Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Monday, August 26, 2013

பிரதமர் வாய்ப்பை தவறவிடும் பி‌ஜெ‌பி

திரு பொன். ராதாகிருஷ்ணன் சொல்வது போல் நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை பெருகி இருப்பது  உண்மை தான். ஆனால் அயோத்தியில் யாத்திரை என்ற பெயரில் இவர்களே தங்கள் தலையில் மண் வாரி போட்டுக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது.

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. திரு.மோடி அவர்கள் சொல்வது போல் பெரும்பான்மையோடு வெற்றி பெறுவது ரொம்ப முக்கியம். மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் படும் பாடு  எல்லோருக்கும் தெரிந்தது தானே.

பி‌ஜெ‌பி யின் வாக்குறுதிகள், மோடி வந்தால் வல்லரசாக்கிவிடுவோம் என்ற பிரசாரங்கள்  எல்லாம் பெரும்பான்மை இல்லாமல் போனால் கானல்  நீராய் போகும்.

சமூக தளங்களில் மோடிக்கான பிராசரம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் மோடியை ஆதர்ச புருஷனாக நினைக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு கோழையான திருடனிடம் அகப்பட்டுக்கிடப்பதை விட, ஒரு வீரனிடம் அடிமையாக கூட இருக்கலாம்.

பி‌ஜெ‌பி என்பது பெரும்பான்மை இந்துகளுக்கான கட்சியே தவிர, இவர்கள் ஓட்டு மொத்த இந்துக்களின் பிரநிதிகள் அல்ல. அயோத்தியில் கோவில் வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பிற்கு விட இவர்கள் தயாரா.. அதனால் அயோத்தி விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

காங்கிரஸ் நினைப்பது போல உணவு பாதுகாப்பு மசோதா இவர்களின் சாதனையாக சொல்லிக்கொள்ளலாமே தவிர வோட்டாக மாறும் என்று சொல்ல முடியாது.  மாநில கட்சிகளின் அரசியலை,  இமஜை தாண்டி இவர்களால் இதை ஓட்டுக்களாக மாற்ற முடியாது. இலங்கை விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு ஒன்று போதும் தமிழகத்தில் மண்ணை  கவ்வ. இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே அரசுக்கு விளக்கு பிடித்தவர்கள் என்ற கரை இனி எப்போதும் போகபோவதில்லை.

பி‌ஜெ‌பி வெற்றி பெற செய்ய வேண்டியதெல்லாம், மிக தெளிவான திட்டமிடல். நாட்டின் கடைசி குடிமகனுக்கும் சென்று சேர வேண்டிய பிரசாரம்.

1. ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசின் அவலங்களை பிராந்திய மொழிகளில், மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்லது கலைஞர்கள் மூலமாக எடுத்து சொல்வது
2. இந்தியா எல்லைகளில் அந்நிய நாடுகளின் அச்சுறுத்தல் மற்றும் காங்கிரஸின் கையாலாகாதனதை பிரசங்கிப்பது
3. குடும்ப அரசியலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தேக்கமும்.
4. ரூபாயின் மதிப்பு வீழிச்சி மற்றும் கட்டுபடுத்த முடியாத விலைவாசி
5. தோல்வியடைந்து விட்ட பொருளாதார கொள்கைகள்
6. செயலற்ற பிரதமர்
7. நிலம், நீர், ஆகாயம் என பரந்துபட்ட ஊழல் அமைச்சர்கள், அவர்களை அரவனைக்கும்  அரசு  என
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.



கோஷ்டி பூசலாலும், தேவையற்ற ஈகோ பிரச்சனையாளும் அருமையான வாய்ப்பை தவறவிடாமல் இருந்தால் சரி. 

Saturday, March 12, 2011

சாயம் வெளுத்த கொங்கு முன்னேற்ற பேரவை..!!

தி மு காவின் கண்டுகொள்ளாமை காரணமாகத்தான் கொங்கு மண்டலத்தில் வீறுகொண்டு எழுந்தார்கள் கவுண்டர் என்றளைக்கபடும் வேளாண் சமூகத்தார்கள். கொங்கு முன்னேற்ற பேரவை உதயமானது.

