ஆலமரதடியே பெரும் கூட்டம். சாரி சாரியாக வந்த வண்ணம் இருந்தன எறும்புகள். வரும் போதே ஒன்றோடு ஒன்று எதையோ முனுமுனுத்தபடி வந்து கொண்டிருந்தன. கூட்டத்திடையே தங்களின் நீண்ட கால நண்பனை சந்தித்த மகிழ்ச்சியில் தனி தனியாக கூடத்திலிருந்து விலகி சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன... நல விசாரிப்புகள்... குடும்ப அறிமுகங்கள் ஒரு பக்கம்.
குட்டி எறும்புகள் சில வரிசையிலிருந்து விலகி செல்ல, வயதானவர்கள் அவர்களை பிடித்து தங்களின் குல பழக்கத்தை கை விடகூடாது என்று பாடம் எடுத்தார்கள். வரிசை போய்க்கொண்டே இருந்தது..
கூட்டத்திடையே சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன...கடவுளின் கோபம் பற்றி...இந்த கூட்டம் எதற்காக கூட்டபட்டிருக்கும் என்பதை பற்றி...
நான்கு திசைகளில் இருந்தும் கூட்டம் வந்தவாறு இருந்தது..
தலை பெருத்து, நீண்ட உடலுடன் அசைந்து வந்த தலைமை எறும்பை பார்க்க பயங்கரமாக இருந்தது...சில குட்டி எறும்புகள் பயத்தில் அங்கும் இங்கும் அல்லடி கொண்டிருந்தன..
நாலா புறமும் நோக்கியபின் மெல்ல பேச ஆரம்பித்தது தலைமை எறும்பு. இன்று ஒரு முக்கியமான நாள். பல்லாயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் நம் இனத்தவரில் யாரும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியதில்லை. மிக மிக அவசர அவசியமான கூட்டம் இது.
நாம் இதுவரை கடவுளாக நினைத்திருந்த, நம்மை விட நூறு முதல் இரநூறு மடங்கு பெரிதான ஒரு ஜந்து கடவுள் இல்லையென்று உறுதியாக தமது நீண்ட கால தபஸின் பயனால் தாம் அறிந்ததாக தலைமை குரு தெரிவித்திருக்கிறார்..
ஆஆஆ....அபசாரம். கடவுளை மறுத்து பேசுவது.., தவறு..அப்படி இருக்க முடியாது...எறும்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கூச்சலிட ஆரம்பித்தது...
பின்னக்காலை உந்தி நேராக எழுந்த தலைமை எறும்பு அமைதியா இருக்கும்படி கர்ஜித்தது..
முட்டாள்களே...யோசித்து பாருங்கள்...
காடு, மரம், நதி, விளைச்சல் எல்லாம் அவனால் தோன்றி அவனாலேயே அளிக்கபடுகிறது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் இன்று என்ன ஆயிற்று...எல்லாம் அவனாலேய அழிக்கபடுகிறது. நம்மை விட வேகமாக அவைகள் பெருகி கொண்டிருக்கின்றன. அதனாலேய நம் வளங்கள் எல்லாம் அழிக்கபடுகிறது. அவைகளின் பேராசையால் நம் இனமே அழிந்து விடும் போல் தெரிகிறது. ஏற்கனவே நம் முன்னோர்கள் சொல்லி சென்ற பல வித்தியாசமான உயிரினகள் நம் இளைய தலைமுறை பார்த்தது கிடையாது...
எல்லாம் யாரால்...
"கடவுளை முழுவதுமாக அளந்தவர் யாருமில்லை. யாரவது முயற்சித்தால் ராட்சசன் கைகள் அழித்திடும் நம்மை, அவன் எல்லை இல்லாதவன்" - இப்படி சொல்லி நம் முன்னோர்கள் ஏமாற்றி விட்டார்கள். அந்த ஜந்துவிற்கு மேலெல்லாம் உணர்வுகள் உண்டாம். உணவிருக்கும் இடத்தை நாம் காற்றின் உதவி கொண்டு வாசனையால் அறிவது போல. அதனால் நாம் மேலே ஏறும் பொழுது அவைகள் நம்மை கொன்று விட முயற்சிகின்றன..வேறு எந்த தனிப்பட்ட சக்தியும் அதற்கில்லை.
எறும்புகள் ஒன்றையொன்று நோக்கி திரு திருவென முழித்தன.
