Tuesday, March 29, 2011

தொண்டனும் அண்ணனும் - இத படிங்க முதல்ல

கடந்த ஞாயிறு அன்று எங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு பிரசாரத்திற்காக வந்திருந்தார். கூடவே ஒரு கும்பல் அல்லகைகள் என்ற பெயரில். எல்லோரும் கட்சியின் தொண்டர்கள், அதில் இருந்த சில தெரிந்த முகங்களிடம் ( டாஸ்மாக்கில் சந்தித்தவர்கள் ) விசாரித்தேன். தொண்டர்கள் என்பவர் யாவர் என்ற என் நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது.

எவ்வளவு தான் அரசியல் பன்னாடைகளை பற்றியே எழுதுவது, ஒரு மாறுதலுக்காக அவர்களின் அல்லக்கைகளை பற்றி எழுதலாமே. இதோ உங்களுக்காக அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்.

கவுன்சிலரில் இருந்து அமைச்சர் வரை ஆளாளுக்கு வசதிக்கேற்ப அல்லக்கைகள் உண்டு. பொதுவாக கட்சிகாரர்கள், தொண்டர்கள் என்று அழைக்கபட்டாலும் இவர்களில் பெரும்பாலும் அண்ணனின் சாதிகாரர்களாகவோ, அந்த தொகுதியை சேர்ந்தவர்களாகவோ, அண்ணனால் ஆதாயம் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. அப்பபோ செலவுக்கு பணம், கறி விருந்து, மது, (சில சமயம் மாதுவும் உண்டாம்)

சாதரணமாக ஒரு 20 பேர் எப்போதும் அண்ணனின் கூடவே இருக்கிறார்கள். தேர்தல் நேரம், கட்சி மீட்டிங், மாநாடு என்னும் போது இவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. போஸ்டர் அடிப்பதில் இருந்து, எதிர்கட்சி காரனின் மண்டையை பிளப்பது வரை இவர்களுக்கு கொடுக்கும் அசைன்மேண்டுகேற்ப பண பட்டுவாடா உண்டு. பண பட்டுவாடவை கவனித்து கொள்வது அண்ணனின் PA சில சமயம் விதிவிலக்காக அணிகளும் இதில் தலையிடுவதுண்டாம். பொதுவாக PA மட்டும் கொஞ்சம் படித்தவராக இருக்க கூடும்.

படிக்காமல் ஊர் சுற்றிய நாதாரிகள், பள்ளி பருவத்திலேய கஞ்சாவிற்கு அடிமையானவர்கள், மதுவுக்கு அடிமையாகி வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், வீட்டாரால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள், பிஞ்சிலேய பழுத்து விபசாரிகளுடன் தொடர்பு வைத்திருபவர்கள், விபசார புரோக்கர்கள் இவர்கள் எல்லாம் தான் அண்ணனுக்கு இடது கை வலது கை போன்றவர்கள். இவர்களின் கடின உழைப்பு தான் கட்சியை வளர்த்து கொண்டிருக்கிறது. தப்பி தவறி கூட படித்த நாகரீகம் தெரிந்தவர்களை இவர்கள் கூட சேர்ப்பது இல்லை. காரணம் பிரச்னை என்று வரும் போது காட்டி கொடுத்துவிடுவார்களாம்.

அண்ணனின் தொடர்பில் இருப்பவர்களில் இருவர் மிக முக்கியமானவர். ஒருவர் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டர், இன்னொருவர் குடும்ப அல்லது கட்சி வக்கீல். பொதுவாக ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் குடும்ப வக்கீல் உண்டு. இவர்களுக்கு தெரியாமல் எந்த காரியமும் நடப்பதில்லையாம். அடிதடி வழக்கில் இருந்து ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை இவர்கள் மூலம் தங்களை அப்டேட் செய்து கொளிகிறார்கலாம்.

