கடை முதல் சட்டசபை வரை எதிரொலித்தது..."செங்கிஸ்கான் மீண்டும் சிம்மாசனத்தில்" என்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள்...

எதிர்கட்சி தலைவர் தன்னை அவசரமாக பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்தது. படத்தின் வெற்றியை கொண்டாடவும், அடுத்த படத்திற்கு மனதை பிரெஷ்ஷாக்கவும் ஆல்ப்ஸ் மலை புறப்பட விருந்த நடிகர் உடனே திரும்பினார். தலைவர் சொன்னதைகேட்டு மயக்கம் வராத குறைதான். 10 கோடி பேசி 5 கோடி அட்வான்ஸ் வாங்கிவிட்டு இப்போது மேலும் 10 கோடி வேண்டுமென்று அடம்பிடித்தார். ஆளும்கட்சிக்கு நம் விஷயம் தெரிந்து விட்டதென்றும் அவர்கள் தங்கள் பங்காக 10 கோடி கேட்கிறார்கள் என்றும் காரணம் சொன்னார். இல்லையென்றால் வருமான வரி சோதனை வந்து மொத்தமும் அள்ளிவிடுவார்கள். வேறு வழியில்லாமல் அழுது தொலைத்தார்.

சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்தது. அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்ட தொடங்கினார்கள். நடிகர் எல்லாத்தையும் ஓரங்கட்டி மீண்டும் ஆல்ப்ஸ் மலைக்கு
பயணபட்டார். ஏர்போர்டில் விமானத்திற்கு காத்துகொண்டிருக்கும் பொழுது அல்லக்கை ஓடிவந்தார். சார் வீட்டிலிருந்து போன். அவசரமாம் சார்.

போனை வாங்கி "ஹல்லோ" என்றவர் விஷயத்தை கேட்டதும் மயங்கி விழுந்தார்.

தண்ணீர் தெளித்து எழுப்பினர். அரக்க பரக்க வெளியே வந்து வண்டி எடுத்தார். வருமான வரி சோதனைக்காக அதிகாரிகள் வந்திருப்பதாக வந்த போன் தான் அது. யோசித்து கொண்டே வந்தவர் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். ஏதோ யோசித்தவர்
"அது தான் சரி" முடிவுக்கு வந்தவராய் அவரின் ஆஸ்தான கவர்ச்சி நாயகி போர்ஷாவிற்கு போன் செய்தார்.

"ஆமாம்"
"அதனால் தான்"
"நான் பார்த்துகிறேன், தெரியாது என்று சொல்"
ஓக்கேவா...ஓகே ஓகே.."

மறுநாள் செய்திதாளில் ரசிகர்களின் இதய தெய்வம் செங்கிஸ்கான் வீட்டில் வருமான வரி சோதனை கோடிகணக்கான பணம், சொத்துக்கான ஆவணங்கள் மீட்பு - தலைப்பு செய்தியாக இடம் பெற்றது.

இரண்டாம் பக்கம் " நடிகர் கண்ணீர் பேட்டி - நான் அப்பாவி, அவை என் சொத்துகளல்ல நடிகை போர்ஷாவினுடையது. நானும் அவரும் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதாகவும் அவர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும்.....

(மீதி வெள்ளித்திரையில்)

டிஸ்கி :
இந்த படத்தில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. யாரையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிடுவன அல்ல.

Thursday, February 11, 2010

களத்துமேட்டில் ஒரு கருப்பு இட்லி...!!



களத்து மேட்டில் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு கருப்பு இட்லியகாத்தான் பார்த்ததும் நினைக்க தூண்டியது. அளவு மட்டும் கொஞ்சம் பெரிது. பெரிது என்றால் இரண்டு பேர் உட்காரக்கூடிய அளவு இருக்கும்.

குட்டைகாலன் தான் முதல்ல பார்த்து, பயந்து அரக்க பரக்க ஓடி வந்து பண்ணைக்கு தகவல் சொல்லியிருந்தான் .

"காலம்பர வெளிக்கு ஒதுங்க வந்தேன். என்னமோ கருப்ப கிடக்கேன்னு தொட்டேன், கைய சுட்டுபுடுச்சு ஆத்தா, இங்க பாரேன்.." புதிதாக வரும் ஒவ்வொருவரிடமும் சொல்லிகொண்டிருந்தான். இதையே கேட்டு கேட்டு காதில் ரத்தம் வர தொடங்கியது...ஏலே சித்த நிறுத்துடா...சும்மா லோ லோ - ன்னுகிட்டு.

மணியகாருக்கு தகவல் போயாச்சா...பண்ணை உரத்த குரலில் கூடியிருந்தவர்களை பார்த்து கேட்டார். தகவல் சொல்லியாசுங்க, அவரும் போலிசுக்கு தகவல் சொல்லி அப்படியே கூட்டியாரக்கு போயிருக்கிராருங்க...சொல்ல சொல்லவே ஜீப்பின் ஹாரன் சத்தம் கேட்டது.

வெறும் 100 தலைக்கட்டு உள்ள சாதாரண கிராமம் இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் இங்கு தான்.

எம்ஜியாரு தான் இங்க முத முதல்ல வந்தாரு. தண்ணி குழா எல்லாம் அவரு போட்டது தான். இப்ப யார் யாரெல்லாமோ வரபோராவுகலாம் ஊரே தடா புடலாக இருந்தது. பண்ணைக்கு இருப்பு கொள்ளவில்லை. இரண்டு நாளாக வரும் போனிற்கு பதில் சொல்லி நாவே வறண்டு போய்விட்டது.

அவர்கள் வாழும் கிராமத்தின் தோற்றமே மாறிபோய்விட்டதில் மணியகாரர் ராமசாமி கவுண்டருக்கு ரொம்பவே வருத்தம். எப்போதும் ஒரு அமைதியான தோற்றத்தை கொண்டிருக்கும் கிராமம் இந்த இரண்டு நான்கு நாட்களாக அல்லோல பட்டுகொண்டிருக்கிறது. பெரிய பெரிய கார்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. புதிய புதிய முகங்கள். யாருக்கும் மரியாதை தெரியவில்லை. பூட்சு போட்டுகிட்டு தான் எல்லா பக்கமும் போறானுங்க... கையில் ஒரு முழத்துக்கு சிகரெட் வேற...அவரின் தோட்டத்துக்கு மத்தியில் தான் அந்த சனியன் வந்து உட்கார்ந்திருக்கு...அவரால் கூட அந்த பக்கம் போக முடியவில்லை. கிராமத்து ஆள் யாரும் அந்த பக்கம் வரகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவரின் மூத்த மகன் சுரேஷ் மட்டும் அவர்களுக்கு உதவியாக அங்கே வைத்து கொண்டார்கள். பட்டினத்துக்கு படிக்க அனுபினதுக்கு இது தான் கண்ட பலன். அவர்கள் கூட சேர்ந்து எங்கே பையன் கெட்டுவிடுவானோ என்று பயம் வேறு. அவன் அப்போ அப்போ வந்து தகவல் சொன்னால் தான் உண்டு.

மஞ்சகாடு அறுவைக்கு தயார நிக்குது...அங்கனே போக முடியல.." ரொம்ப சலித்துகொண்டாள் கவுண்டச்சி. என்னபுள்ள பன்றது...கெடக்கட்டும் விடு..நஷ்டஈடு தந்திடுவாங்கலாமில்ல. கவுண்டர் சமதானபடுதிகொண்டார். சுரேஷ் தான் வந்து தகவல் சொல்லி இருந்தான். சுத்துபாட்டு ஒரு கிலோமீட்டர் அவங்க கண்ட்ரோல்ல எடுத்துக்குவான்கலாம். நஷ்டத்தை ஈடு கட்டிருவான்கலாம். அங்கனே யாரும் வரக்கூடாதாம்.

பணப்புழக்கம் இந்த நாட்களில் தாரளமாக இருந்தது. ஊரில் இருந்த ஒரே மளிகைக்கடைக்கு ஜெனியின் அப்பா சுப்பையா டேவிட் தான் முதலாளி. சுப்பையா தான் அவர் பெயர். சென்னையிலிருந்து வந்திருந்த கத்தோலிக்க பாதிரியாரால் மதம் மாறி டேவிட் என்று வைத்து கொண்டார். அந்த பெயருக்கும் அவருக்கும் எந்த தொடர்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. பின் அவரே சுப்பையா டேவிட் மளிகை என்று கடைக்கும் மதம் மாற்றம் செய்து ஞானஸ்தானம் செய்வித்து விட்டார். ஜெனியும் இப்போது அங்கு தான் விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருந்தாள். ஜெனி அருகிலிருந்த டவுனுக்கு சென்று 12 - வது வரை படித்திருந்தால். 17 வயதின் செழுமையுடனும் இளமைக்கே உண்டான துடிப்புடனும் இருப்பவள். ஏனோ துரு துரு என்றிருக்கும் சுரேஷும் ஜெனியும் மாணிக்கம் பிள்ளைக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் கிராமத்தை பற்றி இரண்டு பேரும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார்கள்.

நடக்க போகும் விபரீதம் யாருக்கும் புரியவில்லை.

-------------------------------------------------------------------------------------
ஒரு மலரின் நறுமணம் தீடிரென்று தன்னை தாண்டி செல்வதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் அது எந்த மலரின் நறுமணம் என்று வகைபடுத்த முடியவில்லை.

ரோஜா...இல்லையில்லை மல்லிகை - சுரேஷ்
நோ நோ இட்ஸ் ஜாஸ்மின் என்றாள் ஜெனி. தாமரை மாதிரி இருக்கு என்றார் மாணிக்கம்.

எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து வந்தது என்று ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். அது ஒரு 20க்கு 20 அடி அளவுள்ள அறை. வருவதற்கு ஒரு வழி தான். ஒரே குழப்பமாக இருந்தது. இரண்டு நாட்களாகவே குழம்பி கொண்டுதான் இருந்தார்கள். அதற்க்கு காரணம் இருந்தது.

நல்லாம்பாளையம் கிராமத்தில் வந்திறங்கிய பறக்கும் தட்டு பல பேரின் தூக்கத்தை கெடுத்ததோடில்லாமல், யோசித்து யோசித்து மண்டை காய வைத்து கொண்டிருந்தது. விடை தான் கிடைத்த பாடில்லை.

