Tuesday, August 28, 2012

பாலியல் வன்கொடுமை..! ஒரு தீர்வு..!!

என் அனுபவத்தில் சொல்லும் சில விஷயங்கள் உங்களில் பலருக்கும் ஒத்து போகலாம். சிலர் முரண்படுவார்கள் என்பதையும் நானறிவேன். சமீபத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், சீர்கேடு அடைந்துவரும் குடும்ப உறவுகள், சமுதாயத்தில் நிலவும் பொறுப்பற்ற வணிகம் சார்ந்த சாதக, பாதகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் குறித்தான ஒரு விரிவான பார்வையை முன் வைக்க நினைத்தே இந்த பதிவு.
தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து, பெண் பாலியல் வன்கொடுமை போன்ற விஷயங்களால் இந்த பதிவு மீண்டும் ஒருமுறை உங்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று விரும்பியே மீள் பதிவிடுகிறேன்.



உலகம் கண் முன்னால் விரிந்துபட்டு கிடக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி, இருபது, இருபத்தைந்து வருடங்களாக கடுமையான உழைப்பின் பலனால் தான் பெற்ற வாழ்வின் அதிகபட்ச ஊதியத்தை, இன்று இளைய தலைமுறை கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடனே வாங்க தொடங்கி விடுவதன் பிரமிப்பால் எதையும் ஆலோசனையாக கூட சொல்ல முடியாத நிலையில் பெற்றோர்கள், ஏற்று கொள்ள விரும்பாத இளசுகள். ரசனைகள் முற்றிலும் மாறிபோய்விட்ட நிலையில் அதன் விளைவுகளையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டிய சூழ்நிலை கைதிகளாக நாம்.


அதிகார மனோபாவம் என்பது பணிசார்ந்த விஷயமாகி, நடைமுறை சமுதாயத்திற்கும் பரவி, இன்று இயல்பான குணமாகவும் மாறி போய்விட்டது. வீட்டில் எலி, வெளியே புலி என்பது போய் இன்று எப்போதும் புலியாக உருமிகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன...? அதனால் அடைந்து விட்டிருப்பது என்ன..?
முந்தய தலைமுறை வரை நம்மவர்களுக்கிருந்த சகிப்புத்தன்மை என்கிற ஒரு வஸ்து இன்று காணாமலே போய்விட்டது. "ஜஸ்ட் லைக் தட்" என்கிற மேற்கத்திய கலாசாரத்தின் வரவால் நாம் பெற்று கொண்டதை விட இழந்தது மிக அதிகம். அத்தகைய இழப்புகளில் ஓன்று தான் இந்த சகிப்புத்தன்மை. எடுத்ததுமே இந்த சகிப்புத்தன்மையை பற்றி பேசி உங்களை இம்சிப்பதற்கு காரணம் பெண்கள் மிக மிக அவசியமாக கொள்ளவேண்டிய ஒரு குணம் இது. கிட்டத்தட்ட இது அவர்களின் ஒரு உடலின் பாகமாக தான் இருந்திருக்கிறது முந்தய காலங்களில். " பொண்ணு ரொம்ப அமைதியான குணம் " , " முகத்தை பார்த்தாலே சாந்தமா, மகாலக்ஷ்மியாட்டம் இருக்க போங்கோ " என்றெல்லாம் பெண் பார்க்கும் வீடுகளில் எப்போதும் நாம் கேட்கும் வார்த்தை இது. ஆனால் இன்று இது ஒரு குறையாக கருதபடுகிறது. பொண்ணு active - அ இல்லமா.. ரொம்ப டல்லடிச்ச மாதிரி இருக்கா.."

கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து போய்விட்டத்தின் எதிரொலியாக நமக்கு கிடைத்திருக்கும் தனி மனித சுதந்திரத்தை அனுபவிக்க கூட முடியாமல் மனநெருக்குதலுக்கு உள்ளாக்கும் பொருளாதார சுமைகள், கூடுதல் பொறுப்புகளால் விழிபிதுங்கும் நிலையில், போட்டி நிறைந்த வியாபார உலகில் நீடித்திருக்க மேற்கொள்ளபடுகின்ற அலுவலக நடைமுறைகள் நம்மை மேலும் சோர்வடைய செய்வதுடன் ஒரு தன்னிரக்க நிலைக்கு தள்ளப்பட்டு, தன்னை தவிர உலகில் எல்லோரும் சுகமாக இருக்க தனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை என மனம் வெம்ப செய்கிறது.

