Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, January 21, 2011

பகவான் ரமணரா இப்படி..அட கடவுளே...!!

இவர்கள் சாமியார்கள் அல்ல என்ற தலைப்பில் 2009 டிசம்பரில் ஒரு பதிவிட்டிருந்தேன். பதிவுலக நண்பர் திரு. ஜெயதேவ் அவர்கள் கடந்த வாரம் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதில் ரமணரை குறித்த கடுமையான வாசங்கள் இடம் பெறவே, ஆதாரம் இல்லாமல் அவ்வளவு பெரிய மகானை இழிவு படுத்துவது தவறு என்று எனது பின்னூட்டத்தில் மறுத்திருந்தேன். அதன் பின்னர் தமிழ் ஒவியாவில் வெளியான ஒரு பதிவின் லிங்கை எனக்கு கொடுத்து படித்து பார்க்க சொன்னார். அந்த லிங்க் இது தான் - http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6427.html

அதில் இடம் பெற்றிருந்த ரமணரை பற்றிய செய்தியை அறிந்ததும் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். you too ...? என்று காத்த வேண்டும் போல் இருந்தது. இந்தியாவின் ஆன்மீக அடையாளங்களுள் அவரும் அவரது ஆசிரமும் தவிர்க்க முடியாதது. அவரை பற்றி தெரிந்த நிமிடம் முதல் நேற்று வரை அவரை மனதுள் இறைவனாகவே வைத்து போற்றி வந்தவன் நான். விமர்சனகளுக்கு அப்பாற்பட்டவர் என்றே இதுவரை எண்ணியிருந்தேன்.

எனக்கு தெரிந்த வரையில் மஹான்கள், சித்தர்கள் இருக்கும் வரை அவர்கள் சார்ந்த ஆசிரமங்கள் எல்லாம் ஒழுங்காகவே நடக்கும். அவர்கள் மறைந்த பின் தான் பொதுவாக சொத்து உரிமை பிரச்னையும், யார் நிர்வகிப்பது போன்ற பிரச்சனைகளும் வரும். ஆனால் ரமணர் உயிரோடு இருக்கும் போதே இங்கு சொத்து பிரச்னையும், அதற்க்கு அவரால் முன் வைக்கப்பட்ட வாதத்தையும் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இவர் ஒரு சாதாரண தனி மனிதர் என்பதற்காக பொது மக்களால் கொடுக்கப்பட்டதல்ல அவரது சொத்தும், பணமும். இறைவனின் அவதாரமாகவே எண்ணி அவருக்கு பின்னும் அவரின் கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால் தான் மக்களிடம் இருந்து பெற்ற சொத்துகளாகவே அது இருக்கும். ரமணரின் மரண தருவாயில் அவரின் விருப்பமின்றி சில விஷயங்கள் நடந்ததாக படித்த ஞாபகம். அவரது அறுவைசிகிச்சை உட்பட. ஒருவேளை அவர் சொத்துகள் தனது உறவினர்களின் பெயரில் எழுதி வைக்க நிர்பந்திக்க பட்டிருக்கலாமோ... உயில் எழுதிய பின் மறுக்க வழியில்லாமல் அந்த மாதிரி வார்த்தைகளை சொல்லியிருக்கலமோ..இதற்க்கு யாரால் விளக்கம் சொல்ல முடியும் தற்போது

ஏனோ தெரியவில்லை அவரின் முகத்தை பார்த்தால் - அவரின் இறைதன்மை குறித்து கேள்வி எழுப்ப தோன்றவில்லை. அந்தளவிற்கு நான் பெரியவனாகவும் நினைக்கவில்லை. உண்மை தெரிந்த பெரியோர்கள் இது குறித்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். பிராமண எதிர்ப்பு என்பது வேறு..ஆன்மீக பெரியோர்களை இழிவுபடுத்துவது என்பது வேறு என்னை போன்ற எத்தனையோ ஆன்மீக தாகம் கொண்ட இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.நல்லவர்கள் எங்கிருந்தாலும் நல்லவர்கள் தான். கெட்டவர்கள் எங்கிருந்தாலும் நல்லவிதமாக சிந்திக்க முடியாது.

