Friday, May 13, 2011

அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகள்..!!

தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்டும் உங்களோடு ஐக்கியமாக வந்துவிட்டேன் ( சும்மா..ஒரு விளம்பரம்....)
மார்ச் 4 - ல் நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். மே-15 - ல் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்கிறார் என்பது தான் அது. இதோ அதன் லிங்க்

அ தி மு க வெற்றி பெற்றது முதல் ஒரே போன்கால்களாக வந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு பெரிய முனிவர் ரேஞ்சிற்கு மாலை மரியாதைகள், தாரை தப்பட்டை முழங்க வாழ்த்து மழையில் திக்குமுக்காடி போய்விட்டேன். நன்றி அ தி மு க தொண்டர்கள். (இன்னைக்கு ஒன்னும் ஏப்ரல்-1 இல்லையே என்று நாட்காட்டியை பார்க்காதீர்கள்)

பா ம காவிற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் சம்மட்டி அடி கொடுத்த அனைத்து வாக்களா உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சாதியை சொல்லி வயிறு வளர்ப்பவர்களை ஒருக்காலும் மன்னிக்கவே முடியாது.

அம்மா உங்களுக்கு பதிவுலகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வெற்றி பெற்றதும் உங்கள் வாயிலிருந்து வந்த வார்த்தை. வீழ்ந்துபட்டு கிடக்கும் தமிழகத்தின், தமிழர்களின் பொருளாதார நிலையை மீடேடுப்பது தான் முதல்பணி என்றீர்கள். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றீர்கள். இதை எப்போதும் மறவாதிர்கள். உங்களை நம்புகிறோம்.

இத்தனை காலாமாக பதிவர்களின் கருத்து பொருளாய், காட்சிபொருளாய் இருந்த அனைத்து தி மு க கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவிப்போம். உங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் கொஞ்ச நாளைக்கு விட்டுவிடுகிறோம். அடிச்ச பணத்தை மறைக்கணும், போலி கணக்குகள், ஆவணங்கள் தயார் செய்யணும், நல்ல வக்கீலை பார்த்து முன்ஜாமீன், பின்ஜாமீன் ஏற்பாடு செய்யணும்.. பாவம் சார் போங்க... போங்க...

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...