என்னைய்யா இது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடறேன்னு பார்கறீங்களா...மேல படிங்க விஷயமிருக்கு. எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்திடுவோம்.
காரணம் ஓன்று - இவர்கள் இரண்டுபேருமே இன்றைய நிலையில் இருக்கும் இடத்திற்கு பாரமாகதான் தான் இருக்கிறார்கள். ஆனால் வெளியேறவும் விருப்பம் இல்லை.
காரணம் இரண்டு - ஒருவர் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர், ஒருவர் மகா மௌனம். தன் துறை சம்பத்தப்பட்ட தானாலும் சரி அடுத்தவர் துறைஎன்றாலும் சரி முடிவெடுக்க கூடியதில் ஆமை வேகம்.
காரணம் மூன்று - ஒருவர் தோனியின் தயவில் வாழ்பவர் மற்றொருவர் சோனியின் தயவில் சாரி சோனியாவின் தயவில்.
காரணம் நான்கு - ஆடிக்கொரு முறை விஸ்வரூபம் எடுப்பார் விளையாட்டுக்காரர். நீதிமன்றம் சவுக்கெடுத்தால் தான் உண்மையை போட்டுடைப்பார் அரசியல்காரர்
காரணம் ஐந்து - ஒருவர் சுழலுக்கு தலைமை வகிப்பவர் மற்றவர் ஊழலுக்கு தலைமை.
காரணம் ஆறு - சக வீரரை கன்னத்தில் அறைந்தவர். எல்லோருக்கும் கன்னத்தை மட்டுமல்ல முதுகையும் காட்டுபவர்.
காரணம் ஏழு - விமர்சனம் எழும்போதெல்லாம் வெகுண்டு எழுவார், அப்போது மட்டும் இவரின் பேட்டும் பேசும், கை விரல்களும் பேசும் பஜ்ஜிக்கு. என்னை விட்டாபோதும் நான் விளையாட்டுக்கு இல்லை என்பவர் இரண்டாமவர்.
காரணம் எட்டு - உலக கோப்பை பெற்று தருவோம் என்பது இவரின் கனவு. கருப்பு பணத்தை கொண்டுவருவோம் என்பது அவரின் கனவு.
ஒண்ணுமே இல்லைதா விஷயத்தை யோசிச்ச கூட லட்டு லட்டாய் எட்டு விஷயம் கிடைத்து விட்டது. நீங்களும் யோசிங்க ஏதாவது கிடைக்கும்
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உத...
-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
நல்லாத்தான் யோசிச்சிருக்கிங்க,வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகா ஒரு பதிவை தேத்திட்டீங்க. கம்பேரிசன் நல்லாதான் இருக்கு.
ReplyDeleteஹ ஹா ஹா
ReplyDeleteநன்றி ருத்திரா
ReplyDeleteநன்றி கே ஆர் விஜயன்
டக்கல்டின்னா நன்றிங்கோ...
நன்று மிகவும் நன்று வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://kobikashok.blogspot.com/
நன்றி அசோக் மீண்டும் வருக
ReplyDelete