தொண்டர்களில் 100 க்கு 95 பேருக்கு சரக்கு உள்ளே இறங்காமல் பேசதெரியாது. இது தான் அண்ணன்களின் பலம். பெசதேரிந்த ஒரு சிலர் மேல் எப்போதும் ஒரு கண்ணிருக்குமாம். அவர்களை வெளியே அனுப்பவும் முடியாது. ஏனெனில் தொகுதி நிலவரம் இவர்கள் மூலமாகவே அண்ணனின் காதுக்கு எட்டுகிறது. கூடவே இருக்கும் தொண்டர்கள் கூட்டத்தை தாண்டி கொஞ்சம் விலகி இருக்கும் ரவுடிகளும் இவர்களுக்கு முக்கியமானவர்கள். மண்டை உடைக்கறது, கூட்டத்தை கலைகறது எல்லாம் தொண்டர்கள் வேலை. காரியம் கொஞ்சம் பெரிசு என்றால் தான் இவர்களுக்கு அழைப்பு வரும். பேமேண்டும் பெரிசு தான். இன்னும் சொல்ல போனால் தொண்டர்கள் நிலையில் இருந்து புரோமோட் செய்ய பட்டவர்களே "தாதா" க்கள். வளர்த்த பாசம் இவர்களுக்கும் வளர்த்துவிட்ட பாசம் அண்ணனுக்கும் எப்போதும் உண்டு.

இது எல்லாமே அவர்களிடம் இருந்து பேசி கறந்தது தான். இடைசொருகல் எதுவும் இல்லை. அவர்களின் வார்த்தை பிரயோகம் மட்டுமே வேறு. அதை பதிவில் ஏற்ற முடியாததால் கொஞ்சம் முலாம் பூசியிருக்கிறேன். இந்த கூட்டுகளவாணி, மொள்ளைமாரிகளிடம் இருந்து எதையும் பெரிசாக எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம் தான். இப்போ சொல்லுங்க நாம ஒட்டு போட்டுதான் ஆகணுமா..?

Monday, March 28, 2011

கடமை கண்ணியம் தவறினால் தப்பில்லை - கலைஞர்

இன்று ஒரு உருக்கமான வேண்டுகோளை விட்டிருந்தார் கலைஞர். படித்துவிட்டு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. போட்டி வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் கழக கண்மணிகளுக்கு தான் வேண்டுகோள். கடமை, கண்ணியம் தவறினால் கட்சிக்குள் சிறு சலசலப்பு தான் ஏற்படும், ஆனால் கட்டுப்பாடு தவறினால் ஒட்டுமொத்த கட்சியே கலகலத்து விடும். எனவே போட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு கட்சி அங்கீகரித்த வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை தரவேண்டுமென்று உருக்கமுடன் வேண்டுகிறேன் என்கிறார்.

அதாவது ஊழல் செய்தாலும், பொது சொத்தை கொள்ளையடித்தாலும், பதவி ஏற்றுக்கொண்டு மக்கள் பனி செய்யாமல் சொந்த வணிகத்தை மேற்கொண்டாலும் சரி, வீட்டில் படித்து தூங்கினாலும் சரி கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை ஆனால் கட்சி கட்டுப்பாடு தான் முக்கியம். என்ன ஒரு கொடுமை அய்யா இது. 60 வருட அரசியல் பாரம்பரியம் உள்ள உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் , தன் பிள்ளையை முட்டாளாக, ஊதாரியாக வளர்த்தெடுப்பதை போலிருக்கிறது உங்களின் வார்த்தைகள்.

"இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கழகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல் இத்தனை ஆண்டு காலமாக தன்னை வளர்த்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கழகத்தின் கழுத்தையே அறுப்பதைப்போல்; பதவிப் பொறுப்பு கிட்டவில்லை என்றதும் கழகக் கட்டுப்பாட்டை துச்சமெனக் கருதி சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் சிலரின் போக்கு கண்டு கண்கலங்குகின்றேன்" என்கிறார், குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றதும் ஓடோடி டெல்லி சென்றதை நீங்கள் மறந்துவிட்டீர்களா...?
காங்கிரஸ் தொகுதி அதிகம் கேட்டதற்காக, ராஜினமா கடிதத்தை தூக்கி கொண்டு ஓடியதை மறந்துவிட்டீர்களா..? உங்களுக்கு விட்டு கொடுக்கவும் தெரியாது, பகுத்து கொடுக்கவும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சியில் உங்களுக்கு ஒரு நியாயம், தொண்டனுக்கு ஒரு நியாயமா பெரியவரே..?வயதால் மட்டுமே நீர் பெரியவர் மற்றபடி...?

