Monday, February 1, 2010

அவன் தொழில் கொலை செய்வது..!

அவன் தொழில் கொலை செய்வது. இதுவரை 2000 - ற்கும் மேற்பட்ட உயிரை பரலோகம் அனுப்பியாயிற்று. தினம் தினம் கொலை தொழில். விடுமுறை தினங்களில் அவன் கைகள் இரத்தத்தால் குளிப்பாட்டபட்டிருக்கும். முகம் உடை என எங்கு நோக்கினும் ரத்த சிதறல்களாக தானிருக்கும். தலையா, காலா எதுவென்றாலும் அவனிடம் தனி ரேட் தான்.

இரத்தத்தை கண்டு அவனுக்கு பயமில்லை. அவன் தோற்றம் கண்டால் எல்லோருக்கும் ஒரு கிலி பிறக்கும். அவன் ஓய்ந்து இங்கு யாரும் பார்த்ததில்லை. அவனுக்கு விடுமுறையும் கிடையாது.

ஆனால் இந்த ஒரு வாரமாக அவனை பார்க்க முடியவில்லை. செய்த பாவத்திற்கு அவனக்கு என்ன கதி கிடைத்ததோ..

பெரும் தொல்லை. இனி கோழிக்கறி வாங்க வேண்டுமென்றால் மெயின் ரோட்டை தாண்டி ரொம்ப தூரம் போகணும். இந்த கோழிக்கடை சண்முகம் எங்கே பொய் தொலைந்தானோ...?!!

3 comments:

  1. இப்படித்தான் கடைசில ஏமாத்தப் போறீங்கன்னு தெரிஞ்சிருச்சு நல்லாவே பண்ணிட்டிங்க

    ReplyDelete
  2. வடபோச்சே! ( உங்களுக்கு மட்டும் புரியும்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  3. எப்பூடி...நாங்களும் எழுதுவோமெல்ல...

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...