Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Saturday, January 30, 2010

கொம்பு முளைத்த சில பதிவர்கள்...



பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் என எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு டைரிகுறிப்பின் காதலோடு. டைரி எழுத இப்பொழுதெல்லாம் யாருக்கும் நேரமோ, மனமோ இருப்பதில்லை. கணினியில் நாள் பூராவும் உட்கார்ந்து பழகி விட்டபின் படிக்கும் பழக்கம் குறைந்து போனமாதிரி எழுதும் பழக்கமும் குறைந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தில் தன் மனதில் தோன்றியதை மிக எளிமையாக இறக்கி வைக்க முடிகிறது. அவற்றுள் சில மிகச்சிறப்பான வரவேற்ப்பை பெறுவதும் உண்மைதான். பெரும்பாலும் குப்பைகள் தான் பதிவேற்றபடுகிறது என்றாலும் நம் எல்லோரின் மனங்களும் குப்பைகளால் நிரம்பியது தான் என்பதை யார் மறுக்க கூடும். பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகள் கூட முதலில் மறுதலிக்கப்பட்டு பின் எல்லோராலும் கொண்டாடப்பட்ட சம்பவங்கள் இறந்தகாலங்களில் நிறைய உண்டு.

பாராட்டுதலுக்காகவோ, அங்கீகரிபிற்கோ எல்லோரும் ஏங்கிக்கொண்டு தானிருகின்றனர். மிகசிலர் தான் பின்னூட்ட வலைகளில் சிக்கி கொள்ளாமல் பதிவிடுவதை வெறும் டைரி குறிப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். இலக்கிய சர்ச்சை என்பது தமிழிற்கு மிக மிக பழைய சமாசாரம். ஆனால் எதற்கெடுத்தாலும் சர்ச்சை என்பது கன்றுகுட்டிக்கு காயடிப்பது போன்றது தான். தங்களின் மேதாவி தனத்தை காட்டி கொள்ள அழையா விருந்தாளிகளாக சில பதிவர்கள் பின்னூட்டமிடுவதும், தங்கள் வலைதளங்களில் விமர்சிப்பதும் வேதனையளிக்கிறது. இரண்டு ஆடுகள் முட்டிக்கொள்ள ரத்தம் குடிக்க எல்லா நரிகளும் கூடி கூத்தடிப்பதும் சகஜமாகிவிட்டது.

திறமைக்கு மதிபளிக்க இது ஒபாமா பூமியல்ல. நாமும் அமெரிக்கர்களல்ல என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் நீங்கள் கொம்பு சீவிக்கொள்ள உங்கள் முன் பதிவோடு போட்டியிடுங்கள் அல்லது குறைந்த பட்சம் உங்களைவிட பெரிய எழுத்தாளர்களோடு. மேல் மாடியில் நின்று கொண்டு எச்சிலை காறி உமிழ்வது நாகரீகமல்ல. மேல் மாடி என்பது எல்லோருக்கும் எப்போதும் சாச்வதமானதும் அல்ல.

தானாக சேர்த்த கூட்டமோ, எதை கொடுத்து சேர்த்த கூட்டமோ எழுத்தின் தரத்தை தீர்மானிப்பது பின்னூட்டங்கள் மட்டுமல்ல. ஒருபதிவர் (பெயர் தேவையில்லை) தன் படைப்பு தமிழ்மண விருதிற்கு தேர்ந்தேடுக்கபட்டது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். காரணம் தாம் அதிகம் உழைத்து பார்த்து பார்த்து செதுக்கிய தன் முந்தய படைப்புகள் எல்லாம் விருதிற்காக கூட தேர்ந்தெடுக்காமல் புறகணிக்க பட்டிருக்கையில், வெறும் நகைசுவைக்காக புனையப்பட்ட படைப்பு விருது பெறுவதில் அவருக்கே உடன்பாடு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருந்தார்.

ஒரு படைப்பின் அங்கீகாரம் என்பது கூடி நிற்போரின் கைதட்டகளில் மட்டுமல்ல. எழுதியவனின் ஆத்ம திருப்தியிலும் இருக்கிறது. உங்கள் விமர்சனம் ஒரு கைகுலுக்குதளோடு இருந்தால் மட்டுமே படைப்பவனின் ஆத்மா நிறையும். புதிய படைப்புகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறும்.

Friday, December 18, 2009

ஒரு காலேஜ் தேவதையின் டைரிக் குறிப்பு

நேற்று ஒரு கதை படிக்க நேர்ந்தது. நண்பரின் bloggil
மனது ஏனோ வலித்தது. அபியும் நானும் படம் பார்த்து
இரவு பூரா அழுதவன் நான். இந்த கதையும் மனதை வலிக்க செய்தது.

ஒரு காலேஜ் தேவதையின் டைரிக் குறிப்பு. தேதி முக்கியமில்லை.

காலேஜ் ஃபர்ஸ்ட் டே இன்னைக்கு.

ரெம்பப் பேமஸான காலேஜ். இடம் கிடைக்கிறதே பெரிசு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் நன்றி சொல்லணும். அவங்க மனசு நோகம நடந்துக்கணும். அவங்களுக்கு பேரும் புகழும் வாங்கித்தர்ற மாதிரி நடந்துக்கணும்.

