Thursday, November 2, 2017

நாம் சைவமா அசைவமா - அறிவியல் விளக்கம்

மாமிசம் மனித உணவா?*
இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
...
1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .


இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம். சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இனி ஆராய்ச்சி செய்வோம்.
*1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு* .
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.
அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.
*2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.*
சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.
*3. கால் விரல்கள்:-*
சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.
*4. குடல் அமைப்பு:*
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.
காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,
அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.
*5. சமநிலையான உடல் உஷ்ணம்:-*
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது. ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.
*6. மலத்தின் தன்மை*
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது. அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.
இனி மனநிலையில் ஆராயலாம்.
*1. வாழும் முறை
சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான். ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)
*2. இயல்பு
சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.
*3. ஆக்கப்பூர்வமான வேலைகள்
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.
*மன இறுக்கம்:-*
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?
ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.
உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும். இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும். இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான். இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது. மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? ) உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்
மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.
இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.
எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமலும், மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது சாலச் சிறந்தது.

 

8 comments:

  1. இன்று பலரும் சைவத்தையே விரும்புகின்றனர் நண்பரே...
    நானும் பகுதிக்கு மேல் திரும்பி விட்டேன்.

    ReplyDelete
  2. சைவப்பழக்கம் சிறந்தது என்று மேலை நாடுகளிலும் சொல்லி வருகிறார்கள். சுவாரஸ்யமான அலசல், பதிவு.

    ReplyDelete
  3. நண்பர்களே ஒரு விபரத்தை தெரிந்து கொள்ளுங்கள். அசைவர்கள் அனைவரும் சைவத்திற்கு மாறி விட்டால் சைவர்களுக்கு சைவ உணவு கிடைப்பது சிரமம். ஒரு சிறு உதாரணத்தை சொல்லுகிறேன். கோழியில் வெளி நாட்டில் ஒரு வித்தியாசம் உள்ளது. நெஞ்சுப்பகுதி விலை அதிகமாக இருக்கும். தொடை கால் பகுதி விலை குறைவாக இருக்கும். ஏனென்றால் நெஞ்சுப் பகுதியில் கொழுப்பு குறைவாக இருக்கும் என்றும் அது நல்லது என்றும் சொல்லப்படுவதால் தான். சிலர் நான் pure vegetarian என்று சொல்லிக்கொள்வது போல நான் pure non-vegetarian என்று சொல்லிக்கொள்வேன் எனக்கு அதனால் ஒரு கேடுமில்லை.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி.

    சைவ அசைவ உணவின் தன்மைகளை இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் தவிர நான் எதையும் உயர்வோ தாழ்வோ செய்ய வில்லை. உணவு அவரவர் விருப்பம் உரிமை சார்ந்தது

    ReplyDelete
  5. நண்பரே நேரம் கிடைத்தால் இத்தளம் சென்று வருக...

    http://thanjavur14.blogspot.in/2017/11/2-Thiruvenkadu-.html?m=1

    ReplyDelete
    Replies
    1. தளத்திற்கு சென்று வந்தேன். எளிமையும் அருமையும் ஒருங்கே அமையப்பெற்ற தளம். தொடர்ந்து வாசிப்பேன்

      Delete
  6. சுவாரஸ்யமான பதிவு.தமிழகத்தில் அசாத்திய துணிச்சல் உங்களுக்கு.
    காய்கறி உணவுகளையே சிறந்தது என்று மேலை நாடுகளிலும் சொல்லி வருகிறார்கள் என்பது உண்மையே.வெளிநாட்டு ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பனிகளும் இறைச்சிவகை உணவுகளை தவிர்த்து காய்கறி உணவுகளையே சாப்பிடும்படி சிபார்சு செய்கின்றார்கள். நோய் வந்தால் அவர்கள் தானே மருத்துவ செலவை செலுத்த வேண்டும் என்பதால்.
    வெளிநாடுகளில் நான் இறைச்சி சாப்பிடுவதை மிகவும் குறைத்து கொண்டுவருகிறேன், சைவ உணவுகள் தான் இப்போது அதிகம்,இறைச்சி சாப்பிடுவதை முற்றாக விட்டுவிடுவேன் என்பவர்களையும்,
    பன்றி, மாடு சாப்பிடுவதைவிட்டுவிட்டேன். இப்போது கோழி, அல்லது காய்கறி உணவுகள் மட்டும் தான் என்பவர்கள் பலரை தற்போது வெளிநாடுகளில் காணலாம்.
    பெரும்பாலும் 18 வயதுக்கும் குறைவான வெள்ளைய இனத்து இளைஞர்கள் சிலர் மிருகங்களை துன்புறுத்த கூடது என்று சொல்லி காய்கறி உணவுகளை பின்பற்றுவதை கண்டு இருக்கிறேன்.
    ஆனால் தமிழகத்தில் நிலைமையோ தலை கீழாக உள்ளது.மாட்டை துன்புறுத்தி தன்னை ஒரு வீரனாக காட்டுவதற்கு ஒரு ஜல்லிகட்டும், மாட்டை கொன்று உண்பதும் அவர்களுக்கு மகிழச்சியை தருகிறது.

    ReplyDelete
  7. ஜல்லிக்கட்டுவையும் மாட்டிறைச்சி உண்ணுவதையும் ஒரு தளத்தில் வைத்து பார்ப்பது தவறு. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அசைவ உணவு அதிகரித்திருப்பதின் காரணம் வேறு. எனினும் உங்களின் கருது பதிவிற்கு நன்றி

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...