Friday, January 1, 2010

அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

தமிழ் இலக்கியவதிகள் சில பேருக்குள் கருத்து மோதல்கள், சர்ச்சைகள் கொடி கட்டி பறக்கிறது என்பது தொடர்ந்து ஒரு வாரம் தமிழ் இணையதள பதிவுகளை படித்தாலே தெரிந்து விடும்.

யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை. அவரவர்கென்று எப்போதும் சுய மதிப்பீடுகள் இருக்கும். தான் தான் சரி என்று ஆரம்பிக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பம்.

பர்தா விஷயத்தில் இருந்து மனுஷ்ய புத்திரன் ஜெயமோகன் விவகாரம் வரை ஒரு நிமிடத்தில் சரி செய்து விடக்கூடிய விஷயம் தான். ஆனால் தொடர்ந்து வளர்ந்து வரும் சர்ச்சைகள், பிரச்சனைகளை மறுத்து தங்களை முன்னிறுத்தி கொள்ள மேற்கொள்பவை.

ஏதாவது ஒரு நிமிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன நமது கண்ணோட்டத்திலும், செயல்களிலும். விலகி போனவர்கள் திரும்பி வரக்கூடும். திரும்பி வரும்பொழுது...காயங்களுக்கு மருந்திடலாம். அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

சாருவின் ஆன்மிக பக்கங்கள் மிக பெரிய ஆச்சர்யம்... சாருவை நேரிடையாக எனக்கு பரிச்சயமில்லை. ஆனால் அவரின் எழுத்துக்களின் நிதர்சனம் கண்டு பல சமயம் ஆச்சர்யபட்டிருகிறேன்...இப்படி கூட பட்டவர்த்தனமாக எழுத முடியுமா என்று. நித்யாவின் தரிசனத்திற்கு பிறகு அவருள் சில ஆச்சர்யமான மாற்றங்களை உணர முடிகிறது. அவை அவரின் எழுத்துகளிலும் பிரதிபலிக்கலாம்...

2 comments:

  1. //இப்படி கூட பட்டவர்த்தனமாக எழுத முடியுமா என்று.//

    முயற்சித்துப்பாருங்கள்

    ReplyDelete
  2. முயற்சி செய்கிறேன் நண்பரே..

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...