சரி இதெல்லாம் பொதுவான இன்றைய யதார்த்த உலகின் அம்சங்கள் தானே, இதில் ஆண்பால், பெண்பால் எங்கு வந்தது...? உங்கள் கேள்வி நியாயம் தான். நாம் இழந்ததை எல்லாம் பெண்கள் நினைத்தால் தான் திரும்ப பெறமுடியும் என்பதால் தான் இந்த பதிவு பெண்பாளிர்கானது என்று தலைப்பிட்டேன். பெண்களால் மட்டும் தான் என்று கூட நான் குறிப்பிடலாம். ஆனால், அதனாலேயே முளைத்துவிட காத்திருக்கும் கொம்புகளுக்கு நான் வேலை கொடுக்க போவதில்லை. அதே சமயம் ஆண்களுக்கென்று எந்த பொறுப்பும் இல்லையென்று அர்த்தமல்ல. பெண் எடுக்கும் ஒரு முயற்சிக்கு ஆண் துணை நிற்பான் என்ற நம்பிக்கை தான்.

" If you are not going to be a looser, why dont you try something new "

இந்த வாசகத்தை எப்போதாவது கேள்விபட்டிருகிரீர்களா...? இப்போது நான் சொல்லபோவதும் இது தான். 3 ரூபாய் கொடுத்து வாங்கும் தினசரி அன்று மதியமே கிழிபடுவது போலதான். ஒருமுறை இதை படித்துவிட்டு மறந்தாலும் சரி, மண்டையில் ஏற்றினாலும் சரி. நீங்களோ நானோ இழக்கபோவது எதுவுமில்லை. ஏதாவது கிடைத்தா என்பதை உங்கள் பின்னூட்டம் தான் சொல்லவேண்டும்.

மிக படித்தவர்கள் வாழும் கேரளாவில் இன்றைய விவாகரத்து நிலவரம் என்ன தெரியுமா. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட சதவிகிதம் 350%, இதற்கு அடுத்து தான் டெல்லி மற்றும் பெங்களூர். ஒட்டுமொத்த இந்தியாவின் விவாகரத்து சதவிகிதம் அதிகரித்து கொண்டே போவதாகவும் ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அதிகமான படிப்போ, வங்கி கணக்கை நிரப்பும் ஐந்து இழக்க சம்பளமோ தொலைத்து கொண்டிருக்கும் உங்களின் நிம்மதியையும், கனவுகளை கருவாக்கி சுமந்த வாரிசின் பாதுகாப்பற்ற எதிர்கால வாழ்க்கையையும் உங்களின் ஒரு நிமிட சகிப்புதன்மை மீட்டெடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பொறுமையோ, விட்டுகொடுதலோ அவமானமல்ல..அது காதலின் உச்சகட்டம். அதிகார போட்டி, பணப்போட்டி, ஆணவ போட்டி இதெல்லாம் உங்களக்கு தெரியும். சிலருக்கு இயல்பான குணமும்மாக கூட உண்டு. விட்டுகொடுதலில் யாரேனும் போட்டி இட்டதுண்டா...முயற்சி செய்து பாருங்கள். அதன் இனிமை புரியும். காதலின் இன்னொரு பரிணாமும், அதன் நீட்சியாக நீங்கள் மலர்வதை உங்களால் உணர முடியும். காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற ஓஷோவின் தத்துவார்த்தம் இதே தான் சொல்கிறதோ என்னவோ.