வந்திரங்கியிருப்பது பறக்கும் தட்டு தான். - எங்கிருந்து வந்தார்கள்...?
யாரும் வெளியே இறங்கி வந்தார்களா..? வந்திருந்தால் எங்கே போனார்கள்...? மண்ணில் வந்திறங்கி இரண்டு நாள் ஆகியும் அதை தொட முடியவில்லை, தொட்டால் பயங்கரமாக சுடுகிறது. இரண்டடி தொலைவில் நின்று தான் பார்க்கமுடிகிறது. அருகில் நெருங்க முடியவில்லை. அப்படியென்ன ஒரு மெக்கானிசம் இது..? வந்தவர்களின் நோக்கமென்ன...? தானியங்கி விமானம் போன்றதா இல்லை ஆட்கள் அல்லது உயிரினங்கள் ஏதாவது வந்திருக்குமா..எண்ணற்ற கேள்விகள்... யாருக்கு பதில் தான் தெரியவில்லை.


அவசரமாக ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டம். மாவட்ட காவல்துறை அதிகாரி முதல் உள்துறை அமைச்சர் முதல் கொண்டு இறுகிய முகங்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். சில வெள்ளைகார முகங்களும் அடக்கம். மந்திரி தான் பேச்சை துவக்கினார். தெளிவான ஆங்கிலத்தில் அமைதியாக பேசினாலும், அவர் கோபத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது.

இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் விசாரணையிலும், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியிலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் நம்மை இந்த விஷயத்தில் எதிர்நோக்கி இருக்கிறது. பிரதமரும் இரெண்டொரு நாளின் வரக்கூடும் என எதிர்பார்கிறேன். சொல்லுங்கள் அந்த வஸ்துவின் நிலை குறித்து உங்கள் கருத்தென்ன..அது பறக்கும் தட்டு என்பதும், அதில் அயல்கிரக உயிரினங்கள் வந்திருக்க கூடும் என்பது உண்மை தானா. ஏன் அதன் அருகில் நெருங்க முடியவில்லை...?

60 வயது மதிக்கத்தகுந்த ஒருவர் எழுந்தார். காதோரம் ஒரு சில நரை முடிகளை தவிர அரைவட்ட நிலவை கவிழ்த்தது போல் இருந்தது அவரின் "பள பள" தலை. மாணிக்கம் பிள்ளையின் சொந்த ஊர் சென்னை. வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான்.
"செவ்வாயில் மனிதனின் காலடி" என்ற அவரின் ஆராய்சிக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்டவர். பழுத்த விஞ்ஞானி, கணீரென்ற குரலில் அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார்.

சார்...நடந்த, நடக்கின்ற, நடக்கபோகின்ற எந்த ஒரு விஷயமும் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. ஒரு மிகபெரும் அசம்பாவிதமும் நடக்கலாம். எதுவும் நடக்காமலும் போகலாம். பறக்கும் தட்டை நெருங்க தகுதியான எந்த ஒரு கவச உடையோ, கருவியோ கூட நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே மனித அறிவின் இயலாமையை, அறியாமையை உங்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன். அதில் இருந்து வெளியாகும் வெப்பம் மிக அதிகம், இரண்டடி வரை தள்ளி நிற்க வேண்டிய நிலைமை. அப்படியே நெருங்கினாலும் அதை திறக்கவோ, கழட்டி ஆய்வு நடத்தவோ முடியும் என்று தோன்றவில்லை.

எங்களுக்கு கிடைத்த சில குறிப்புகள் என்ன என்பதை இஸ்ரேலில் இருந்து வந்திருக்கும் ஸ்டீவ் ராபர்ட்சன் உங்களுக்கு விளக்குவார்.

நெடு நெடுவென்று ஆறரை அடி வளர்ந்திருந்த வெண்ணிற தாடியுடன், பளீர் என்ற புன்னகையுடன் எல்லோருக்கும் காலை வணக்கத்தை சொல்லி ஆரம்பித்தார் ஸ்டீவ்.

அது வந்து இறங்கி நான்கு நாட்கள் ஆகிவிட்டது. எந்த ரேடாரிலும் பதிவானதாக தகவல் இல்லை. யாரும் நெருங்கமுடியாத அளவிற்கு அதிலிருந்து வெப்பம் வெளியாகிறது. ஆனால் அதன் கீழிருக்கும் செடிகள் கருகவில்லை. அதன் மேல் அணைந்து அணைந்து எரியும் விளக்குகள் அவர்கள் கிரகத்திலிருந்து தகவல்களை பெறுவதற்காக இருக்கலாம். அல்லது அதிலிருந்து வெளிய வந்தவர்களுக்கு அதிலிருந்து தகவல் செல்வதோ பெறுவதோ நடக்கலாம். எல்லாம் உத்தேசம்தான். கிராமத்தின் எல்லா பக்கத்திலும் ஆட்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு சிறு அசைவையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். சடிலைட் மூலமாகவும் கண்காணிக்கபடுகிறது. இதுவரை எந்த ஒரு சிறு வித்தியாசமான சம்பவமும் நடந்ததாக தெரியவில்லை.

கோர்வையாக அவர் பேசி நிறுத்தியதும் ஒரு அமைதி நிலவியது. சட்டென்று ஒரு நறுமணத்தை அங்கிருந்த எல்லோரும் உணர தொடங்கினர். எந்த மலரின் வாசனஎன்று உணர முடியவில்லை. ஒரு கலவையாக இருந்தது. ஒருவரையொருவர் முகத்தை பார்த்து கொண்டு ஏதோ...ஸ்மெல் என்று ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பிள்ளை "சைலென்ட்" என்று அலறினார். கூர்மையாக கவனிக்க தொடங்கினார்.

இன்று இரண்டாம் முறையாக இந்த வாசனையை உணர்கிறேன். எந்த முகாந்திரமும் இல்லாமல் வரும் வாசனை. ஒருவேளை அவைகள் இங்கு நடமாட கூடும். மாணிக்கம் சொல்லி நிறுத்தியதும் எல்லோர் முகத்திலும் ஒரு கணம் பயம் வந்து போனது.

-------------------------------------------------------------------------------------

எஷ்னோ..எஷ்னோ..நாம சரியாய் லேன்ட் பண்ணிவிட்டோமா... டார்கெட் இது தானே. .நிச்சயம் இது தான்...நாம் சரியாய் வந்து விட்டோம் தநோயக்.

பூமியின் கால கணக்குப்படி நமக்கு சரியாய் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நாம் வந்த வேலை முடிய வேண்டும். யாரும் டிஸ்கை (பறக்கும் தட்டு ) நெருங்க முடியாதபடி fire alarm ஆன் செய்துவிடு. எல்லா சாம்பிள்களையும் கலக்ட் பண்ணவேண்டும். பட்டியலை சரி பாதியாக பிரித்து ஒரு பகுதியை நீ வைத்து கொள். அதன்படி பொருட்களை சேகரி. மீதி என் பொறுப்பு.

சரியாக 5000 மீட்டர் வரை நீ போகலாம். அதற்கு பின் உன் தொடர்பு அறுந்துபோகும். ஜாக்கிரதை...டிஸ்கின் தொடர்ப்பு போய்விட்டால் உன் உருவம் மனிதாகளின் கண்ணுக்கு தெரிந்து விடும்.

இரண்டு உருவங்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கி அந்த கிராமத்தின் இரு வேறு திசைகளை நோக்கி நடக்க தொடங்கியது. ஆனால் யார் கண்ணிலும் அது படவில்லை. அவை தங்களை தாண்டி செல்லும் போது ஒருவித மலரின் வாசனையை மனிதர்கள் உணர்ந்தார்கள். அதற்கு காரணம் தெரியவில்லை.

இரண்டு உருவங்களும் மனித உடலமைப்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஒரு உருளையை போல் இருந்தது. அந்த உருளையிலிருந்து எண்ணற்ற கை போன்ற, கால் போன்ற அமைப்புகள் வெளியே நீட்டிகொண்டிருந்தது. அவை தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. மனிதன் ஒரு காபி கோப்பையை எப்படி கை நீட்டி எடுகின்றானோ அது போல். ஆனால் ஒரு வித்யாசம். மனிதனுக்கு கை நிரந்தரமாக தொங்கி கொண்டிருக்கிறது. இந்த உருவங்கள் வேண்டும் போது அதை உபயோகபடுதிகொண்டன. தேவை இல்லாத போது அவைகளை உள்ளிழுத்து கொண்டது. அவை தரையில் உருண்டன...நின்றபடியும் அவைகளால் நடக்க முடிந்தது. உருளையின் உச்சியில் மனித தலையை போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் முடியோ, கண், காத்து, மூக்கு எதையும் காணமுடியவில்லை. உச்சியின் மத்தியில் ஒரு சிறிய பல்பை போன்று தெரிந்தது. ஒருவேளை அது கண்ணாக இருக்கலாம். நான்கு அடி வரை உயரம் இருந்தது. ஆனால் தேவைபட்டால் அவற்றால் உயரமாக முடியும் போல் தெரிந்தது. அவைகளின் குரல் மிக மெதுவாக ஒரு தாள லயத்தில் இருந்தது. ஒன்றின் பெயர் எஷ்னோ, மற்றொன்று தநோயக்.

அவற்றின் உருவம் மனித கண்களுக்கு புலப்படவில்லை.

-------------------------------------------------------------------------------------

காலை முதலே சுரேஷிற்கு எதோ விபரீதம் நடக்க போவதாக புரிந்தது. விஞ்ஞானிகளுக்கான கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க பட்டதாக தெரியவில்லை. நமது விஞ்ஞான அறிவிற்கும் மேற்பட்ட ஏதோவொன்று, நம்மை ஆளுமை செய்ய தயாராகிவிட்டதன் அறிகுறி என்று எல்லோரும் பேசி கொண்டார்கள். எப்படி அதன் தாக்குதல் இருக்கும் என்றும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில் ஒரே குழப்பம் தான் நிலவியது. கோவையிலிருந்து எந்நேரமும் இராணுவம் வரல்லம் என்றும் எதற்கும் தயாராக இருக்கும்படி இந்திய இராணுவம் அறிவுருத்தபட்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.

