Showing posts with label புத்தக விழா. Show all posts
Showing posts with label புத்தக விழா. Show all posts

Friday, January 28, 2011

ப்ளாக்கில் தான் சாருவை பிழிகிறார்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையிலுமா...

எல்லா தமிழ் ப்ளாக்கரும் இனைய குப்பையை உற்பத்தி செய்பவர்கள் என்று சமணன் கடந்த வார விகடனில் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது குறித்து யாரவது எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் கவனிக்க வில்லையா...சாதாரண விஷயத்துக்கெல்லாம் முஷ்டி மடக்குபவர்கள் இங்கு அதிகம் என்று கேள்விப்பட்டேன். எருமை மாடுமேல தானே மழை என்று ஒதுங்கி கொண்டார்களா..? தெரியவில்லை. (ஊதார சங்கை ஊதிட்டேன்)

அதுமட்டுமில்ல, புத்தக விழாவில் நடக்கும் எல்லா கேலி கூத்துகளையும் சேர்த்தே தான் கிழி கிழியென்று கிழித்திருந்தார். கண்டிப்பாக இவரும் ஒரு காலத்தில் ப்ளாக்கராக இருந்திருப்பார். ஒட்டு பிடிக்கும் கலாச்சாரத்தில் இவருக்கு உடன்பாடு இல்லாமல் வெளியேறி இருக்கலாம். ப்ளாக்கர் "ரசிகனிடம்" அதற்கான தந்திரங்கள் ஏராளம். கேட்டால் சொல்லிதந்திருப்பாரே... அதுக்குள்ளே same side கோல் போட்டுடீங்களே சமணன் சார்..!

ப்ளாக்கில் தான் சாருவை பிழிகிறார்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையிலுமா... ஒருவேளை இது "எதிர்கட்சிகளின் சதியோ" என்று யோசித்தேன்..ஆனால் அடுத்த ரிவிட்டு அங்கேயும் விழுந்திருக்கிறது. சமணன் நல்லவரா..கெட்டவரா...நல்லி குப்புசமியையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் புத்தக காட்சி கேண்டீன் வடையை கூட விட்டு வைக்கலையே...முதல்ல தயவு செய்து அந்த கதையே படிங்க சாமி..

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...