Friday, January 8, 2010

வாழ்ந்து பழகு. இல்லையா போய் சாவு.!

சில விஷயங்களை எவ்வளவு பேசினாலும் ஊசி முனையளவு கூட மாற்றம் பெற்று விட போவதில்லை. அதுவே ஒரு சிலருக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாக இருந்து விட்டால் அந்த கடவுளே வந்து கைவிட சொன்னாலும் எதை கொடுத்து கடவுளை சரிகட்ட முடியும் என்று தான் பார்ப்பார்கள். நம்ம கடவுள்களும் கோபுரத்தின் சைஸை பொறுத்து உண்டியல்களை வைத்து கொண்டிருப்பது இவர்களுக்கு சௌகர்யமாகிவிட்டது.

அரசியல், சினிமா, சீட்டு கம்பனி, விபசாரம், அப்பறம் காவல் துறை (இன்றய தேதியில் பணம் கொழிக்கும் துறைகளில் முக்கியமானது) இந்த பதிவு முழுவதையுமே பட்டியலிட்டாலும் தீராது...சரி விஷயத்துக்கு வருவோம்.. நேற்று யதேச்சையாக கடைதெரு பக்கம் போனேன் மனைவியோடு தான். (ஷாப்பிங்காம்..)

ஒரு துணிக்கடையில் குழந்தைக்கு டிரஸ் வாங்கலாமென்று உள்ளே நுழைந்தோம். வழக்கம் போல் துணைவி துணியை பார்க்க...நம் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. அப்போதுதான் இந்த பதிவின் கதாநாயகியை கண்கள் கண்டது... அவளுக்கு வயதொன்னவோ பத்திற்குள் தான் இருக்கும். பிறந்த நாளுக்கு துணி எடுக்க வந்திருப்பார்கள் போலிருக்கிறது அம்மாவும் மகளும். கூடவே மகளின் தோழிகளாக இருவர்..(ஒரே ப்ளாட்டாக இருக்கலாம்)

விஷயம் இது தான். நாங்கள் உள் நுழைவதற்கு 1 மணி நேரம் முன்பிருந்தே அவர்கள் துணியை தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. அந்த குழந்தையோ அந்த துணி தான் வேண்டுமென்று ஒரே அடம். என்னவென்று காதை அங்கே கொடுத்தப்ப தான் தெரிந்தது விஷயம். அந்த குழந்தைக்கு, அதாவது 10 வயது பெண் குழந்தைக்கு ஆதவன் படத்தில் நயன்தார அணிந்துவரும் ஒரு மிடி வேண்டுமாம். (மிடியோ, ப்ராக்கோ) கடைக்காரரும், அந்த அம்மாவும் என்ன சொல்லியும் கேட்கவில்லை. வேறு எதை கொடுத்தும் டபாய்க்க முடியவில்லை...

இதனால் அறியபடுவது யாதெனில் என்றெல்லாம் எழுதினால் அடிக்க வந்துவிடுவீர்கள் என்று தெரியும். கொஞ்சம் காரசாரமாக பேசுவோமா..

சினிமாவில் தலைவிரித்து ஆடும் ஆபாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆடையின் அளவு குறைய குறைய வக்கிர எண்ணங்கள் இளைஞர்கள் முதல் பெரிசுகள் வரை அரிக்க ஆரம்பித்துவிட்டது. 3 வயது 4 வயது குழந்தைகளிடம் கூட இவர்களின் பாலியல் வக்கிரங்களை தீர்த்து கொள்ள நேர்கிறது..நாளுக்கு நாள் மனிதம் செத்து போய் மிருகம் வாழவும் வளரவும் ஆரம்பித்து விட்டது...

என்ன செய்து கொண்டிருக்கின்றன இந்த மாதர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் எல்லாம். வரதட்சணை கொடுமையா வரிந்து கட்டிக்கொண்டு கணவனையும், மாமியாரையும் கைது செய்ய போர்க்கொடி உயர்த்துவார்கள். தங்களின் சௌகர்யத்துக்காக ஆடம்பர வாழ்க்கைகாக உடம்பை வெள்ளிச்சமிட்டு காட்டும் நடிகைகளும் தாங்கள் ஒரு பெண் என்பதை நினைத்து பார்ப்பதில்லை.

