Tuesday, August 20, 2013

கோர்ட்டா.. கோட்டையா..? ஏன் இந்த முரண்பாடு..

ஆவணங்கள் தொலைவது, அதுவும் குறிப்பாக ஊழல் சம்பந்தபட்ட ஆவணங்கள் தொலைவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் தொடர் நிகழ்வு. இல்லையென்றால், மின்சார கோளாறினால் அரசு ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அலுவலகமே தீப்பிடித்து எரியும். இது போன்ற சமயங்களில், இது மாதிரியான ஒரு சம்பவமே குற்றம் சாட்டபட்டவருக்கு எதிரான வலுவான சாட்சியமாக நீதிமன்றங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தால் பரிந்துரைக்கபட்டு, தேர்தல் கமிஷன் அறிவித்த இரண்டு யோசனைகளையும் ஆளும், எதிர் காட்சிகள் நிராகரித்திருக்கின்றன. இலவசங்கள் எங்களுக்கு தேவை இல்லை, வேலை வாய்ப்பிற்கு உறுதி செய்யுங்கள், கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும் என்ற இரு யோசனையும் ஒவ்வொரு மக்களும் விரும்புவது தான். மக்களின் விருப்பத்தை பிரதிபலித்த கோர்ட்டும், தேர்தல் கமிசனும், மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் நிராகரிக்கபட்டிருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு..?

No comments:

Post a Comment

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...