ஒரு 65 வயது பெரியவரை சந்திக்க நேர்ந்தது. Ex மிலிடரி. பரந்த அறிவு. தொடாத subject இல்லை. நேரம் போனதே தெரியவில்லை. போன தலைமுறை வரை இருந்த systamatic life style இன்று இல்லை. just dont care policy தான். இவரை போன்ற பெரியவர்கள் போன பின் நாம் என்ன செய்ய போகிறோம்...நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவரின் எல்லா அறிவையும் ஒரே நாளின் நம் தலையில் வந்து உட்கார வைத்து விட முடியாது தான். ஆனால் அவரிடம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் கூட அவர்களால் எப்படி நேர்மையாக வாழ முடிகிறது என்பது ஆச்சர்யம். " என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிற பொழுது..நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு திருப்தியா இருக்கு. கடவுள் எனக்கு கொடுத்த எல்லாவற்றுக்கும் ஒரு royal salyute ". என்ற பொழுது இன்று எத்தனை பேரால் குற்ற உணர்ச்சி இல்லாமல் தங்களின் வாழ்க்கையை திரும்பி பார்க்க முடிகிறது என்று கேட்க தோன்றியது. தலை முதல் வால் வரை எங்கும் பொய், லஞ்சம், ஏமாற்று. வாழ லாயகற்று போய்விட்டது இந்த புண்ணிய தேசம்.
ஆன்மிகத்தில் நம் முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கும்
அறிவியல் விளக்கம் கொடுத்தார். just amazing ...! (இதை பற்றி தனியாக விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன்) கொஞ்சம் லேட்டாக பிறந்து விட்டதற்காக வருத்தப்பட்டேன். நான் இந்த நூற்றாண்டுக்கான ஆள் இல்லை என்றே தோன்றுகிறது.
இறுதியாக தொலைபேசி அழைப்பு வந்து எல்லாம் கெட்டு விட்டது. உடனடியாக கிளம்பு வேண்டிருந்ததால் மீண்டும் ஒரு முறை சந்திக்க விருப்பம் தெரிவித்து விட்டு கிளம்பி விட்டேன். ஆனால் அவரின் குரல் இன்னமும் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஒரு நேர்மையான மனிதரின் குரலுக்கு இருக்கும் சக்தி அது தான்.
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்...
-
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
நமது பதிவர் மாத இதழ் வெள்ளிநிலா குறித்து ஒவ்வொரு மாதமும் பத்திரிகை வெளிவந்தவுடன், விமர்சனம் அதாவது அந்த மாத இதழின் நிறை குறைகளை பற்றி எழுதின...
No comments:
Post a Comment
உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.