Showing posts with label கங்குலி. Show all posts
Showing posts with label கங்குலி. Show all posts

Saturday, March 12, 2011

உலக கோப்பை இம்முறையும் கோவிந்தா தானா..?

268 / 2 என்ற நிலையில் ரொம்பவும் தெம்பாக விளையாடி கொண்டிருந்த நிலையில் பெரும் புயலென சாய்த்தார் ஸ்டெயின் இந்திய வீரர்களை. மீண்டும் ஒருமுறை 400 தொடும் என்ற நிலையில் 300 கூட தொடமுடியாது போனது வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை காட்டுகிறது.

இன்னும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சினை நம்பி தான் இந்திய இருக்கிறது. சச்சின் போனதும் வரிசையாக எல்லோரும் நடையை கட்டியது நாம் இன்னும் வளரவே இல்லையோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அடியது போல் தெரிகிறது. அதுவும் விராத் கோலி மற்றும் யூசுப் பதான் அவுட்டனா விதம் மகா கேவலம்.

இன்னும் 3 ஓவர்களே மீதமுள்ள நிலையில் பந்தை தடவி கொடுத்துகொண்டிருந்த தோணி நிச்சயம் இம்முறை பாராட்டு குரியவரல்ல.

கடைசி நான்கு ஓவரில் 100 ரன்கள் எடுத்து விஸ்வரூபம் எடுத்த நீயூசிலாந்து எங்கே...?
கடைசி ஒன்பது விக்கெட்டுகளை வெறும் 26 ரன்களுக்கு இழந்த இந்திய எங்கே..

கவச்கரும், கங்குலியும் இந்திய அணியை யானை குதிரைன்னு புகழ்த்து தள்ளினாங்க. வடிவேல் சொன்ன மாதிரி நம்ம பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மட்டம் வீக்...ஓவரா பில்ட் அப் கொடுக்கறதா விட்டுட்டு நிஜத்திற்கு வாங்க சாமி.

பார்ப்போம் ஜாகிர் கானும், பஜ்ஜியும் என்னசெய்ய போகிறார்கள் என்று

Tuesday, February 8, 2011

ராமதாசும் கங்குலியும்...!!

மீண்டும் ஒரு மக மெகா ஊழல் குறித்து செய்திகள் அடிபடுகிறது. ராசாவிற்கு இப்போது புது தெம்பு வந்திருக்கும். கல்மாடிக்கு வந்தது போல..

அரசியல் நாகரீகம் குறித்து பேச கலைஞருக்கு எந்த அருகதையும் இல்லை. முரசொலி கட்டுரைகளே அதற்க்கு சாட்சி. இப்போதெல்லாம் நிருபர்கள் மீது எரிந்து விழுவது போல் பேசுவது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை. அம்மையாரை குறித்த விமர்சனங்கள் எல்லாம் எந்த மாதிரி நாகரீகம். இன்றைய தினசரியில் கூட அம்மையாரை "வெத்துவேட்டு" என்று செல்லமாகத்தான் அழைத்திருக்கிறார்

தலித்தியம் பேசுவது என்பது பிராமணர்களை எதிர்ப்பது மட்டும் தானா....? ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு..?

தாவுவதில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் ராமதாசிற்கு அத்துபடி போல...அ தி மு காவிற்கு கெட்ட நேரம் வந்தால் பா ம க கூட்டு சேருவதை தடுக்க முடியாது. கங்குலியும் நம்ம ராமதாஸ் ரேஞ்சிற்கு இறங்கி வந்துவிட்டார். யாரவது கவனிங்கப்பா.. இருந்த இருப்பென்ன...வாழ்ந்த வாழ்க்கையென்ன

சுப்பிரமணியம் சாமி மீது நடவடிக்கை என்பதெல்லாம் சும்மா பேத்தல்..சாமியிடம் இருக்கும் ஆதாரங்கள் அப்படி..

வெளியுறவு துறை அமைச்சராவது ரொம்ப எளிது போல...கண்டனம் தெரிவிக்கவும், வருத்தம் தெரிவிக்கவும் தெரிந்தால் போதும். கிருஷ்ண வேறு என்ன செய்கிறார்.

கூகிள் செய்திகள் - பொழுது போக்கு தலைப்பின் கீழ் வரும் செய்தி - ராசாவிற்க்கு மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிப்பு - என்னடா கொடுமை சார் இது. கூகுளுக்கு கூட தெரிந்திருகிறது தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு ஊழல் விசாரணைகள் தான் என்று.


யோகா என்பது - Its tool of reducing or increasing our body weight. ஒரு இளைஞர்கள் கூட்டத்தில் ஒட்டு கேட்டது. நல்லவேளை பதஞ்சலி இன்று உயிருடன் இல்லை.
யோகா பிறந்த தேசம் இது என்று "சொல்லிகொல்லவே" வெட்கபடுகிறேன்.

அவ்வளவு தான்..மறுபடியும் சந்திப்போமா..வந்தது வந்தீங்க எதாவது சொல்லிட்டு போங்க...

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...