தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்டும் உங்களோடு ஐக்கியமாக வந்துவிட்டேன் ( சும்மா..ஒரு விளம்பரம்....)
மார்ச் 4 - ல் நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். மே-15 - ல் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்கிறார் என்பது தான் அது. இதோ அதன் லிங்க்
அ தி மு க வெற்றி பெற்றது முதல் ஒரே போன்கால்களாக வந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு பெரிய முனிவர் ரேஞ்சிற்கு மாலை மரியாதைகள், தாரை தப்பட்டை முழங்க வாழ்த்து மழையில் திக்குமுக்காடி போய்விட்டேன். நன்றி அ தி மு க தொண்டர்கள். (இன்னைக்கு ஒன்னும் ஏப்ரல்-1 இல்லையே என்று நாட்காட்டியை பார்க்காதீர்கள்)
பா ம காவிற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் சம்மட்டி அடி கொடுத்த அனைத்து வாக்களா உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சாதியை சொல்லி வயிறு வளர்ப்பவர்களை ஒருக்காலும் மன்னிக்கவே முடியாது.
அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வெற்றி பெற்றதும் உங்கள் வாயிலிருந்து வந்த வார்த்தை. வீழ்ந்துபட்டு கிடக்கும் தமிழகத்தின், தமிழர்களின் பொருளாதார நிலையை மீடேடுப்பது தான் முதல்பணி என்றீர்கள். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றீர்கள். இதை எப்போதும் மறவாதிர்கள். உங்களை நம்புகிறோம்.
இத்தனை காலாமாக பதிவர்களின் கருத்து பொருளாய், காட்சிபொருளாய் இருந்த அனைத்து தி மு க கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவிப்போம். உங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் கொஞ்ச நாளைக்கு விட்டுவிடுகிறோம். அடிச்ச பணத்தை மறைக்கணும், போலி கணக்குகள், ஆவணங்கள் தயார் செய்யணும், நல்ல வக்கீலை பார்த்து முன்ஜாமீன், பின்ஜாமீன் ஏற்பாடு செய்யணும்.. பாவம் சார் போங்க... போங்க...
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Friday, May 13, 2011
Thursday, April 7, 2011
பொங்கி எழும் இந்தியா ஊழலுக்கெதிராக வெடிக்கும் அமைதி புரட்சி இளைஞர்களே அணி திரளுங்கள்
அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கோர்
காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ....?
பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது. இந்த தழல் குஞ்சல்ல பழுத்த மூத்த அனல். 42 ஆண்டுகளாக சலிக்காமல் போராடும் இவரின் போராட்டம் இன்று வீதிக்கு வந்திருக்கிறது முதல் முறையாக. (வாழ்க ஊடகங்கள்). தென்னிந்திய ஊடகங்கள் முற்றிலுமாக குறிப்பாக தமிழகத்தில் இது குறித்து பெட்டிசெய்தி கூட காணோம். ஆனால் வடக்கில் கிழிகிறது கிழட்டு அரசியல் வாந்திகளின் முகத்திரை.

வந்து குவியும் இளைஞர் ஆதரவு அந்த முதியவரே எதிர்பாராதது. மத்திய கிழக்கு நாடுகளை மையம் கொண்ட ஊழலுக்கு அடக்குமுறை ஆட்சிகெதிரான புயல் முதல் முறையாக தெற்கத்திய நாடுகளில் மையம் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் இப்போது அன்னா ஹசரவை மற்றொரு மகாத்மாவாக பார்க்கிறது. 16 வயது பெண் டெல்லி இந்திய கேட்டிலிருந்து பேசுகிறார் " காந்தியை நாங்கள் பார்த்ததில்லை. அன்னாவை நான் காந்தியாகவே உணர்கிறேன்."
என் அன்பு இளைஞர்களே இதை விட்டால் இன்னொமொரு சந்தர்ப்பம் கிடைப்பதரிது. கைகோர்ப்போம் வாருங்கள். ஊழலுக்கு எதிராய் கிளர்திருக்கும் இந்த புரசியை நாம் தவறவிட்டால் வருங்கால சந்ததிக்கும் நாம் மிகபெரும் பாவம் இளைத்தவர்கள் ஆவோம். வாயிற்று பசிக்கு 10 ரூபாய் திருடியவனை ஆசனவாயில் குச்சியை சொருகும் அதிகாரம் கோடிகணக்கில் கொள்ளையடிபவனுக்கு சலாம் போடுகிறது. ஊழல் செய்தது உறுதிபடுத்தவே 20 வருடங்களாகும், தண்டனையோ மிக சொற்பம் தான். கொள்ளையடித்தை மிக விமரிசையாய் அனுபவித்து சந்தோசமாய் செத்து போவான். நாமோ தினம் தினம் சாகிறோம்.
ஊழலுக்கு எதிரான லோக் பில் கமிசனை அமுல் செய்ய 42 ஆண்டுகள் கிட்டத்தட்ட 10 அரசாங்கங்களிடம் தணியாம மல்லு கட்டிவரும் இவரை நாம் ஆதரிக்கவேண்டியது காலத்தின் கடமை. தவிர்க்க படகூடாத நமது உரிமை. இத்தனை வருடங்கள் கழிந்தும் வழக்கம் போல் ஒரு குழுவை அமைத்து லோக் பில் கமிசனை ஆய்வுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுத்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை ஆய்வுக்கு உட்படுத்துவபர்கள் யார் தெரியுமா..? ஊழலின் மொத்த வடிவமான சரத்பவார் & கோ. மொத்த உறுப்பினர்களும் ஊழல் பெருச்சாளிகள்.
இதை எதிர்த்து தான் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடர்ந்தார் அன்னா. மொத்த உறுபினர்களின் 50 % பேர் மக்கள் பிரதிநிதிகளாகும், கண்ணியமான அரசு நிர்வாகிகளும் இடம் பெற வேண்டும் என்கிறார். ஊழல் செய்தவனுக்கு என்ன தண்டனை என்பதை ஊழல் செய்தவனே நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கும் வரை இந்தியாவில் ஊழலை ஒழித்து விடுவோம், கருப்பு பணத்தை மீட்டு விடுவோம் என்பதெல்லாம் வீண் பேச்சு தான். இந்த சந்தர்பத்தில் நாம் கர்கொர்க்க தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது மட்டுமல்ல இனி எந்த தெய்வம் வந்தாலும் இவர்களிடம் இருந்து நம்மை காக்க முடியாது.
இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம். நடிகர் ஆமிர்கான் கூட அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். உலககோப்பையின் இக்கட்டான தருணத்தில் இந்தியா வெற்றி பெற நாம் பிரார்த்தித்தோம், நமது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தோம், இது அதைவிட முக்கியமான பிரச்னை. நாம் அன்னாவுடன் கைகோர்த்து போராடுவது மிக மிக அவசியம் என்று தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

கதறும் வரை கதறிவிட்டேன். அப்பறம் என்ன படிச்சிட்டு இவனுக்கு வேற வேலை இல்லைன்னு சொல்லிட்டு போங்க...அதைதானே காலம் காலமா பண்ணிட்டு இருக்கோம். கொஞ்சம் Times Now சேனலை பாருங்க சார். டெல்லியில் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தை பார்த்த பிறகாவது நமக்கு உரைக்கட்டும்
காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ....?
பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது. இந்த தழல் குஞ்சல்ல பழுத்த மூத்த அனல். 42 ஆண்டுகளாக சலிக்காமல் போராடும் இவரின் போராட்டம் இன்று வீதிக்கு வந்திருக்கிறது முதல் முறையாக. (வாழ்க ஊடகங்கள்). தென்னிந்திய ஊடகங்கள் முற்றிலுமாக குறிப்பாக தமிழகத்தில் இது குறித்து பெட்டிசெய்தி கூட காணோம். ஆனால் வடக்கில் கிழிகிறது கிழட்டு அரசியல் வாந்திகளின் முகத்திரை.

வந்து குவியும் இளைஞர் ஆதரவு அந்த முதியவரே எதிர்பாராதது. மத்திய கிழக்கு நாடுகளை மையம் கொண்ட ஊழலுக்கு அடக்குமுறை ஆட்சிகெதிரான புயல் முதல் முறையாக தெற்கத்திய நாடுகளில் மையம் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் இப்போது அன்னா ஹசரவை மற்றொரு மகாத்மாவாக பார்க்கிறது. 16 வயது பெண் டெல்லி இந்திய கேட்டிலிருந்து பேசுகிறார் " காந்தியை நாங்கள் பார்த்ததில்லை. அன்னாவை நான் காந்தியாகவே உணர்கிறேன்."
என் அன்பு இளைஞர்களே இதை விட்டால் இன்னொமொரு சந்தர்ப்பம் கிடைப்பதரிது. கைகோர்ப்போம் வாருங்கள். ஊழலுக்கு எதிராய் கிளர்திருக்கும் இந்த புரசியை நாம் தவறவிட்டால் வருங்கால சந்ததிக்கும் நாம் மிகபெரும் பாவம் இளைத்தவர்கள் ஆவோம். வாயிற்று பசிக்கு 10 ரூபாய் திருடியவனை ஆசனவாயில் குச்சியை சொருகும் அதிகாரம் கோடிகணக்கில் கொள்ளையடிபவனுக்கு சலாம் போடுகிறது. ஊழல் செய்தது உறுதிபடுத்தவே 20 வருடங்களாகும், தண்டனையோ மிக சொற்பம் தான். கொள்ளையடித்தை மிக விமரிசையாய் அனுபவித்து சந்தோசமாய் செத்து போவான். நாமோ தினம் தினம் சாகிறோம்.
ஊழலுக்கு எதிரான லோக் பில் கமிசனை அமுல் செய்ய 42 ஆண்டுகள் கிட்டத்தட்ட 10 அரசாங்கங்களிடம் தணியாம மல்லு கட்டிவரும் இவரை நாம் ஆதரிக்கவேண்டியது காலத்தின் கடமை. தவிர்க்க படகூடாத நமது உரிமை. இத்தனை வருடங்கள் கழிந்தும் வழக்கம் போல் ஒரு குழுவை அமைத்து லோக் பில் கமிசனை ஆய்வுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுத்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை ஆய்வுக்கு உட்படுத்துவபர்கள் யார் தெரியுமா..? ஊழலின் மொத்த வடிவமான சரத்பவார் & கோ. மொத்த உறுப்பினர்களும் ஊழல் பெருச்சாளிகள்.
இதை எதிர்த்து தான் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடர்ந்தார் அன்னா. மொத்த உறுபினர்களின் 50 % பேர் மக்கள் பிரதிநிதிகளாகும், கண்ணியமான அரசு நிர்வாகிகளும் இடம் பெற வேண்டும் என்கிறார். ஊழல் செய்தவனுக்கு என்ன தண்டனை என்பதை ஊழல் செய்தவனே நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கும் வரை இந்தியாவில் ஊழலை ஒழித்து விடுவோம், கருப்பு பணத்தை மீட்டு விடுவோம் என்பதெல்லாம் வீண் பேச்சு தான். இந்த சந்தர்பத்தில் நாம் கர்கொர்க்க தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது மட்டுமல்ல இனி எந்த தெய்வம் வந்தாலும் இவர்களிடம் இருந்து நம்மை காக்க முடியாது.
இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம். நடிகர் ஆமிர்கான் கூட அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். உலககோப்பையின் இக்கட்டான தருணத்தில் இந்தியா வெற்றி பெற நாம் பிரார்த்தித்தோம், நமது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தோம், இது அதைவிட முக்கியமான பிரச்னை. நாம் அன்னாவுடன் கைகோர்த்து போராடுவது மிக மிக அவசியம் என்று தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