Thursday, March 4, 2010

கதவை திறவுங்கள்.... நித்யா நாற்றம் போகட்டும்

சிக்கிகொண்ட ஒரு கருப்பு ஆட்டின் இரத்தத்தை எல்லா நரிகளும் குடித்து கும்மாளமிட்டு கொண்டிருக்கையில் நானும் ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று தான் யோசித்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லா நரிகளும் இங்கு உத்தமர் வேஷம் பூண்டிருப்பதை சௌகர்யமாக நாம் மறந்து விடுகிறோம். ஏற்கனவே இவர்கள் சாமியார்கள் அல்ல என்னும் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். வழக்கம் போல அது உண்மையை பேசியதால் சொல்லிகொள்ளும்படி பின்னூட்டத்தையோ, ஓட்டுகளையோ பெறமுடியாது ஒரே நாளில் இணையத்தில் முடங்கிவிட்டது. அதன் கோபத்தில் நான் எழுதிய ரம்பாவுக்கு கல்யாணம் என்னும் பதிவு தமிலிஷில் பிரபலம் ஆகி ஓட்டுகளையும், பின்னூட்டத்தையும் வாரி குவித்தது வேறு கதை.

அதனால் வெகுஜன ரசிப்புதன்மை என்பது எது என்பது எனக்கு ஓரளவு புரிந்தது. மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்ட தொழில் போட்டியை சமாளித்தாக வேண்டிய கட்டத்தில் இன்றைய எல்லா ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. பல சமயங்களில் அதன் தரத்திலும் பல படிகள் இறங்கி வந்து போட்டியை சமாளிதாகவேண்டிய கட்டாயம்.

மிக எளிதில் மக்களை ஆட்கொள்ளும் விஷயங்கள் இரண்டு. அவ்வபோது சினிமா, எப்போதும் ஆன்மிகம்.

நடிகைக்கு மிகவும் பிடித்த உள்ளாடையின் நிறம் என்ன என்பதிலிருந்து, எல்லாவிதமான பேட்டிகளும், நடிகன் "குசு" விட்டால் கூட ஆளும்கட்சிக்கு எதிராக கொடிபிடிப்பவன் என கட்டம் கட்டி பரபரப்பு கூட்டி, கல்லா கட்டும் வியாபார உத்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. கூடிய விரைவில் அம்பானிகளை பின்னுக்கு தள்ளும் திறமை நம்மாட்களுக்கு உண்டு என்பது உலகிற்கு தெரியவரும். மிகவும் பிரபலமான ஒரு குடும்ப கட்சியிலிருந்தே அத்தகைய தொழிலதிபர் வரக்கூடும்.

அடுத்து ஆன்மிகம். ஒவ்வொரு சேனலும் கலந்து கட்டி அடிக்கும் கூத்து. பல நூறு வருடங்களாக பின்பற்றி வரும் நம்பிக்கைகள் நடந்தது என்ன...நிஜம் என்ற பெயரிலெல்லாம் களங்கபடுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க முடியாது. எதையாவது புதிது புதிதாக செய்தாக வேண்டும் என்ற வாழ்வாதார பிரச்சனைக்கு முன்னால் பாரம்பர்யம், சாதரனர்களின் நம்பிக்கைக்களுக்கு எல்லாம் மதிப்பு கொண்டுத்துகொண்டிருக்க யாரும் தயாரில்லை. ஊடகங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் செல்வாக்கு சாதரனர்களின் வாயை அடைத்துவிடுகிறது.