மதியம் 03 :00 மணி.

மதிய உணவை முடித்துவிட்டு ஆராயசிகூடதிற்கு சென்று கொண்டிருந்தான். சுற்றிலும் கரும்பும் மற்றொருபுறம் வாழையும் பயிரிட்டிருந்தார்கள். காற்றின் அசைவினால் ஏற்பட்ட சலசலப்பை தவிர எந்தவொரு ஓசையும் இல்லை. ஒற்றை நாரையொன்று வடக்காக கத்திக்கொண்டு சென்றது. காலையில் உணர்ந்த அதே வாசனை காற்றில் உணரமுடிந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தான். மனதை ஒருமுகபடுதி ஏதாவது அருகில் தென்படுகிறதா என்று பார்த்தான்.

தனக்கு மிக அருகில் ஏதோவொன்று நிற்பதாக உணரமுடிந்தது...ஆனால் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. இதயம் வேகமாக அடித்துகொண்டது. இதய படபடப்பு வெளியே கேட்கதொடங்கியது.

திடீரென்று நெற்றியில் மின்சாரம் தாக்கியதை உணர்ந்தான். அம்மா...என்றலரளோடு மயங்கி சரிந்தான்...

மதியம் 05 : 00 மணி

இரண்டு மணி நேரமாக சுரேஷை காணவில்லை என்றதும் மாணிக்கம் பிள்ளை முதல்முறையாக விபரீதத்தை உணர்ந்தார். ஒருவேளை வீட்டில் இருப்பானோ..? ஆளனுப்பி விசாரிக்க முடிவு செய்தார். நம்மாட்களை அனுப்பி விசாரிக்க செய்தால் ஒருவேளை கிராமத்தார் பதற்றமடைய கூடும். யாரை அனுப்பலாம்...சட்டென்று ஜெனியின் ஞாபகம் வந்தது. ஆம்...அவள் தான் சரியான ஆள்.

ஜெனி..உனக்கொரு அவசர வேலை. சுரேஷ் மதிய உணவிற்கு சென்றவன் இன்னும் வரவில்லை. கொஞ்சம் அழைத்து வருகிறாயா...அவசரம். ஓகே...சார். ஒரு வேளை தூங்கியிருந்தாலும் இருப்பார். நான் போய் அழைத்து வருகிறேன்.

புள்ளிமானாய் விரைந்தாள் ஜெனி.

வரப்பில் நடந்து வந்தவள் மாலை நேர வெயில் பட்டு, தொலைவில் ஏதோவொன்று மின்னுவதை கண்டு அங்கே ஓடினாள். குனிந்து எடுத்தவள் இது..சுரேஷ் சார் வாட்ச் ஆச்சே...ஒருவேளை இந்த வழிய போகும்போது தவற விட்டாரோ..? எடுத்து மடியில் சொருகுகி கொண்டு ஒரு அடி எடுத்துவைக்க தொடங்கியவள் ஒரு கணம் நின்றாள்...அதே மணம்...இது என்று யோசிக்க...தன்னை யாரோ இழுப்பது தெரிந்தது..கையை உதறிக்கொண்டு ஒரு அடி பின் நகர்ந்தாள்...யாரும் தென்படவில்லை. மனப்ரந்தியா..இல்லை தான் இழுக்கப்பட்டது உண்மையா... லேபிற்கே போய் விடலாமா..? மாணிக்கம் சார்க்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே நெற்றியில் சூடாக ஏதோ பட்டது போல் இருந்தது..கையை கொண்டு தேய்க்கும் வினாடி நேரத்திற்குள் மயங்கி விழுந்தாள்.

(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...)

Monday, February 8, 2010

இது பெண்களுக்கான பதிவு...!!



இது பெண்களுக்கான பதிவு என்ற தலைப்பில் இடம் பெறுவதால் ஆண்கள் படிக்க கூடாது என்று அர்த்தமல்ல. பெண்களுக்கான பதிவு என்பதால் ஆண்கள் யாரும் படிக்க போவதில்லை என்றும் நான் நினைக்கவில்லை. எழுதும் நானே ஒரு ஆண் என்பதால் என் அனுபவத்தில் சொல்லும் சில விஷயங்கள் உங்களில் பலருக்கும் ஒத்து போகலாம். சிலர் முரண்படுவார்கள் என்பதையும் நானறிவேன். சமீபத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், சீர்கேடு அடைந்துவரும் குடும்ப உறவுகள், சமுதாயத்தில் நிலவும் பொறுப்பற்ற வணிகம் சார்ந்த சாதக, பாதகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் குறித்தான ஒரு விரிவான பார்வையை முன் வைக்க நினைத்தே இந்த பதிவு.


உலகம் கண் முன்னால் விரிந்துபட்டு கிடக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி, இருபது, இருபத்தைந்து வருடங்களாக கடுமையான உழைப்பின் பலனால் தான் பெற்ற வாழ்வின் அதிகபட்ச ஊதியத்தை, இன்று இளைய தலைமுறை கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடனே வாங்க தொடங்கி விடுவதன் பிரமிப்பால் எதையும் ஆலோசனையாக கூட சொல்ல முடியாத நிலையில் பெற்றோர்கள், ஏற்று கொள்ள விரும்பாத இளசுகள். ரசனைகள் முற்றிலும் மாறிபோய்விட்ட நிலையில் அதன் விளைவுகளையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டிய சூழ்நிலை கைதிகளாக நாம்.


அதிகார மனோபாவம் என்பது பணிசார்ந்த விஷயமாகி, நடைமுறை சமுதாயத்திற்கும் பரவி, இன்று இயல்பான குணமாகவும் மாறி போய்விட்டது. வீட்டில் எலி, வெளியே புலி என்பது போய் இன்று எப்போதும் புலியாக உருமிகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன...? அதனால் அடைந்து விட்டிருப்பது என்ன..?
முந்தய தலைமுறை வரை நம்மவர்களுக்கிருந்த சகிப்புத்தன்மை என்கிற ஒரு வஸ்து இன்று காணாமலே போய்விட்டது. "ஜஸ்ட் லைக் தட்" என்கிற மேற்கத்திய கலாசாரத்தின் வரவால் நாம் பெற்று கொண்டதை விட இழந்தது மிக அதிகம். அத்தகைய இழப்புகளில் ஓன்று தான் இந்த சகிப்புத்தன்மை. எடுத்ததுமே இந்த சகிப்புத்தன்மையை பற்றி பேசி உங்களை இம்சிப்பதற்கு காரணம் பெண்கள் மிக மிக அவசியமாக கொள்ளவேண்டிய ஒரு குணம் இது. கிட்டத்தட்ட இது அவர்களின் ஒரு உடலின் பாகமாக தான் இருந்திருக்கிறது முந்தய காலங்களில். " பொண்ணு ரொம்ப அமைதியான குணம் " , " முகத்தை பார்த்தாலே சாந்தமா, மகாலக்ஷ்மியாட்டம் இருக்க போங்கோ " என்றெல்லாம் பெண் பார்க்கும் வீடுகளில் எப்போதும் நாம் கேட்கும் வார்த்தை இது. ஆனால் இன்று இது ஒரு குறையாக கருதபடுகிறது. பொண்ணு active - அ இல்லமா.. ரொம்ப டல்லடிச்ச மாதிரி இருக்கா.."

கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து போய்விட்டத்தின் எதிரொலியாக நமக்கு கிடைத்திருக்கும் தனி மனித சுதந்திரத்தை அனுபவிக்க கூட முடியாமல் மனநெருக்குதலுக்கு உள்ளாக்கும் பொருளாதார சுமைகள், கூடுதல் பொறுப்புகளால் விழிபிதுங்கும் நிலையில், போட்டி நிறைந்த வியாபார உலகில் நீடித்திருக்க மேற்கொள்ளபடுகின்ற அலுவலக நடைமுறைகள் நம்மை மேலும் சோர்வடைய செய்வதுடன் ஒரு தன்னிரக்க நிலைக்கு தள்ளப்பட்டு, தன்னை தவிர உலகில் எல்லோரும் சுகமாக இருக்க தனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை என மனம் வெம்ப செய்கிறது.

சரி இதெல்லாம் பொதுவான இன்றைய யதார்த்த உலகின் அம்சங்கள் தானே, இதில் ஆண்பால், பெண்பால் எங்கு வந்தது...? உங்கள் கேள்வி நியாயம் தான். நாம் இழந்ததை எல்லாம் பெண்கள் நினைத்தால் தான் திரும்ப பெறமுடியும் என்பதால் தான் இந்த பதிவு பெண்பாளிர்கானது என்று தலைப்பிட்டேன். பெண்களால் மட்டும் தான் என்று கூட நான் குறிப்பிடலாம். ஆனால், அதனாலேயே முளைத்துவிட காத்திருக்கும் கொம்புகளுக்கு நான் வேலை கொடுக்க போவதில்லை. அதே சமயம் ஆண்களுக்கென்று எந்த பொறுப்பும் இல்லையென்று அர்த்தமல்ல. பெண் எடுக்கும் ஒரு முயற்சிக்கு ஆண் துணை நிற்பான் என்ற நம்பிக்கை தான்.

" If you are not going to be a looser, why dont you try something new "

இந்த வாசகத்தை எப்போதாவது கேள்விபட்டிருகிரீர்களா...? இப்போது நான் சொல்லபோவதும் இது தான். 3 ரூபாய் கொடுத்து வாங்கும் தினசரி அன்று மதியமே கிழிபடுவது போலதான். ஒருமுறை இதை படித்துவிட்டு மறந்தாலும் சரி, மண்டையில் ஏற்றினாலும் சரி. நீங்களோ நானோ இழக்கபோவது எதுவுமில்லை. ஏதாவது கிடைத்தா என்பதை உங்கள் பின்னூட்டம் தான் சொல்லவேண்டும்.

