Saturday, March 12, 2011

உலக கோப்பை இம்முறையும் கோவிந்தா தானா..?

268 / 2 என்ற நிலையில் ரொம்பவும் தெம்பாக விளையாடி கொண்டிருந்த நிலையில் பெரும் புயலென சாய்த்தார் ஸ்டெயின் இந்திய வீரர்களை. மீண்டும் ஒருமுறை 400 தொடும் என்ற நிலையில் 300 கூட தொடமுடியாது போனது வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை காட்டுகிறது.

இன்னும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சினை நம்பி தான் இந்திய இருக்கிறது. சச்சின் போனதும் வரிசையாக எல்லோரும் நடையை கட்டியது நாம் இன்னும் வளரவே இல்லையோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அடியது போல் தெரிகிறது. அதுவும் விராத் கோலி மற்றும் யூசுப் பதான் அவுட்டனா விதம் மகா கேவலம்.

இன்னும் 3 ஓவர்களே மீதமுள்ள நிலையில் பந்தை தடவி கொடுத்துகொண்டிருந்த தோணி நிச்சயம் இம்முறை பாராட்டு குரியவரல்ல.

கடைசி நான்கு ஓவரில் 100 ரன்கள் எடுத்து விஸ்வரூபம் எடுத்த நீயூசிலாந்து எங்கே...?
கடைசி ஒன்பது விக்கெட்டுகளை வெறும் 26 ரன்களுக்கு இழந்த இந்திய எங்கே..

கவச்கரும், கங்குலியும் இந்திய அணியை யானை குதிரைன்னு புகழ்த்து தள்ளினாங்க. வடிவேல் சொன்ன மாதிரி நம்ம பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மட்டம் வீக்...ஓவரா பில்ட் அப் கொடுக்கறதா விட்டுட்டு நிஜத்திற்கு வாங்க சாமி.

பார்ப்போம் ஜாகிர் கானும், பஜ்ஜியும் என்னசெய்ய போகிறார்கள் என்று

8 comments:

  1. வெறுத்துப்போச்சு

    ReplyDelete
  2. பாப்போம் என்ன நடக்குதுன்னு..இன்னும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சினை நம்பி தான் இந்திய இருக்கிறது. சச்சின் போனதும் வரிசையாக எல்லோரும் நடையை கட்டியது நாம் இன்னும் வளரவே இல்லையோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அடியது போல் தெரிகிறது. . உண்மைதான்,,, சச்சின் சதம் அசத்தல்...

    ReplyDelete
  3. நன்றி ஆர் கே
    நன்றி ரேவா
    நன்றி சர்புதீன்
    நன்றி dr

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரம், இந்தி அணியிற்கு இளரத்தங்கள் பாய்ச்சப்பட வேண்டும். பந்து வீசுபவர்களில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். சுயாதீன தேர்வு அடிப்படையில் பல புதிய வீரர்களை உள்ளிழுக்க வேண்டும். இவையெல்லாம் நிகழ்ந்தால் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் அதிர்ச்சியூட்டும் அணியாக இருக்கும்.

    இம் முறைக் கிறிக்கற் கடந்த கால உலகக் கிண்ணங்களைப் போலல்லாது விறு விறுப்பு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
    I hate this year match's.

    ReplyDelete
  5. முயற்சி...முயற்சி...முயற்சி...முயற்சி... முடிவில் வெற்றி.

    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

    ReplyDelete
  6. நன்றி நிரூபன்
    நன்றி தமிழ் வாசி

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...