கதறும் வரை கதறிவிட்டேன். அப்பறம் என்ன படிச்சிட்டு இவனுக்கு வேற வேலை இல்லைன்னு சொல்லிட்டு போங்க...அதைதானே காலம் காலமா பண்ணிட்டு இருக்கோம். கொஞ்சம் Times Now சேனலை பாருங்க சார். டெல்லியில் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தை பார்த்த பிறகாவது நமக்கு உரைக்கட்டும்
Wednesday, April 6, 2011
அமைதி காக்கும் விஜய், அடங்கிப்போன சரத், ஆர்ப்பரிக்கும் விஜயகாந்த்
இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்களின் முகவரி, திராவிட கட்சிகளுடனான தொடர்பு என சரத்திற்கு எப்போதும் செல்வாக்கு அதிகம். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் திருப்தி அடைந்துவிட்டாலும் முதல்வர் கனவு அவருக்கும் உண்டு. காமராசர் ஆட்சி எனும் கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி சாதி சங்கமாக சுருங்கிபோனதன் விளைவு தான் இரண்டு தொகுதி மட்டும் என திருப்தி பட வேண்டியதாகிவிட்டது. சினிமா அரசியல்வாதிகளில் கொஞ்சமாவது தெளிவாக பேசுவது தான் இவரது பலம். ஆனால் சபைக்கு வரவிடாமல் சாதி சங்க ஆட்கள் காலைவாரி விடுவது பலவீனம்.
தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும். தென்காசி பிரசாரத்தின் போது சரத்தின் பெயரை உச்சரிக்காமல் விட்டதில் எந்த உள்குத்தும் இல்லையாம். பெயர் விடுபட்டுவிட்டது யதார்த்தமாக நடந்தது தான். பின்பு மறக்காமல் சரத்தின் பெயரையும் சொல்லி ஒட்டு போடா சொன்னது சரத்திற்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிகமாக எந்த தொகுதிக்கும் பிரசாரத்திற்கு செல்லாத சரத், ஸ்ரீரங்கம் மட்டும் செல்ல போகிறார்.
தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான். என்னாதான் இன்று காட்சி மாறிவிட்டாலும் ராதிகாவிற்கு கலைஞர் மேல் பாசம் அதிகம், அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய யோசிக்கிறார்

தேர்தல் கூட்டணிக்கு முன்பே அம்மாவை துணிச்சலுடன் சந்தித்தவர் விஜய். ஏதோ நடக்கபோகிறது என்று நினைபதற்குள்ளாகவே விழுந்தது முதல் அடி. காவலன் படத்தை திரையிட விடாமல் சதி செய்தனர் ஆளுங்கட்சி புள்ளிகள். படாத பாடு பட்டுதான் படத்தை ரிலீசே செய்தார்கள். அப்படியும் சன், கலைஞர் விளம்பரம் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. பயம் காட்டினால் படிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் போயஸ் பக்கம் போனதும் உஷாரான தி மு க கோஷ்டி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் விஜய் அ தி மு காவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறார் என்று தெரிந்ததும், ஆடிப்போன ஆளுங்கட்சி தரப்பு சாம தான பேத தண்டங்களை பிரயோகித்து தடுக்க முயற்சி செய்தது. வழக்கம் போல் விஜய் பின் வாங்க ஆரம்பித்தும் சூடான சந்திர சேகர் தனியாகவே களம் இறங்கிவிட்டார். சந்திர சேகர் சூடானதற்கு சட்டபடி குற்றம் என்ற அவரின் படத்திற்கும் பஞ்சாயத்து பண்ணவேண்டி வந்ததால் தான்.
கட்சியில் சேரபோகிறார், பிரச்சாரம் செய்யபோகிறார், என்றெல்லாம் கசிந்த நிலையில் இன்று வெறும் அறிக்கை மட்டும் விடுவார் என்கிறார்கள். அம்மா தரப்பு அறிக்கை மட்டும் போதாது ஜெய டிவியில் தோன்றி அ தி மு க கூட்டணிக்கு அதரவு என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விடவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். ஆனால் அடக்கி வாசித்தால் பெறப்போகும் பல நன்மைகளை பட்டியலிட்டிருகிறது தி மு க தரப்பு. (இழந்த பெட்டிகளை திருப்பி தருவதாகவும் பேச்சு)

ஒட்டுமொத்த ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்களும் கேப்டனை குறிவைத்து தாக்குவதற்கு காரணம் ஒன்றே ஓன்று தான் அது இந்த தேர்தலில் தி மு க கூட்டணி தோல்வி அடைந்தால் காரணம் தே தி மு காவின் ஒட்டு வங்கி அ தி மு காவை சேர இருப்பது தான். தே மு தி க 41 தொகுதிகளில் போட்டியிட்டு 5 அல்லது 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அ தி மு க போட்டியிடும் 160 தொகுதிகளிலும் தே மு தி காவின் ஓட்டுக்களால் ஆதாயம் அடைய போகிறது. கேப்டனின் இமேஜை காலி செய்ய என்ன என்ன சாக்கு கிடைத்தாலும் போட்டு தாக்கிறது. வடிவேலுவை கூட்டி வந்ததும் அதற்காக தான். ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவராகவே பேசிய வடிவேலு எதிர்கோஷ்டி சிங்கமுத்துவை இறக்கி விட்டதும் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது தான். வடிவேலுவின் மொத்த குடுமியும் சிங்கமுத்துவிடம் இருக்கிறது.
புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது. வடிவேலு பேசும் இடங்களில் கூட்டம் சேர்வது உண்மை. ஆனால் அவரின் பேச்சில் தி மு காவை தூக்கி பிடிக்கும் அளவிற்கு வலுவில்லை. கொஞ்சம் உற்று நோக்கினால் மேடை தோறும் அவர் பாடும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்கள். கருணாநிதியின் உற்ற நண்பர் எம் ஜி ஆர் என்று வேறு சொல்லிகொள்கிறார். வெறும் ஒரு ரூபா அரிசி, இலவச மிகஷி, கிரைண்டர், அவசர உதவிக்கு 108 என்பதை தவிர வேறு ஒன்றையும் காணோம். ஏற்கனவே இந்த எல்லா திட்டங்களில் உள்ள ஓட்டையை பட்டி தொட்டியெல்லாம் பரவ செய்து விட்டார்கள் அம்மாவும், பாண்டியனும், சீமானும்.
விஜயகாந்தின் சினிமா இமேஜையும் காலி பண்ண முடியாமல், அரசியல் இமேஜையும் காலி பண்ண முடியாமல் கையை பிசைகிறது தி மு க அணி. என்ன வேணா சொல்லிக்கோ என்று தில்லாக தொகுதிகளை வலம் வருகிறார் கேப்டன். ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு வயிறு எரிகிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று சொல்லிகொண்டாலும் பொறுமை, அமைதி, நிதானமாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பது என்பதெல்லாம் கேப்டனிடம் இல்லை. இருக்கும் குறைகள் தெரிந்து அதை களைய வேண்டும். இல்லாமலல்லாம் சித்திக்காது முதல்வர் கனவு.

(ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா..)
தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும். தென்காசி பிரசாரத்தின் போது சரத்தின் பெயரை உச்சரிக்காமல் விட்டதில் எந்த உள்குத்தும் இல்லையாம். பெயர் விடுபட்டுவிட்டது யதார்த்தமாக நடந்தது தான். பின்பு மறக்காமல் சரத்தின் பெயரையும் சொல்லி ஒட்டு போடா சொன்னது சரத்திற்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிகமாக எந்த தொகுதிக்கும் பிரசாரத்திற்கு செல்லாத சரத், ஸ்ரீரங்கம் மட்டும் செல்ல போகிறார்.
தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான். என்னாதான் இன்று காட்சி மாறிவிட்டாலும் ராதிகாவிற்கு கலைஞர் மேல் பாசம் அதிகம், அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய யோசிக்கிறார்

தேர்தல் கூட்டணிக்கு முன்பே அம்மாவை துணிச்சலுடன் சந்தித்தவர் விஜய். ஏதோ நடக்கபோகிறது என்று நினைபதற்குள்ளாகவே விழுந்தது முதல் அடி. காவலன் படத்தை திரையிட விடாமல் சதி செய்தனர் ஆளுங்கட்சி புள்ளிகள். படாத பாடு பட்டுதான் படத்தை ரிலீசே செய்தார்கள். அப்படியும் சன், கலைஞர் விளம்பரம் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. பயம் காட்டினால் படிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் போயஸ் பக்கம் போனதும் உஷாரான தி மு க கோஷ்டி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் விஜய் அ தி மு காவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறார் என்று தெரிந்ததும், ஆடிப்போன ஆளுங்கட்சி தரப்பு சாம தான பேத தண்டங்களை பிரயோகித்து தடுக்க முயற்சி செய்தது. வழக்கம் போல் விஜய் பின் வாங்க ஆரம்பித்தும் சூடான சந்திர சேகர் தனியாகவே களம் இறங்கிவிட்டார். சந்திர சேகர் சூடானதற்கு சட்டபடி குற்றம் என்ற அவரின் படத்திற்கும் பஞ்சாயத்து பண்ணவேண்டி வந்ததால் தான்.
கட்சியில் சேரபோகிறார், பிரச்சாரம் செய்யபோகிறார், என்றெல்லாம் கசிந்த நிலையில் இன்று வெறும் அறிக்கை மட்டும் விடுவார் என்கிறார்கள். அம்மா தரப்பு அறிக்கை மட்டும் போதாது ஜெய டிவியில் தோன்றி அ தி மு க கூட்டணிக்கு அதரவு என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விடவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். ஆனால் அடக்கி வாசித்தால் பெறப்போகும் பல நன்மைகளை பட்டியலிட்டிருகிறது தி மு க தரப்பு. (இழந்த பெட்டிகளை திருப்பி தருவதாகவும் பேச்சு)

ஒட்டுமொத்த ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்களும் கேப்டனை குறிவைத்து தாக்குவதற்கு காரணம் ஒன்றே ஓன்று தான் அது இந்த தேர்தலில் தி மு க கூட்டணி தோல்வி அடைந்தால் காரணம் தே தி மு காவின் ஒட்டு வங்கி அ தி மு காவை சேர இருப்பது தான். தே மு தி க 41 தொகுதிகளில் போட்டியிட்டு 5 அல்லது 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அ தி மு க போட்டியிடும் 160 தொகுதிகளிலும் தே மு தி காவின் ஓட்டுக்களால் ஆதாயம் அடைய போகிறது. கேப்டனின் இமேஜை காலி செய்ய என்ன என்ன சாக்கு கிடைத்தாலும் போட்டு தாக்கிறது. வடிவேலுவை கூட்டி வந்ததும் அதற்காக தான். ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவராகவே பேசிய வடிவேலு எதிர்கோஷ்டி சிங்கமுத்துவை இறக்கி விட்டதும் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது தான். வடிவேலுவின் மொத்த குடுமியும் சிங்கமுத்துவிடம் இருக்கிறது.
புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது. வடிவேலு பேசும் இடங்களில் கூட்டம் சேர்வது உண்மை. ஆனால் அவரின் பேச்சில் தி மு காவை தூக்கி பிடிக்கும் அளவிற்கு வலுவில்லை. கொஞ்சம் உற்று நோக்கினால் மேடை தோறும் அவர் பாடும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்கள். கருணாநிதியின் உற்ற நண்பர் எம் ஜி ஆர் என்று வேறு சொல்லிகொள்கிறார். வெறும் ஒரு ரூபா அரிசி, இலவச மிகஷி, கிரைண்டர், அவசர உதவிக்கு 108 என்பதை தவிர வேறு ஒன்றையும் காணோம். ஏற்கனவே இந்த எல்லா திட்டங்களில் உள்ள ஓட்டையை பட்டி தொட்டியெல்லாம் பரவ செய்து விட்டார்கள் அம்மாவும், பாண்டியனும், சீமானும்.
விஜயகாந்தின் சினிமா இமேஜையும் காலி பண்ண முடியாமல், அரசியல் இமேஜையும் காலி பண்ண முடியாமல் கையை பிசைகிறது தி மு க அணி. என்ன வேணா சொல்லிக்கோ என்று தில்லாக தொகுதிகளை வலம் வருகிறார் கேப்டன். ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு வயிறு எரிகிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று சொல்லிகொண்டாலும் பொறுமை, அமைதி, நிதானமாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பது என்பதெல்லாம் கேப்டனிடம் இல்லை. இருக்கும் குறைகள் தெரிந்து அதை களைய வேண்டும். இல்லாமலல்லாம் சித்திக்காது முதல்வர் கனவு.

(ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா..)
Tuesday, April 5, 2011
விஜயகாந்தால் டாஸ்மார்க் ஆண்டு வருமானம் 35 கோடி உயருகிறது..!!
ஆளுங்கட்சி மேடை தோறும் "ஆப்பை" பற்றி விஜயகாந்த் ஆப்படித்ததை முழங்குகிறார்கள். கலாசார சீர்கேடு என்று முழங்கும் இவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் வாயை மூடிக்கொண்டு போய்விடுவார்கள். அது விஜயகாந்தால் டாஸ்மார்கிற்கு வரும் ஆண்டு வருமானம் பற்றிய கணக்கு. "ஆப்பை" பற்றி அவர் பேசியதன் மூலம் தெரிய வரும் உண்மை உங்கள் பார்வைக்கு.
ஒரு நாளைக்கு ஒரு "ஆப்பு" அடிப்பதாக வைத்து கொண்டால் அதன் விலை தோராயமாக ரூபாய் 150. வழக்கம் போல அல்லக்கைகள் இல்லாமல் தலைவர்கள் சரக்கை கையில் தொடுவதில்லை. அது நமது பண்பாடு ஆயிற்றே. அதனால் கூட ஒரு 5 பேர் வைத்து கொள்வோம். அவர்களுக்கும் சேர்த்து ரூபாய் 1000 சரக்கிற்கு மட்டும். ஊறுகாயில் இருந்து முந்திரி, ஓடறது, பறக்றது, பறக்றது போடறது என செலவு ஒரு 500 ஆக ஒரு நாளைக்கு சரக்கிற்கு 1000 , சைடு டிஷிற்கு 500
வருடத்திற்கு இரண்டும் சேர்த்து 547500. தலைவரே சொல்லிவிட்டார் என்று தே தி மு க தொண்டர்களும், கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் "ஆப்படிக்க, குவாட்டர் அடிக்க ஆரம்பித்தால் தோரயமாக அவர்களுக்கு இருக்கும் ஓட்டு வங்கியின் சதவிகித அடிப்படையில் (32 % + 8.5 %) இவர்களில் இருந்து ஒரு 10 % சதவிகிதத்தை எடுத்து கொண்டால் 3500000 பேர். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 100 செலவு செய்தால் கூட 35 கோடி வருகிறது. டாச்மார்கின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் கோடியை நெருங்குகிறது என்று அறிகிறோம். கிட்டத்தட்ட 10 % ஆண்டு வருமானம் கேப்டனால் உயர போகிறது.

இலவசங்களை மாறி மாறி அறிவித்தால் போதுமா..? இதை என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தில் இருந்தா கொடுக்க போகிறீர்கள். டாஸ்மார்க் வருமானத்தை நம்பிதானே ஆட்டு புளுக்கையில் இருந்து அம்மிக்கல் வரை தரபோகிறீர்கள். எந்த வித மார்கெட்டிங் செலவும் இல்லமால் கேப்டனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை உணராமல் அவரை மேடை தோறும் வதைப்பது எந்த வகையில் நியாயம். போதாதற்கு எச்சி சோறு வடிவேலு வேறு, ஒரு நாளாவது வடிவேலு தன்னியடிகாமல் செட்டிற்கு வந்ததுண்டா...? என்ன தகுதி அய்யா இருக்கு புறமுதுகில் ஓடும் சாக்கடையை முதலில் கழுவுமையா... அப்பறம் வரலாம் சபைக்கு.
எனது வலைபதிவிற்கு வரும் நண்பர்களுக்கு நன்றி. கிடைக்கும் மிக குறுகிய நேரத்தில் என்னால் முடிந்ததை எழுதுகிறேன். பிற நண்பர்களின் பதிவுகளையும் மிக குறைந்த அளவே என்னால் படிக்க முடிகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு கூட என்னால் ஒரு நன்றியை சொல்ல முடிவதில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. விரைவில் எனக்கான நேரத்தை அதிகபடுத்தி கொள்ள முயற்சிக்கிறேன். உங்களின் அன்பிற்கு நன்றி.
ஒரு நாளைக்கு ஒரு "ஆப்பு" அடிப்பதாக வைத்து கொண்டால் அதன் விலை தோராயமாக ரூபாய் 150. வழக்கம் போல அல்லக்கைகள் இல்லாமல் தலைவர்கள் சரக்கை கையில் தொடுவதில்லை. அது நமது பண்பாடு ஆயிற்றே. அதனால் கூட ஒரு 5 பேர் வைத்து கொள்வோம். அவர்களுக்கும் சேர்த்து ரூபாய் 1000 சரக்கிற்கு மட்டும். ஊறுகாயில் இருந்து முந்திரி, ஓடறது, பறக்றது, பறக்றது போடறது என செலவு ஒரு 500 ஆக ஒரு நாளைக்கு சரக்கிற்கு 1000 , சைடு டிஷிற்கு 500
வருடத்திற்கு இரண்டும் சேர்த்து 547500. தலைவரே சொல்லிவிட்டார் என்று தே தி மு க தொண்டர்களும், கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் "ஆப்படிக்க, குவாட்டர் அடிக்க ஆரம்பித்தால் தோரயமாக அவர்களுக்கு இருக்கும் ஓட்டு வங்கியின் சதவிகித அடிப்படையில் (32 % + 8.5 %) இவர்களில் இருந்து ஒரு 10 % சதவிகிதத்தை எடுத்து கொண்டால் 3500000 பேர். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 100 செலவு செய்தால் கூட 35 கோடி வருகிறது. டாச்மார்கின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் கோடியை நெருங்குகிறது என்று அறிகிறோம். கிட்டத்தட்ட 10 % ஆண்டு வருமானம் கேப்டனால் உயர போகிறது.