ஏன் தாய்வழி பாட்டியும், தாத்தாவும் எப்போதும் சண்டையிட்டு கொண்டையிருப்பர்கள். ஆனால் வயதாக வயதாக அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு விட்டுகொடுத்தல் இருந்தது. "தாத்தா எனக்கு முன்னாடியே போய் விடணும். பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது" என்பார் பாட்டி. தாத்தாவோ எனக்கு முன்னாடியே அவ போய்டணும், நான் போய்ட்ட அவள கஷ்டபடுதிருவாக" என்பார். அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அவர்களின் அன்பும் காதலும், அவர்களுக்குள் இருந்த விட்டுகொடுத்தலும். அவர்கள் சண்டை இட்டது தங்களின் ஈகோவை திருப்தி படுத்த. மற்றபடி அவர்களுக்குள் அந்தரங்கமாக இருந்த விட்டுகொடுதலை அவர்கள் யாருக்கும் சொல்லி கொண்டிருக்கவில்லை.

பணம் பணம் என்று அலைகிறோமேயொழிய அதை ஆளுமை செய்யகூடிய திறன் 99% பேருக்கு கிடையாது என்பது தான் கசப்பான உண்மை. இதைதான் நம்ம சூப்பர் ஸ்டார் முத்து படத்தில்

"கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்க்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்று பாடினார்.

கழுத்து வரைக்கும் காசு இருந்தாலும் அதற்கு எஜமானனாக இருக்க கூடிய பக்குவம் நம்மில் பலருக்கும் கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஆணோ பெண்ணோ கை நிறைய சம்பாரிப்பது சந்தோசம் தான். ஆனால் அதற்கு விலையாக நீங்கள் கொடுப்பது உங்களின், உங்களை சார்ந்தோரின் அமைதியான வாழ்க்கையை. எப்படி வேண்டுமானாலும் வாழ்வது மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு சரி. நம் கலாசாரத்திற்கு அது ஏற்றதல்ல. இன்னும் சொல்லபோனால் அவர்களே கூட நம் கலாசாரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பது அதில் எங்கோ தவறிருக்கிறது என்பதை தான் நமக்கு காட்டுகிறது. காசை தண்ணீராய் செலவழிப்பதும், பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற ஹீரோயிச மனோபாவத்தால் இன்றைய இளைஞர்கள் பிரச்னைகுள்ளாகிரார்கள். இன்னொரு பக்கம் காசை சிக்கனமாக சேர்த்து வைப்பவர்களும், சேமித்து சொத்து சேர்ப்பவர்களும் தலையில் கொம்பு முளைத்தது போல் திரிகிறார்கள். தவறுகளை திரும்பி பார்கவோ, திருத்தி கொள்ளவோ நேரமில்லாத வேகமான உலகில் இழப்புகள் தவிர்க்க முடியாததாகிறது.



உங்கள் கல்வி தகுதியோ, வசிக்கும் தலைமை பதவியோ வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பட்டை தீட்டப்பட்டு, வெளியே சோதித்தறிய பட வேண்டுமேயொழிய, கத்தியை வீசுவதற்கு உங்கள் தகப்பனோ, மனைவியோ, கணவனோ இலக்கு அல்ல. உங்கள் சாதனையை சொல்லி சிரிக்க வேண்டிய வீட்டில் அதை அதிகாரத்தோடு நிலை நிறுத்த விரும்புவது பிரச்சனையை விலை கொடுத்து வாங்குவது போல் தான். உங்களின் தகுதிக்காக கொடுக்கப்பட்ட அதிகாரம் உங்களை சுவீகாரம் செய்து கொண்டு உங்களின் சுயதன்மையை மழுங்கடித்து விடுகிறது. நீங்கள் விரும்பி அணிந்து கொண்ட முகமூடியே உங்களின் உண்மை தன்மையாக மாறிவிடும் அதிசயம் இது. ஆனால் இது உங்களின் இயல்பான வாழ்விற்கும் அமைதியான தோற்றத்திற்கும் நீங்கள் கொடுக்கும் விலை.

நகரில் பேர் சொன்னால் தெரியும் அளவிற்கு பிரபலம். Used Car Dealer. வேகமாக வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். சமீபத்தில் அவரை சந்திக்க நேர்ந்த பொழுது அவர் சொன்ன ஒரு வார்த்தை. " சொந்த பந்தங்களை காணும் போது அவமானம் பிடுங்கி தின்கிறது சார்...அப்ப கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்" என்றார். என்ன சார்.. என்ன விஷயம்.. என்றேன்.