மிக படித்தவர்கள் வாழும் கேரளாவில் இன்றைய விவாகரத்து நிலவரம் என்ன தெரியுமா. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட சதவிகிதம் 350%, இதற்கு அடுத்து தான் டெல்லி மற்றும் பெங்களூர். ஒட்டுமொத்த இந்தியாவின் விவாகரத்து சதவிகிதம் அதிகரித்து கொண்டே போவதாகவும் ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அதிகமான படிப்போ, வங்கி கணக்கை நிரப்பும் ஐந்து இழக்க சம்பளமோ தொலைத்து கொண்டிருக்கும் உங்களின் நிம்மதியையும், கனவுகளை கருவாக்கி சுமந்த வாரிசின் பாதுகாப்பற்ற எதிர்கால வாழ்க்கையையும் உங்களின் ஒரு நிமிட சகிப்புதன்மை மீட்டெடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பொறுமையோ, விட்டுகொடுதலோ அவமானமல்ல..அது காதலின் உச்சகட்டம். அதிகார போட்டி, பணப்போட்டி, ஆணவ போட்டி இதெல்லாம் உங்களக்கு தெரியும். சிலருக்கு இயல்பான குணமும்மாக கூட உண்டு. விட்டுகொடுதலில் யாரேனும் போட்டி இட்டதுண்டா...முயற்சி செய்து பாருங்கள். அதன் இனிமை புரியும். காதலின் இன்னொரு பரிணாமும், அதன் நீட்சியாக நீங்கள் மலர்வதை உங்களால் உணர முடியும். காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற ஓஷோவின் தத்துவார்த்தம் இதே தான் சொல்கிறதோ என்னவோ.

ஏன் தாய்வழி பாட்டியும், தாத்தாவும் எப்போதும் சண்டையிட்டு கொண்டையிருப்பர்கள். ஆனால் வயதாக வயதாக அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு விட்டுகொடுத்தல் இருந்தது. "தாத்தா எனக்கு முன்னாடியே போய் விடணும். பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது" என்பார் பாட்டி. தாத்தாவோ எனக்கு முன்னாடியே அவ போய்டணும், நான் போய்ட்ட அவள கஷ்டபடுதிருவாக" என்பார். அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அவர்களின் அன்பும் காதலும், அவர்களுக்குள் இருந்த விட்டுகொடுத்தலும். அவர்கள் சண்டை இட்டது தங்களின் ஈகோவை திருப்தி படுத்த. மற்றபடி அவர்களுக்குள் அந்தரங்கமாக இருந்த விட்டுகொடுதலை அவர்கள் யாருக்கும் சொல்லி கொண்டிருக்கவில்லை.

பணம் பணம் என்று அலைகிறோமேயொழிய அதை ஆளுமை செய்யகூடிய திறன் 99% பேருக்கு கிடையாது என்பது தான் கசப்பான உண்மை. இதைதான் நம்ம சூப்பர் ஸ்டார் முத்து படத்தில்

"கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்க்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்று பாடினார்.

கழுத்து வரைக்கும் காசு இருந்தாலும் அதற்கு எஜமானனாக இருக்க கூடிய பக்குவம் நம்மில் பலருக்கும் கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஆணோ பெண்ணோ கை நிறைய சம்பாரிப்பது சந்தோசம் தான். ஆனால் அதற்கு விலையாக நீங்கள் கொடுப்பது உங்களின், உங்களை சார்ந்தோரின் அமைதியான வாழ்க்கையை. எப்படி வேண்டுமானாலும் வாழ்வது மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு சரி. நம் கலாசாரத்திற்கு அது ஏற்றதல்ல. இன்னும் சொல்லபோனால் அவர்களே கூட நம் கலாசாரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பது அதில் எங்கோ தவறிருக்கிறது என்பதை தான் நமக்கு காட்டுகிறது. காசை தண்ணீராய் செலவழிப்பதும், பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற ஹீரோயிச மனோபாவத்தால் இன்றைய இளைஞர்கள் பிரச்னைகுள்ளாகிரார்கள். இன்னொரு பக்கம் காசை சிக்கனமாக சேர்த்து வைப்பவர்களும், சேமித்து சொத்து சேர்ப்பவர்களும் தலையில் கொம்பு முளைத்தது போல் திரிகிறார்கள். தவறுகளை திரும்பி பார்கவோ, திருத்தி கொள்ளவோ நேரமில்லாத வேகமான உலகில் இழப்புகள் தவிர்க்க முடியாததாகிறது.



உங்கள் கல்வி தகுதியோ, வசிக்கும் தலைமை பதவியோ வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பட்டை தீட்டப்பட்டு, வெளியே சோதித்தறிய பட வேண்டுமேயொழிய, கத்தியை வீசுவதற்கு உங்கள் தகப்பனோ, மனைவியோ, கணவனோ இலக்கு அல்ல. உங்கள் சாதனையை சொல்லி சிரிக்க வேண்டிய வீட்டில் அதை அதிகாரத்தோடு நிலை நிறுத்த விரும்புவது பிரச்சனையை விலை கொடுத்து வாங்குவது போல் தான். உங்களின் தகுதிக்காக கொடுக்கப்பட்ட அதிகாரம் உங்களை சுவீகாரம் செய்து கொண்டு உங்களின் சுயதன்மையை மழுங்கடித்து விடுகிறது. நீங்கள் விரும்பி அணிந்து கொண்ட முகமூடியே உங்களின் உண்மை தன்மையாக மாறிவிடும் அதிசயம் இது. ஆனால் இது உங்களின் இயல்பான வாழ்விற்கும் அமைதியான தோற்றத்திற்கும் நீங்கள் கொடுக்கும் விலை.

நகரில் பேர் சொன்னால் தெரியும் அளவிற்கு பிரபலம். Used Car Dealer. வேகமாக வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். சமீபத்தில் அவரை சந்திக்க நேர்ந்த பொழுது அவர் சொன்ன ஒரு வார்த்தை. " சொந்த பந்தங்களை காணும் போது அவமானம் பிடுங்கி தின்கிறது சார்...அப்ப கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்" என்றார். என்ன சார்.. என்ன விஷயம்.. என்றேன்.

அவர் சொன்னது. கல்யாணமான முதல் வருடம் நல்ல இருந்தது. அதன் பின் தான் பிரச்சனைகள் ஆரம்பம். வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் சுணக்கம், வீட்டிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. பணபிரச்சனை தலை விரித்தாடியது. வேறு எங்கும் முடியாமல் மனைவி வழியில் ஏதாவது புரட்ட முடியுமா என்று முயற்சிக்க பிரச்னை இன்னும் பெரிதானது. தன் மகளை வரதட்சணை கொடுமை செய்வதாக அவர்கள் வீட்டில் குற்றம் சாட்டினார்கள். இதை விட பெரிய கொடுமை எல்லா விஷயமும் தெரிந்த மனைவியே நான் கொடுமை செய்வதாக பச்சை பொய் சொன்னது தான். அதன்பின் தினமும் சண்டை தான். தினம் தினம் பஞ்சாயத்து. ஒருவருக்கொருவர் சேற்றை வாரி முகத்தில் அடித்து கொண்டோம். அந்தரங்கத்தில் நாங்கள் பரிமாறிகொண்ட எங்களின் இளவயது சிறு சிறு தவறுகள் நான்கு பேர் முன்னிலையில் பூதாகரபடுத்தபட்டு அசிங்கபடுத்தி கொண்டோம்.

பத்து வருடங்களாகி விட்டது. எல்லாம் தாண்டி வந்தாயிற்று. பணம், புகழ், வீடு என எல்லாம் சம்பாதித்து விட்டோம். ஆனால் ஒரு நல்லது, கெட்டதில் கலந்து கொள்ளும் பொது அன்று பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் தவறாமல் கேட்பது " இப்பெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லேய...அனுசரிச்சு போப்பா.." இதை கேட்டாலே அவமானம் பிடுங்கி தின்கிறது சார். தலை குனிந்து விலகுவதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை என்றார்.

நான் சொல்ல வருவதும் இது தான். குறைகள் இல்லாத மனிதர் இங்கு யாரும் இல்லை. பொறுமைதான் நமது உண்மையான செல்வம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆணாதிக்கம், பெண் சமத்துவம், பெண் சமஉரிமை என்பதெல்லாம் "பொழப்பு கேட்ட வேலை" தான் என்னை பொறுத்தவரை. உங்களிடம் காசும், அதிகாரமும் இருந்து விட்டால் நீங்கள் எது செய்தாலும் மூடி மறைக்கலாம். எல்லா அமைப்புகளும் உங்கள் பின்னால் நின்று பாதுகாப்பு கூட கொடுக்கும்.

வயிற்று பிழைப்புக்காக தன்னை நொந்துகொண்டு வரப்பு ஓரம் ஒதுங்கும் பெண்களை பிடித்து விபசாரத்தில் தள்ளும் சமூகம், காசு வாங்கி கொண்டு, தான் செய்யும் காரியத்தால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் என்று தெரிந்த, நன்கு படித்த சினிமா நடிகைகளை ஒன்றும் செய்வதில்லை. அவர்களுக்கு குடை பிடிப்பதும், கால் பிடிப்பதும் சமுக அந்தஸ்தாக கருதிகொள்கிறது. என்ன செய்கின்றன இந்த மாதர் சங்கங்கங்கள். புருஷன் மனைவி குடும்ப சண்டையில் மூக்கை நுழைத்து, மனைவியின் மனதை கெடுத்து விவாகரத்து வரை கொண்டு செல்வது தான் இவர்களின் வேலை போலிருக்கிறது. சினிமா, டிவி, வெகுஜன பத்திரிக்கை போன்ற எல்லா ஊடகங்களிலும் பெண் தன் உடலை, விற்பனை பொருளாக, சந்தை படுத்துவதை யாரும் தட்டிகேட்பதில்லை. தட்டி கேட்கவேண்டியவர்களே வியாபாரிகளாக, விற்பனை பொருளாக உள்ள போது ஆரோகியமான சமூகத்தை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு. குறைந்தபட்சம் நம்மை நாம் காபந்து செய்து கொள்வதை தவிர நம் எதுவும் செய்துவிட முடியாது.