இலவசங்களை மாறி மாறி அறிவித்தால் போதுமா..? இதை என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தில் இருந்தா கொடுக்க போகிறீர்கள். டாஸ்மார்க் வருமானத்தை நம்பிதானே ஆட்டு புளுக்கையில் இருந்து அம்மிக்கல் வரை தரபோகிறீர்கள். எந்த வித மார்கெட்டிங் செலவும் இல்லமால் கேப்டனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை உணராமல் அவரை மேடை தோறும் வதைப்பது எந்த வகையில் நியாயம். போதாதற்கு எச்சி சோறு வடிவேலு வேறு, ஒரு நாளாவது வடிவேலு தன்னியடிகாமல் செட்டிற்கு வந்ததுண்டா...? என்ன தகுதி அய்யா இருக்கு புறமுதுகில் ஓடும் சாக்கடையை முதலில் கழுவுமையா... அப்பறம் வரலாம் சபைக்கு.
எனது வலைபதிவிற்கு வரும் நண்பர்களுக்கு நன்றி. கிடைக்கும் மிக குறுகிய நேரத்தில் என்னால் முடிந்ததை எழுதுகிறேன். பிற நண்பர்களின் பதிவுகளையும் மிக குறைந்த அளவே என்னால் படிக்க முடிகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு கூட என்னால் ஒரு நன்றியை சொல்ல முடிவதில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. விரைவில் எனக்கான நேரத்தை அதிகபடுத்தி கொள்ள முயற்சிக்கிறேன். உங்களின் அன்பிற்கு நன்றி.
Monday, April 4, 2011
காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல - தேர்தல் வியாபாரம்
தேர்தல் களம் கோடை வெயிலையும் தாண்டி சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. மானாவாரியாக போட்டு தாக்குகிறார்கள். ஒருவர் கூட கொள்கை விளக்க கூட்டமோ, தேர்தல் அறிக்கையின் சாராம்சம் குறித்தோ, அதன் எதிர்கால நலன்கள் குறித்தோ பேசுவதில்லை. இலவசங்கள் மட்டும் தான் தேர்தல் அறிக்கையா...? அது மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம் பயக்குமா...? பதில் சொல்லவும் ஆளில்லை, எதிர் கேள்வி கேட்கவும் இங்கு நாதியில்லை.
சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில் ஒளிபரப்பியும் நேரத்தை விரயமாக்குகிறார்கள். சாராயம் விற்ற காசில்தானே நீ இலவசங்களை அள்ளி கொடுக்கிறாய் அப்பறம் என்ன "ம...த்துக்கு" அவன் தண்ணியை போட்டுட்டு ஒளரான்னு சொல்ற. தைரியம் இருந்தா இனி மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று சொல்லு...பிரச்சாராம் செய்வதில் எத்தனை பேர் தண்ணியடிகாமல் வருகிறார்கள் என்று எண்ணி பார்த்தால் கட்சிக்கு ரெண்டு பேர் கூட தேறமாட்டார்கள்.
அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல், கொத்தாவால் சாவடி மார்கெட்டில் பேசுவது போல் பேசிவிட்டு, தன் கட்சி காரர்களை பேசவிட்டு விட்டு, கலைஞர் அரசியல் நாகரீகம் செத்துவிட்டது என்று முதலை கண்ணீர் விடுவது அவரது வயதிற்கு ஏற்றதல்ல. சண் டிவியையும் உங்கள் தொலைக்காட்சியையும் கொஞ்சம் நீங்கள் பாருங்கள் அவர்களின் அத்துமீறல்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள். பொது மக்களிடம் இருந்தோ, எதிர்கட்சிகளிடம் இருந்தோ ஒரு புகார் கூட வராத நிலையில் தினம் தினம் தேர்தல் கமிசனை சாடுவதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பணம் பட்டுவாடா செய்து ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்ற கனவில் மண்ணை போட்ட தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் கருவறுக்கலாம் என்று ஒரு கூட்டமே ஆலோசனை நடத்துகிறதாமே. அறுபதாண்டு கால அரசியல் ஒரு சாமானியனால் கேவலப்படும்படி ஆனதற்காய் வெட்கபடுங்கள் கலைஞரே.
சீமான் வேறு பணத்தை கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள். அது அவர்கள் கொள்ளையடித்த உங்கள் பங்கு என்று விளக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் சரிதான் கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் வைத்துகொண்டாலும் சரி இல்லை உங்கள் அருகிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்துவிட்டாலும் சரி. கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். பணத்தை வாங்கிகொண்டு உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் வேட்பாளர்களுக்கு ஒட்டு போடுங்கள். நியாயம், நேர்மை பார்க்க காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல.

எந்த தேர்தலிலும் கேவலபடாத அரசியல் கட்சிகள் இம்முறை தொடர்ந்து மாறி மாறி சேற்றை பூசிகொள்கின்றன. உபயம் ஊடக வளர்ச்சி. கலாநிதி மாறனின் வியாபார தந்திரம் உலகறிந்த விஷயம். வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல, சன் டிவிக்கு எதிராகவே அது திரும்புகிறது என்பதை இந்த வியாபார காந்தம் உணரவில்லை. ஒரு 500 பேருக்கு மத்தியில் பேசியதை 6 கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது நாகரீகமான விஷயமாக இருந்தால் சரி. அவன் தண்ணி அடிச்ச என்ன, தொண்டனை அடிச்ச என்ன அதை நொடிக்கொரு தரம் போட்டு ஏன்யா உயிரை எடுக்கற..? அவ்வளவு அறிவு இருக்கறவன், கலாச்சாரத்தின் மீது மரியாதை வைக்கறவன் அய்யாவிடம் சொல்லி மதுவை ஒழிக்க வேண்டியது தானே..இது எந்த வகையில் சமூக அக்கறை என்று..? சாமான்யன் கேட்கிறான்.
சுபவீ , திருமாவளவன், ராமதாஸ் இவர்கலெலாம் 3 நிமிடம் 5 நிமிடம் பேசிவிட்டு செல்ல, 40 நிமிடம் பேசும் வடிவேலு தனி மனித தாக்குதலை தானே செய்கிறார். இதில் எங்கே உங்கள் கட்சியின் கவுரவம் காப்ற்ற படுகிறது. கூட்டணி தலைவர்களை, காலம் காலமாக கழகத்தின் பேச்சாளர்களாக இருப்பவர்களை அசிங்கபடுத்த இது போதாதாத..?
எவ்வளுதான் சேற்றை வாரி இறைத்தாலும், தன் பிரசாரத்தில் மட்டுமே முழு கவனமும் செலுத்திக்கொண்டு வலம் வரும் அம்மா அரசியல் நடுநிலையாளர்களை கவரவே செய்கிறார். தனது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றி கூட சிந்திக்காமல் கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதில் தான் அவரது முழு கவனமும். 160 -ல் எப்படியும் 118 பெற்று விட வேண்டும் என்று ஒற்றை ஆளாய் கிளம்பிவிட்டார். தே தி மு காவின் கூட்டணி, தான் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. பெரும்பான்மை பெற்று விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை கவலைக்கிடம் தான். இது அவர்களுக்கும் தெரியாமல் இல்லை. கட்சி சார்பாக எம் எல் ஏக்களை பெறுவது தான் அவர்களின் அதிகபட்ச ஆசை.
(இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!)
சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில் ஒளிபரப்பியும் நேரத்தை விரயமாக்குகிறார்கள். சாராயம் விற்ற காசில்தானே நீ இலவசங்களை அள்ளி கொடுக்கிறாய் அப்பறம் என்ன "ம...த்துக்கு" அவன் தண்ணியை போட்டுட்டு ஒளரான்னு சொல்ற. தைரியம் இருந்தா இனி மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று சொல்லு...பிரச்சாராம் செய்வதில் எத்தனை பேர் தண்ணியடிகாமல் வருகிறார்கள் என்று எண்ணி பார்த்தால் கட்சிக்கு ரெண்டு பேர் கூட தேறமாட்டார்கள்.
அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல், கொத்தாவால் சாவடி மார்கெட்டில் பேசுவது போல் பேசிவிட்டு, தன் கட்சி காரர்களை பேசவிட்டு விட்டு, கலைஞர் அரசியல் நாகரீகம் செத்துவிட்டது என்று முதலை கண்ணீர் விடுவது அவரது வயதிற்கு ஏற்றதல்ல. சண் டிவியையும் உங்கள் தொலைக்காட்சியையும் கொஞ்சம் நீங்கள் பாருங்கள் அவர்களின் அத்துமீறல்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள். பொது மக்களிடம் இருந்தோ, எதிர்கட்சிகளிடம் இருந்தோ ஒரு புகார் கூட வராத நிலையில் தினம் தினம் தேர்தல் கமிசனை சாடுவதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பணம் பட்டுவாடா செய்து ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்ற கனவில் மண்ணை போட்ட தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் கருவறுக்கலாம் என்று ஒரு கூட்டமே ஆலோசனை நடத்துகிறதாமே. அறுபதாண்டு கால அரசியல் ஒரு சாமானியனால் கேவலப்படும்படி ஆனதற்காய் வெட்கபடுங்கள் கலைஞரே.
சீமான் வேறு பணத்தை கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள். அது அவர்கள் கொள்ளையடித்த உங்கள் பங்கு என்று விளக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் சரிதான் கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் வைத்துகொண்டாலும் சரி இல்லை உங்கள் அருகிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்துவிட்டாலும் சரி. கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். பணத்தை வாங்கிகொண்டு உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் வேட்பாளர்களுக்கு ஒட்டு போடுங்கள். நியாயம், நேர்மை பார்க்க காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல.

