Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Thursday, August 29, 2013

கள்ளகாதல் தவறென்றால் கள்ள திருமணம் சரியா..

முக நூலில் காங்கிரஸை போட்டு கிழி கிழியென்று கிழிக்கிறார்கள். மானமுள்ளவன் தூக்கில் தான் தொங்கவேண்டும். அது இருந்தான் ஏன் அரசியலுக்கு வரபோகிறார்கள்.

முகநூலில் மோடிக்கான பிரசாரம் வெளுத்து வாங்குகிறது. தெரியாத்தனமாக லிங்க் கொடுக்க போக போட்டு தாளிக்கிறார்கள். எப்படி (Delink)
செய்வதென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களை மிக கேவலபடுத்தி கமெண்ட் போடுகிறார்கள், பதிவிடுகிறார்கள். எங்கே இவர்கள் பிரசாரம் நெகட்டிவ் - ஆக போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசிர்க்கு மாற்று அவசியம். அது மூன்றாவது அணியாக இருந்தால் இன்னும் பிரச்சனை தான். மோடி தான் சரியான தேர்வு என்று நினைக்கிறேன்.

மோடிக்கான பிராசார உத்தி மற்றும் மோடியை பிரோமோட் செய்யும் பொறுப்பு ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க பட்டிருக்கிறதாம். உண்மையா..? எது எப்படியோ இது வெறும் மோடி வித்தையா இல்லை மோடி வைத்தியமா என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.


இன்னும் சில சுவாரசியமான பதிவுகள்..

*********
வெங்காயத்திற்கு ஏன் இந்த நிலை வந்ததென்று
விவசாயத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நீர்மூழ்கி கப்பலுக்கு ஏன் இந்த நிலை என்று
பாதுக்காப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நம்மகூட
என்ன தான் பிரச்சனைன்னு வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரியாது

ஆந்திராவில் ஏன் இத்தனை குண்டுவெடிப்புகள், போராட்டங்கள்  என்று உள்துறை அமைச்சருக்குத் தெரியாது.

இந்திய ரூபாய்க்கு ஏன் இந்த நிலை என்று
நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமான ஒப்பந்த கோப்புகள்
(files) எங்கே சென்றன என்று நிலக்கரித்துறை அமைச்சருக்குத் தெரியாது

மேற்கண்ட எதுவுமே நம்ம பாரத பிரதமருக்குத் தெரியாது. நம் அன்றாட வாழ்வில் நாம் எப்படி சமாளிக்கறோம் என்பதும் தெரியாது .

இது தான் நம்ம இந்தியா

***************************

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’என்றார் அந்த வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும் போது கவலைப்படாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

*********************

பத்து ஏக்கர் நிலத்தை வித்து படித்து பட்டம் பெற்று, அப்பறம் சம்பாதித்து பத்து சென்ட் இடம் வாங்குவது தான் இன்றைய தொழிற்கல்வியின் சாதனை.

*************************
திருமணம் முடித்த பின் அடுத்தவன் மேல் வருவது கள்ள காதல் என்றால், காதலித்தவனை மறந்து விட்டு வேறொரு திருமணம் செய்வது கள்ளதிருமணம் அல்லவா..

பத்து மணிக்கு மேல கள்ள சாவி போடறவன் எல்லாம் யோசிங்க..!

*****************

Monday, August 26, 2013

பிரதமர் வாய்ப்பை தவறவிடும் பி‌ஜெ‌பி

திரு பொன். ராதாகிருஷ்ணன் சொல்வது போல் நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை பெருகி இருப்பது  உண்மை தான். ஆனால் அயோத்தியில் யாத்திரை என்ற பெயரில் இவர்களே தங்கள் தலையில் மண் வாரி போட்டுக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது.

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. திரு.மோடி அவர்கள் சொல்வது போல் பெரும்பான்மையோடு வெற்றி பெறுவது ரொம்ப முக்கியம். மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் படும் பாடு  எல்லோருக்கும் தெரிந்தது தானே.

பி‌ஜெ‌பி யின் வாக்குறுதிகள், மோடி வந்தால் வல்லரசாக்கிவிடுவோம் என்ற பிரசாரங்கள்  எல்லாம் பெரும்பான்மை இல்லாமல் போனால் கானல்  நீராய் போகும்.

சமூக தளங்களில் மோடிக்கான பிராசரம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் மோடியை ஆதர்ச புருஷனாக நினைக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு கோழையான திருடனிடம் அகப்பட்டுக்கிடப்பதை விட, ஒரு வீரனிடம் அடிமையாக கூட இருக்கலாம்.

பி‌ஜெ‌பி என்பது பெரும்பான்மை இந்துகளுக்கான கட்சியே தவிர, இவர்கள் ஓட்டு மொத்த இந்துக்களின் பிரநிதிகள் அல்ல. அயோத்தியில் கோவில் வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பிற்கு விட இவர்கள் தயாரா.. அதனால் அயோத்தி விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

காங்கிரஸ் நினைப்பது போல உணவு பாதுகாப்பு மசோதா இவர்களின் சாதனையாக சொல்லிக்கொள்ளலாமே தவிர வோட்டாக மாறும் என்று சொல்ல முடியாது.  மாநில கட்சிகளின் அரசியலை,  இமஜை தாண்டி இவர்களால் இதை ஓட்டுக்களாக மாற்ற முடியாது. இலங்கை விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு ஒன்று போதும் தமிழகத்தில் மண்ணை  கவ்வ. இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே அரசுக்கு விளக்கு பிடித்தவர்கள் என்ற கரை இனி எப்போதும் போகபோவதில்லை.

பி‌ஜெ‌பி வெற்றி பெற செய்ய வேண்டியதெல்லாம், மிக தெளிவான திட்டமிடல். நாட்டின் கடைசி குடிமகனுக்கும் சென்று சேர வேண்டிய பிரசாரம்.

1. ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசின் அவலங்களை பிராந்திய மொழிகளில், மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்லது கலைஞர்கள் மூலமாக எடுத்து சொல்வது
2. இந்தியா எல்லைகளில் அந்நிய நாடுகளின் அச்சுறுத்தல் மற்றும் காங்கிரஸின் கையாலாகாதனதை பிரசங்கிப்பது
3. குடும்ப அரசியலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தேக்கமும்.
4. ரூபாயின் மதிப்பு வீழிச்சி மற்றும் கட்டுபடுத்த முடியாத விலைவாசி
5. தோல்வியடைந்து விட்ட பொருளாதார கொள்கைகள்
6. செயலற்ற பிரதமர்
7. நிலம், நீர், ஆகாயம் என பரந்துபட்ட ஊழல் அமைச்சர்கள், அவர்களை அரவனைக்கும்  அரசு  என
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.



கோஷ்டி பூசலாலும், தேவையற்ற ஈகோ பிரச்சனையாளும் அருமையான வாய்ப்பை தவறவிடாமல் இருந்தால் சரி. 

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...