Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, March 15, 2011

கமலின் புதிய ஜோடி, தட்டி பறித்த சூர்யா

செல்வராகவன் டைரக்சனில் கமல் அடுத்த படத்தில் நடிக்கிறார். இதுவும் பீரியட் படம் போல் தெரிகிறது இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தேடி பிடித்து செல்வராகவனால் அழைத்து வரப்பட்டவர் தான் சோனாக்சி. இவர் வேறு யாருமல்ல பா ஜா கா கட்சியில் அமைச்சராக பதவி வகித்த சத்ருகன் சின்ஹாவின் மகள். மாடலாக வந்து கலக்கிய இவர் சல்மானுக்கு ஜோடியாக டபாங் படத்தில் நடித்தார், படம் சக்கை போடு போட்டதில் அம்மணியின் மார்கெட் சிகரத்தில் நிற்கிறது. பாலிவுடில் இருந்து கோலிவுட் வரை காத்திருகிறார்கள் தயாரிப்பாளர்கள். கமலின் ஜோடி என்றதும் மறு பேச்சில்லாமல் சம்மதம் சொல்லியிருகிறார்.

கேள்விப்பட்ட சூர்யாவும் தனது அடுத்த படத்திற்கு இவரையே நாயகி ஆக்கிகொண்டார். பொதுவாக செல்வராகவன் படம் நீண்ட நாட்கள் படபிடிப்பில் இருக்கும் அதுவும் கமலுடன் என்பதால் எப்போது சூட்டிங் ஆரம்பித்து முடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏழாம் அறிவு முடிந்தவுடன் சூர்யாவின் படம் தொடங்கிவிடும் என்பதால் சோனாக்சியை விரைவில் சூர்யாவுடன் பார்த்துவிடலாம்.

Monday, February 22, 2010

ரஜினி தலைமையில் அஜித் புதிய கட்சி துவக்கம்..!


போற போக்க பார்த்த வெகுவிரைவில் இது நடக்கும் போல தெரியுது...ரஜினியின் அமைதி யாரின் சிக்னலுக்காகவோ வெய்ட் பன்ற மாதிரி தெரியுது. சிக்னல் கிடைச்சிட்ட அப்பறம் அடி தூள் தான். ரஜினியின் ஆன்மிகம் மற்றும் அனுபவம் + அஜித்தின் இளமை கூட்டணி ஆட்சி கட்டிலை பிடித்தாலும் பிடிக்கும்.

அஜித் சொன்னது எந்த விதத்திலும் தவறில்லை. சொன்ன இடம் குறித்து நெருடல் ஏற்படத்தான் செய்கிறது. அதே சமயம் அந்த இடத்தை தவிர வேறு எந்த இடத்தில சொல்லியிருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்போ, விமர்சனமோ எழுந்திருக்காது. நேரிடையாக வீட்டில் சந்தித்து விளக்கமும் கொடுத்தாயிற்று..திரும்ப திரும்ப ஒரு நடிகரின் திருப்திக்காக இதை பெரிதுபடுத்தி, ரஜினி அஜித்க்கு ரெட் கார்ட் என்பதெல்லாம்
ஆளுங்கட்சிக்கே பிரச்சனையை கொடுத்தாலும் கொடுக்கும்.

ஊடகங்களின் வளர்ச்சி மக்களுக்கு எல்லா விஷயத்தையும் வெட்டவெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எந்த விஷயத்தால் ஒரு சாதாரண வாக்காளன் உணர்ச்சி வசப்படகூடும் என்பது புரியாத புதிர். ஒருவேளை ரஜினியை அரசியல் கட்சிகள் கட்டம்கட்ட ஆரம்பித்தால் ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பொங்கிவிடுவார்கள். ரஜினியின் இமேஜ் அப்படி.

இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ...

Friday, February 12, 2010

நான் தான்டா செங்கிஸ்கான்..!! (இது தமிழ்படம் பாகம் - 2 அல்ல)

செங்கிஸ்கானுக்கு இருப்பே கொள்ளவில்லை. ஒரே படபடப்பாக இருந்தது..இதுவரை இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியாகி விட்டது. ஒன்றும் முடிவாகவில்லை. ரிலீஸ் தேதி வேறு நெருங்கிவிட்டது. இன்று கடைசிகட்ட பேச்சவார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது டீல் ஓகே ஆக வேண்டும்.

செங்கிஸ்கானின் உண்மையான பெயர் நமக்கு தேவையில்லை. அகில உலக, அண்ட பேரண்ட, பிரபஞ்ச நாயகன் ஒருவர் உண்டென்றால் அது செங்கிஸ்கான் தான் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் புது புது பட்டங்கள் சூட்டி அழகு பார்ப்பது ரசிகர்களின் வழக்கம்...இதில் போட்டி வேறு யாரின் பட்டம் மிக உயர்ந்தது என்று. தேர்வு பெரும் பட்டதை சூட்டியவருக்கு நடிகரின் கையால் மோதிரமோ செயினோ நிச்சயம்..