அவரகளால் நம்பமுடியவில்லை. நம்பமலூம் இருக்கமுடியவில்லை. இதுவரை சொல்லபட்டு, உண்மையென்ரு நம்ப்பட்டு வந்தவிஷயங்கள் பொய்யென்று ஆனபின் ஒரு மிக பெரிய ஏமாற்றுதலுக்கு தாங்கள் உள்ளனதாக அவைகள் நம்பின.
சொல்வது நமது தலைவரல்லவா...இது பொய்யாக இருக்காது. இனி நமக்கென்று யாருமில்லை. எல்லோர் மனதிலும் பயம் சூழ்ந்தது. ஒரு வெறுமையை உணர்ந்த்தன. உலகமே இருண்டு போய் விட்ட்தாய் பதற தொடங்கின.
காற்றில் சருகுகளாய் கலையதொடங்கின.
காலையில் கண் விழித்ததும் சிதறி கிடக்கும் நம் உணவு நமக்காக இறைவன் படைத்த்தல்ல. அவை அந்த ஜந்துகள் உண்டது போக மிச்சம். அதன் வாயிலிருந்தும் கையிலிருந்தும் தெறித்து விழுந்தவை. கணீரென்ற தலைவனின் குரல் கேட்டு நின்று திரும்பின...எரும்புகளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அவைகளின் கைபட்டும், காலடியிலும் சிக்கி தான் நம் முன்னோர்கள் பலர் உயிரை இழந்திருகின்றனர். கடவுளின் கோபம் என்றும் சாபம் என்றும் பல தலைமுறைகாளக ஏமாற்றபட்டிருக்கிறோம். நம் கூடுகள் தீடிர் தீடிரென்று அழிக்கப்பட்டது அவைகளின் சுயநலத்திற்காக. ஆனால் நாமோ அழிக்கவே முடியாத கூடுகள் கடவுளால் நமக்காக உருவாக்கபடுகிறது என்று ஏமாந்துவிட்டிருக்கிறோம்.
நீண்ட தவத்திலிருந்த குரு நிஷ்ட கலைந்து, தான் கண்டதை அக்னி குழம்புகளாய் கக்கி கொண்டிருந்தார். நிதர்ஷ்ன்ங்களை தாங்கி கொள்ளமுடியாமல் போதும் போதும் என்று குமுறின. இனி யார் நம்மை காப்பார்...இந்த உலகில் கடவுளே இல்லையா...கடவுள் உண்டென்றால் அது எங்கிருக்கிறது..?
கரடுமுரடான பாறை இடுக்குகளிலிருந்தும், சூரிய ஒளியே தெரியாத காடுகளிலிருந்தும் நம்மை காத்தது கடவுள் இல்லை. அந்த ஜந்துகளின் சூழ்ச்சிக்கு நாம் இறையாகி விட்டோம்...
கண்களை துடைத்துக்கொண்டு மெதுவாக கேட்டன...
இனி நாம் செய்ய வேண்டியது என்ன...
கண்ணை மூடிய மூத்த எரும்பு...நீண்ட மொளணத்திற்க்கு பின், உலகம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது...அந்த ஜந்துகள் பெருகிவிட்டன..இந்த பூமியே அவைகளின் கட்டுக்குள் போய்விட்டது போல் தெரிகிறது. நாம் நாமாக வாழ்வோம். அதை தவிர நம்மால் செய்வதற்க்கு ஒன்றுமில்லை... இனி கடவுளென்று ஒன்றுமில்லை. அப்படியே கடவுள் என்று ஒன்று இருந்தால் அவன் நம் வடிவில் வரட்டும்.. நம் மொழியில் பேசட்டும்..
யுக யுகமாக, காலம் காலமாக நமப்பட்டு வந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து போனபின் ஏற்படும் வெறுமை ரொம்ப கொடுமை...செத்த பிணங்களாய் எரும்புகள் நகர்ந்தன..
காலம் எப்போதும் போல் வேகமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது....
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உத...
-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
வித்யாசமான நோக்கு..
ReplyDeleteசிந்தனையைத் தூண்டுவதாகவுள்ளது நண்பரே..
"God is the noblest creation of Man ! "
ReplyDeleteRobert G Ingersoll
இந்த மனிதன் மட்டும் நம்மைப் போல் ஒற்றுமையாக உழைத்து வாழ்ந்தால் கடவுள் நிம்மதியாகத் தூங்கலாமே!--
எறும்பின் எண்ணம்.
A good imagination.congrates.
ReplyDelete