என்வீட்டு பிள்ளைகள் சினமா தொழிலில் இருப்பது தவறா என்கிறார். அது தவறில்லை அய்யா உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் தானே இருக்கிறார்கள் அது தான் தவறு. ஒட்டு மொத்த தியேடர்களையும் குத்தகைக்கு எடுத்துகொண்டு அடுத்தவன் எடுத்த படத்தை திரையிட விடாமல் செய்கிறார்களே அது தான் தவறு. உப்பை தின்றவன் தண்ணியை குடித்துதான் ஆகவேண்டும். உங்கள் குடும்பத்தின் ஒட்டு மொத்த அராஜகத்திற்கு பயனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது.

வேட்பாளர்களின் லட்சணம் கட்சி பாகுபாடு பாராமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு என ஊழல்களின் மொத்த உருவமாகத்தான் கட்சி தருகிறார்கள். எவனும் சொல்லிகொள்ளும்படி இல்லை. 10 முதல் 20 கோடி செலவு செய்பவனுக்கு தான் சீட்டே கொடுகிறார்கள். செலவு செய்துவிட்டு கையை நக்கிகொண்டா போவான்.
கிடைப்பதை சுருட்டத்தன் செய்வான். தலைவன் உருப்படியா இருந்தா தானே தொண்டனும் உருப்படியா இருப்பான்.

சாகும் தருவாயில் காமராசரின் கையிருப்பு வெறும் 63 ரூபாய்தானாம். தனது மாத சம்பளத்தில் தனது மனைவி 5 ரூபாய் மிச்சம் பிடித்துவிட்டார் என்பதற்காக ஓடோடி சென்று தனது சம்பளத்தில் உபரியான 5 ரூபாய் குறைக்க சொன்ன லால் பகதூர் சாஸ்திரி, விருந்தினர் வருகைக்காக 1 ரூபாய் அதிகம் செலவனாதற்காக ஆசிரம நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டு கிடைக்காமல் நண்பரிடம் கடன் வாங்கினார் காந்தி.

இதெல்லாம் கூட நடந்தது நம் நாட்டினில் தான் என்று சொன்னால் எதிர் வரும் சந்ததிகள் நம்புவார்களா..? கொள்கைக்காக முரண்பட்ட உத்தம தலைவர்கள் பொதுநலத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால் கொள்கை என்றால் கொள்ளையடிப்பது, பொதுநலம் என்றால் பெரிய வீடு, சின்ன வீடு பாகுபாடு பாராமல் அரசு சொத்தை கொள்ளையடிப்பது என்று மாறிப்போனது காலத்தின் கோலம். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அரசியல் பன்னாடைகள் திருந்த போவதில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இங்கு ஏற்பட்டால் தான் உண்டு. அப்போதும் கூட தலைமை ஏற்க ஒரு நல்லவன் கிடைக்க போவதில்லை.

Tuesday, March 22, 2011

2011 தேர்தல் - சில புதிர்கள்

புதிர் 1
பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்தது போல் தெரிந்தாலும் சொல்லி வைத்தது போல் அடுத்து அடுத்து பரபரப்புக்குரிய செய்தி வந்து விடுகிறது. தி மு க, அ தி மு க, தே மு தி க அடுத்து இப்போது காங்கிரஸ் வட்டாரத்தில் வேட்பாளர் குளறுபடி ஆரம்பித்துவிட்டது. போன வாரம் கட்சிகளின் பிரச்னை இந்த வாரம் கட்சி கோஷ்டிகளின் பிரச்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எதைவேண்டுமானாலும் தீர்க்கமுடியும் காங்கிரஸ் கோஷ்டி பிரச்சனையை தீர்க்க முடியுமா..?