திருமணதிற்கு பின்னும் ஏற்படும் தனிமை மிக மிக கொடியது. அவளை பிரிந்து என்னால் வாழமுடியும் என்று நினைத்தேன். ஆனால் நான் அவளின் ஆளுமைக்கு எவ்வளுதூரம் உட்பட்டிருக்கிறேன் என்பது இப்போது புரிகிறது. சமைப்பதோ, வீட்டு வேலையோ எனக்கொரு பிரச்சனையல்ல. ஆனால் அவளிலாத தனிமையை தாங்க முடியவில்லை. அவள் பேசாமல் இருந்த போது கூட நான் இந்தளவு தனிமையை உணரவில்லை. முறைப்படி விவாகரத்திற்கு அப்பளை செய்து விட்டு தனி தனியாக வாழும் என் நண்பரின் வரிகள் தான் இது. எத்தனை சத்தியம் இந்த வரிகள் என்பது குடும்பஸ்தர்களுக்கு நான்றாகவே புரியும். கட்டில் சுகம் மட்டுமல்ல தாம்பத்யம்.

நாட்டில் நிலவும் அணைத்து பிரச்சனைக்கும் நம்மால் தீர்வு காண முடியாது தான். குறைந்தபட்சம் நமது வீடு சந்தோசமாக இருந்தால், ஒரு ஆரோகியமான தலைமுறை நம்மால் உருவாக்கபட்டால் உங்கள் வாழ்வை நிறைவாக வாழ்ந்தவர்கள் ஆவீர். பெண்ணே வீட்டின் சந்தோசம். அமைதி. செழிப்பு எல்லாம். ஆணின் உண்மையான சந்தோசம் ஒரு பெண்ணின் அரவணைப்பில் தான். ஒரு பெண் தன் கணவனுக்காக, குடும்பத்திற்காக தன்னை அர்பணிப்பது எவ்வகையிலும் அடிமைத்தனம் அல்ல.

Friday, February 5, 2010

வில்வ இலை பறித்து பூசை செய்யும் அதிசய நாகம்...!!

இன்று எனக்கொரு ஈமெயில் தகவல் வந்தது. பார்த்ததும் ஒரு கணம் மெய் சிலிர்த்து போனேன். பதிவுலகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்காக இதோ..















நண்பர் அனுப்பிய ஈமெயில் தகவல் இது தான்.

Kumbakonam: At the Siva Temple in Thepperumanallur, large numbers of devotees witnessed a miracle of a Cobra doing Archana for Siva Lingam with Vilvam leaves. Just before Solar Eclipse, at about 10:30 AM Sivachariar Satish, priest of the Temple, noticed a Cobra lying on top of the Siva Linga.

The snake slowly descended from there and went towards the Vilvam tree which is the Sthala Viruksham- Holy tree of the temple. It climbed the tree and picked a Vilvam leaf and came back and entered the Sannadhi.

It hissed at any devotee trying to get near it. It climbed onto the Siva Linga and opened it hood and dropped the Vilvam Leaf. This miracle was witnessed by all devotees who were excited.

Then the Cobra went again and again to do the same repeated two or three times.

As the news spread all over the village, hundreds of villagers rushed to the Temple to have the Dharshan of this event of Cobra with Siva.

Thanks to Dinamalar / Dinakaran
15.01.2010

Tuesday, February 2, 2010

சொந்த கால்ல நில்லுன்னு சொன்னதுக்கு அர்த்தம்...!!

மனிதவரலாற்றின் மகத்தான கண்டுபிடிப்பு...!!

அமெரிக்க அராய்ச்சிகுழு (47 நாட்டின் விஞ்ஞானிகளை கொண்ட ஒரு பெரிய குழு) அவர்களின் பத்தாண்டு கால ஆராய்ச்சி குறிப்புகளை வெளியிட்டிருகிறது. ஆதாவது மனிதனின் மிக தொன்மையான உடற்பாகங்களை (எலும்புக்கூடுகள்) தேடி செல்லும் அவர்களின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக எதியோப்பவின் கடுமையான பாலைவன பரப்பில் 44 லட்சம் வருடங்களுக்கு முந்தய மனித உடற் படிமங்களை கண்டு பிடித்திருகிறது. மனித வரலாற்று பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான சான்றாக இது கருதபடுகிறது. ஆர்டிபெதகிஸ் என்று இந்த மனிதனுக்கு பெயரிட்டிருகிறார்கள்.



மனித குரங்குகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையாதாக இந்த மனித உடற் படிமங்களின் அமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது. இன்றைய விஞ்ஞானிகளின் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக நம் எல்லோருக்கும் இருக்ககூடிய ஒரு கேள்வி மனித குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்றால் இன்னும் மனித குரங்குகள் இருப்பது ஏன்..? எந்த ஒரு மனித குரங்கும் நம் காலத்தில் மனிதனாக பரிணாம வளர்ச்சி பெறாதது ஏன்..?

முக்கியமான இந்த கேள்விகளுக்கு ஓரளவு தற்போது விடை கிடைத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். மனித குரங்குகளுக்கும், அதன் மிக நெருங்கிய தொடர்புடைய ஆர்டிபெதகிஸ் மனிதனுக்கும் இருக்க கூடிய வித்தியாசங்களை இந்த உடற் படிமங்களை வைத்து ஓரளவு கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அதாவது நாலு காலில் நடந்து கொண்டிருந்த இந்த விலங்குகள் இரண்டு காலில் நடக்க தொடங்கியதின் விளைவு தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்கிறார்கள். (அதாவது இன்றைய அனைத்து விஞ்ஞான வளர்ச்சிக்கும் அடிப்படை) அப்படி என்றால் அவை நான்கு காலிலிருந்து இரண்டு காலில் நடக்க வேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டிருக்கும்...?

1 . தங்களை ஆபத்திலிருந்து காத்து கொள்ள நான்கு காலில் ஓடுவதை விட இரண்டு காலில் ஓடுவது வேகமாக இருந்திருக்கலாம். சமதளங்களை விட கரடு முரடான பாதைகளை இரண்டு காலில் கடப்பது எளிதாக இருந்திருக்க கூடும்.

2 கொஞ்சம் யோசித்து பார்த்தல் நான்கு காலில் நடக்கும் போது உங்களால் எதையாவது கொண்டு செல்ல முடியுமா (carry )..? ஆனால் இரண்டு காலால் நடக்கும் போது கையில் கொண்டு செல்ல முடியும். முக்கியமாக இரையை மிக நீண்ட தூரம் தூக்கி செல்ல இரண்டு கால்களை கையாக உபயோகபடுத்தி கொள்ளலாம்.

3 தன் இணையை கவர இரண்டு காலில் நடந்து சாகசம் செய்ய முயற்சித்திருக்கலாம், சண்டையிட்டிருக்கலாம்.

ஆர்டிபெதகிஸ் மனிதன் இரண்டு காலில் நடக்க ஆரம்பித்ததின் தொடக்ககால உருவத்திலிருந்து இரண்டு விஷயங்களை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. ஓன்று அவைகளின் கோரை பற்கள் கூர்மயகவோ, பெரிதாகவோ இல்லாமல் மனித பற்களை போல் இருப்பது. மனித குரங்கின் பற்கள், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, சண்டையிட, எதிரிகளை பயமுறுத்துவது போல் மிக பெரியதாக இருக்கும். ஆனால் அவை எழுந்து நடக்க ஆரம்பித்த காலங்களில் அவை சிறியதாக மாற என்ன காரணம் இருக்க முடியும்..? மற்றொன்று கை, கால்களில் இருக்க கூடிய பெருவிரல் மிகவும் சிறியதாக இருந்து சராசரி வளர்ச்சி அடைந்துள்ளது. (இன்றைய தோற்றத்திற்கு)

இதற்க்கு காரணமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுவது,

தன் இணையை கவர நினைத்த ஆண் குரங்குகள், பாதுகாப்பான இடங்களில் அவர்களை, குழந்தைகளை தங்க வைத்து வேட்டைக்கு கிளம்பிருக்க வேண்டும். வேட்டை முடிந்து இரையை நீண்ட தூரத்திலிருந்து கொண்டு வந்து தன் இணைக்கும், வாரிசுகளுக்கும் கொடுத்திருக்க வேண்டும். (கையில் தான் கொண்டுவந்திருக்கு முடியும்)



பாதுகாப்பான தூரங்களில் இடம் பெயர்ந்ததன் விளைவாக தங்களின் கோரை பற்களை அவை உபயோக படுத்தவேண்டியதிற்கான காரணங்கள் குறைந்திருக்க கூடும். மேலும் நேராக நடக்க ஆரம்பித்ததன் விளைவாக அவற்றுள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள புதிய வழிவகைகளை அவை அறிந்து கொண்டிருக்க கூடும். அதாவது பெண் குரங்குகள் தங்கள் இணை ஆக்ரோசமான ஒன்றாக இல்லாமல் சாந்தமனதாக, அன்பை பொழியகூடியதாக அவை தேர்ந்தெடுத்திருக்க கூடும்.

காலபோக்கில் நீண்ட கோரைப்பற்களுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. இரைக்ககவோ, தங்கள் இணையை கவர்வதற்காகவோ நீண்ட தூரம் பயணப்பட்ட ஆர்டிபெதகிஸ் மனித இனம், மனித குரங்குகூட்டதுடன் இருந்த தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனி உயிரினமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க கூடும். நான்கு காலில் நடக்கும் போது, மரத்தில் தாவும் போது அதற்க்கு ஒத்திசைவாக இருந்த பெருவிரல் நேராக நடக்க ஆரம்பித்ததன் விளைவாக அளவிலும் பயன்பாட்டிலும் மாற்றம் பெற்றிருக்கும்.





நடக்க ஆரம்பித்தான் விளைவாகவே மனிதனிடம் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தரையில் பாதங்களை அழுந்த ஊன்றும் போது அவை மனித மூளையில் பல அதுவரை பயன்படுத்த படாத சிந்தனை நரம்புகளை தூண்டிவிட்டுருக்கும். அதில் முளைவிட்டு தான் இன்று அயல்கிரக உயிரனங்களை பற்றி ஆராயும் அளவிற்கு மனிதனை உந்தி தள்ளியிருக்கிறது. அதுமட்டுமில்ல பொண்டாட்டி கிட்ட அடி வாங்காம தப்பிகறது எப்படிங்கரதிலிருந்து டூ - வீலர ஓரங்கட்டி மாமுல் வாங்கற ஐடியா வரை எல்லாமே மூளை நரம்புகளுக்குள் அடக்கம்.