அவர் சொன்னது. கல்யாணமான முதல் வருடம் நல்ல இருந்தது. அதன் பின் தான் பிரச்சனைகள் ஆரம்பம். வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் சுணக்கம், வீட்டிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. பணபிரச்சனை தலை விரித்தாடியது. வேறு எங்கும் முடியாமல் மனைவி வழியில் ஏதாவது புரட்ட முடியுமா என்று முயற்சிக்க பிரச்னை இன்னும் பெரிதானது. தன் மகளை வரதட்சணை கொடுமை செய்வதாக அவர்கள் வீட்டில் குற்றம் சாட்டினார்கள். இதை விட பெரிய கொடுமை எல்லா விஷயமும் தெரிந்த மனைவியே நான் கொடுமை செய்வதாக பச்சை பொய் சொன்னது தான். அதன்பின் தினமும் சண்டை தான். தினம் தினம் பஞ்சாயத்து. ஒருவருக்கொருவர் சேற்றை வாரி முகத்தில் அடித்து கொண்டோம். அந்தரங்கத்தில் நாங்கள் பரிமாறிகொண்ட எங்களின் இளவயது சிறு சிறு தவறுகள் நான்கு பேர் முன்னிலையில் பூதாகரபடுத்தபட்டு அசிங்கபடுத்தி கொண்டோம்.

பத்து வருடங்களாகி விட்டது. எல்லாம் தாண்டி வந்தாயிற்று. பணம், புகழ், வீடு என எல்லாம் சம்பாதித்து விட்டோம். ஆனால் ஒரு நல்லது, கெட்டதில் கலந்து கொள்ளும் பொது அன்று பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் தவறாமல் கேட்பது " இப்பெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லேய...அனுசரிச்சு போப்பா.." இதை கேட்டாலே அவமானம் பிடுங்கி தின்கிறது சார். தலை குனிந்து விலகுவதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை என்றார்.

நான் சொல்ல வருவதும் இது தான். குறைகள் இல்லாத மனிதர் இங்கு யாரும் இல்லை. பொறுமைதான் நமது உண்மையான செல்வம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆணாதிக்கம், பெண் சமத்துவம், பெண் சமஉரிமை என்பதெல்லாம் "பொழப்பு கேட்ட வேலை" தான் என்னை பொறுத்தவரை. உங்களிடம் காசும், அதிகாரமும் இருந்து விட்டால் நீங்கள் எது செய்தாலும் மூடி மறைக்கலாம். எல்லா அமைப்புகளும் உங்கள் பின்னால் நின்று பாதுகாப்பு கூட கொடுக்கும்.

வயிற்று பிழைப்புக்காக தன்னை நொந்துகொண்டு வரப்பு ஓரம் ஒதுங்கும் பெண்களை பிடித்து விபசாரத்தில் தள்ளும் சமூகம், காசு வாங்கி கொண்டு, தான் செய்யும் காரியத்தால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் என்று தெரிந்த, நன்கு படித்த சினிமா நடிகைகளை ஒன்றும் செய்வதில்லை. அவர்களுக்கு குடை பிடிப்பதும், கால் பிடிப்பதும் சமுக அந்தஸ்தாக கருதிகொள்கிறது. என்ன செய்கின்றன இந்த மாதர் சங்கங்கங்கள். புருஷன் மனைவி குடும்ப சண்டையில் மூக்கை நுழைத்து, மனைவியின் மனதை கெடுத்து விவாகரத்து வரை கொண்டு செல்வது தான் இவர்களின் வேலை போலிருக்கிறது. சினிமா, டிவி, வெகுஜன பத்திரிக்கை போன்ற எல்லா ஊடகங்களிலும் பெண் தன் உடலை, விற்பனை பொருளாக, சந்தை படுத்துவதை யாரும் தட்டிகேட்பதில்லை. தட்டி கேட்கவேண்டியவர்களே வியாபாரிகளாக, விற்பனை பொருளாக உள்ள போது ஆரோகியமான சமூகத்தை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு. குறைந்தபட்சம் நம்மை நாம் காபந்து செய்து கொள்வதை தவிர நம் எதுவும் செய்துவிட முடியாது.