புதிர் 2
நேற்றைய வரை 35000 புகார்களுக்கு மேல் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக பல்வேறு கட்சிகளின் மீது பதிவு தேர்தல் ஆணையத்தால் செய்யபட்டிருகிறது. இதே வேகத்தில் போனால் எப்படியும் ஒரு 3 புகார்களும் ஒரு குறைந்தது 1 லட்சம் வழக்குகளாவது தொடரப்படும். இதனால் என்ன பயன்..? தேர்தல் வழக்கு பதிவு செய்வதால் மட்டும் கட்சிகளின் நடவடிக்கையில் மாற்றம் வரபோகிறதா..? இதன் விசாரணை, அதன் முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகு தானே வெளிவரும். அதனால் வெற்றி பெற்ற கட்சிகள் எதவகையிலும் பாதிக்கப்பட போவதில்லை. வெற்றி பெற்றபின் இந்த புகார்களுக்கும், விசாரணைகளுக்கும் என்ன மரியாதை இருக்கும்..?

புதிர் 3
வை கோ வெளியேற்றப்பட்டதற்கு எவ்வளவோ காரணங்கள் முன் வைக்கபடுகிறது. ராசியில்லாத கட்சி, அவர் கேட்பது போல் 22 தொகுதி கொடுத்தால் தனி பெரும்பான்மை கிடைப்பதில் அ தி மு காவிற்கு ஏற்படும் சிக்கல், விடுதலை புலிகள், ஈழ தமிழர் விவகாரத்தில் அவருக்கும், ஜெயாவிற்கும் இருக்கும் முரண்பாடு, விஜய் மல்லையாவின் வேண்டுகோள், ராஜ பக்செவின் விருப்பம் என பட்டியல் நீள்கிறது. இதில் எது உண்மை..? தினமலர் வை கோவை பற்றி தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் என வர்ணித்திருப்பது யாரை திருப்தி படுத்த...? தி மு க ஆதரவு ஊடகங்கள் வை கோவின் நிலை குறித்து முதலை கண்ணீர் வடிப்பது எதற்காக..? வை கோவின் தேர்தல் புறகணிப்பு ஒருக்காலும் ம தி மு காவிற்கு நன்மை தரபோவதில்லை. மாறாக அவர்களின் முதுகில் குத்திய ஜெயாவிற்கும், கலைஞருக்கும் தான் சாதகமாக மாறபோகிறது.

புதிர் 4
ஒட்டு மொத்த திரையுலகமும் குடும்ப ஆட்சியால் பாதிக்கபட்டிருகிறது என தகவல்கள் வருகிறது. தேர்தல் கூட்டணி உறுதியாகி பிரசாரத்திற்கும் வண்டி கிளம்பி விட்டது ஆனால் எதிர்பார்த்த பரபரப்பு கோடம்பாக்கத்தில் காணோமே..? என்ன சமாசாரம்..? மீண்டும் இவங்க ஆட்சியை பிடித்துவிட்டால் என்ன பண்ணி தொலைவது என்ற பயமா..? விஜய் இன்னும் பகிரங்கமாக வெளிவர தயங்குவது ஏன்..?

புதிர் 5
இலவசங்கள் குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், இலவசங்களை காட்டி எப்படியும் ஆட்சியை பிடித்துவிட முடியும் என நினைக்கும் கலைஞரின் தைரியம், தமிழனின் அறியாமை தானே. பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதாவில் இறங்காமல் நரேந்திர மோடியை போல் தைரியமாக இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா...? இலவசங்கள் ஒரு மோசடி திட்டம் என்பதையாவது மக்களிடம் கொண்டு சேர்க்குமா..?

புதிர்கள் இன்னும் இருக்கு..உங்களின் பங்கிற்கு நீங்களும் சொல்லுங்கள்

Monday, March 21, 2011

சோரம் போன வடிவேலு

இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.

அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை.

பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.

திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.

பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை.

Friday, March 18, 2011

17 வயது பெண்..! 13 இரவுகள்..! வில்லங்க பிரதமர்...!

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக சூடு கிளப்பும் காட்சிகள், கொதித்து போன வேட்பாளர்கள், வீறுகொண்டு எழுந்த தொண்டர்கள், செய்வதறியாது திகைத்து சுதாரித்த தலைவர்கள் என ஒரே போராட்ட களம். கொஞ்சம் ஆறுதாலாக இருக்கட்டுமே என்று தான் இந்த பதிவு. இதுவும் அரசியல் பதிவு தான் ஆனால் கொஞ்சம் வில்லங்கமான பதிவு. ஒரு ஆறுதல் இது நம்மவர்களை பற்றியது அல்ல.

இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோணி, பெரிசுக்கு வயது 72 ஆனால் ஆடிய ஆட்டமோ சிறிசுகளும் தாக்குபிடிக்க முடியாது. இந்த வயதிலும் சின்ன பெண்கள் பக்கத்தில் இல்லயென்றால் பெரிசுக்கு தூக்கம் வரதாம். கோடிகளில் புரளும் கிழட்டு சிங்கம் அந்தரங்க அழகிகளுக்கு பரிசு கொடுத்து அசத்துவதில் கில்லாடி. பிடித்த பெண்கள் படிந்து விட்டால் எதைக்கேட்டாலும் கொடுப்பாராம். பரிசுகளும் கோடியில் தான்.

ஆட்டம் போட்ட பெரிசு இப்போது ஒரு சிறிசு விஷயத்தில் மாட்டிகொண்டு முழி பிதுங்கிறது. இத்தாலி நாட்டு சட்டப்படி 18 வயதிற்கு குறைந்த பெண்ணுடன் உறவு வைத்துகொண்டால் கடுமையான தண்டனை உண்டு. ஒரு திருட்டு வழக்கில் மாட்டிய 17 வயது பெண்ணை போலீசார் விசாரிக்க போக மேலிடத்திலிருந்து விடுவிக்க சொல்லி உத்தரவு வந்திருகிறது. அவர்கள் தமிழ் நாடு போலிசை போல் இல்லை. நொண்டி நோங்கெடுத்ததில் பாப்பா, தாத்தாவின் லீலைகளை பட்டியல் போட்டிருக்கிறது.



17 வயது விபசார பெண்ணுடன் 13 முறை உறவு கொண்டது அம்பலமாகிவிட்டது. வழக்கம் போல் பிரதமர் சார்பில் மறுப்பு தெரிவிக்கபட்டிருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு பிரதமர் ஆஜராகிறார். ஏற்கனவே பல "கேஸ்களை" இது போல் சந்திதிருபதால் பெரிசுக்கு இது மேட்டரை இல்லை. இப்ப விஷயம் என்னன்னா...? மண் பொன் பெண் - இந்த மூன்றும் தான் மனிதனை சோரம் போகவைக்கும் சமாச்சாரங்கள். இதுவரை மண்ணையும், பொன்னையும் நம்மாளுக இஷ்டத்துக்கு சுருட்டி விட்டார்கள். அப்படின்னா..இந்தமுறை பெண்களின் வலையில் அரசியல் தலைகள் உருளபோகிறதா...!!?!! தமிழக அரசியலில் அப்படி மாட்ட போவது யாராக இருக்கும்...நீங்களே சொல்லுங்க..

Wednesday, March 16, 2011

ரஜினி ஆதரவுடன் மூன்றாம் அணி தமிழக அரசியலில் அதிரடி

மூன்றாம் அணிக்கு தமிழகத்தில் ஒரு போதும் வாய்ப்பில்லை என்ற நிலைதான் இருந்தது. பா ஜா க எவ்வளோவோ முயற்சி எடுத்தும் இதுவரை முடிந்ததில்லை. அடுத்து கேப்டனும் தன் பங்கிற்கு வலை விரித்து பார்த்தார். சிறிய கட்சிகள் கூட மடியவில்லை. ஆனால் இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூன்றாம் அணிக்கு வாய்பிருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் தொடக்கி இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. கூட்டணி அலைகழிப்புகள், தொகுதி பங்கீடு இழுபறி என தினம் தினம் அரசியல்வாதிகளின் இரத்த அழுத்தம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

அடிமேல் அடியாக தி மு காவிற்கு சி பி ஐ நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சாதிக் பாட்சாவின் மரணமும் பெருத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கோடு தற்கொலை வழக்கும் சி பி ஐ கையிலெடுக்கும் பட்சத்தில் பரபரப்பான, கசப்பான உண்மைகள் வெளிவரக்கூடும். இங்கு விழும் ஒவ்வொரு அடியும் தனக்கு பெரும் ஆதாயத்தை தரக்கூடும் என்ற தலைகனத்தில் தான் அ தி மு க தலை விரித்து ஆடுகிறது.

