சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Saturday, January 23, 2010
ஆயிரத்தில் ஒருவன் - இது வெறும் விமர்சனமல்ல..!!
எந்த படத்திற்கும் இல்லாத அளவில் மிகபெரும் அலசல் இந்த படத்திற்கு ( கிட்டத்தட்ட 80 % பதிவர்கள் ) கொடுத்தாகி விட்டது. நான் கொடுக்காமல் விட்டால் எப்படி. அதனால் என் பங்கிற்கும் இந்த ஒரு பதிவு. ஆனால் என்ன ஒரு பிரச்னை என்றால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால் என்ன ஒவ்வொரு பதிவரும் பார்த்து கொடுத்த அலசலை நான் அதையெல்லாம் படித்து கொடுக்கிறேன். எல்லாம் ஒன்று தானே.
செல்வராகவன் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். கல்கி முதல் பாலகுமாரன் வரை நமக்குள் கொடுத்திருந்த சோழர்களின் பொற்கால முகத்திரை, காட்டு மிராண்டிகளாக கறிதுண்டுகளுக்காக வெட்டி சாகும் பஞ்ச பராரிகளாக காட்சி படுத்தியிருப்பதற்கு. வெள்ளைகாரர்களை - காரிகளை பார்த்து இனி வாய்பிளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் இரண்டு காரணங்களுக்காக.
ஒன்று பிரம்மாண்டம் என்பது அவர்களக்கு மட்டுமே சொந்தமல்ல. நம்மளும் எடுக்க முடியும் என்று நிருபித்து இருப்பதற்கு. இரண்டு ஆபாச நெளிவு சுளிவுகளை தாண்டி, வார்த்தைகளில் ஆபாசத்தை ஆபாசம் என்று தெரியாத வகையில் இயல்பான யதார்த்தமான வசனங்களாக தமிழிலும் கொடுக்க முடியும் என்று காட்டியதற்கு. இதன் பரிணாம வளர்ச்சியாக படுக்கையறை காட்சிகள் கூட இனி இங்கு இயல்பான விஷயங்களாகி போகும் ஒரு நாள். எதிர்காலத்தில் பதினோரு மணி காட்சிகென்று மூன்றாதர மலையாள, ஆங்கில படங்களை தேட வேண்டியதில்லை.
பார்த்திபன், ரீமா, கார்த்தி கதாபாத்திரம் எல்லோராலும் சிலாகிக்கபடுகிறது.
வாழ்த்துக்கள் பார்த்திபன் கதாநாயக வட்டத்திலிருந்து வெளி வந்து சாதித்து இருக்கிறீர்கள். அடுத்த பிரபு.
வாடி என் செல்லம் ரீமா. எங்கு ஒளிந்து கிடந்தது இவ்வளவு திறமை. உன் நாடி நரம்பெல்லாம் நடிக்கிறது. உன் உடை கூட ஒரு கவர்ச்சி சாயம் பூசி இருப்பது உனக்கு கிடைத்த வெற்றியா..இல்லை இந்த செல்வராகவனக்குள் எவ்வளவு நம்பிக்கை அந்த உடை மேல்.
இரண்டாவது படத்திருக்கு இவ்வளவு நாள் காத்திருக்கும் போதே நினைத்தேன் எதோ ஒன்று இருக்கு என்று. கார்த்தி அதை நிருபித்து இருக்கிறார். ஆனால் பருத்தி வீரன் சாயல் (அந்த தெனாவெட்டு) அடுத்த படத்தில் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
அப்பாடா...!! ஒரு படம் பார்க்கமலேய விமர்சனம் எழுதியாகிவிட்டது. படம் பார்த்தவர்கள் யாரவது இந்த விமர்சனத்தை காரசாரமாக விமர்சனம் செய்யுங்கள் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உத...
-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
நிஜமா பார்க்கலியா.. அட.. பார்த்தாலும் இதேதான்..
ReplyDelete