எந்த தேர்தலிலும் கேவலபடாத அரசியல் கட்சிகள் இம்முறை தொடர்ந்து மாறி மாறி சேற்றை பூசிகொள்கின்றன. உபயம் ஊடக வளர்ச்சி. கலாநிதி மாறனின் வியாபார தந்திரம் உலகறிந்த விஷயம். வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல, சன் டிவிக்கு எதிராகவே அது திரும்புகிறது என்பதை இந்த வியாபார காந்தம் உணரவில்லை. ஒரு 500 பேருக்கு மத்தியில் பேசியதை 6 கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது நாகரீகமான விஷயமாக இருந்தால் சரி. அவன் தண்ணி அடிச்ச என்ன, தொண்டனை அடிச்ச என்ன அதை நொடிக்கொரு தரம் போட்டு ஏன்யா உயிரை எடுக்கற..? அவ்வளவு அறிவு இருக்கறவன், கலாச்சாரத்தின் மீது மரியாதை வைக்கறவன் அய்யாவிடம் சொல்லி மதுவை ஒழிக்க வேண்டியது தானே..இது எந்த வகையில் சமூக அக்கறை என்று..? சாமான்யன் கேட்கிறான்.
சுபவீ , திருமாவளவன், ராமதாஸ் இவர்கலெலாம் 3 நிமிடம் 5 நிமிடம் பேசிவிட்டு செல்ல, 40 நிமிடம் பேசும் வடிவேலு தனி மனித தாக்குதலை தானே செய்கிறார். இதில் எங்கே உங்கள் கட்சியின் கவுரவம் காப்ற்ற படுகிறது. கூட்டணி தலைவர்களை, காலம் காலமாக கழகத்தின் பேச்சாளர்களாக இருப்பவர்களை அசிங்கபடுத்த இது போதாதாத..?
எவ்வளுதான் சேற்றை வாரி இறைத்தாலும், தன் பிரசாரத்தில் மட்டுமே முழு கவனமும் செலுத்திக்கொண்டு வலம் வரும் அம்மா அரசியல் நடுநிலையாளர்களை கவரவே செய்கிறார். தனது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றி கூட சிந்திக்காமல் கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதில் தான் அவரது முழு கவனமும். 160 -ல் எப்படியும் 118 பெற்று விட வேண்டும் என்று ஒற்றை ஆளாய் கிளம்பிவிட்டார். தே தி மு காவின் கூட்டணி, தான் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. பெரும்பான்மை பெற்று விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை கவலைக்கிடம் தான். இது அவர்களுக்கும் தெரியாமல் இல்லை. கட்சி சார்பாக எம் எல் ஏக்களை பெறுவது தான் அவர்களின் அதிகபட்ச ஆசை.
(இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!)
Tuesday, March 29, 2011
தொண்டனும் அண்ணனும் - இத படிங்க முதல்ல
கடந்த ஞாயிறு அன்று எங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு பிரசாரத்திற்காக வந்திருந்தார். கூடவே ஒரு கும்பல் அல்லகைகள் என்ற பெயரில். எல்லோரும் கட்சியின் தொண்டர்கள், அதில் இருந்த சில தெரிந்த முகங்களிடம் ( டாஸ்மாக்கில் சந்தித்தவர்கள் ) விசாரித்தேன். தொண்டர்கள் என்பவர் யாவர் என்ற என் நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது.
எவ்வளவு தான் அரசியல் பன்னாடைகளை பற்றியே எழுதுவது, ஒரு மாறுதலுக்காக அவர்களின் அல்லக்கைகளை பற்றி எழுதலாமே. இதோ உங்களுக்காக அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்.
கவுன்சிலரில் இருந்து அமைச்சர் வரை ஆளாளுக்கு வசதிக்கேற்ப அல்லக்கைகள் உண்டு. பொதுவாக கட்சிகாரர்கள், தொண்டர்கள் என்று அழைக்கபட்டாலும் இவர்களில் பெரும்பாலும் அண்ணனின் சாதிகாரர்களாகவோ, அந்த தொகுதியை சேர்ந்தவர்களாகவோ, அண்ணனால் ஆதாயம் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. அப்பபோ செலவுக்கு பணம், கறி விருந்து, மது, (சில சமயம் மாதுவும் உண்டாம்)
சாதரணமாக ஒரு 20 பேர் எப்போதும் அண்ணனின் கூடவே இருக்கிறார்கள். தேர்தல் நேரம், கட்சி மீட்டிங், மாநாடு என்னும் போது இவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. போஸ்டர் அடிப்பதில் இருந்து, எதிர்கட்சி காரனின் மண்டையை பிளப்பது வரை இவர்களுக்கு கொடுக்கும் அசைன்மேண்டுகேற்ப பண பட்டுவாடா உண்டு. பண பட்டுவாடவை கவனித்து கொள்வது அண்ணனின் PA சில சமயம் விதிவிலக்காக அணிகளும் இதில் தலையிடுவதுண்டாம். பொதுவாக PA மட்டும் கொஞ்சம் படித்தவராக இருக்க கூடும்.
படிக்காமல் ஊர் சுற்றிய நாதாரிகள், பள்ளி பருவத்திலேய கஞ்சாவிற்கு அடிமையானவர்கள், மதுவுக்கு அடிமையாகி வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், வீட்டாரால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள், பிஞ்சிலேய பழுத்து விபசாரிகளுடன் தொடர்பு வைத்திருபவர்கள், விபசார புரோக்கர்கள் இவர்கள் எல்லாம் தான் அண்ணனுக்கு இடது கை வலது கை போன்றவர்கள். இவர்களின் கடின உழைப்பு தான் கட்சியை வளர்த்து கொண்டிருக்கிறது. தப்பி தவறி கூட படித்த நாகரீகம் தெரிந்தவர்களை இவர்கள் கூட சேர்ப்பது இல்லை. காரணம் பிரச்னை என்று வரும் போது காட்டி கொடுத்துவிடுவார்களாம்.
அண்ணனின் தொடர்பில் இருப்பவர்களில் இருவர் மிக முக்கியமானவர். ஒருவர் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டர், இன்னொருவர் குடும்ப அல்லது கட்சி வக்கீல். பொதுவாக ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் குடும்ப வக்கீல் உண்டு. இவர்களுக்கு தெரியாமல் எந்த காரியமும் நடப்பதில்லையாம். அடிதடி வழக்கில் இருந்து ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை இவர்கள் மூலம் தங்களை அப்டேட் செய்து கொளிகிறார்கலாம்.
தொண்டர்களில் 100 க்கு 95 பேருக்கு சரக்கு உள்ளே இறங்காமல் பேசதெரியாது. இது தான் அண்ணன்களின் பலம். பெசதேரிந்த ஒரு சிலர் மேல் எப்போதும் ஒரு கண்ணிருக்குமாம். அவர்களை வெளியே அனுப்பவும் முடியாது. ஏனெனில் தொகுதி நிலவரம் இவர்கள் மூலமாகவே அண்ணனின் காதுக்கு எட்டுகிறது. கூடவே இருக்கும் தொண்டர்கள் கூட்டத்தை தாண்டி கொஞ்சம் விலகி இருக்கும் ரவுடிகளும் இவர்களுக்கு முக்கியமானவர்கள். மண்டை உடைக்கறது, கூட்டத்தை கலைகறது எல்லாம் தொண்டர்கள் வேலை. காரியம் கொஞ்சம் பெரிசு என்றால் தான் இவர்களுக்கு அழைப்பு வரும். பேமேண்டும் பெரிசு தான். இன்னும் சொல்ல போனால் தொண்டர்கள் நிலையில் இருந்து புரோமோட் செய்ய பட்டவர்களே "தாதா" க்கள். வளர்த்த பாசம் இவர்களுக்கும் வளர்த்துவிட்ட பாசம் அண்ணனுக்கும் எப்போதும் உண்டு.
இது எல்லாமே அவர்களிடம் இருந்து பேசி கறந்தது தான். இடைசொருகல் எதுவும் இல்லை. அவர்களின் வார்த்தை பிரயோகம் மட்டுமே வேறு. அதை பதிவில் ஏற்ற முடியாததால் கொஞ்சம் முலாம் பூசியிருக்கிறேன். இந்த கூட்டுகளவாணி, மொள்ளைமாரிகளிடம் இருந்து எதையும் பெரிசாக எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம் தான். இப்போ சொல்லுங்க நாம ஒட்டு போட்டுதான் ஆகணுமா..?
எவ்வளவு தான் அரசியல் பன்னாடைகளை பற்றியே எழுதுவது, ஒரு மாறுதலுக்காக அவர்களின் அல்லக்கைகளை பற்றி எழுதலாமே. இதோ உங்களுக்காக அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்.
கவுன்சிலரில் இருந்து அமைச்சர் வரை ஆளாளுக்கு வசதிக்கேற்ப அல்லக்கைகள் உண்டு. பொதுவாக கட்சிகாரர்கள், தொண்டர்கள் என்று அழைக்கபட்டாலும் இவர்களில் பெரும்பாலும் அண்ணனின் சாதிகாரர்களாகவோ, அந்த தொகுதியை சேர்ந்தவர்களாகவோ, அண்ணனால் ஆதாயம் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. அப்பபோ செலவுக்கு பணம், கறி விருந்து, மது, (சில சமயம் மாதுவும் உண்டாம்)
சாதரணமாக ஒரு 20 பேர் எப்போதும் அண்ணனின் கூடவே இருக்கிறார்கள். தேர்தல் நேரம், கட்சி மீட்டிங், மாநாடு என்னும் போது இவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. போஸ்டர் அடிப்பதில் இருந்து, எதிர்கட்சி காரனின் மண்டையை பிளப்பது வரை இவர்களுக்கு கொடுக்கும் அசைன்மேண்டுகேற்ப பண பட்டுவாடா உண்டு. பண பட்டுவாடவை கவனித்து கொள்வது அண்ணனின் PA சில சமயம் விதிவிலக்காக அணிகளும் இதில் தலையிடுவதுண்டாம். பொதுவாக PA மட்டும் கொஞ்சம் படித்தவராக இருக்க கூடும்.
படிக்காமல் ஊர் சுற்றிய நாதாரிகள், பள்ளி பருவத்திலேய கஞ்சாவிற்கு அடிமையானவர்கள், மதுவுக்கு அடிமையாகி வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், வீட்டாரால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள், பிஞ்சிலேய பழுத்து விபசாரிகளுடன் தொடர்பு வைத்திருபவர்கள், விபசார புரோக்கர்கள் இவர்கள் எல்லாம் தான் அண்ணனுக்கு இடது கை வலது கை போன்றவர்கள். இவர்களின் கடின உழைப்பு தான் கட்சியை வளர்த்து கொண்டிருக்கிறது. தப்பி தவறி கூட படித்த நாகரீகம் தெரிந்தவர்களை இவர்கள் கூட சேர்ப்பது இல்லை. காரணம் பிரச்னை என்று வரும் போது காட்டி கொடுத்துவிடுவார்களாம்.
அண்ணனின் தொடர்பில் இருப்பவர்களில் இருவர் மிக முக்கியமானவர். ஒருவர் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டர், இன்னொருவர் குடும்ப அல்லது கட்சி வக்கீல். பொதுவாக ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் குடும்ப வக்கீல் உண்டு. இவர்களுக்கு தெரியாமல் எந்த காரியமும் நடப்பதில்லையாம். அடிதடி வழக்கில் இருந்து ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை இவர்கள் மூலம் தங்களை அப்டேட் செய்து கொளிகிறார்கலாம்.
