Tuesday, October 31, 2017

இதில் யார் புத்தி சாலி...!

உண்மையான அன்பும் அதீத நம்பிக்கையும் இறைவனையே பகடி ( கிண்டல்) செய்யும். மாணிக்கவாசகரின் அத்தகைய ஒரு பாடல்.


இதோ பார்..! சல்லிக்காசுக்குப் பிரயோசனமில்லாத என்னை நான் உனக்கு தந்தேன்.
என்னை நீ ஏற்றுக் கொண்டு, உன்னையே எனக்குத் தந்து விட்டாயே...?!


இதில் யார் புத்தி சாலி? நீயே சொல் — என்று சிவ பெருமானையே  நக்கல் செய்கிறார் மாணிக்க வாசகர்..!


 இதோ அந்த பாடல்..!


தந்தது  உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்..?
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்..!


கடவுள் மேல் வைத்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் இதைவிட ஒரு நல்ல  பாடல் கிடைக்குமா...?



No comments:

Post a Comment

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...