போதாகுறைக்கு தேர்தல் கமிஷனின் கிடுக்கி பிடி வேறு அரசியல்வாதிகளின் வயிறில் புளியை கரைக்கிறது. போராடி வாதாடி தொகுதியை பெற்றாலும் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் பெரியகட்சிகளின் வேட்பாளர்களுக்கு தூக்கம் தொலைத்த இரவுகளாகி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அணிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் அ தி மு காவினர்.

அ தி மு காவா என்று குழம்ப வேண்டாம். அ தி மு காவின் முதுகில் குத்தும் அரசியல் சூழ்ச்சியால் தான் மூன்றாம் அணி குறித்து சில கட்சிகள் யோசித்து வருகின்றன. எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று கடையை விரித்து காத்திருக்கும் பா ஜா கவிற்கு இது சரியான சந்தர்ப்பம்.

நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் பொதுவாக எதை பேசினாலும் புரியாது, ஆனால் அ தி மு காவின் நம்பிக்கை துரோகத்தை மட்டும் சேனல் சேனலாக பொளந்து கட்டுகிறார். இன்றைய தினசரியிலும் இவரின் அனுதாப குரல் ஓங்கி ஒலித்தது. அதுமட்டுமல்ல தன்மானத்துடன் வெளியே வாருங்கள் நாம் சேர்ந்து அ தி மு காவிற்கு பாடம் புகட்டுவோம் என்று வை கோவிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவகையில் காமெடியாக இருந்தாலும்
வை கோவிற்கு வேறு என்ன வழி.

1 . மானம் விட்டு கொடுப்பதை வாங்கிகொள்வதா, அப்படிஎன்றால் வெறும் 8 தொகுதி வைத்துகொண்டு 20 பேருக்கு எப்படி பங்கு வைப்பது..?
2 . முழுதாக ஐந்து வருடங்கள் கூட இருந்தும், அதிகாரத்தில் இல்லாத அம்மையார் இப்போதே இந்த பாடு படுத்தினால் அதிகாரத்திற்கு வந்த பின் நிலைமை என்ன ஆகும்..?
3 . 8 - ல் ஒரு இரண்டோ மூன்றோ வெற்றிபெற்றாலும் அதை வைத்து என்ன பெரிதாக சாதித்து விட முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு தான் என்ன மரியாதை கிடைத்துவிடும்..?
4 . மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவில்லைஎன்றால் ஒட்டு மொத்த எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடுமே..?
5 . பா ஜா காவுடன் கூட்டணி என்றால் உடனடி நன்மை என்ன..? அதிக தொகுதிகள் கிடைக்கும், இரண்டில் வெற்றி பெறுவது கடினமல்ல...அத்துடன் அங்கீகாரத்திற்கு தேவையான 6 % வாக்குகளையும் பெறமுடியும்.

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு விஷயத்தில் ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவால் விரக்தியில் தள்ளபட்டிருக்கிறது. அவர்களும் தே மு தி க தலைமையில் ஓன்று திரள காத்திருக்கிறார்கள்.

கொடுத்ததே இரண்டு தொகுதி தான் என்றாலும் மனநிறைவு கொண்ட புதிய தமிழகம் வெற்றிக்கான வாய்ப்பற்ற தொகுதியை ஒதுக்கியதில் ரொம்பவே அப்செட்.