தொண்டர்களில் 100 க்கு 95 பேருக்கு சரக்கு உள்ளே இறங்காமல் பேசதெரியாது. இது தான் அண்ணன்களின் பலம். பெசதேரிந்த ஒரு சிலர் மேல் எப்போதும் ஒரு கண்ணிருக்குமாம். அவர்களை வெளியே அனுப்பவும் முடியாது. ஏனெனில் தொகுதி நிலவரம் இவர்கள் மூலமாகவே அண்ணனின் காதுக்கு எட்டுகிறது. கூடவே இருக்கும் தொண்டர்கள் கூட்டத்தை தாண்டி கொஞ்சம் விலகி இருக்கும் ரவுடிகளும் இவர்களுக்கு முக்கியமானவர்கள். மண்டை உடைக்கறது, கூட்டத்தை கலைகறது எல்லாம் தொண்டர்கள் வேலை. காரியம் கொஞ்சம் பெரிசு என்றால் தான் இவர்களுக்கு அழைப்பு வரும். பேமேண்டும் பெரிசு தான். இன்னும் சொல்ல போனால் தொண்டர்கள் நிலையில் இருந்து புரோமோட் செய்ய பட்டவர்களே "தாதா" க்கள். வளர்த்த பாசம் இவர்களுக்கும் வளர்த்துவிட்ட பாசம் அண்ணனுக்கும் எப்போதும் உண்டு.
இது எல்லாமே அவர்களிடம் இருந்து பேசி கறந்தது தான். இடைசொருகல் எதுவும் இல்லை. அவர்களின் வார்த்தை பிரயோகம் மட்டுமே வேறு. அதை பதிவில் ஏற்ற முடியாததால் கொஞ்சம் முலாம் பூசியிருக்கிறேன். இந்த கூட்டுகளவாணி, மொள்ளைமாரிகளிடம் இருந்து எதையும் பெரிசாக எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம் தான். இப்போ சொல்லுங்க நாம ஒட்டு போட்டுதான் ஆகணுமா..?
Monday, March 28, 2011
கடமை கண்ணியம் தவறினால் தப்பில்லை - கலைஞர்
இன்று ஒரு உருக்கமான வேண்டுகோளை விட்டிருந்தார் கலைஞர். படித்துவிட்டு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. போட்டி வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் கழக கண்மணிகளுக்கு தான் வேண்டுகோள். கடமை, கண்ணியம் தவறினால் கட்சிக்குள் சிறு சலசலப்பு தான் ஏற்படும், ஆனால் கட்டுப்பாடு தவறினால் ஒட்டுமொத்த கட்சியே கலகலத்து விடும். எனவே போட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு கட்சி அங்கீகரித்த வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை தரவேண்டுமென்று உருக்கமுடன் வேண்டுகிறேன் என்கிறார்.
அதாவது ஊழல் செய்தாலும், பொது சொத்தை கொள்ளையடித்தாலும், பதவி ஏற்றுக்கொண்டு மக்கள் பனி செய்யாமல் சொந்த வணிகத்தை மேற்கொண்டாலும் சரி, வீட்டில் படித்து தூங்கினாலும் சரி கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை ஆனால் கட்சி கட்டுப்பாடு தான் முக்கியம். என்ன ஒரு கொடுமை அய்யா இது. 60 வருட அரசியல் பாரம்பரியம் உள்ள உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் , தன் பிள்ளையை முட்டாளாக, ஊதாரியாக வளர்த்தெடுப்பதை போலிருக்கிறது உங்களின் வார்த்தைகள்.
"இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கழகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல் இத்தனை ஆண்டு காலமாக தன்னை வளர்த்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கழகத்தின் கழுத்தையே அறுப்பதைப்போல்; பதவிப் பொறுப்பு கிட்டவில்லை என்றதும் கழகக் கட்டுப்பாட்டை துச்சமெனக் கருதி சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் சிலரின் போக்கு கண்டு கண்கலங்குகின்றேன்" என்கிறார், குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றதும் ஓடோடி டெல்லி சென்றதை நீங்கள் மறந்துவிட்டீர்களா...?
காங்கிரஸ் தொகுதி அதிகம் கேட்டதற்காக, ராஜினமா கடிதத்தை தூக்கி கொண்டு ஓடியதை மறந்துவிட்டீர்களா..? உங்களுக்கு விட்டு கொடுக்கவும் தெரியாது, பகுத்து கொடுக்கவும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சியில் உங்களுக்கு ஒரு நியாயம், தொண்டனுக்கு ஒரு நியாயமா பெரியவரே..?வயதால் மட்டுமே நீர் பெரியவர் மற்றபடி...?
என்வீட்டு பிள்ளைகள் சினமா தொழிலில் இருப்பது தவறா என்கிறார். அது தவறில்லை அய்யா உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் தானே இருக்கிறார்கள் அது தான் தவறு. ஒட்டு மொத்த தியேடர்களையும் குத்தகைக்கு எடுத்துகொண்டு அடுத்தவன் எடுத்த படத்தை திரையிட விடாமல் செய்கிறார்களே அது தான் தவறு. உப்பை தின்றவன் தண்ணியை குடித்துதான் ஆகவேண்டும். உங்கள் குடும்பத்தின் ஒட்டு மொத்த அராஜகத்திற்கு பயனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது.
வேட்பாளர்களின் லட்சணம் கட்சி பாகுபாடு பாராமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு என ஊழல்களின் மொத்த உருவமாகத்தான் கட்சி தருகிறார்கள். எவனும் சொல்லிகொள்ளும்படி இல்லை. 10 முதல் 20 கோடி செலவு செய்பவனுக்கு தான் சீட்டே கொடுகிறார்கள். செலவு செய்துவிட்டு கையை நக்கிகொண்டா போவான்.
கிடைப்பதை சுருட்டத்தன் செய்வான். தலைவன் உருப்படியா இருந்தா தானே தொண்டனும் உருப்படியா இருப்பான்.
சாகும் தருவாயில் காமராசரின் கையிருப்பு வெறும் 63 ரூபாய்தானாம். தனது மாத சம்பளத்தில் தனது மனைவி 5 ரூபாய் மிச்சம் பிடித்துவிட்டார் என்பதற்காக ஓடோடி சென்று தனது சம்பளத்தில் உபரியான 5 ரூபாய் குறைக்க சொன்ன லால் பகதூர் சாஸ்திரி, விருந்தினர் வருகைக்காக 1 ரூபாய் அதிகம் செலவனாதற்காக ஆசிரம நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டு கிடைக்காமல் நண்பரிடம் கடன் வாங்கினார் காந்தி.
இதெல்லாம் கூட நடந்தது நம் நாட்டினில் தான் என்று சொன்னால் எதிர் வரும் சந்ததிகள் நம்புவார்களா..? கொள்கைக்காக முரண்பட்ட உத்தம தலைவர்கள் பொதுநலத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால் கொள்கை என்றால் கொள்ளையடிப்பது, பொதுநலம் என்றால் பெரிய வீடு, சின்ன வீடு பாகுபாடு பாராமல் அரசு சொத்தை கொள்ளையடிப்பது என்று மாறிப்போனது காலத்தின் கோலம். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அரசியல் பன்னாடைகள் திருந்த போவதில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இங்கு ஏற்பட்டால் தான் உண்டு. அப்போதும் கூட தலைமை ஏற்க ஒரு நல்லவன் கிடைக்க போவதில்லை.
அதாவது ஊழல் செய்தாலும், பொது சொத்தை கொள்ளையடித்தாலும், பதவி ஏற்றுக்கொண்டு மக்கள் பனி செய்யாமல் சொந்த வணிகத்தை மேற்கொண்டாலும் சரி, வீட்டில் படித்து தூங்கினாலும் சரி கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை ஆனால் கட்சி கட்டுப்பாடு தான் முக்கியம். என்ன ஒரு கொடுமை அய்யா இது. 60 வருட அரசியல் பாரம்பரியம் உள்ள உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் , தன் பிள்ளையை முட்டாளாக, ஊதாரியாக வளர்த்தெடுப்பதை போலிருக்கிறது உங்களின் வார்த்தைகள்.
"இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கழகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல் இத்தனை ஆண்டு காலமாக தன்னை வளர்த்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கழகத்தின் கழுத்தையே அறுப்பதைப்போல்; பதவிப் பொறுப்பு கிட்டவில்லை என்றதும் கழகக் கட்டுப்பாட்டை துச்சமெனக் கருதி சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் சிலரின் போக்கு கண்டு கண்கலங்குகின்றேன்" என்கிறார், குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றதும் ஓடோடி டெல்லி சென்றதை நீங்கள் மறந்துவிட்டீர்களா...?
காங்கிரஸ் தொகுதி அதிகம் கேட்டதற்காக, ராஜினமா கடிதத்தை தூக்கி கொண்டு ஓடியதை மறந்துவிட்டீர்களா..? உங்களுக்கு விட்டு கொடுக்கவும் தெரியாது, பகுத்து கொடுக்கவும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சியில் உங்களுக்கு ஒரு நியாயம், தொண்டனுக்கு ஒரு நியாயமா பெரியவரே..?வயதால் மட்டுமே நீர் பெரியவர் மற்றபடி...?
என்வீட்டு பிள்ளைகள் சினமா தொழிலில் இருப்பது தவறா என்கிறார். அது தவறில்லை அய்யா உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் தானே இருக்கிறார்கள் அது தான் தவறு. ஒட்டு மொத்த தியேடர்களையும் குத்தகைக்கு எடுத்துகொண்டு அடுத்தவன் எடுத்த படத்தை திரையிட விடாமல் செய்கிறார்களே அது தான் தவறு. உப்பை தின்றவன் தண்ணியை குடித்துதான் ஆகவேண்டும். உங்கள் குடும்பத்தின் ஒட்டு மொத்த அராஜகத்திற்கு பயனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது.
வேட்பாளர்களின் லட்சணம் கட்சி பாகுபாடு பாராமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு என ஊழல்களின் மொத்த உருவமாகத்தான் கட்சி தருகிறார்கள். எவனும் சொல்லிகொள்ளும்படி இல்லை. 10 முதல் 20 கோடி செலவு செய்பவனுக்கு தான் சீட்டே கொடுகிறார்கள். செலவு செய்துவிட்டு கையை நக்கிகொண்டா போவான்.
கிடைப்பதை சுருட்டத்தன் செய்வான். தலைவன் உருப்படியா இருந்தா தானே தொண்டனும் உருப்படியா இருப்பான்.
சாகும் தருவாயில் காமராசரின் கையிருப்பு வெறும் 63 ரூபாய்தானாம். தனது மாத சம்பளத்தில் தனது மனைவி 5 ரூபாய் மிச்சம் பிடித்துவிட்டார் என்பதற்காக ஓடோடி சென்று தனது சம்பளத்தில் உபரியான 5 ரூபாய் குறைக்க சொன்ன லால் பகதூர் சாஸ்திரி, விருந்தினர் வருகைக்காக 1 ரூபாய் அதிகம் செலவனாதற்காக ஆசிரம நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டு கிடைக்காமல் நண்பரிடம் கடன் வாங்கினார் காந்தி.
இதெல்லாம் கூட நடந்தது நம் நாட்டினில் தான் என்று சொன்னால் எதிர் வரும் சந்ததிகள் நம்புவார்களா..? கொள்கைக்காக முரண்பட்ட உத்தம தலைவர்கள் பொதுநலத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால் கொள்கை என்றால் கொள்ளையடிப்பது, பொதுநலம் என்றால் பெரிய வீடு, சின்ன வீடு பாகுபாடு பாராமல் அரசு சொத்தை கொள்ளையடிப்பது என்று மாறிப்போனது காலத்தின் கோலம். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அரசியல் பன்னாடைகள் திருந்த போவதில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இங்கு ஏற்பட்டால் தான் உண்டு. அப்போதும் கூட தலைமை ஏற்க ஒரு நல்லவன் கிடைக்க போவதில்லை.