அபரிமிதமான தொழில் வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு இணையான இந்திய கல்வி முறையின் வளர்ச்சி எல்லாம் இருந்தும் நம் சமயத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, அதன் தத்துவார்த்த உண்மைகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டிருப்பதையே உணர்த்துகிறது. கருப்பர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை எப்படி வெள்ளையர்கள் உலகம் முழுவதுமே ஏற்படுத்தினார்களோ அதை போல. எந்த ஒரு இந்தியருக்குள்ளும் ஏன் பிற மதத்தவராக இருந்தாலும் அவரிடம் இந்து மத நம்பிக்கைகள் உள்ளோடியிருப்பதை காணமுடியும். தன மகள் திருமணதிற்கு ஜாதகத்தை தூக்கி அலையும் எத்தனையோ இஸ்லாமிய / கிறிஸ்தவ பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த நம்பிக்கைகளையும், சாதரனர்களின் தேடல்களையும் தான் நித்தியானந்தன் போன்றவர்களை கபடதாரிகளாக்குகிறது. ஒரு சாதாரண அன்றாடங்காய்ச்சிகளுக்கே பெண் சுகம் தேவைப்படும்பொழுது, கோடிகளில் புரளக்கூடிய, ஏசி, லேப்டாப் வசதிகளுடன் சகல மரியாதைகளுடனும் திரியும் இவனை போன்றவர்களுக்கு "அரிப்பு" ஏற்படாது என்று நம்புவர்கள் தான் முட்டாள்கள். அது சாருவாக இருந்தாலும் சரி,சாதரனர்களாக
இருந்தாலும் சரி. "எல்லோரையும் போல் நானும் நம்பினேன். அதற்காக நான் தற்கொலையா செய்துகொள்ள முடியும்" என்று ஒரு அப்பாவியாய் கேள்வி கேட்டு ஒரு சமூக பொறுப்புள்ள எழுத்தாளன் தப்பித்து கொள்ள முடியாது. மாங்கு மாங்கென்று உருகி உருகி பதிவில் எழுதியதெல்லாம் ஒரு delit option - ல் இல்லையென்று ஆகிவிடாது.



கொலைவழக்குகளில் அடிபட்ட ஜெயந்திரன், கருவறையின் புனிதத்தை கேவலபடுத்திய தேவநாதன், தாசிகளை தழுவி மோட்சம் தேடும் நித்யனந்தர்களையும் உருவாக்குவது இன்றைய சமூக சூழல்தான். பேராசை, சுயநலம், காமவெறி கொண்டலைபவர்களுக்கு ஆன்மிகம் இறுதி அடைக்கலம் என்ற நிலைமை மாற வேண்டும். உண்மையான ஆன்மீகத்தையும், போலி சாமியார்களையும் பிரித்தறியும் வழிவகைகளை அறிவது மிக முக்கியம். நானொரு சாமியார் அல்ல. ஆனால் ஆன்மிகம் குறித்த தேடல் உள்ளவன். அந்த தேடலின் விளைவாக பல சன்யாசிகளையும், ஆன்மீக புத்தகங்களையும் வாசித்தரிந்தவன். என் பார்வையில் ஒரு ஞானியோ, சித்தனோ இப்படிதான் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர்களுகென்று சில குண ஒற்றுமைகள் உண்டு. அது..

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.
2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.
3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.
4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.
5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.
6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.
7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி
அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.
9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். இன்னும் சில காரணிகளை வைத்து நாம் ஞானிகளை கண்டறிய முடியும்.
10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

இந்த பதிவு ஒரு கோபத்தில் எழுதினாலும் முடிக்கையில் வெறுமையும் வேதனையுமே மிஞ்சுகிறது. உண்மையை ஏற்றுக்கொள்ளவோ, நல்லதை நாலு பேருக்கு சொல்லவோ யாருக்கும் நேரமும் இல்லை. மனமும் இல்லை. பணமே இங்கு பிரதானமாகிவிட்டதில் நாம் இழந்தது நிறைய. அமைதியான ஆன்மீகமான வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, பெண்களின் குண்டியை நக்கி கொண்டிருப்பவனைஎல்லாம் (நன்றி சாரு) கடவுள் என்று நம்பி மோசம் போய்கொண்டிருக்கிறோம்.

Friday, February 5, 2010

வில்வ இலை பறித்து பூசை செய்யும் அதிசய நாகம்...!!

இன்று எனக்கொரு ஈமெயில் தகவல் வந்தது. பார்த்ததும் ஒரு கணம் மெய் சிலிர்த்து போனேன். பதிவுலகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்காக இதோ..















நண்பர் அனுப்பிய ஈமெயில் தகவல் இது தான்.

Kumbakonam: At the Siva Temple in Thepperumanallur, large numbers of devotees witnessed a miracle of a Cobra doing Archana for Siva Lingam with Vilvam leaves. Just before Solar Eclipse, at about 10:30 AM Sivachariar Satish, priest of the Temple, noticed a Cobra lying on top of the Siva Linga.

The snake slowly descended from there and went towards the Vilvam tree which is the Sthala Viruksham- Holy tree of the temple. It climbed the tree and picked a Vilvam leaf and came back and entered the Sannadhi.

