Monday, December 28, 2009

தீட்சை அவசியமா...

கட்டுரையின் தன்மை கருதி மீண்டும் பதிவிடுகிறேன்.


நேற்று நண்பரின் அழைப்பின் பேரில் ஓர் ஆன்மீக வகுப்பிற்கு சென்றிருந்தேன்.
வடலூர் மகான் இராமலிங்க அடிகளாரின் வழி வந்த அடிகளார் கூட்டம் அது.
ஒரு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தான் கூட்டத்தை வழி நடத்தினார்கள்.


அவர் பெயர் குரு அன்னை நாகம்மை. மிக மிக எளிமையான தோற்றம். இயல்பான பேச்சு. நடைமுறை வாழ்வில் குரு என்று சொல்லிக்கொண்டு அலைகின்ற பல நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

எப்போதும் ஒரு கூட்டம் அவரை ஒட்டிக்கொண்டு மற்றவர்களை அண்டவிடாமல் பார்த்துகொண்டிருக்கும். ஆனால் இங்கு எந்த ஒரு குருவுக்கு உண்டான பகட்டான ஆடம்பரமோ, ஆர்பாட்டமோ இல்லாமல் மிக எளிமையாக எல்லோரோடும் உரையாடி கொண்டிருந்தார்.




இறைவனை காணலாம் என்ற கொள்கையை முன்னிறுத்தி நெருப்பு தத்துவத்தில் தங்கள் உடலையே தங்கமாக புடம் போடும் தீட்சையை குரு அன்னை வழங்கி கொண்டிருந்தார். அப்போது தீட்சை குறித்து தன்னிடம் கேள்வி எழுப்பிய ஒருவரை குறித்து அம்மா சொன்னது...என்னை பெரிதும் யோசிக்க வைத்தது. அதனாலேய இந்த பதிவு.





அந்த கேள்வி இது தான்...





எத்தனையோ சித்தர்கள் வந்து போய்விட்டார்கள்..எத்தனையோ குருமார்கள் வந்து போய்விட்டார்கள்... அவர்கள் எல்லோரும் தீட்சை பெற்றவர்களா..என்ன..? நாம் ஏன் தீட்சை எடுக்க வேண்டும்..? தீட்சை எடுக்காமலேயே அவர்கள் எல்லாம் ஞானத்தை பெறவில்லையா...?



குரு அன்னை ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனார். அம்புகளாய் துளைத்த கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தோம்...அப்போது அன்னை கேள்வி கேட்டவரை நோக்கி நீ ஒரு பிச்சைகாரனப்பா.. அதனால் தான் என்றார்.
இப்போது கேள்வி கேட்டவர் திகைத்து போனார். தொடர்ந்த அன்னை...இருபது முப்பது வருடங்களாக அரும்பாடுபட்டு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயே அது யாருக்காக...என்றார்.





அது அது என் வாரிசுகளுக்காக என்றார் அவர்...





சரி நீ சேர்த்ததை எல்லாம் அப்படியே விட்டு விட்டு போய்விடுவாயா..இல்லை முறைப்படி
யார் யார்க்கு என்ன சேரவேண்டும் என்று பிரித்து கொடுத்துவிட்டு செல்வாயா.. என்றார் அன்னை.

கண்டிப்பாக உயில் எழுதி வைத்துவிடுவேன் என்றார்..



நீ எழுதி வைக்கும் உயில் போன்றது தான் இந்த தீட்சையும். யாரார்க்கு கிடைக்க வேண்டுமோ
அவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். கோடான கோடி ஆண்டுகளாக காட்டிலும் மலையிலும் திரிந்து கடுமையான தபசிலிருந்து தாங்கள் கண்டு கொண்ட அற்புத புதையலை, ஆன்மிக ரகசியத்தை எல்லோர்க்கும் கடை விரித்து விட முடியாது... அதற்கென்று சில நியமங்களை சித்தர்கள் அருளி சென்று இருக்கிறார்கள்..பல ஜென்மங்களாக தேடி தெரிந்துகொண்ட ஞான கருவூலத்தை படி படியாகத்தான் உன்னுள் செலுத்த முடியும்.



யாரும் சித்தனகலாம்..எல்லோரும் புத்தனகலாம்...ஆனால் எந்த ஒரு சித்தனோ, புத்தனோ அதை எளிதில் கண்டார்களா என்ன..? உன் வாரிசு எப்படி உன்னை போல் கஷ்டப்படகூடாது என்று நீ சொத்து சேர்த்து வைக்கிறாயோ... அதைப்போலத்தான் காட்டிலும் மலையிலும் திரிந்து கடுமையான தபசிலிருந்து தாங்கள் கண்டு கொண்ட அற்புத புதையலை, ஆன்மிக ரகசியத்தை அதற்கென்று சில நியமன்களோடு சித்தர்கள் அருளி சென்று இருக்கிறார்கள்..


பல ஜென்மங்களாக தேடி தெரிந்துகொண்ட ஞான கருவூலத்தை பூமியில் உதிக்கும் உயிர்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும், மானிட பிறவியின் நோக்கமே அது தான் என்பதால் தான் தங்களின் நம்பிக்கைக்கு உரிய சீடர்களிடம் அந்த பணியை தொடர்ந்து செய்ய பணிக்கிறார்கள்... என்றார்.
ஆன்மிக தேடுதலோடு மலை மலையாக, கோவில் கோவிலாக ஒரு பிச்சைகாரனாய் ஏறி இறங்கும் எத்தனையோ அன்பர்களை வழிநடத்தி மெய்யான மெய்பொருளை அவருள் கண்டுகொள்ள செய்வது தான் ஒரு குருவின் பணி என்று முடித்தார்.






உண்மை தானே

2 comments:

  1. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
    அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow



    (First 2 mins audio may not be clear... sorry for that)

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    My blog:
    http://sagakalvi.blogspot.com/

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...