Tuesday, March 22, 2011
2011 தேர்தல் - சில புதிர்கள்
புதிர் 1
பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்தது போல் தெரிந்தாலும் சொல்லி வைத்தது போல் அடுத்து அடுத்து பரபரப்புக்குரிய செய்தி வந்து விடுகிறது. தி மு க, அ தி மு க, தே மு தி க அடுத்து இப்போது காங்கிரஸ் வட்டாரத்தில் வேட்பாளர் குளறுபடி ஆரம்பித்துவிட்டது. போன வாரம் கட்சிகளின் பிரச்னை இந்த வாரம் கட்சி கோஷ்டிகளின் பிரச்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எதைவேண்டுமானாலும் தீர்க்கமுடியும் காங்கிரஸ் கோஷ்டி பிரச்சனையை தீர்க்க முடியுமா..?
புதிர் 2
நேற்றைய வரை 35000 புகார்களுக்கு மேல் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக பல்வேறு கட்சிகளின் மீது பதிவு தேர்தல் ஆணையத்தால் செய்யபட்டிருகிறது. இதே வேகத்தில் போனால் எப்படியும் ஒரு 3 புகார்களும் ஒரு குறைந்தது 1 லட்சம் வழக்குகளாவது தொடரப்படும். இதனால் என்ன பயன்..? தேர்தல் வழக்கு பதிவு செய்வதால் மட்டும் கட்சிகளின் நடவடிக்கையில் மாற்றம் வரபோகிறதா..? இதன் விசாரணை, அதன் முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகு தானே வெளிவரும். அதனால் வெற்றி பெற்ற கட்சிகள் எதவகையிலும் பாதிக்கப்பட போவதில்லை. வெற்றி பெற்றபின் இந்த புகார்களுக்கும், விசாரணைகளுக்கும் என்ன மரியாதை இருக்கும்..?
புதிர் 3
வை கோ வெளியேற்றப்பட்டதற்கு எவ்வளவோ காரணங்கள் முன் வைக்கபடுகிறது. ராசியில்லாத கட்சி, அவர் கேட்பது போல் 22 தொகுதி கொடுத்தால் தனி பெரும்பான்மை கிடைப்பதில் அ தி மு காவிற்கு ஏற்படும் சிக்கல், விடுதலை புலிகள், ஈழ தமிழர் விவகாரத்தில் அவருக்கும், ஜெயாவிற்கும் இருக்கும் முரண்பாடு, விஜய் மல்லையாவின் வேண்டுகோள், ராஜ பக்செவின் விருப்பம் என பட்டியல் நீள்கிறது. இதில் எது உண்மை..? தினமலர் வை கோவை பற்றி தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் என வர்ணித்திருப்பது யாரை திருப்தி படுத்த...? தி மு க ஆதரவு ஊடகங்கள் வை கோவின் நிலை குறித்து முதலை கண்ணீர் வடிப்பது எதற்காக..? வை கோவின் தேர்தல் புறகணிப்பு ஒருக்காலும் ம தி மு காவிற்கு நன்மை தரபோவதில்லை. மாறாக அவர்களின் முதுகில் குத்திய ஜெயாவிற்கும், கலைஞருக்கும் தான் சாதகமாக மாறபோகிறது.
புதிர் 4
ஒட்டு மொத்த திரையுலகமும் குடும்ப ஆட்சியால் பாதிக்கபட்டிருகிறது என தகவல்கள் வருகிறது. தேர்தல் கூட்டணி உறுதியாகி பிரசாரத்திற்கும் வண்டி கிளம்பி விட்டது ஆனால் எதிர்பார்த்த பரபரப்பு கோடம்பாக்கத்தில் காணோமே..? என்ன சமாசாரம்..? மீண்டும் இவங்க ஆட்சியை பிடித்துவிட்டால் என்ன பண்ணி தொலைவது என்ற பயமா..? விஜய் இன்னும் பகிரங்கமாக வெளிவர தயங்குவது ஏன்..?
புதிர் 5
இலவசங்கள் குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், இலவசங்களை காட்டி எப்படியும் ஆட்சியை பிடித்துவிட முடியும் என நினைக்கும் கலைஞரின் தைரியம், தமிழனின் அறியாமை தானே. பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதாவில் இறங்காமல் நரேந்திர மோடியை போல் தைரியமாக இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா...? இலவசங்கள் ஒரு மோசடி திட்டம் என்பதையாவது மக்களிடம் கொண்டு சேர்க்குமா..?
புதிர்கள் இன்னும் இருக்கு..உங்களின் பங்கிற்கு நீங்களும் சொல்லுங்கள்
பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்தது போல் தெரிந்தாலும் சொல்லி வைத்தது போல் அடுத்து அடுத்து பரபரப்புக்குரிய செய்தி வந்து விடுகிறது. தி மு க, அ தி மு க, தே மு தி க அடுத்து இப்போது காங்கிரஸ் வட்டாரத்தில் வேட்பாளர் குளறுபடி ஆரம்பித்துவிட்டது. போன வாரம் கட்சிகளின் பிரச்னை இந்த வாரம் கட்சி கோஷ்டிகளின் பிரச்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எதைவேண்டுமானாலும் தீர்க்கமுடியும் காங்கிரஸ் கோஷ்டி பிரச்சனையை தீர்க்க முடியுமா..?
புதிர் 2
நேற்றைய வரை 35000 புகார்களுக்கு மேல் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக பல்வேறு கட்சிகளின் மீது பதிவு தேர்தல் ஆணையத்தால் செய்யபட்டிருகிறது. இதே வேகத்தில் போனால் எப்படியும் ஒரு 3 புகார்களும் ஒரு குறைந்தது 1 லட்சம் வழக்குகளாவது தொடரப்படும். இதனால் என்ன பயன்..? தேர்தல் வழக்கு பதிவு செய்வதால் மட்டும் கட்சிகளின் நடவடிக்கையில் மாற்றம் வரபோகிறதா..? இதன் விசாரணை, அதன் முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகு தானே வெளிவரும். அதனால் வெற்றி பெற்ற கட்சிகள் எதவகையிலும் பாதிக்கப்பட போவதில்லை. வெற்றி பெற்றபின் இந்த புகார்களுக்கும், விசாரணைகளுக்கும் என்ன மரியாதை இருக்கும்..?
புதிர் 3
வை கோ வெளியேற்றப்பட்டதற்கு எவ்வளவோ காரணங்கள் முன் வைக்கபடுகிறது. ராசியில்லாத கட்சி, அவர் கேட்பது போல் 22 தொகுதி கொடுத்தால் தனி பெரும்பான்மை கிடைப்பதில் அ தி மு காவிற்கு ஏற்படும் சிக்கல், விடுதலை புலிகள், ஈழ தமிழர் விவகாரத்தில் அவருக்கும், ஜெயாவிற்கும் இருக்கும் முரண்பாடு, விஜய் மல்லையாவின் வேண்டுகோள், ராஜ பக்செவின் விருப்பம் என பட்டியல் நீள்கிறது. இதில் எது உண்மை..? தினமலர் வை கோவை பற்றி தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் என வர்ணித்திருப்பது யாரை திருப்தி படுத்த...? தி மு க ஆதரவு ஊடகங்கள் வை கோவின் நிலை குறித்து முதலை கண்ணீர் வடிப்பது எதற்காக..? வை கோவின் தேர்தல் புறகணிப்பு ஒருக்காலும் ம தி மு காவிற்கு நன்மை தரபோவதில்லை. மாறாக அவர்களின் முதுகில் குத்திய ஜெயாவிற்கும், கலைஞருக்கும் தான் சாதகமாக மாறபோகிறது.
புதிர் 4
ஒட்டு மொத்த திரையுலகமும் குடும்ப ஆட்சியால் பாதிக்கபட்டிருகிறது என தகவல்கள் வருகிறது. தேர்தல் கூட்டணி உறுதியாகி பிரசாரத்திற்கும் வண்டி கிளம்பி விட்டது ஆனால் எதிர்பார்த்த பரபரப்பு கோடம்பாக்கத்தில் காணோமே..? என்ன சமாசாரம்..? மீண்டும் இவங்க ஆட்சியை பிடித்துவிட்டால் என்ன பண்ணி தொலைவது என்ற பயமா..? விஜய் இன்னும் பகிரங்கமாக வெளிவர தயங்குவது ஏன்..?
புதிர் 5
இலவசங்கள் குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், இலவசங்களை காட்டி எப்படியும் ஆட்சியை பிடித்துவிட முடியும் என நினைக்கும் கலைஞரின் தைரியம், தமிழனின் அறியாமை தானே. பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதாவில் இறங்காமல் நரேந்திர மோடியை போல் தைரியமாக இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா...? இலவசங்கள் ஒரு மோசடி திட்டம் என்பதையாவது மக்களிடம் கொண்டு சேர்க்குமா..?
புதிர்கள் இன்னும் இருக்கு..உங்களின் பங்கிற்கு நீங்களும் சொல்லுங்கள்
Monday, March 21, 2011
சோரம் போன வடிவேலு
இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.
அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை.
பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.
திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.
பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை.
அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை.
பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.
திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.
பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை.
Friday, March 18, 2011
17 வயது பெண்..! 13 இரவுகள்..! வில்லங்க பிரதமர்...!
தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக சூடு கிளப்பும் காட்சிகள், கொதித்து போன வேட்பாளர்கள், வீறுகொண்டு எழுந்த தொண்டர்கள், செய்வதறியாது திகைத்து சுதாரித்த தலைவர்கள் என ஒரே போராட்ட களம். கொஞ்சம் ஆறுதாலாக இருக்கட்டுமே என்று தான் இந்த பதிவு. இதுவும் அரசியல் பதிவு தான் ஆனால் கொஞ்சம் வில்லங்கமான பதிவு. ஒரு ஆறுதல் இது நம்மவர்களை பற்றியது அல்ல.
இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோணி, பெரிசுக்கு வயது 72 ஆனால் ஆடிய ஆட்டமோ சிறிசுகளும் தாக்குபிடிக்க முடியாது. இந்த வயதிலும் சின்ன பெண்கள் பக்கத்தில் இல்லயென்றால் பெரிசுக்கு தூக்கம் வரதாம். கோடிகளில் புரளும் கிழட்டு சிங்கம் அந்தரங்க அழகிகளுக்கு பரிசு கொடுத்து அசத்துவதில் கில்லாடி. பிடித்த பெண்கள் படிந்து விட்டால் எதைக்கேட்டாலும் கொடுப்பாராம். பரிசுகளும் கோடியில் தான்.
ஆட்டம் போட்ட பெரிசு இப்போது ஒரு சிறிசு விஷயத்தில் மாட்டிகொண்டு முழி பிதுங்கிறது. இத்தாலி நாட்டு சட்டப்படி 18 வயதிற்கு குறைந்த பெண்ணுடன் உறவு வைத்துகொண்டால் கடுமையான தண்டனை உண்டு. ஒரு திருட்டு வழக்கில் மாட்டிய 17 வயது பெண்ணை போலீசார் விசாரிக்க போக மேலிடத்திலிருந்து விடுவிக்க சொல்லி உத்தரவு வந்திருகிறது. அவர்கள் தமிழ் நாடு போலிசை போல் இல்லை. நொண்டி நோங்கெடுத்ததில் பாப்பா, தாத்தாவின் லீலைகளை பட்டியல் போட்டிருக்கிறது.