இப்பதான் பெரியவங்க சொந்த கால்ல நில்லுன்னு சொன்னதுக்கு அர்த்தம் புரியுது...

நன்றி: டிஸ்கவரி சேனல் Mega Monday நிகழ்ச்சி மற்றும் சில இனைய குறிப்புகள், படங்கள்

Monday, February 1, 2010

அவன் தொழில் கொலை செய்வது..!

அவன் தொழில் கொலை செய்வது. இதுவரை 2000 - ற்கும் மேற்பட்ட உயிரை பரலோகம் அனுப்பியாயிற்று. தினம் தினம் கொலை தொழில். விடுமுறை தினங்களில் அவன் கைகள் இரத்தத்தால் குளிப்பாட்டபட்டிருக்கும். முகம் உடை என எங்கு நோக்கினும் ரத்த சிதறல்களாக தானிருக்கும். தலையா, காலா எதுவென்றாலும் அவனிடம் தனி ரேட் தான்.

இரத்தத்தை கண்டு அவனுக்கு பயமில்லை. அவன் தோற்றம் கண்டால் எல்லோருக்கும் ஒரு கிலி பிறக்கும். அவன் ஓய்ந்து இங்கு யாரும் பார்த்ததில்லை. அவனுக்கு விடுமுறையும் கிடையாது.

ஆனால் இந்த ஒரு வாரமாக அவனை பார்க்க முடியவில்லை. செய்த பாவத்திற்கு அவனக்கு என்ன கதி கிடைத்ததோ..

பெரும் தொல்லை. இனி கோழிக்கறி வாங்க வேண்டுமென்றால் மெயின் ரோட்டை தாண்டி ரொம்ப தூரம் போகணும். இந்த கோழிக்கடை சண்முகம் எங்கே பொய் தொலைந்தானோ...?!!

Saturday, January 30, 2010

விலங்குகளின் பலான மேட்டர்...!!!


இப்போது டிஸ்கவரி சேனல் தமிழில் வருகிறது. விலங்குகளின் பலான மேட்டர் என்ற விஷயத்தையும் தாண்டி பல நல்ல விஷயங்களை பார்க்க முடிகிறது. (நாங்கெல்லாம் மாநகராட்சி பள்ளி தான் என்ன செய்ய...) வெள்ளைகாரனின் ஆராய்ச்சிக்குரிய விஷயம் கூட புதிது புதிதாக இருக்கிறது. பனிமலை, நீள்கடல், அடர்ந்த காடு என அவனின் காலடி படாத இடமே இல்லை போலிருக்கிறது உலகில். அது சரி வேறோர் கிரகத்தில் வாழும்
உயிரினங்களுக்கே ஆப்பு வைக்க துடிப்பவர்கள் ஆயிற்றே (அவதார் காண்க)

100 கோடி வருடங்களாக பல உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்கிறதாம். இந்த பூமிக்கு இறுதியாக வந்த விருந்தாளிகள் யார் தெரியுமா (நாம் தான்) 10 மில்லியன் வருடங்கள். ஆனால் இன்று எல்லா உயிரினங்களையும் அடிமை படுத்தி அவர்களின் வாழ்வாதரங்களை அழித்து நாம் செழித்து கொண்டிருக்கிறோம். (survival of life)

ஆதிவாசிகளின் சில பழக்க வழக்கங்கள் பிரம்மிக்க வைக்கிறது. ஸ்கை டைவிங் - உலகின் காஸ்ட்லியான திரில்லிங்கான விளையாட்டு ஹவாய் தீவுகூட்ட ஆதிவாசிகளிடமிருந்து சுட்டது தான். (குஷி படத்தில் விஜய் மேலிருந்து விழுவாரே) அழிந்து போன பல நாகரீகங்கள், மன்னர் காலத்திய வாழ்க்கை முறை, பிரம்மனடாம கட்டுமானங்கள் என வியக்க வைக்கும் பல விஷயங்களை தமிழில் அறிந்து கொள்ளமுடிகிறது.



விலங்குகளின் வாழ்க்கைமுறை, தங்களை பாதுகாத்து கொள்ள அவைகளின் தற்காப்பு திட்டங்கள், அதை புரிந்து கொண்டு ஆராய்ச்சியாளர்கள் விளக்கும் விதம் அருமை. நோஞ்சானாக இறந்தாலும் சிங்கத்தின் தோற்றம் ஒரு வித பயத்தை தருவது ஆச்சர்யம். பல நாடுகளில் பாம்புகளின் வகைகள் ஆயிரத்தில் இருந்தும், இந்தியாவில் மற்றும் அதற்கு இருக்கும் மரியாதையே தனி தான். குறிப்பாக ராஜநாகங்கள் இவை இந்திய காடுகளில் தான் அதிகம் உண்டாம்.



நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். டிஸ்கவரி சேனல் நிர்வாகத்தினருக்கு - தமிழில் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நன்றி

டிஸ்கி: தலைப்பை பார்த்து உள்ளே வந்தவர்களுக்கு நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா....
சரி சரி தள்ளி நில்லு காத்து வரட்டும்....

கொம்பு முளைத்த சில பதிவர்கள்...



பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் என எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு டைரிகுறிப்பின் காதலோடு. டைரி எழுத இப்பொழுதெல்லாம் யாருக்கும் நேரமோ, மனமோ இருப்பதில்லை. கணினியில் நாள் பூராவும் உட்கார்ந்து பழகி விட்டபின் படிக்கும் பழக்கம் குறைந்து போனமாதிரி எழுதும் பழக்கமும் குறைந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தில் தன் மனதில் தோன்றியதை மிக எளிமையாக இறக்கி வைக்க முடிகிறது. அவற்றுள் சில மிகச்சிறப்பான வரவேற்ப்பை பெறுவதும் உண்மைதான். பெரும்பாலும் குப்பைகள் தான் பதிவேற்றபடுகிறது என்றாலும் நம் எல்லோரின் மனங்களும் குப்பைகளால் நிரம்பியது தான் என்பதை யார் மறுக்க கூடும். பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகள் கூட முதலில் மறுதலிக்கப்பட்டு பின் எல்லோராலும் கொண்டாடப்பட்ட சம்பவங்கள் இறந்தகாலங்களில் நிறைய உண்டு.

பாராட்டுதலுக்காகவோ, அங்கீகரிபிற்கோ எல்லோரும் ஏங்கிக்கொண்டு தானிருகின்றனர். மிகசிலர் தான் பின்னூட்ட வலைகளில் சிக்கி கொள்ளாமல் பதிவிடுவதை வெறும் டைரி குறிப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். இலக்கிய சர்ச்சை என்பது தமிழிற்கு மிக மிக பழைய சமாசாரம். ஆனால் எதற்கெடுத்தாலும் சர்ச்சை என்பது கன்றுகுட்டிக்கு காயடிப்பது போன்றது தான். தங்களின் மேதாவி தனத்தை காட்டி கொள்ள அழையா விருந்தாளிகளாக சில பதிவர்கள் பின்னூட்டமிடுவதும், தங்கள் வலைதளங்களில் விமர்சிப்பதும் வேதனையளிக்கிறது. இரண்டு ஆடுகள் முட்டிக்கொள்ள ரத்தம் குடிக்க எல்லா நரிகளும் கூடி கூத்தடிப்பதும் சகஜமாகிவிட்டது.

திறமைக்கு மதிபளிக்க இது ஒபாமா பூமியல்ல. நாமும் அமெரிக்கர்களல்ல என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் நீங்கள் கொம்பு சீவிக்கொள்ள உங்கள் முன் பதிவோடு போட்டியிடுங்கள் அல்லது குறைந்த பட்சம் உங்களைவிட பெரிய எழுத்தாளர்களோடு. மேல் மாடியில் நின்று கொண்டு எச்சிலை காறி உமிழ்வது நாகரீகமல்ல. மேல் மாடி என்பது எல்லோருக்கும் எப்போதும் சாச்வதமானதும் அல்ல.

தானாக சேர்த்த கூட்டமோ, எதை கொடுத்து சேர்த்த கூட்டமோ எழுத்தின் தரத்தை தீர்மானிப்பது பின்னூட்டங்கள் மட்டுமல்ல. ஒருபதிவர் (பெயர் தேவையில்லை) தன் படைப்பு தமிழ்மண விருதிற்கு தேர்ந்தேடுக்கபட்டது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். காரணம் தாம் அதிகம் உழைத்து பார்த்து பார்த்து செதுக்கிய தன் முந்தய படைப்புகள் எல்லாம் விருதிற்காக கூட தேர்ந்தெடுக்காமல் புறகணிக்க பட்டிருக்கையில், வெறும் நகைசுவைக்காக புனையப்பட்ட படைப்பு விருது பெறுவதில் அவருக்கே உடன்பாடு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருந்தார்.

ஒரு படைப்பின் அங்கீகாரம் என்பது கூடி நிற்போரின் கைதட்டகளில் மட்டுமல்ல. எழுதியவனின் ஆத்ம திருப்தியிலும் இருக்கிறது. உங்கள் விமர்சனம் ஒரு கைகுலுக்குதளோடு இருந்தால் மட்டுமே படைப்பவனின் ஆத்மா நிறையும். புதிய படைப்புகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறும்.

Saturday, January 23, 2010

கடவுளை காணலாம் - 1

ஏறாத மலையில்லை. போகாத கோவில் இல்லை. வணங்காத தெய்வமில்லை. ஆனால் எங்கும் மனம் ஒட்டவில்லை. "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பது போல் அவனே மனமிரங்கி தன்னை காட்டி நின்றான். என்னுடனே பிறந்து என்னுடனே வளர்த்த அவனை நான் கண்டுகொண்டேன். அவனே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும் கண்டேன்.
நம்முள் அவனை காணமல் வேறு எங்கும் அவனை கண்டடைய முடியாது என்பதுவும் புரிந்தது.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
- திருமந்திரம்

உங்களுக்குள் இருக்கும் ஒரு விளக்கை ஏற்றி, வெட்டவெளியின் மகத்துவம் அறியலாம்.
அந்த விளக்கின் முன் நின்றால் வேதனை மாறும். நம் உடலில் அந்த விளக்கு எங்கிருக்கிறது
என்பதை அறிந்து கொண்டால் நீங்களே அந்த விளக்காக விளங்குவீர்கள்.



