Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Monday, August 26, 2013

இன்னொமொரு கட்ச தீவு உதயமாகிறது...

வெள்ளையர்களால் அடிமை வேலைக்கும், விவசாய பணிகளுக்காகவும் பர்மாவில் குடியமர்த்த பட்டவர்கள் தான் பர்மா தமிழர்கள்.

எந்த ஒரு கலாசார உரிமையும் மறுதலிக்கபட்ட நிலமையில் தான் இன்னமும் அங்கே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கால ஓட்டத்தில் பர்மிய கலாச்சாரதோடு கலந்து விட்டாலும், சிலர் இன்னமும் நமது பாரம்பரிய கலாசார மிச்சங்களை சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.



பர்மாவில் உள்ள காளீ கோவில்


மணிப்பூர், பர்மிய எல்லையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்வில் தான் இப்போது புயல் தாக்க தொடங்கியிருக்கிறது. இலங்கயில் சுழன்றடித்து லட்சோப  லட்சம் மக்களை கொன்றொழித்தும், வாழ்வை புரட்டி போட்டும் மகிழ்ந்த அந்நிய சக்திகள், இப்போது பர்மாவில் மையம் கொண்டிருக்கிறது.

அந்தோ பரிதாபம், இலங்கை தமிழர்களுக்காவது திராவிடர் கழகங்களும், சீமானும், போலிகண்ணீர் வடித்த காங்கிரஸ் பெருந்தலைகளும் வரிசைகட்டி நின்றனர். இவர்களுக்கு கேள்வி கேட்பாரே இல்லை.

மணிபூரின் மோரே நகர் தமிழர்கள் பெருவாரியாக  வாழும் பகுதியாக இருக்கிறது. மியான்மார் என்றழைக்கபடும் பர்மியர் நீண்ட நாட்களாகவே இப்பகுதியில் கண் வைத்திருக்கின்றனர். அண்மையில் சீனா, பாகிஸ்தான் ஊடுருவலை அடுத்து, இந்தியா தரப்பில் இருந்து எந்தவொரு கடுமையான நடவடிக்கயையும் இல்லை என்பதை புரிந்து கொண்ட பர்மியர்கள், இப்போது பகிரங்கமாக இந்தியா எல்லை பகுதியை அபகரிக்க முயல்கிறார்கள்.



மோரே நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில்.


காங்கிரஸ் அரசு இருக்கும் போதே கால் வைத்து விட்டால் நல்லது என்று நினைக்கிறார்களோ என்னவோ (ரொம்ப நல்லவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்), பின்னால் ஆட்சி மாறினாலும் கலகம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். தும்பை விட்டு வாளை பிடிப்பது தானே நாம் வேலை..

இப்போதே விழித்து கொள்ளாவிட்டால் இதுவும் ஒரு கட்ச் தீவாக பின்னாளில் பெரிய தலைவலியாக இருக்க போகிறது. தமிழன் உண்மையிலேய அடிவாங்கவே பிறந்தவனா..?

சீமான்களே, கழக கண்மணிகளே இனி ஒரு மாமாங்கம் அரசியல் நடத்த ஒரு அருமையான வாய்ப்பு. ஜாமாய்..!!

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...