பட்டங்களையும், கோடிகளையும் அள்ளியவர் அடுத்தடுத்த இரண்டு படங்களின் தோல்வியால் மிகவும் தடுமாறி போய்விட்டார். ஜால்ரா கூட்டம் வேறு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது...புது புது சுள்ளான்கள் எல்லாம் கூட்டம் சேர்த்து கொண்டு, தனக்கு பின்புறத்தை காண்பிப்பது போல் அடிக்கடி கனவு வேறு..

மிகப்பெரிய பட்ஜெட்டில் தானே ஒரு படத்தை தயாரித்து இழந்த இடத்தை பெறுவது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கிவிட்டார். கதைகென்று ஒரு 100 பேர் அடங்கிய குழு ஓன்று... உலகின் எல்லா திசைக்கும் பறந்தது. இறுதியில் ஒரு சீனா படத்திலிருந்து கதையின் ஒன் லைனையும், ஆப்ரிக்கா படத்திலிருந்து காமெடி காட்சிகளையும், ரஷ்ய படத்திலிருந்து சண்டை காட்சிகளையும், அமெரிக்க படத்தின் பிரம்மாண்டத்தையும் சுடுவதென தீர்மானிக்கப்பட்டு பூசையும் போடப்பட்டது. படத்தின் பேரில் ஒரு பயர் வேண்டுமென்றும், இன்றைய சுள்ளான்களுக்குகெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுத்து " நான் தாண்டா செங்கிஸ்கான் " என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சூட்டிங் மிக மிக ரகசியமாக நடத்தப்பட்டு காட்சிகள் வேக வேகமாக எடுக்கப்பட்டதற்கு ஏதோ ஏதோ காரணங்கள் வெளியே கசிந்தது. அதில் ஓன்று எந்தெந்த படத்திலிருந்து காட்சிகள் சுடப்பட்டது தெரிந்து விடக்கூடாது என்பது. மற்றொன்று இந்த படம் வெளிவருவதற்குள் திருட்டு DVD வந்து காரியத்தை கெடுத்து விடகூடாது. இந்த படம் புட்டுகிச்சுன்னா " அண்ணாதே கதி அதோ கதி தான்..."

எல்லாம் முடிந்து ரிலீஸ் தேதியும் குறித்தாகி விட்டது..ஆனாலும் ரஷ் பார்த்த நடிகர் திருப்தி படவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்...தனக்கு இனிமேல் எந்த பட்டமும் தேவியில்லை என்றும், பட்டங்களை இனி என் ரசிகர்கள் சூட்டவேண்டாமென்றும்.

உடனே நெருப்பு பத்திகொண்டது. கோடம்பாக்கம் முதல் ஹாலிவூட் வரை இதே பேச்சாக இருந்தது...பட்டம் இல்லாத கோலிவூத் நடிகரா..அதிசயம் என்று எல்லா தமிழ், தெலுங்கு, ஆங்கில, ஹிந்தி சேனல்கள் அலறின...ஆனால் எல்லாம் ஒரு இரண்டு நாள் தான். பின் அதை எல்லோரும் மறந்து விட்டார்கள். ரிலீஸ் இன்னும் ஒரு வாரம் இருந்தது...ஏதாவது செய்தாக வேண்டும்...?

அப்போது தான் எதிர்க்கட்சி தலைவரின் கைதடி ஓன்று தன்னை வந்து சந்தித்து ஒரு அருமையான திட்டம் சொன்னது...தனக்கும் சரி என்று படவே ஓவர் போனிலேயே டீல் நடந்தது...ஒரே இழுபறியாக இருக்கவே இன்று ரகசிய சந்திப்பிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செங்கிஸ்கானுக்கு அது தான் ஒரே டென்ஷன்..இன்று எப்படியாவது டீல் முடியவேண்டும்...சரியாக 11 .00 மணிக்கு தலைவர் வந்துவிட்டார். ஒருமணி நேர பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது..அட்வான்ஸ் தொகையாக 5 கோடி கைமாறியது..

அதன்படி அமெரிக்க அதிபர் பற்றி காரசாரமாக பேட்டி கொடுக்கவேண்டுமென்றும், தமிழ் நடிகைகளுடன் அவர்க்கு இருக்கும் தொடர்பு பற்றி அம்பலபடுத்த போவதாகவும் ஒரு பேட்டியில் செங்கிஸ்கான் கருத்து தெரிவித்தார். உடனே அமெரிக்கா முதல் அமைஞ்சிகரை வரை பற்றிகொண்டது...எதிர்க்கட்சி தலைவர் இதை ஒரு பெரிய தன்மான பிரச்சனையாக எடுத்துகொண்டார். எம் தமிழ் நடிகைகள் என்ன கற்பு இல்லாதவர்களா..ஒரு அமெரிக்கனின் ஆசைநாயகிகளா..ஐயகோ என் இரத்தம் கொதிக்கிறது...? எப்படி சொல்லலாம் அவர்...?