It hissed at any devotee trying to get near it. It climbed onto the Siva Linga and opened it hood and dropped the Vilvam Leaf. This miracle was witnessed by all devotees who were excited.

Then the Cobra went again and again to do the same repeated two or three times.

As the news spread all over the village, hundreds of villagers rushed to the Temple to have the Dharshan of this event of Cobra with Siva.

Thanks to Dinamalar / Dinakaran
15.01.2010

Saturday, January 23, 2010

கடவுளை காணலாம் - 1

ஏறாத மலையில்லை. போகாத கோவில் இல்லை. வணங்காத தெய்வமில்லை. ஆனால் எங்கும் மனம் ஒட்டவில்லை. "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பது போல் அவனே மனமிரங்கி தன்னை காட்டி நின்றான். என்னுடனே பிறந்து என்னுடனே வளர்த்த அவனை நான் கண்டுகொண்டேன். அவனே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும் கண்டேன்.
நம்முள் அவனை காணமல் வேறு எங்கும் அவனை கண்டடைய முடியாது என்பதுவும் புரிந்தது.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
- திருமந்திரம்

உங்களுக்குள் இருக்கும் ஒரு விளக்கை ஏற்றி, வெட்டவெளியின் மகத்துவம் அறியலாம்.
அந்த விளக்கின் முன் நின்றால் வேதனை மாறும். நம் உடலில் அந்த விளக்கு எங்கிருக்கிறது
என்பதை அறிந்து கொண்டால் நீங்களே அந்த விளக்காக விளங்குவீர்கள்.



சித்தர்கள் பாடல்கள் எல்லாமே, பெரும்பாலும் எளிய தமிழில் இருந்தாலும் ஒரு மறைபொருளாகவே சொல்ல வந்த விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் விளங்குகிறது நாம் எங்கோ வெளியின் தேடிகொண்டிருக்கும் ஒரு விஷயம் நம்முள் தான் இருக்கிறது என்பது. அது எங்கேயென்று தேடி கண்டடைவது தான் உண்மையான ஆன்மிகம். இதே செய்தியை இன்னுமொரு பாடல் நன்கு உறைக்கும்படி
நமக்கு சொல்கிறது.

வானுக்குள் ஈசனைத் தேடும் மருளர்கள்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
தேனுக்குள் இன்பம் சிறந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
- திருமந்திரம்

எவ்வளவு எளிமையான பாடல் பாருங்கள். நம்முள் ஒளிந்திருக்கும் ஈசனை எங்கோ வானில்
வாழ்ந்து கொண்டிருப்பதாய் நம்புகிறோம். தேனின் சுவை எத்தகையது அது சிவப்பென்றோ கறுப்பென்றோ நம்மால் வகைபடுத்த முடியுமா..? தேனின் சுவை எவ்வளவு நிஜமோ, எவ்வளவு இயற்கையான விஷயமோ அவ்வளவு உண்மை நம்முள் ஈசன் வாழ்ந்து கொண்டிருப்பது.

அவர் எங்கிருக்கிறார்..? எப்படி அறிந்து கொள்வது..? எப்படி உணர்வது...?

(தொடரும்)

Friday, January 1, 2010

இனி கடவுளென்று ஒன்றுமில்லை...!!

ஆலமரதடியே பெரும் கூட்டம். சாரி சாரியாக வந்த வண்ணம் இருந்தன எறும்புகள். வரும் போதே ஒன்றோடு ஒன்று எதையோ முனுமுனுத்தபடி வந்து கொண்டிருந்தன. கூட்டத்திடையே தங்களின் நீண்ட கால நண்பனை சந்தித்த மகிழ்ச்சியில் தனி தனியாக கூடத்திலிருந்து விலகி சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன... நல விசாரிப்புகள்... குடும்ப அறிமுகங்கள் ஒரு பக்கம்.

குட்டி எறும்புகள் சில வரிசையிலிருந்து விலகி செல்ல, வயதானவர்கள் அவர்களை பிடித்து தங்களின் குல பழக்கத்தை கை விடகூடாது என்று பாடம் எடுத்தார்கள். வரிசை போய்க்கொண்டே இருந்தது..

