Saturday, January 22, 2011

கோழி கிளறிய குப்பை - அரசியல்

கலைஞர் பிரணாப் முகர்ஜி சந்திப்பு..
கலைஞர் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு வழக்கம் போல் கவலை தெரிவித்திருக்கிறார். இம்முறையும் மீனவர்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்படும் என்று அதே வழக்கமான உறுதியை பிரணாப் முகர்ஜி தந்திருக்கிறார். தமிழக மீனவர்களே...ஜாக்கிரதையாக இருங்கள். இவர்கள் ஒவ்வொருமுறை உறுதியான நடவடிக்கை என்ற சில தினங்களுக்குள்ளாகவே தமிழர்கள் தாக்கபடுவது கடந்தகால வரலாறு.

பா ம க - தி மு க கூட்டணி உறுதியாகி விடும் போல் தெரிகிறது..ஏற்கனேவே ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, சினிமா துறை கபளீகரம் போன்றவற்றால் கிட்டத்தட்ட தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில் பா ம க இணைப்பு எந்த வகையிலும் இவர்களுக்கு உதவி செய்யா போவதில்லை. இனியுமா ரமாதாசின் சந்தர்ப்ப அரசியலை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க போகிறார்கள்..

காஸ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா என்பதில் சந்தேகம் வருகிறது. ஒரு சுதந்திர நாட்டின் ஒரு பகுதியில், அந்த நாட்டின் தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசிற்கும் தைரியம் இல்லை, ஏற்ற நினைக்கும் எதிர் கட்சிக்கும் அனுமதி இல்லை இல்லை என்றால், இது என்ன மாதிரி ஜனநாயகம் என்று புரியவில்லை. அருணாச்சல் பிரதேசம் எனது என்கிறான் சீனன். இலங்கையும் விரைவில் சீனாவின் பாதுகாப்பில் இந்தியாவிற்கு தனது எதிர்ப்பை காட்டுமோ என்ற அச்சம் நிலவுகிறது...இதனால் தான் இந்தியாவால் ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. ஒட்டு மொத்த உலக நாடுகளின் குறியில் இந்தியாவின் வியாபாரா சந்தை வேறு கண்ணை உறுதி கொண்டிருக்கிறது.. மத்தியில் ஒரு நிலையான தைரியமான முடிவுகளை எடுக்க கூடிய அரசு என்று அமையுமோ....?

கோழி கிளறிய குப்பையாகத்தான் இன்றைய அரசியலை பார்க்க முடிகிறது..

2 comments:

  1. என்ன ஒரே அரசியல் மட்டுதானா ?

    ReplyDelete
  2. அரசியலில் தெளிவு பெறத்தான்

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...