ஐ லவ் மை மாம் அண்ட் டாட். தெ ஆர் சிம்ப்லி க்ரேட்.

காலேஜ் சேந்ததுக்கப்புறமா நேரமே இல்லை. அதான் எழுதலை. ஐ லைக் காலேஜ். ஸ்கூல் மாதிரி இல்லாம ஜாலியா இருக்கு. ஸ்கூல்ல எல்லாருக்கும் பயப்படணும். இங்க அப்படி இல்ல. ஜஸ்ட் டோண்ட் கேர். பசங்கதான் பாவம். பொண்ணுகளை இம்ப்ரெஸ் பண்ண ரொம்ப கஷ்டபடறாங்க...

இந்த லலிதா ரெம்ப மோசம். நான் ஸ்ரீராமுக்கு ரூட் விடுறேன்னு கலாட்டா பண்ணுறா. ம்ம்... நானாவது அப்படியெல்லாம் செய்யுறதாவது. ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் அவ்வளவுதான். நான் யாரையும் லவ் பண்ண மாட்டேம்ப்பா. அப்பா படுற சிரமம் தெரியும். அம்ம படுற கஷ்டம் அதை விட அதிகம். எப்படித்தான் வேலைக்கும் போய்ட்டு வீட்டையும் மேனேஜ் பண்ணுறாங்களோ?

இன்னைக்கு ஒரு இண்டரெஸ்டிங்கான விஷயம் நடந்தது. ஸ்ரீராமும் நானும் காபி ஷாப் போனோம். ஸ்ரீராம் நல்ல பையன். தெளிவா இருக்கான். நல்ல கோல்ஸ் எல்லாம் வச்சிருக்கான். காதல் கீதல்ல எல்லாம் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்னை மாதிரியே. வீ ஆர் ஃப்ரண்ட்ஸ். ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.

எல்லொரும் அன்ன ரெம்ப ஓட்டுராங்கப்பா. நான் ஸ்ரீராமோட சேர்ந்து சுத்துறது காதலாம். வேற எதுவுமில்லையாம். என்னாலயே நம்ப முடியல அவஙக சொல்லுறது. ஸ்ரீராமக் கேட்டா.. நிறுத்தாம சிரிக்கிறான். எங்க ஃப்ரன்ட்ஷிப்ப புரிஞ்சுக்க, நம்ப முடியாத அளவுக்கு எல்லொரும் இருக்காங்க. சுத்த மோசம். எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்

ஸ்ரீராம் இன்னைக்குப் ப்ரபோஸ் பண்ணுனான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஃப்ரண்ட்ஸா இருப்போம்னுதானே பழகுனான்.அப்புறமென்ன? எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு ஆனா லவ்வெல்லாம் பண்ணமாட்டேன். எனக்குப் படிக்கணும். பெரிய ஆள வரணும்...

வா.. செல்லம் வாவா... செல்லம் பாட்டு எனக்கு ரெம்பப் பிடிக்குது. ஏனோ தெரியலை..

ஸ்ரீராமப் பார்க்க பாவமா இருக்கு பழைய கலகலப்பு இல்லை அவங்கிட்ட. எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். எல்லோரும் நான்தான் காரணம்ங்கிறாங்க. நான் என்ன பண்ணினேன். ப்ரண்ட்ஸ்னு சொல்லித்தானே பழகுனோம்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க.

ஒரு வேளை நான்தான் தப்பு பண்ணீட்டேனோ? டேய்.... ஸ்ரீராம் சாரிடா.

ஒரு ஃப்ரண்ட் என்னால கஷ்டப் படுறத தாங்கிக்க முடியல. அதனாலும் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஸ்ரீராம் இப்பத்தான் பழைய ஸ்ரீராமா இருக்கான்.எனக்கு இப்பத்தான் நிம்மதி. என்னால ஒருத்தன் கஷ்டப் படுறத தாங்கிக்க முடியல.

ஆனாலும் இந்த ஸ்ரீராம் மோசம். பிரண்ட்ஸா இருந்தப்ப்ப இந்த சேட்டை எல்லாம் எங்க வச்சிருந்தான்னு தெரியலை? கொஞ்சம் வரம்பு மீறித்தான் பழ்குறான். ஆனால் அது தான் பிடிச்சிருக்கு.. எனக்கு என்ன ஆச்சு.. டேய் ஸ்ரீராம், நாயே, பேயே, பன்னிக்குட்டி, புஜ்ஜிகுட்டி செல்லம். எப்படிடா என்னை இப்படி மாத்துனே? ஐ லவ் யு ஸ்ரீராம். யூ ஆர் சிம்ப்லி க்ரேட்.

கதையின் முடிவை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்...
அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படிவேண்டுமானாலும் மாறி போகலாம். சுகமோ..துக்கமோ..அது அவளை மட்டும் பாதிப்பதில்லை.

குற்றம் காலத்தின் மீதோ, சமுக சூழலின் மீதோ, பெற்றோரின் மீதோ, இதனால் தான் என கை காட்டிவிட்டு ஒதுங்கிவிடுவது மிக எளிது... எல்லோர் வீட்டிலும் பெண் குழந்தைகள் உண்டே....கதையின் முடிவை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்...

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...