கூட்டத்திடையே சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன...கடவுளின் கோபம் பற்றி...இந்த கூட்டம் எதற்காக கூட்டபட்டிருக்கும் என்பதை பற்றி...
நான்கு திசைகளில் இருந்தும் கூட்டம் வந்தவாறு இருந்தது..



தலை பெருத்து, நீண்ட உடலுடன் அசைந்து வந்த தலைமை எறும்பை பார்க்க பயங்கரமாக இருந்தது...சில குட்டி எறும்புகள் பயத்தில் அங்கும் இங்கும் அல்லடி கொண்டிருந்தன..

நாலா புறமும் நோக்கியபின் மெல்ல பேச ஆரம்பித்தது தலைமை எறும்பு. இன்று ஒரு முக்கியமான நாள். பல்லாயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் நம் இனத்தவரில் யாரும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியதில்லை. மிக மிக அவசர அவசியமான கூட்டம் இது.
நாம் இதுவரை கடவுளாக நினைத்திருந்த, நம்மை விட நூறு முதல் இரநூறு மடங்கு பெரிதான ஒரு ஜந்து கடவுள் இல்லையென்று உறுதியாக தமது நீண்ட கால தபஸின் பயனால் தாம் அறிந்ததாக தலைமை குரு தெரிவித்திருக்கிறார்..

ஆஆஆ....அபசாரம். கடவுளை மறுத்து பேசுவது.., தவறு..அப்படி இருக்க முடியாது...எறும்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கூச்சலிட ஆரம்பித்தது...



பின்னக்காலை உந்தி நேராக எழுந்த தலைமை எறும்பு அமைதியா இருக்கும்படி கர்ஜித்தது..

முட்டாள்களே...யோசித்து பாருங்கள்...

காடு, மரம், நதி, விளைச்சல் எல்லாம் அவனால் தோன்றி அவனாலேயே அளிக்கபடுகிறது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் இன்று என்ன ஆயிற்று...எல்லாம் அவனாலேய அழிக்கபடுகிறது. நம்மை விட வேகமாக அவைகள் பெருகி கொண்டிருக்கின்றன. அதனாலேய நம் வளங்கள் எல்லாம் அழிக்கபடுகிறது. அவைகளின் பேராசையால் நம் இனமே அழிந்து விடும் போல் தெரிகிறது. ஏற்கனவே நம் முன்னோர்கள் சொல்லி சென்ற பல வித்தியாசமான உயிரினகள் நம் இளைய தலைமுறை பார்த்தது கிடையாது...

எல்லாம் யாரால்...

"கடவுளை முழுவதுமாக அளந்தவர் யாருமில்லை. யாரவது முயற்சித்தால் ராட்சசன் கைகள் அழித்திடும் நம்மை, அவன் எல்லை இல்லாதவன்" - இப்படி சொல்லி நம் முன்னோர்கள் ஏமாற்றி விட்டார்கள். அந்த ஜந்துவிற்கு மேலெல்லாம் உணர்வுகள் உண்டாம். உணவிருக்கும் இடத்தை நாம் காற்றின் உதவி கொண்டு வாசனையால் அறிவது போல. அதனால் நாம் மேலே ஏறும் பொழுது அவைகள் நம்மை கொன்று விட முயற்சிகின்றன..வேறு எந்த தனிப்பட்ட சக்தியும் அதற்கில்லை.

எறும்புகள் ஒன்றையொன்று நோக்கி திரு திருவென முழித்தன.

அவரகளால் நம்பமுடியவில்லை. நம்பமலூம் இருக்கமுடியவில்லை. இதுவரை சொல்லபட்டு, உண்மையென்ரு நம்ப்பட்டு வந்தவிஷயங்கள் பொய்யென்று ஆனபின் ஒரு மிக பெரிய ஏமாற்றுதலுக்கு தாங்கள் உள்ளனதாக அவைகள் நம்பின.

சொல்வது நமது தலைவரல்லவா...இது பொய்யாக இருக்காது. இனி நமக்கென்று யாருமில்லை. எல்லோர் மனதிலும் பயம் சூழ்ந்தது. ஒரு வெறுமையை உணர்ந்த்தன. உலகமே இருண்டு போய் விட்ட்தாய் பதற தொடங்கின.

காற்றில் சருகுகளாய் கலையதொடங்கின.