விவசாயிகளை புறகணித்தது,
சாயப்பட்டறை முதலாளிகளை கட்டுபடுத்த தவறியது,
பவானி ஆற்றை நாசகேடாகியத்தை கண்டு கொள்ளாதது,
கள்ளிறக்கும் தொழிலை அழிக்க முனைந்தது,
தொழில் நகராம் திருப்புருக்கு பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த வித அடிப்படை கட்டமைப்பு விஷயத்தையும் மேற்கொள்ளாதது,
ஒகேனகல் குடிநீர்த்திட்டம்,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதை முறைபடுத்துவது
அ தி மு காவின் கோட்டை என்பதால் முற்றாக மக்கள் நல திட்டங்களை புறகணித்தது,
தொடர் மின்வெட்டால் சிறு குறு விவசாயிகள், நூற்பாலை தொழில்களை முற்றிலுமாக அழித்தது என மக்கள் சக்தி பொங்கி எழுந்த போது கவுண்டர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களும் அவர்களை ஆதரித்தார்கள். சாதி வேறுபாடு காட்டாமல் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கவுரமான ஓட்டுகளை பெற்று அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதை நிரூபித்தார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, என சேலம் வரை சுமார் 50 லட்சத்துக்கும் மேல் வசிக்கும் பெருங்கூட்டமாக தங்களின் பலத்தை அவர்களே அப்போது தான் உணர்ந்தார்கள். விட்டுவைக்குமா கட்சிகள்...!

கட்சியை விலை பேச, முற்றாக அழித்துவிட எத்தனையோ பேரங்கள், சதி திட்டங்கள்..இறுதியில் விழுந்தே விட்டது. எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, எந்த கட்சியை எதிர்க்க உருவாகபட்டதோ அந்த கட்சியிடமே தன் மானத்தை அடகு வைத்து விட்டார்கள். மக்கள் சக்தியாக திரண்ட இயக்கம் இரு பெரும் பணக்கார வர்க்க தலைவர்களிடம் சின்னபட்டு போய் நிற்கிறது.



நன்றாக ஞாபகம் இருக்கிறது. கவுண்டர் வீட்டு பெண்கள் எல்லாம் வீதியில் இறங்கி அன்று தேர்தல் வேலை செய்தார்கள். தனித்து போட்டியிட்டதால் அவர்களால் ஓட்டுகளை பிரிக்க முடிந்ததே தவிர பெரிதாக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. நானும் கோயமுத்தூரை சேர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..எங்கள் முதுகில் மட்டுமல்ல குத்தியது மட்டுமல்ல உங்கள் வீட்டு பெண்கள் முகத்திலும் காரி துப்பி விட்டீர்கள்.

எரிசாராய தொழிற்சாலை அனுமதி மற்றும் 100 கோடி பணத்திற்காக தி மு காவுடன் கூட்டு என்று பத்திரிகை செய்திகள் வருகின்றன. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ஸ்பெக்ட்ரம் பூதகர ஊழல் எப்படியும் தங்களை அதல பாதாளத்திற்கு தள்ளி விடும் என்று தி மு கா தெரிந்தே கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கொ மு பேரவையை விலை பேசியிருக்க கூடும். இல்லையென்றால் அ தி மு காவுடன் கூட்டணி என்ற நிலையில் திடீரென்று கட்சி மாறி கூட்டணி சேர வேண்டிய அவசரமென்னா...

தங்களை தனிமைபடுத்தி தோல்வியடைய செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தார் என்கிறார்கள்...உங்களின் பொதுவான கோரிக்கைகளை அவர் ஏற்றுகொண்டாரா என்று பாருங்கள்...!! 10 வருடங்களாக புறக்கனிக்கப்பட்ட உங்கள் சமுதாய மக்களுக்கு, கொங்கு மண்டலத்திற்கு என்ன நல திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேளுங்கள் அதைவிட்டு விட்டு சீட்டுககவோ, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதோ முக்கியமில்லை. கடந்த தேர்தலில் நீங்கள் பெற்ற ஒட்டு உங்கள் சமூகதார்து மட்டுமல்ல, இது நம்ம மண் என்று நினைத்து உங்களை ஆதரித்த கொங்கு மண்டலத்தார் அனைவரது ஓட்டும் உள்ளது. இம்முறை நீங்கள் மண்ணை கவ்வ போவது நிச்சயம் நடக்கும். மக்களை மதிக்காமல், கொண்ட கொள்கைகளையும் நினைத்து பார்க்காமல் விலை போனதற்கு இம்முறை தக்க பாடம் நம் மக்கள் கொடுப்பார்கள்.

அய்யா ஆட்சியாளர்களே, கள்ளோ, மதுவோ இரண்டுமே தடை செய்ய வேண்டிய விஷயம் தான் என்னை பொறுத்தவரை. ஆனால் மக்களை கொல்லும் மதுவை அரசின் கஜானாவை நிரப்புவதற்கும், அரசியல்வாதிகளின் மது தொழிற்சாலைகள் வருமானம் குவிப்பதற்கும் அனுமதிக்கும் போது ஒரு சாதாரண விவசாயின் கள்ளிறக்கும் கோரிக்கையை மறுதலிப்பது கண்டிக்கவேண்டிய விஷயம் தான். மதுவை முற்றிலுமாக ஒழியுங்கள் இல்லையென்றால் கள்ளிறக்குவதை முறைபடுத்தி விவசாயிகளையும் வாழ வையுங்கள்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...