மூன்றாம் அணி அமைந்தால் கடைசி நேர அதிர்ச்சியாக கேப்டனும் வந்தாலும் வரலாம். தே தி மு க வந்தவுடன் அம்மாவின் கணக்குகள் எப்படி மாறிவிட்டன என்பது விஜயகாந்த் அறியாததல்ல. ஒருவேளை வை கோ வெளியேறி 160 தொகுதிகளில் அ தி மு க போட்டியிட்டால் வெற்றி பெற தேவையான 118 எளிதாக பெறமுடியும். கொஞ்சம் குறைந்தாலும் குட்டி கட்சிகளை பெட்டிகளையோ, பதவிகளையோ காட்டி கட்டிவைத்திருக்க முடியும். அப்போது விஜயகாந்தின் நிலைமை. ஏற்கனவே ஆட்சில் பங்கில்லை என்று சொல்லிவிட்டார். வெறும் 20 அல்லது 30 M L A வைத்து விட்டுமட்டும் என்ன செய்யமுடியும். பதவியில் இல்லாத அரசியல்வாதி பல் பிடுங்கப்பட்ட பாம்பை போல் தண்டம் தான். தொகுதிக்கு குறைந்தது 5 அல்லது 10 கோடி செலவு செய்துவிட்டு புறங்கையை நக்கி கொண்டு போகவேண்டியது தான்.

இன்னும் ஓரிரு நாளில் மூன்றாம் அணி குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகலாம். எந்த எந்த தொகுதி என்று தே மு தி காவிற்கு ஒதுக்கும் போது பூசல்கள் பெரிதாகி பிரிவுகள் வரலாம். தே மு தி க தலைமையில் நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, பா ஜ க இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று நம்புவோம். ஏற்கனவே எந்த கட்சிக்கும் வாய்ஸ் இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஆனால் மூன்றாம் அணியின் தார்மீக நியாயம், வை கோ, விஜயகாந்த் மற்றும் இல.கணேஷன் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்ற முறையில் இ(ற)ரங்கி வருவதற்கும் வாய்ப்பிருகிறது.

ஒருவேளை பா ஜ க தவிர்த்து தே மு தி க தலைமையில் புதிய தமிழகம், நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, மார்க்சிஸ்ட் ,கம்யூனிஸ்ட், சரத்தின் ச ம காவும் இணைந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த கூட்டணியின் ஒரே பிரச்னை வாக்காளர்களுக்கு இவர்களால் வாக்குறுதியை கொடுக்க முடியுமே தவிர, பொன்னோ, பொருளோ, பணமோ தேறாது. சொல்வதற்கில்லை அதற்கும் ஏதாவது வழி வைத்திருப்பார்கள்.



இம்முறையும் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தே மு தி க. விஜயகாந்தின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருகிறார்கள் அ தி மு காவின் தோழைமை கட்சிகள். துக்ளக்கின் 40 வது ஆண்டு விழாவில் அம்மாவிற்கு இருக்கும் அரசியல் ஆளுமை வேறு யாருக்கும் இல்லைஎன்றார் ஆசிரியர் சோ. ஆளுமை என்றால் இதுதானா..? தன்னை நம்பி வீட்டிற்கு வந்தவனுக்கு வயிறார பசியாற்றுபன் தமிழன். வந்தவன் முன்னால் கட்டு கட்டென்று கட்டி விட்டு சட்டியை கவிழ்ப்பது எந்த வகை நாகரீகம் என்பதை சோ சொல்லவேண்டும் .

ரஜினி ஆதரவுடன் மூன்றாம் அணி தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்

மூன்றாம் அணிக்கு தமிழகத்தில் ஒரு போதும் வாய்ப்பில்லை என்ற நிலைதான் இருந்தது. பா ஜா க எவ்வளோவோ முயற்சி எடுத்தும் இதுவரை முடிந்ததில்லை. அடுத்து கேப்டனும் தன் பங்கிற்கு வலை விரித்து பார்த்தார். சிறிய கட்சிகள் கூட மடியவில்லை. ஆனால் இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூன்றாம் அணிக்கு வாய்பிருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் தொடக்கி இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. கூட்டணி அலைகழிப்புகள், தொகுதி பங்கீடு இழுபறி என தினம் தினம் அரசியல்வாதிகளின் இரத்த அழுத்தம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

அடிமேல் அடியாக தி மு காவிற்கு சி பி ஐ நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சாதிக் பாட்சாவின் மரணமும் பெருத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கோடு தற்கொலை வழக்கும் சி பி ஐ கையிலெடுக்கும் பட்சத்தில் பரபரப்பான, கசப்பான உண்மைகள் வெளிவரக்கூடும். இங்கு விழும் ஒவ்வொரு அடியும் தனக்கு பெரும் ஆதாயத்தை தரக்கூடும் என்ற தலைகனத்தில் தான் அ தி மு க தலை விரித்து ஆடுகிறது.

