268 / 2 என்ற நிலையில் ரொம்பவும் தெம்பாக விளையாடி கொண்டிருந்த நிலையில் பெரும் புயலென சாய்த்தார் ஸ்டெயின் இந்திய வீரர்களை. மீண்டும் ஒருமுறை 400 தொடும் என்ற நிலையில் 300 கூட தொடமுடியாது போனது வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை காட்டுகிறது.
இன்னும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சினை நம்பி தான் இந்திய இருக்கிறது. சச்சின் போனதும் வரிசையாக எல்லோரும் நடையை கட்டியது நாம் இன்னும் வளரவே இல்லையோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அடியது போல் தெரிகிறது. அதுவும் விராத் கோலி மற்றும் யூசுப் பதான் அவுட்டனா விதம் மகா கேவலம்.
இன்னும் 3 ஓவர்களே மீதமுள்ள நிலையில் பந்தை தடவி கொடுத்துகொண்டிருந்த தோணி நிச்சயம் இம்முறை பாராட்டு குரியவரல்ல.
கடைசி நான்கு ஓவரில் 100 ரன்கள் எடுத்து விஸ்வரூபம் எடுத்த நீயூசிலாந்து எங்கே...?
கடைசி ஒன்பது விக்கெட்டுகளை வெறும் 26 ரன்களுக்கு இழந்த இந்திய எங்கே..
கவச்கரும், கங்குலியும் இந்திய அணியை யானை குதிரைன்னு புகழ்த்து தள்ளினாங்க. வடிவேல் சொன்ன மாதிரி நம்ம பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மட்டம் வீக்...ஓவரா பில்ட் அப் கொடுக்கறதா விட்டுட்டு நிஜத்திற்கு வாங்க சாமி.
பார்ப்போம் ஜாகிர் கானும், பஜ்ஜியும் என்னசெய்ய போகிறார்கள் என்று
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Showing posts with label உலக கோப்பை. Show all posts
Showing posts with label உலக கோப்பை. Show all posts
Saturday, March 12, 2011
Friday, February 11, 2011
சச்சினுக்காக உலக கோப்பை தவறு..
உலக கோப்பையை வென்று சச்சினுக்கு அற்பணிப்போம் என கேப்டன் தோணி முதல் ஹர்பஜன் வரை எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கிறார்கள். இது தவறு, ஒரு நாட்டிற்காக விளையாடும் போது தனி மனிதர் முக்கியமில்லை அது நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க பட வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவை பொறுத்தவரை மக்கள் வேறு சச்சின் வேறு அல்ல. சச்சின் கிரிகெட்டின் கடவளாகதான் வர்ணிக்கபடுகிறார். பார்க்கபடுகிறார். சச்சினுக்காக கோப்பையை வெல்வது என்பது இந்திய மக்களுக்காக வெல்வது போன்றது தான். கோப்பையை வென்று சச்சின் கையில் ஏந்துவதை பார்க்க இந்திய மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதை நினைவாக்கும் தகுதி தோனிக்கு உண்டு என்பதும் எங்கள் நம்பிக்கை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
இந்தியாவை பொறுத்தவரை மக்கள் வேறு சச்சின் வேறு அல்ல. சச்சின் கிரிகெட்டின் கடவளாகதான் வர்ணிக்கபடுகிறார். பார்க்கபடுகிறார். சச்சினுக்காக கோப்பையை வெல்வது என்பது இந்திய மக்களுக்காக வெல்வது போன்றது தான். கோப்பையை வென்று சச்சின் கையில் ஏந்துவதை பார்க்க இந்திய மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதை நினைவாக்கும் தகுதி தோனிக்கு உண்டு என்பதும் எங்கள் நம்பிக்கை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...