Monday, January 18, 2010

நீயும் சிவமாவாய்....!!!

நூலிழை காற்று
நூறாயிரம் மைல் உள்ளோடி
ஆடுது பொம்மலாட்டம்...!

அது
உச்சந்தலை மயிர்க்கால் வழியோட...
பிறவி இனியில்லை - இனி
தெய்வம் வேறில்லை

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...



ஆயிரம் மந்திரம் தின்று
தினம் தினம் துப்பி
அவதொன்றுமில்லை

கிழக்கென்ன மேற்கென்ன எண்திசை
சுழன்றாலும் கைலாயம் கண்டாலும்
மரணத்தின் வாசலுக்கு
ஒற்றை பயணம்

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...

1 comment:

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...