ஆடம்பர பங்களா, கார், ஏவிய வேலைக்கு வேலையாள், பச்சை நோட்டு கட்டுகள் நிரம்பிய பெட்டியின் முன் சமூக கோட்பாடுகள் காற்றில் பறந்து விடுகின்றன..இவர்கள் எல்லோருக்கும் தங்கள் பங்கை நியாயபடுத்த ஒரு நல்ல வாசகம் வேறு கிடைத்துவிட்டது..."கலையை கலையாக பார்க்காமல் காம கண்ணோட்டத்தோடு பார்கிறவர்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்பது" கலைக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் மட்டுமே நிரம்பிய சமுதாயம் அல்ல இது என்பது நிதர்சனம். வித்தியாசம் தெரிந்தவர்கள் சதவிகிதத்தில் மிகவும் குறைவு என்பது தான் நிஜமும் கூட.

பெருகி வரும் வன்முறை காட்சிகளால் தான் பள்ளியில் படிக்கும் சிரார்கள் கூட பழிவாங்கும் உணர்வோடு வளர்கிறார்கள்.. ஒரு துறையின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தின் வீழ்ச்சியாக மாறிவிட கூடாது. வெற்றி பெரும் குதிரை மீது தான் எல்லோரும் பணம் கட்டுகிறார்கள் என்பதும், ஓடுகிற படத்தை தான் எடுக்க முடியும் என்பதும் சுயநல வாதம். ஆபாசம் + அததீத கவர்ச்சி + ரத்தம் சொட்டும் வீச்சரிவாள் தான் வெற்றிக்கான பார்முலாவாக இருக்கிறது.. நல்ல கதையம்த்தோடு எப்போதாவது தான் படங்கள் வருகிறது...அப்போது அதையெல்லாம் Trend Set - ஆக ஆக்கமுடியாதவர்கள் அல்லது அத்தகைய திறமையை வளர்த்துக்கொள்ள திராணி இல்லாதவர்கள் தான் மிக எளிதாக யாராலும் காப்பி அடிக்க முடிகிற மசாலா படங்களுக்கு Trend Set படம் என்று சொல்லி வன்முறையையும், காமத்தையும் மாங்கு மாங்கு என்று எடுக்கிறார்கள்.

சினிமாவால் ஆட்சியே மாறிய கதை தமிழர்கள் நன்கு அறிவார்கள். எனவே தான் சொல்கிறேன் சினிமா என்பது மிக பெரிய ஊடகம்.. மக்களை எளிதில் ஈர்க்ககூடிய, உணர்வேற்ற கூடிய சக்தி வாய்ந்த சினிமா என்பது. இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி. உங்களின் கல்லா பெட்டியை மட்டும் நிரப்பிக்கொள்ளும் நோக்கத்தோடு படமெடுக்காதிர்கள். இங்கு தான் நீங்களும் வாழ்கிறீர்கள். உங்கள் சந்ததியும் இங்கு தான் வாழ போகிறது..

"அட போடா...இவரு பெரிய புடுங்கி...காசை பார்க்கிற வரைக்கும் தான் எல்லா தத்துவமும்...." "மரத்தை நடுங்க, மரத்தை நடுங்க" ன்னு தான் கவர்மெண்டு சொல்லுது..இப்ப செம்மொழி மாநாட்டுக்காக திருச்சி ரோட்ல இருக்கிற மரங்களையெல்லாம் வெட்டி ரோடு பெரிசு பண்ணலுயா... அது மாதிரி தான் இதுவும். இங்க எதுவும் மாறாது.. எல்லாம் இப்படிதான் இருக்கும்.. சகிச்சிக்கிட்டு வாழ்ந்து பழகு. இல்லையா போய் சாவு.!

மேல இருக்கிற பேரா என் மனசாட்சி சொன்னது...இந்த பதிவை எழுதும் போது எனக்குள் எழுந்த ஆவேசம் அடங்கி போய்விட்டது.. காலம் காலமாக நம்மால் இதை தானே செய்ய முடிகிறது...

இந்த பதிவுக்கு என்ன படம் போடலாம் என்று யோசித்தேன்...நல்ல மாடர்ன் ஆர்ட் ஓன்று கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது..ரத்தத்தின் பினனனியில்..ஆடை குறைந்த பெண்ணின் நிழலுருவம்..வீச்சரிவாள் ஓரத்தில்..

"போடா மயிறு..நயன் படம் போடாமே..." நல்ல வாயில வருது..

மீண்டும் என் மனசாட்சி தான்...

நான் என்ன செய்ய....நான் இப்ப என்ன செய்ய..(உருண்டை விழிகள் மிரட்ட மாதவன் தம்பி படத்தில் கத்துவாரே..)

2 comments:

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...