திருமணதிற்கு பின்னும் ஏற்படும் தனிமை மிக மிக கொடியது. அவளை பிரிந்து என்னால் வாழமுடியும் என்று நினைத்தேன். ஆனால் நான் அவளின் ஆளுமைக்கு எவ்வளுதூரம் உட்பட்டிருக்கிறேன் என்பது இப்போது புரிகிறது. சமைப்பதோ, வீட்டு வேலையோ எனக்கொரு பிரச்சனையல்ல. ஆனால் அவளிலாத தனிமையை தாங்க முடியவில்லை. அவள் பேசாமல் இருந்த போது கூட நான் இந்தளவு தனிமையை உணரவில்லை. முறைப்படி விவாகரத்திற்கு அப்பளை செய்து விட்டு தனி தனியாக வாழும் என் நண்பரின் வரிகள் தான் இது. எத்தனை சத்தியம் இந்த வரிகள் என்பது குடும்பஸ்தர்களுக்கு நான்றாகவே புரியும். கட்டில் சுகம் மட்டுமல்ல தாம்பத்யம்.

நாட்டில் நிலவும் அணைத்து பிரச்சனைக்கும் நம்மால் தீர்வு காண முடியாது தான். குறைந்தபட்சம் நமது வீடு சந்தோசமாக இருந்தால், ஒரு ஆரோகியமான தலைமுறை நம்மால் உருவாக்கபட்டால் உங்கள் வாழ்வை நிறைவாக வாழ்ந்தவர்கள் ஆவீர். பெண்ணே வீட்டின் சந்தோசம். அமைதி. செழிப்பு எல்லாம். ஆணின் உண்மையான சந்தோசம் ஒரு பெண்ணின் அரவணைப்பில் தான். ஒரு பெண் தன் கணவனுக்காக, குடும்பத்திற்காக தன்னை அர்பணிப்பது எவ்வகையிலும் அடிமைத்தனம் அல்ல.

Monday, August 27, 2012

ஆணியே புடுங்க வேண்டாம்..!! தமிழனை வாழ விடுங்கள்..!!

சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதால் தமிழனுக்கு புதிதாக என்ன இழப்பு வந்துவிட போகிறது. அவர்கள் பயிற்சி கொடுத்துவிட்டு போகட்டுமே. ஏன் தேவை இல்லாத ஒரு பிரச்சினையை எழுப்பி அங்கிருக்கும் தமிழர்களுக்கு தொல்லை தருகிறார்கள். ஏற்கனவே சிங்களன் செம கடுப்பில இருக்கான். ஒட்டுமொத்த இனத்தையும் அழிக்க முடியவில்லையே என்று அவன் கவலை. எப்பவெல்லாம் இவர்கள் எதிர்கிரார்களோ அப்பவெல்லாம் அடிபடுவது இலங்கை தமிழன் மட்டுமல்ல இங்கிருக்கும் மீனவனும் தான். இவர்கள் அறிக்கை, போராட்டம் எதுவும் அவனை கட்டுபடுத்தவும் இல்லை, பயபடவைக்கவும் இல்லை. மாறாக நம் அழுகையில் சந்தோசப்படும் ஒரு சாடிஸ்ட் ஆகத்தான் அவன் செயல்களாகத்தான் இருக்கின்றன. நாம் சத்திரியர்களாக அல்ல சானக்கியர்களாக இருக்க வேண்டிய நேரம் இது. முதலில் அவர்களுக்கு பசிக்கு உணவும், இருக்க இடமும், மனதோடு வாழ வழி செய்து கொடுப்போம். அவர்கள் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தேவை. அவர்களின் இருப்பு மட்டுமே நமக்கு இப்போது முக்கியம். இன்றைய நிலைமையில் இவனை எதிர்ப்பதை விட அவன் போக்கில் விட்டு விடுவது தான் தமிழனுக்கு நல்லது. காலம் இப்படியே போகபோவதில்லை. இந்தியாவின் ஆளும் உரிமை எப்போதும் கையலாகதவர்களிடமே இருந்துவிட போவதில்லை. பொறுப்போம்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...