Saturday, February 13, 2010

இலக்குகள் மிச்சமுண்டு இதயம் சிதறியபின்னும்..!!



நிகழ்வுகளின்
நெருக்குதல்களில்..
கைபிடித்த உறவும்
கைகொட்டி சிரித்தபின்
ஒளிந்துகொள்ள வழியின்றி..
தோல்வியை ஒப்புகொண்டாயிற்று

அம்மனமானபின்
கைகொண்டு எதைமூட...

சா(கு)ம் பிணங்கள்
சாவிற்கு அழும்,
பிணங்கள் அழுததுண்டா..!!

கல்வீசி சென்றவர்கள்
எல்லோருக்கும்
முகமோ முதுகோ
காட்டிவிட்டேன்.

நிராயுதபாணியின் தோல்வியில்
ஆதாயம் தேடிய முகங்களின்
கைகோர்த்து சிரித்த
பழையமுகவரிகள்
பத்திரமாகத்தான் இருக்கிறது

இலக்குகள் மிச்சமுண்டு
இதயம் சிதறியபின்னும்..!!

அம்மணத்தை தின்றவனின்
கைகொரு வைரகாப்பு
முதுகு பார்க்க
முப்பரிமான கண்ணாடி
கல்வீசிய சிநேகிதர்கெல்லாம்

என் செலவில் பரிசளிக்க
எனக்கான ஒரு நாளில்
நானே வருவேன்
மீண்டு(ம்)

பதிவர்களுக்கான மாத இதழ் வெள்ளிநிலாவில்
இக்கவிதை பிரசுரிக்கபட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

10 comments:

  1. நன்றி அண்ணாமலையான்
    நன்றி சைவகொத்துபுரோட்டா (நன்றி சொல்வதற்காவது உங்கள் உண்மையான பெயரை தெரிந்துகொள்ள ஆசை)

    ReplyDelete
  2. கேள்விகுறியின் காரணம் புரியவில்லை சுரேஷ்...
    ஒரு நண்பனின் அனுபவம் தான் மேலுள்ள கவிதை

    ReplyDelete
  3. நண்பன் மீண்டு(ம்) வர விருப்பங்களுடன்..

    ReplyDelete
  4. நன்றி குமார்.
    மறுபடியும் வாங்க

    ReplyDelete
  5. சார் ரொம்ப நல்லாருக்கு

    காயங்கள் படபட
    நெஞ்ஜமும் உறுதியாகும்
    நெஞ்ஜம் உறுதியானால்
    உலகம் நம்கையில்

    (சார் எனக்கு தமிழ் டைபிங் ரொம்ப புதுசு மிஸ்டேக் இருந்தா சாரி)

    ReplyDelete
  6. நன்றி அமைச்சரே..
    பதிவுலகிற்கு உங்களை வரவேற்கிறேன்..

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...