Wednesday, December 30, 2009

மரணம் குறித்து..

ஏனோ மரணம் குறித்து ஒரு கவிதை எழுத தோன்றியது...பொதுவாக கவிதை படிப்பது எழுதுவது என்பது என்னை பொறுத்தவரை முடிந்து போன சமாச்சாரமாகவே இருந்தது. இங்கு பெரும்பாலோனோர் கவிஞர்கள் ஆவதே காதல் வயப்பட்ட பின்பு தான். என் காதல் என்னை விட்டு போன பின் கவிதையும் கூடவே போய்விட்டது.

பரண் மேலிருக்கும்
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்.....

மரணம் பற்றி எழுத நினைத்து மனம் எங்கெங்கோ அலைகிறது...ஒரு வேலை அவளை பிரிந்தது தான் என்னை பாதித்த முதல் மரணமாக கூட இருக்கலாம்.. மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..பிரிய நேர்வது....

எனக்கு மரணம் குறித்து பயம் இல்லையென்று நண்பர்கள் வட்டத்தில் சவடால் அடித்ததுண்டு... ஆனால் மரணத்தின் வாசல் வரை சென்று வந்த சில சம்பவங்கள் மரணத்தின் முன் எல்லோரும் கோழைகள் தான் என்பதை உணர்த்தியது... உண்மையிலேய தற்கொலைகள் கோழைதனமல்ல என்பது மரணத்தின் நெருக்கத்தை உணர்தவனுக்கு தான் தெரியும்.

மரணம்
மகா மௌனம்...

இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...

இந்த கணக்கின் வகுத்தலில்
மட்டும்
மீதி வருவதே இல்லை.

No comments:

Post a Comment

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...