காலையில் கண் விழித்ததும் சிதறி கிடக்கும் நம் உணவு நமக்காக இறைவன் படைத்த்தல்ல. அவை அந்த ஜந்துகள் உண்டது போக மிச்சம். அதன் வாயிலிருந்தும் கையிலிருந்தும் தெறித்து விழுந்தவை. கணீரென்ற தலைவனின் குரல் கேட்டு நின்று திரும்பின...எரும்புகளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவைகளின் கைபட்டும், காலடியிலும் சிக்கி தான் நம் முன்னோர்கள் பலர் உயிரை இழந்திருகின்றனர். கடவுளின் கோபம் என்றும் சாபம் என்றும் பல தலைமுறைகாளக ஏமாற்றபட்டிருக்கிறோம். நம் கூடுகள் தீடிர் தீடிரென்று அழிக்கப்பட்டது அவைகளின் சுயநலத்திற்காக. ஆனால் நாமோ அழிக்கவே முடியாத கூடுகள் கடவுளால் நமக்காக உருவாக்கபடுகிறது என்று ஏமாந்துவிட்டிருக்கிறோம்.

நீண்ட தவத்திலிருந்த குரு நிஷ்ட கலைந்து, தான் கண்டதை அக்னி குழம்புகளாய் கக்கி கொண்டிருந்தார். நிதர்ஷ்ன்ங்களை தாங்கி கொள்ளமுடியாமல் போதும் போதும் என்று குமுறின. இனி யார் நம்மை காப்பார்...இந்த உலகில் கடவுளே இல்லையா...கடவுள் உண்டென்றால் அது எங்கிருக்கிறது..?

கரடுமுரடான பாறை இடுக்குகளிலிருந்தும், சூரிய ஒளியே தெரியாத காடுகளிலிருந்தும் நம்மை காத்தது கடவுள் இல்லை. அந்த ஜந்துகளின் சூழ்ச்சிக்கு நாம் இறையாகி விட்டோம்...

கண்களை துடைத்துக்கொண்டு மெதுவாக கேட்டன...

இனி நாம் செய்ய வேண்டியது என்ன...

கண்ணை மூடிய மூத்த எரும்பு...நீண்ட மொளணத்திற்க்கு பின், உலகம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது...அந்த ஜந்துகள் பெருகிவிட்டன..இந்த பூமியே அவைகளின் கட்டுக்குள் போய்விட்டது போல் தெரிகிறது. நாம் நாமாக வாழ்வோம். அதை தவிர நம்மால் செய்வதற்க்கு ஒன்றுமில்லை... இனி கடவுளென்று ஒன்றுமில்லை. அப்படியே கடவுள் என்று ஒன்று இருந்தால் அவன் நம் வடிவில் வரட்டும்.. நம் மொழியில் பேசட்டும்..

யுக யுகமாக, காலம் காலமாக நமப்பட்டு வந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து போனபின் ஏற்படும் வெறுமை ரொம்ப கொடுமை...செத்த பிணங்களாய் எரும்புகள் நகர்ந்தன..

காலம் எப்போதும் போல் வேகமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது....

Friday, December 25, 2009

இவர்கள் சாமியார்கள் அல்ல..!

குறி சொல்லி வியாபாரிகள்...!!!

தினசரி பத்திரிகைகளில் சமீப காலமாக இடம்பெறும் செய்திகளில் மறக்காமல் இடம் பெறுவது சாமியார்களை பற்றிய வண்டவாளங்கள் தான். பல மோசடி வழக்குகளில் இருந்து கொலை, பாலியல் வழக்குகள் வரை சாமியார்களின் பெயர்கள் அடிபடுவது சகஜமாகி விட்டது.

ஆனால், இவ்வளவு நடந்தும் மக்களிடம் விழிப்புணர்ச்சி என்பது அறவே கிடையாது என்பதாகத்தான் இம்மாதிரியான போலி சாமியார்களின் மடம் மற்றும் ஆசிரம வாசல்களில் நிறையும் கூட்டம் நினைவுபடுத்துகிறது.