சித்தர்கள் பாடல்கள் எல்லாமே, பெரும்பாலும் எளிய தமிழில் இருந்தாலும் ஒரு மறைபொருளாகவே சொல்ல வந்த விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் விளங்குகிறது நாம் எங்கோ வெளியின் தேடிகொண்டிருக்கும் ஒரு விஷயம் நம்முள் தான் இருக்கிறது என்பது. அது எங்கேயென்று தேடி கண்டடைவது தான் உண்மையான ஆன்மிகம். இதே செய்தியை இன்னுமொரு பாடல் நன்கு உறைக்கும்படி
நமக்கு சொல்கிறது.

வானுக்குள் ஈசனைத் தேடும் மருளர்கள்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
தேனுக்குள் இன்பம் சிறந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
- திருமந்திரம்

எவ்வளவு எளிமையான பாடல் பாருங்கள். நம்முள் ஒளிந்திருக்கும் ஈசனை எங்கோ வானில்
வாழ்ந்து கொண்டிருப்பதாய் நம்புகிறோம். தேனின் சுவை எத்தகையது அது சிவப்பென்றோ கறுப்பென்றோ நம்மால் வகைபடுத்த முடியுமா..? தேனின் சுவை எவ்வளவு நிஜமோ, எவ்வளவு இயற்கையான விஷயமோ அவ்வளவு உண்மை நம்முள் ஈசன் வாழ்ந்து கொண்டிருப்பது.

அவர் எங்கிருக்கிறார்..? எப்படி அறிந்து கொள்வது..? எப்படி உணர்வது...?

(தொடரும்)

ஆயிரத்தில் ஒருவன் - இது வெறும் விமர்சனமல்ல..!!


எந்த படத்திற்கும் இல்லாத அளவில் மிகபெரும் அலசல் இந்த படத்திற்கு ( கிட்டத்தட்ட 80 % பதிவர்கள் ) கொடுத்தாகி விட்டது. நான் கொடுக்காமல் விட்டால் எப்படி. அதனால் என் பங்கிற்கும் இந்த ஒரு பதிவு. ஆனால் என்ன ஒரு பிரச்னை என்றால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால் என்ன ஒவ்வொரு பதிவரும் பார்த்து கொடுத்த அலசலை நான் அதையெல்லாம் படித்து கொடுக்கிறேன். எல்லாம் ஒன்று தானே.

செல்வராகவன் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். கல்கி முதல் பாலகுமாரன் வரை நமக்குள் கொடுத்திருந்த சோழர்களின் பொற்கால முகத்திரை, காட்டு மிராண்டிகளாக கறிதுண்டுகளுக்காக வெட்டி சாகும் பஞ்ச பராரிகளாக காட்சி படுத்தியிருப்பதற்கு. வெள்ளைகாரர்களை - காரிகளை பார்த்து இனி வாய்பிளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் இரண்டு காரணங்களுக்காக.

ஒன்று பிரம்மாண்டம் என்பது அவர்களக்கு மட்டுமே சொந்தமல்ல. நம்மளும் எடுக்க முடியும் என்று நிருபித்து இருப்பதற்கு. இரண்டு ஆபாச நெளிவு சுளிவுகளை தாண்டி, வார்த்தைகளில் ஆபாசத்தை ஆபாசம் என்று தெரியாத வகையில் இயல்பான யதார்த்தமான வசனங்களாக தமிழிலும் கொடுக்க முடியும் என்று காட்டியதற்கு. இதன் பரிணாம வளர்ச்சியாக படுக்கையறை காட்சிகள் கூட இனி இங்கு இயல்பான விஷயங்களாகி போகும் ஒரு நாள். எதிர்காலத்தில் பதினோரு மணி காட்சிகென்று மூன்றாதர மலையாள, ஆங்கில படங்களை தேட வேண்டியதில்லை.

பார்த்திபன், ரீமா, கார்த்தி கதாபாத்திரம் எல்லோராலும் சிலாகிக்கபடுகிறது.

வாழ்த்துக்கள் பார்த்திபன் கதாநாயக வட்டத்திலிருந்து வெளி வந்து சாதித்து இருக்கிறீர்கள். அடுத்த பிரபு.

வாடி என் செல்லம் ரீமா. எங்கு ஒளிந்து கிடந்தது இவ்வளவு திறமை. உன் நாடி நரம்பெல்லாம் நடிக்கிறது. உன் உடை கூட ஒரு கவர்ச்சி சாயம் பூசி இருப்பது உனக்கு கிடைத்த வெற்றியா..இல்லை இந்த செல்வராகவனக்குள் எவ்வளவு நம்பிக்கை அந்த உடை மேல்.

இரண்டாவது படத்திருக்கு இவ்வளவு நாள் காத்திருக்கும் போதே நினைத்தேன் எதோ ஒன்று இருக்கு என்று. கார்த்தி அதை நிருபித்து இருக்கிறார். ஆனால் பருத்தி வீரன் சாயல் (அந்த தெனாவெட்டு) அடுத்த படத்தில் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.

அப்பாடா...!! ஒரு படம் பார்க்கமலேய விமர்சனம் எழுதியாகிவிட்டது. படம் பார்த்தவர்கள் யாரவது இந்த விமர்சனத்தை காரசாரமாக விமர்சனம் செய்யுங்கள் பார்க்கலாம்.

Friday, January 22, 2010

"பசை" இல்லை என்றால்

எத்தனை முறை கோர்த்தும்
வார்த்தைகள் சிதறியோடுகின்றன...
பதிவில் பதிவு செய்யமுடியாத
துரோகங்கள்
தினம் தினம் அரங்கேறுகிறது வாழ்வில்.

முகம் அறியாதவனோ...
எதிரியின் துரோகமோ... ஒரு பொருட்டில்லை.

வளையவரும் சுற்றம்,
உலகை காட்டிய தகப்பன்,
கட்டிய மனைவியின்
துரோகங்கள் மீளமுடியாதவை.

எண்ணிக்கையில் அடங்கும் சில
காகிதங்களே
எண்ணங்களை கொல்கிறது.
"பசை" இல்லை என்றால்
உறவு கோட்டைகள் உதிர்த்து போய்விடுகிறது.

Monday, January 18, 2010

நீயும் சிவமாவாய்....!!!

நூலிழை காற்று
நூறாயிரம் மைல் உள்ளோடி
ஆடுது பொம்மலாட்டம்...!

அது
உச்சந்தலை மயிர்க்கால் வழியோட...
பிறவி இனியில்லை - இனி
தெய்வம் வேறில்லை

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...



ஆயிரம் மந்திரம் தின்று
தினம் தினம் துப்பி
அவதொன்றுமில்லை

கிழக்கென்ன மேற்கென்ன எண்திசை
சுழன்றாலும் கைலாயம் கண்டாலும்
மரணத்தின் வாசலுக்கு
ஒற்றை பயணம்

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...

Friday, January 15, 2010

அவதார் - ஒரு புதிய பார்வை...!!

சினிமா பார்ப்பதை நான் விரும்புவதில்லை. காரணம் 2 மணி நேரம் ஒரே இடத்தில உட்கார்ந்து அந்த இழவை பார்க்கும் பொறுமை இல்லை. அதை விட முக்கிய காரணம். குடும்பம். மனைவியை தனியே விட்டு சினிமா பார்க்க விரும்பவில்லை. மனைவிக்கு சினிமா பிடிக்கும் தான். ஆனால் ஒன்றரை வயது குழந்தையை கையில் வைத்து கொண்டு படம் பார்ப்பது என்பது பக்கத்து சீட்டுகாரனின் பொறுமைக்கு வேலை வைக்கும் விஷயம் என்பதால் சினிமா பார்பதையே விட்டாகிவிட்டது. மட்டுமில்லாமல் இப்போது வெளிவரும் படங்களின் தரம் இரண்டாம் ஷோ ஆரம்பிபதற்குள் கிழித்து தொங்கவிட படுகிறது பதிவுகளில். அதை நான் வேறு பார்த்து அவஸ்தை படவேண்டுமா...!!

ஆனால் நேற்று படம் பார்க்கவேண்டிய ஒரு நிர்பந்தம். மனைவி குழந்தைகள் வீட்டில் இல்லை. சேலம் போய் அழைத்து வரவேண்டும். ஒரு இரண்டு மூன்று மணி நேரம் கழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவதார் ஓடிகொண்டிருந்த தியேட்டருக்குள் நுழைந்தேன்.



ஒரு படைப்பு அது எழுத்தோ, நாடகமோ, இசையோ, திரைப்படமோ, எதுவாக இருந்தாலும் பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் ஒரு சில மணி நேரங்களுக்காவது அதன் அழுத்தத்தில் இருந்து, பின் விடுபட நேருமானால் அது சிறந்த படைப்பு என்பது என் தனிப்பட்ட கருத்து. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு படம் பார்த்த திருப்தி.

பல மணி நேரம் அந்த படத்தின் பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. விமரிசனத்திற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் அதன் பிரம்மாண்டம், காட்சி படுத்திய விதம், அயல் கிரகம் குறித்த மனித சிந்தனைக்கு எவ்வளவு எட்டுமோ அத்தனையும் படத்தில் கொண்டு வந்திருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. மனிதன் அயல்கிரகத்தில் காலடி எடுத்துவைக்க இன்னும் குறைந்தது ஒரு 500 வருடங்கள் ஆவது ஆகும். கதையில் சொல்லப்பட்ட அன்டோரா கிரகம் என்பது மிக மிக தொலைவு இன்றைய விஞ்ஞான அறிவை பொறுத்த வரையில். அப்படியானால் இன்னும் 500 வருடங்கள் போன பின்னும் மனிதன் திருந்தவே மாட்டனா..? ஈராக்கின் பெட்ரோலுக்காக அமெரிக்கன் அத்து மீறி நுழைந்து ஒரு தேசத்தின் முகவரியை கிழித்து தொங்கவிட்ட குணத்தின் பிரதிபலிப்பாக தான் இருக்கிறது..இந்த படத்தின் கதை கருவும்.. கதாநாயகன் ஒரு சீனில் சொல்லும் வசனம் " உங்களுக்கு தேவை பட்டது கிடைக்கணும் என்பதற்காக அவர்கள் தங்கள் தேசத்தை இழக்கனுமா...அதை அவர்களை அழித்துதான் பெறனுமா.." வெடித்து கிளம்பும் அவனின் கோபம் அவன் ஒரு நொண்டி என்பதற்காக பரிகசிக்க படுகிறது..