ஹாலிவூட் நடிகர்கள் வேறு வெள்ளைமாளிகை நோக்கி பேரணி நடத்தி மனு கொடுத்தார்கள். அமெரிக்கா இதில் மூக்கை நுழைத்து, ஆளுங்கட்சிக்கு பெரும் தொல்லை கொடுத்தது..... எதிர்பார்த்த மாதிரி படம் ரிலீஸ் ஆனது...கூட்டம் அலைமோதியது.. இரண்டொரு வசனங்கள் வேறு தீபொறி பறப்பதாக இருந்தது..ரசிகர்கள் உயிரை கொடுத்து படத்தை பார்த்தார்கள். செங்கிஸ்கானின் வசனங்கள் டீக்கடை முதல் சட்டசபை வரை எதிரொலித்தது..."செங்கிஸ்கான் மீண்டும் சிம்மாசனத்தில்" என்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள்...

எதிர்கட்சி தலைவர் தன்னை அவசரமாக பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்தது. படத்தின் வெற்றியை கொண்டாடவும், அடுத்த படத்திற்கு மனதை பிரெஷ்ஷாக்கவும் ஆல்ப்ஸ் மலை புறப்பட விருந்த நடிகர் உடனே திரும்பினார். தலைவர் சொன்னதைகேட்டு மயக்கம் வராத குறைதான். 10 கோடி பேசி 5 கோடி அட்வான்ஸ் வாங்கிவிட்டு இப்போது மேலும் 10 கோடி வேண்டுமென்று அடம்பிடித்தார். ஆளும்கட்சிக்கு நம் விஷயம் தெரிந்து விட்டதென்றும் அவர்கள் தங்கள் பங்காக 10 கோடி கேட்கிறார்கள் என்றும் காரணம் சொன்னார். இல்லையென்றால் வருமான வரி சோதனை வந்து மொத்தமும் அள்ளிவிடுவார்கள். வேறு வழியில்லாமல் அழுது தொலைத்தார்.

சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்தது. அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்ட தொடங்கினார்கள். நடிகர் எல்லாத்தையும் ஓரங்கட்டி மீண்டும் ஆல்ப்ஸ் மலைக்கு
பயணபட்டார். ஏர்போர்டில் விமானத்திற்கு காத்துகொண்டிருக்கும் பொழுது அல்லக்கை ஓடிவந்தார். சார் வீட்டிலிருந்து போன். அவசரமாம் சார்.

போனை வாங்கி "ஹல்லோ" என்றவர் விஷயத்தை கேட்டதும் மயங்கி விழுந்தார்.

தண்ணீர் தெளித்து எழுப்பினர். அரக்க பரக்க வெளியே வந்து வண்டி எடுத்தார். வருமான வரி சோதனைக்காக அதிகாரிகள் வந்திருப்பதாக வந்த போன் தான் அது. யோசித்து கொண்டே வந்தவர் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். ஏதோ யோசித்தவர்
"அது தான் சரி" முடிவுக்கு வந்தவராய் அவரின் ஆஸ்தான கவர்ச்சி நாயகி போர்ஷாவிற்கு போன் செய்தார்.

"ஆமாம்"
"அதனால் தான்"
"நான் பார்த்துகிறேன், தெரியாது என்று சொல்"
ஓக்கேவா...ஓகே ஓகே.."

மறுநாள் செய்திதாளில் ரசிகர்களின் இதய தெய்வம் செங்கிஸ்கான் வீட்டில் வருமான வரி சோதனை கோடிகணக்கான பணம், சொத்துக்கான ஆவணங்கள் மீட்பு - தலைப்பு செய்தியாக இடம் பெற்றது.

இரண்டாம் பக்கம் " நடிகர் கண்ணீர் பேட்டி - நான் அப்பாவி, அவை என் சொத்துகளல்ல நடிகை போர்ஷாவினுடையது. நானும் அவரும் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதாகவும் அவர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும்.....

(மீதி வெள்ளித்திரையில்)

டிஸ்கி :
இந்த படத்தில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. யாரையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிடுவன அல்ல.

Saturday, January 2, 2010

விஜய் அன்டனி சரித்திர சாதனை...!

நேற்று தமிழ் சானலில் வேட்டைக்காரன் படம் பற்றி விஜய் மற்றும் நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் பேட்டி இடம் பெற்று இருந்தது.

விஜய் அன்டனியிடம் கேட்கப்பட்ட கேள்வி
"நான் அடிச்ச தாங்கமாட்டே..." பாடல் உருவாகிய விதம் குறித்து...?

பாடல் கம்போசிங்கிற்க்கு உட்காரும் போதே வித்யாசமாக எதாவது செய்ய நினைத்தோம்..
அதனால் ந.முத்துகுமாரிடம் பாடல் எழுதி தருமாறு சொல்லிவிட்டு பாடல் வரிகள் வந்தபின்
அதற்கு மெட்டு அமைத்தோம். எங்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல பலன்
கிடைத்தது.

தமிழ் கூறும் நல்லுலகமே உனக்கே வெளிச்சம்...பாடல் வரிகளுக்கு மெட்டமைத்து
இது வரை யாருமே செய்யாத சரித்திர சாதனை செய்த விஜய் அண்டனியின் முயற்சியை
வாழ்த்துவோம்....

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...