மிக நீண்ட நெடிய வரலாறு கொண்ட புனிதமான ஒரு மதத்திற்கு இவர்களால் மட்டுமல்ல இவர்களை நம்பி ஏமாறும் சாமான்ய மனிதனும் ஒரு காரணமாக இருக்கிறான். உண்மையான ஆன்மிக தேடலோடு திரிகின்றவனுக்கு அவனின் உண்மை தன்மையே சரியான வழிகாட்டியாக அமையும் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் சாமானியனின் தேடுதல் என்பது பொருளாதார மற்றும் தன்னிறைவு சார்ந்த விஷயமாக இருக்கும் பொழுது ஏமாறுதலும், ஏமாற்றுதலும் தவிர்கமுடியாதது தான்.

குறி சொல்வது, தாயத்து மந்திரிப்பது, பில்லி, சூனியம் வைப்பது, எடுப்பது எல்லலாமே ஒரு குறிப்பிட்ட நபர்களின் வியாபார தந்திரம். ஒரு டீ கடை, மளிகை கடை மாதிரி இதுவும் ஒரு வியாபாரம் தான். ஆனால் ஒரு வித்தியாசம் இங்கு வியாபார பொருட்களாக இவர்கள் கடை விரிப்பது நிறைய பொய்கள், சில சாமி படங்கள், (குங்குமம், விபூதி, எலுமிச்சை இன்னபிறவும் உண்டு..) இவர்கள் எல்லோரும் வியாபாரிகளே தவிர சாமியார்கள் இல்லை. இவர்களை நம்பி ஏமாறுவது என்பது (கற்பை இழப்பது உட்பட) நமது பேராசையும், அறியாமையும் தான்.

உண்மையான சித்தனோ, ஓர் மகாணோ ஒரு போதும் இங்கு குறி சொல்லப்படும் என்ற விளம்பர பலகையின் கீழ் அமர்ந்து ஆசி வழங்க போவதில்லை. நீங்கள் வைக்கும் தட்சனைக்கும், சில நூறு ரூபாய்களுக்கும் ஆன்மிக ரகசியங்களை உங்கள் காதில் ஓதிவிட முடியாது.

அவர்கள் சொல்வதெல்லாம் பலிகிறது என்பதோ..நடக்கிறது என்பதோ..எல்லாமே காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை தான். இதற்க்கு பெரிய படிப்பெல்லாம் தேவையே இல்லை. கொஞ்சம் முககுறிப்பும், மனித சைகலஜியும் தெரிந்தால் போதும். இவை யாருக்கும்
அனுபவத்திலேயே வந்துவிடும். ஏய்த்து பிழைப்பவர்களுக்கு சொல்லியா தரவேண்டும்.

தனது எட்டாவது வயதில் ரயிலேறி திருவண்ணாமலை வந்து, கையில் இருந்த சொற்ப
நாணயங்களையும் குளத்தில் விட்டெறிந்து விட்டு தபசில் ஆழ்ந்த பகவான் ரமணர் கடைசி வரை காசை தொட்டேதேயில்லை. சேஷாத்திரி சாமிகளோ, விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் போன்ற மஹான்கள் பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. அது அவர்களுக்கு தேவையும் இல்லை.






கொல்லிமலை, சதுரகிரி, ரங்கமலை போன்ற மலை வாசஸ்தலங்களில் இன்றும் எத்தனையோ சித்தர்கள் வசிக்க கூடும். ஆனால் அவர்களை காட்சி பொருளாக்கி, தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ள எப்போதும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும் என்பதால் தான் அவர்களை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. சக மனிதருக்கு பயனாக இல்லாமல் மலை குகைகளில் தியானம் செய்பவர்களால் மனித இனத்திற்கு என்ன நன்மை என்று நம்மில் பலருக்கு கேள்வி உண்டு. ஆனால் இப்போதும், இந்த வேகமான அறிவியல் உலகிலும்
யோக கலை, ஆன்மிகம், தியானம், சித்தர்கள் என்பது குறித்தெல்லாம் மக்கள் மனதில் கேள்வி எழுப்புவது தான் அவர்கள் பணி என்பதோடு அவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். அவர்கள் தபஸின் வலிமையினால் தான் இங்கு ஆன்மிகம் இன்னமும் உயிர் வாழ்கிறது. உண்மையான தேடுதலோடு வெளிவரும் லட்சத்தில் ஒருவருக்கு அவர்கள் தேடிபோய் தரிசனம் தந்து, ஒரு சித்தனை தயார் செய்கிறார்கள். இந்த பூமி வாழ அவர்கள் தான் காரணம்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...