நாம் எதற்காக இவ்வளவு வேகமாய் வளர்கிறோம்..ஒரு எல்லையில் துன்பமே இல்லாத ஒரு நிலையை மனித சமுதாயம் கண்டு விடும் என்ற நம்பிக்கையில் தானே...? அப்பறம் எதற்கு அடுத்தவன் பொக்கிஷம்.. அடுத்தவன் பொக்கிஷம் நமக்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மனித இயல்பாக இருக்குமென்றால் மனிதன் வளரவே போவதில்லை என்று தான் அர்த்தம். வளரவே முடியாத ஒரு சீக்கு பிடித்த சமுதாயத்தில் நானும் ஒரு அங்கம் என்பதே நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது...

இந்த படத்தில் நான் விரும்பாத ஒரே விஷயம் 500 (அ) 1000 வருடங்களுக்கு பின் நடக்க போகும் ஒரு கதை களத்தில், இன்றைய மனிதர்களின் கற்பனை எல்லைக்குள் தான் எல்லாமே அடங்கி போயிருக்கிறது. கதை களம் கூட புதுமை என்று சொல்வதற்கில்லை. காட்சி படுத்திய விதம் மட்டுமே புதுமை.

சில சாம்பிள்கள்:

1 . மனித உருவத்திற்கும் செயலுக்கும் 95 சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கிறது அயல்கிரக வாசிகளின் தோற்றமும் செயலும்.

2 . விலங்குகளின் தோற்றமும் செயலும் அப்படியே.

3 . அன்டோரா வாசிகள் தங்களது கூந்தல் வழியாக பறவை, மரங்களின் மனதை அறிகிறார்கள். அது கிட்டத்தட்ட ஒரு கூடல். இரு மனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலின் வெளிப்பாடு. இது புதியது. ஆனால் கதாநாயகனும், கதாநாயகியும் ஒரு தடவை கூட இம்மாதிரி தங்களுக்குள் மனதளவில் இணைவதில்லை. இருவரின் உடல் கலப்பு ஏற்படுவதாக சொல்லப்பட்ட காட்சிக்கு முன்பாகவாவது இம்மாதிரி ஒரு சீனை வைத்திருக்கலாம். ஆனால் இக்கால மனிதர்களை போல் உதட்டை கவ்வுவது மனதை நெருடுகிறது...

4. வில், அம்பு, ஈட்டி இதை தாண்டி வேறு எதையாவது சிந்தித்திருக்கலாம். அயல்கிரவாசிகளின் ஆயுதமாக.

மற்றபடி இந்த படம் சொல்லி சென்றிருக்கும் விஷயம் இன்னும் பல வருடங்கள் அலச படப்போகும் ஆராய்ச்சிக்கான பாலபாடம். இயக்குனர் காமரூனுக்கு ஒரு ராயல் சல்யுட்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...!!!

Tuesday, January 12, 2010

நடந்தது என்ன ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

காலை பேங்க் வாசலில் நின்று கொண்டிருந்தபொழுது (ஏன் என்பது அடுத்த பதிவில்) எதேட்சையாக கண்ணில் பட்ட காட்சி. எதிரில் இருந்த தூங்குமூஞ்சி மரத்தடியில் ஒரு வயதான பெரியவர் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து கொண்டிருந்தார். (" ர் " விகுதி ஏன் என்று தெரியவில்லை) அருகில் ஒரு அழுக்கு பை, தாங்கி நடக்க ஒரு கட்டை, ரோட்டில் போவோர் யாரை பற்றியும் எந்த கவலையும் இல்லாமல். ரோட்டில் போவோர் யாரும் அவரை பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அழுக்குபிடித்த தேகம், பல வருடங்களாக வாரப்படவோ, எண்ணெயையோ கண்டிராத கேசம், இரண்டாம் உலகபோரை நினைவு படுத்தும் கால்சட்டையும், பூட்சும் அணிந்து யாராலும் விரும்பப்பட்ட முடியாத தோற்றம் உடையவராய் இருந்தார். எதோ ஒன்று என்னை அவர்பால்
இழுத்தது. அவரையே பார்த்து கொண்டிருந்தேன்.



அருகிலிருந்த பெட்டி கடையிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் ஒரு ரொட்டியை வாங்கி அவர் இருந்த பக்கம் வீசி விட்டு போனான். அவன் போன திக்கையே பார்த்த அந்த பெரியவர் என்ன நினைத்தாரோ அந்த ரொட்டியை அவன் போன திசையை நோக்கி வீசினார். நான் ஒரு கணம் ஆடிபோனேன். ஏதோ பாவம் பிச்சைக்காரன், சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்றோ என்ற நல்ல எண்ணத்தில் ஒருவர் ரொட்டியை வாங்கி வீசினால் அவனை நோக்கி திருப்பி எறிகிறாரே, சரியான திமிர் பிடித்த பிட்சைக்கார கிழம் போலிருகிறது என்று நினைத்தேன். பிட்சைகாரர்களில் சிலர் இந்த மாதிரி போக்கிரிகளாகவும், பொறுக்கிகளாகவும் இருப்பது உண்மைதான், சில நேரங்களில் வழிபறிகளில் கூட இவர்கள் ஈடுபடுவதுண்டு. அப்படிதான் நானும் நினைத்தேன். ஆனால் அடுத்து நடந்தது மிக மிக அதிசயமான காட்சிகள்.

அதிசயம் 1

அது ஒரு 40 அடி ரோடு. ரோடின் ஒரு மூலையில் நின்று கொண்டுதான் (பேங்க் வாசலில்) எதிர் முனையில் நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். என்னை பார்த்து மிக நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார். நக்கலாக என்றால் நமுட்டு சிரிப்பு அல்ல வாய் விட்டு சிரித்தார். பெரிதாக சத்தம் போட்டு சிரித்து விட்டு என்னை பார்த்தார். ஏனோ நான் தலை குனிந்து கொண்டேன். ஒருவேளை நான் மனதில் போக்கிரி, பொறுக்கி, பிட்சைக்கார கிழம் என்றெல்லாம் நினைத்தோமே அதை உணர்ந்து சிரிதாரோ...குற்ற உணர்ச்சியில் தான் தலை தானாக கவிழ்ந்துவிட்டதோ..

அதிசயம் 2

என்ன நினைத்தாரோ வீசி எறிந்த ரொட்டியை மீண்டும் நடந்து போய் எடுத்து வந்தார். "அப்படி வா வழிக்கு...பெரிய புடுங்கி மாதிரி வீசினே...இப்ப பசிக்குதோ.." நான் தான் மனதில் நினைத்துகொண்டேன். ஆனால் சாவதானமாக நடந்து வந்த அவர் ரோடை ஒட்டி இருந்த சாக்கடைக்குள் இறங்கினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை ரோட்டில் வீசியதை எடுத்து சாக்கடைக்குள் போடுகிறாரோ..நான் நின்று கொண்டிருந்த இடத்தில இருந்து அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க முடியவில்லை. அதனால் ரோடை கிராஸ் செய்து அந்த பக்கமாக போனேன். என்னை எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால் கண்டுகொள்ளாதது போல் வாயை குவித்து ஒரு மாதிரி சத்தத்தை எழுப்பினார். என்ன அதியசம் எங்கிருந்து தான் அத்தனை எலிகள் அந்த சாக்கடைக்குள் வந்ததென்று தெரியவில்லை. சிறிதும் பெரிதுமாக அவரை சுற்றி சுற்றி வந்தது...கையில் இருந்த ரொட்டியை பிய்த்து பிய்த்து எலிகளை நோக்கி எரிந்து கொண்டிருந்தார். ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடம் தான் அவர் கையிலும் ஒன்றும் இல்லை, அங்கு எலிகளும் இல்லை. என்னால் நம்பவே முடியவில்லை. கண்கட்டு வித்தை மாதிரி இருந்தது.

அவர் வித்தியாசமான ஒரு ஒலி எழுப்பியது, எலிகள் திரண்டு வந்தது, அவர் ஒவ்வொன்றாக ரொட்டியை பிய்த்து எரிந்தது..எல்லாம் ஞாபகம் இருக்கிறது...ஆனால் இரண்டு நிமிடத்தில் எப்படி எல்லாம் மாயமாகும்...அவரிடம் மீண்டும் அதே நக்கல் சிரிப்பு...இம்முறை எனக்கு பயம் வந்துவிட்டது. அங்கிருந்து மீண்டும் கிராஸ் செய்து பேங்கிற்குள் சென்றுவிட்டேன். ஆனால் மனம் மீண்டும் மீண்டும் அவரிடமே சென்றது. ஒருவேளை சூனியகரனாக இருப்பானோ..அப்படிஎன்றால் ஏன் பிச்சைக்கார வேஷம்..

அதிசயம் 3

பேங்க் வேலையை முடித்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன்...கண் அனிச்சையாக அந்த பக்கத்தை நோட்டமிட்டது. அங்கு யாரும் இல்லை. மரத்தடியே இருந்த அந்த கிழிந்த பை, தங்கு கட்டை எதுவும் காணோம். அப்படியொரு பிச்சைகாரன் இருந்ததற்கான அடையாளத்தையே அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் அந்த மரத்தடிக்கு சென்றேன். ஒரு வித்தியாசத்தையும் என்னால் உணர முடியவில்லை. அந்த சாக்கடைக்குள் எட்டி பார்த்தேன்.. அத்தனை எலிகள் இதனுள் வசிக்கின்றதா..நம்ப முடியவில்லை. அருகில் இருந்த பெட்டி கடையில் சென்று இங்கே ஒரு பிட்சைக்கார பெரியவர் இருந்தாரே.. எங்கே போனார் தெரியுமா..? கடைக்காரன் சொன்னதை கேட்டு மயக்கம் வராத குறை தான் போங்கள்...பிச்சைகாரனா அப்படி யாரும் இங்கே இல்லையே...எப்ப பார்த்திங்க..என்றான்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...