மீண்டும் ஒரு மக மெகா ஊழல் குறித்து செய்திகள் அடிபடுகிறது. ராசாவிற்கு இப்போது புது தெம்பு வந்திருக்கும். கல்மாடிக்கு வந்தது போல..
அரசியல் நாகரீகம் குறித்து பேச கலைஞருக்கு எந்த அருகதையும் இல்லை. முரசொலி கட்டுரைகளே அதற்க்கு சாட்சி. இப்போதெல்லாம் நிருபர்கள் மீது எரிந்து விழுவது போல் பேசுவது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை. அம்மையாரை குறித்த விமர்சனங்கள் எல்லாம் எந்த மாதிரி நாகரீகம். இன்றைய தினசரியில் கூட அம்மையாரை "வெத்துவேட்டு" என்று செல்லமாகத்தான் அழைத்திருக்கிறார்
தலித்தியம் பேசுவது என்பது பிராமணர்களை எதிர்ப்பது மட்டும் தானா....? ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு..?
தாவுவதில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் ராமதாசிற்கு அத்துபடி போல...அ தி மு காவிற்கு கெட்ட நேரம் வந்தால் பா ம க கூட்டு சேருவதை தடுக்க முடியாது. கங்குலியும் நம்ம ராமதாஸ் ரேஞ்சிற்கு இறங்கி வந்துவிட்டார். யாரவது கவனிங்கப்பா.. இருந்த இருப்பென்ன...வாழ்ந்த வாழ்க்கையென்ன
சுப்பிரமணியம் சாமி மீது நடவடிக்கை என்பதெல்லாம் சும்மா பேத்தல்..சாமியிடம் இருக்கும் ஆதாரங்கள் அப்படி..
வெளியுறவு துறை அமைச்சராவது ரொம்ப எளிது போல...கண்டனம் தெரிவிக்கவும், வருத்தம் தெரிவிக்கவும் தெரிந்தால் போதும். கிருஷ்ண வேறு என்ன செய்கிறார்.
கூகிள் செய்திகள் - பொழுது போக்கு தலைப்பின் கீழ் வரும் செய்தி - ராசாவிற்க்கு மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிப்பு - என்னடா கொடுமை சார் இது. கூகுளுக்கு கூட தெரிந்திருகிறது தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு ஊழல் விசாரணைகள் தான் என்று.
யோகா என்பது - Its tool of reducing or increasing our body weight. ஒரு இளைஞர்கள் கூட்டத்தில் ஒட்டு கேட்டது. நல்லவேளை பதஞ்சலி இன்று உயிருடன் இல்லை.
யோகா பிறந்த தேசம் இது என்று "சொல்லிகொல்லவே" வெட்கபடுகிறேன்.
அவ்வளவு தான்..மறுபடியும் சந்திப்போமா..வந்தது வந்தீங்க எதாவது சொல்லிட்டு போங்க...
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Showing posts with label கிருஷ்ணா. Show all posts
Showing posts with label கிருஷ்ணா. Show all posts
Tuesday, February 8, 2011
Subscribe to:
Posts (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உத...
-
இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...