17 வயது விபசார பெண்ணுடன் 13 முறை உறவு கொண்டது அம்பலமாகிவிட்டது. வழக்கம் போல் பிரதமர் சார்பில் மறுப்பு தெரிவிக்கபட்டிருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு பிரதமர் ஆஜராகிறார். ஏற்கனவே பல "கேஸ்களை" இது போல் சந்திதிருபதால் பெரிசுக்கு இது மேட்டரை இல்லை. இப்ப விஷயம் என்னன்னா...? மண் பொன் பெண் - இந்த மூன்றும் தான் மனிதனை சோரம் போகவைக்கும் சமாச்சாரங்கள். இதுவரை மண்ணையும், பொன்னையும் நம்மாளுக இஷ்டத்துக்கு சுருட்டி விட்டார்கள். அப்படின்னா..இந்தமுறை பெண்களின் வலையில் அரசியல் தலைகள் உருளபோகிறதா...!!?!! தமிழக அரசியலில் அப்படி மாட்ட போவது யாராக இருக்கும்...நீங்களே சொல்லுங்க..
இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோணி, பெரிசுக்கு வயது 72 ஆனால் ஆடிய ஆட்டமோ சிறிசுகளும் தாக்குபிடிக்க முடியாது. இந்த வயதிலும் சின்ன பெண்கள் பக்கத்தில் இல்லயென்றால் பெரிசுக்கு தூக்கம் வரதாம். கோடிகளில் புரளும் கிழட்டு சிங்கம் அந்தரங்க அழகிகளுக்கு பரிசு கொடுத்து அசத்துவதில் கில்லாடி. பிடித்த பெண்கள் படிந்து விட்டால் எதைக்கேட்டாலும் கொடுப்பாராம். பரிசுகளும் கோடியில் தான்.
ஆட்டம் போட்ட பெரிசு இப்போது ஒரு சிறிசு விஷயத்தில் மாட்டிகொண்டு முழி பிதுங்கிறது. இத்தாலி நாட்டு சட்டப்படி 18 வயதிற்கு குறைந்த பெண்ணுடன் உறவு வைத்துகொண்டால் கடுமையான தண்டனை உண்டு. ஒரு திருட்டு வழக்கில் மாட்டிய 17 வயது பெண்ணை போலீசார் விசாரிக்க போக மேலிடத்திலிருந்து விடுவிக்க சொல்லி உத்தரவு வந்திருகிறது. அவர்கள் தமிழ் நாடு போலிசை போல் இல்லை. நொண்டி நோங்கெடுத்ததில் பாப்பா, தாத்தாவின் லீலைகளை பட்டியல் போட்டிருக்கிறது.

17 வயது விபசார பெண்ணுடன் 13 முறை உறவு கொண்டது அம்பலமாகிவிட்டது. வழக்கம் போல் பிரதமர் சார்பில் மறுப்பு தெரிவிக்கபட்டிருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு பிரதமர் ஆஜராகிறார். ஏற்கனவே பல "கேஸ்களை" இது போல் சந்திதிருபதால் பெரிசுக்கு இது மேட்டரை இல்லை. இப்ப விஷயம் என்னன்னா...? மண் பொன் பெண் - இந்த மூன்றும் தான் மனிதனை சோரம் போகவைக்கும் சமாச்சாரங்கள். இதுவரை மண்ணையும், பொன்னையும் நம்மாளுக இஷ்டத்துக்கு சுருட்டி விட்டார்கள். அப்படின்னா..இந்தமுறை பெண்களின் வலையில் அரசியல் தலைகள் உருளபோகிறதா...!!?!! தமிழக அரசியலில் அப்படி மாட்ட போவது யாராக இருக்கும்...நீங்களே சொல்லுங்க..
Subscribe to:
Posts (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உத...
-
இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...