நூறாயிரம் மைல் உள்ளோடி
ஆடுது பொம்மலாட்டம்...!
அது
உச்சந்தலை மயிர்க்கால் வழியோட...
பிறவி இனியில்லை - இனி
தெய்வம் வேறில்லை
உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...

ஆயிரம் மந்திரம் தின்று
தினம் தினம் துப்பி
அவதொன்றுமில்லை
கிழக்கென்ன மேற்கென்ன எண்திசை
சுழன்றாலும் கைலாயம் கண்டாலும்
மரணத்தின் வாசலுக்கு
ஒற்றை பயணம்
உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...
Good One.
ReplyDelete