Showing posts with label இலக்கிய சர்ச்சை. Show all posts
Showing posts with label இலக்கிய சர்ச்சை. Show all posts

Saturday, January 2, 2010

எழுத்தாளன் கோடிஸ்வரனாக முடியுமா...

சாருவின் வலைதளத்தில் அவரது புத்தகத்திற்கு அவரே விளம்பரம் தருகிறார். விலையோ ரூ.௦௦1000 நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க ஆகும் செலவு தான். அருமையான இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயன் பெற வேண்டுமென்று.

ஒரு எழுத்தாளராக, தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த எழுத்தாளராக அறியப்பட்ட சாரு நிவேதிதாவின் நிலையே இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது...

50 வருட பாரம்பரியம் கொண்ட வார இதழ்களே இன்று நடிகைகளின் கலர் போடோக்களை நம்பி தான் ஓடிகொண்டிருக்கிறது..6 லட்சமோ, 3 லட்சமோ பிரதிகளை முடிவு செய்வது முன் பக்க நடிகையின் உடையளவு தான். (சில நடுப்பக்க பத்திரிக்கைகளும் உண்டு)

தமிழனின் ரசனையை என்னவென்று சொல்வது...

பெரியார், காமராசர் பற்றிய படங்கள் வந்தவுடன் பெவிலியன் திரும்புகின்றன..காமராசர் படம்
ஓடிய தியேட்டரில் என்னுடன் சேர்த்து ஒரு 100 பேர் தான் இருந்தனர்.. ஆனால் அருந்ததி புகழ் அனுஷ்காவின் தெலுங்கு படம் (டப் செய்யபடமாலேய..) கூட்டம் அலை மோத ஓடுகிறது..

தமிழனுக்கு காசு முக்கியமில்லை கவர்ச்சி தான்..

தமிழ் எழுத்தாளன் காசு பார்க்க ஒன்று தான் வழி...

மேல்மட்டதிலிருப்பவர்களை பற்றிய வண்டவாளங்களை கிசுகிசு எழுத வேண்டும். நடிகைகளின் அந்தரங்ககளை பட்டியலிடவேண்டும்... குறைந்த பட்சம் தரமான உங்கள்
படைப்புக்கு ரஜினியோ கமலோ முன்னுரை வழங்க வேண்டும்...அதை டபுள் டம்மி போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுக்க ஓட்டினால் உங்கள் புத்தகம் குறைந்தது ஒரு 25000 விற்பதற்கு வாய்ப்புண்டு....

மற்றபடி எழுதி கோடிஸ்வரனவது என்பது....குதிரைகொம்பு தான்.

Friday, January 1, 2010

அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

தமிழ் இலக்கியவதிகள் சில பேருக்குள் கருத்து மோதல்கள், சர்ச்சைகள் கொடி கட்டி பறக்கிறது என்பது தொடர்ந்து ஒரு வாரம் தமிழ் இணையதள பதிவுகளை படித்தாலே தெரிந்து விடும்.

யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை. அவரவர்கென்று எப்போதும் சுய மதிப்பீடுகள் இருக்கும். தான் தான் சரி என்று ஆரம்பிக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பம்.

பர்தா விஷயத்தில் இருந்து மனுஷ்ய புத்திரன் ஜெயமோகன் விவகாரம் வரை ஒரு நிமிடத்தில் சரி செய்து விடக்கூடிய விஷயம் தான். ஆனால் தொடர்ந்து வளர்ந்து வரும் சர்ச்சைகள், பிரச்சனைகளை மறுத்து தங்களை முன்னிறுத்தி கொள்ள மேற்கொள்பவை.

ஏதாவது ஒரு நிமிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன நமது கண்ணோட்டத்திலும், செயல்களிலும். விலகி போனவர்கள் திரும்பி வரக்கூடும். திரும்பி வரும்பொழுது...காயங்களுக்கு மருந்திடலாம். அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

சாருவின் ஆன்மிக பக்கங்கள் மிக பெரிய ஆச்சர்யம்... சாருவை நேரிடையாக எனக்கு பரிச்சயமில்லை. ஆனால் அவரின் எழுத்துக்களின் நிதர்சனம் கண்டு பல சமயம் ஆச்சர்யபட்டிருகிறேன்...இப்படி கூட பட்டவர்த்தனமாக எழுத முடியுமா என்று. நித்யாவின் தரிசனத்திற்கு பிறகு அவருள் சில ஆச்சர்யமான மாற்றங்களை உணர முடிகிறது. அவை அவரின் எழுத்துகளிலும் பிரதிபலிக்கலாம்...

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...