போதாகுறைக்கு தேர்தல் கமிஷனின் கிடுக்கி பிடி வேறு அரசியல்வாதிகளின் வயிறில் புளியை கரைக்கிறது. போராடி வாதாடி தொகுதியை பெற்றாலும் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் பெரியகட்சிகளின் வேட்பாளர்களுக்கு தூக்கம் தொலைத்த இரவுகளாகி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அணிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள் அ தி மு காவினர்.

அ தி மு காவா என்று குழம்ப வேண்டாம். அ தி மு காவின் முதுகில் குத்தும் அரசியல் சூழ்ச்சியால் தான் மூன்றாம் அணி குறித்து சில கட்சிகள் யோசித்து வருகின்றன. எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று கடையை விரித்து காத்திருக்கும் பா ஜா கவிற்கு இது சரியான சந்தர்ப்பம்.

நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் பொதுவாக எதை பேசினாலும் புரியாது, ஆனால் அ தி மு காவின் நம்பிக்கை துரோகத்தை மட்டும் சேனல் சேனலாக பொளந்து கட்டுகிறார். இன்றைய தினசரியிலும் இவரின் அனுதாப குரல் ஓங்கி ஒலித்தது. அதுமட்டுமல்ல தன்மானத்துடன் வெளியே வாருங்கள் நாம் சேர்ந்து அ தி மு காவிற்கு பாடம் புகட்டுவோம் என்று வை கோவிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவகையில் காமெடியாக இருந்தாலும்
வை கோவிற்கு வேறு என்ன வழி.

1 . மானம் விட்டு கொடுப்பதை வாங்கிகொள்வதா, அப்படிஎன்றால் வெறும் 8 தொகுதி வைத்துகொண்டு 20 பேருக்கு எப்படி பங்கு வைப்பது..?
2 . முழுதாக ஐந்து வருடங்கள் கூட இருந்தும், அதிகாரத்தில் இல்லாத அம்மையார் இப்போதே இந்த பாடு படுத்தினால் அதிகாரத்திற்கு வந்த பின் நிலைமை என்ன ஆகும்..?
3 . 8 - ல் ஒரு இரண்டோ மூன்றோ வெற்றிபெற்றாலும் அதை வைத்து என்ன பெரிதாக சாதித்து விட முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு தான் என்ன மரியாதை கிடைத்துவிடும்..?
4 . மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவில்லைஎன்றால் ஒட்டு மொத்த எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடுமே..?
5 . பா ஜா காவுடன் கூட்டணி என்றால் உடனடி நன்மை என்ன..? அதிக தொகுதிகள் கிடைக்கும், இரண்டில் வெற்றி பெறுவது கடினமல்ல...அத்துடன் அங்கீகாரத்திற்கு தேவையான 6 % வாக்குகளையும் பெறமுடியும்.

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு விஷயத்தில் ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவால் விரக்தியில் தள்ளபட்டிருக்கிறது. அவர்களும் தே மு தி க தலைமையில் ஓன்று திரள காத்திருக்கிறார்கள்.

கொடுத்ததே இரண்டு தொகுதி தான் என்றாலும் மனநிறைவு கொண்ட புதிய தமிழகம் வெற்றிக்கான வாய்ப்பற்ற தொகுதியை ஒதுக்கியதில் ரொம்பவே அப்செட்.

மூன்றாம் அணி அமைந்தால் கடைசி நேர அதிர்ச்சியாக கேப்டனும் வந்தாலும் வரலாம். தே தி மு க வந்தவுடன் அம்மாவின் கணக்குகள் எப்படி மாறிவிட்டன என்பது விஜயகாந்த் அறியாததல்ல. ஒருவேளை வை கோ வெளியேறி 160 தொகுதிகளில் அ தி மு க போட்டியிட்டால் வெற்றி பெற தேவையான 118 எளிதாக பெறமுடியும். கொஞ்சம் குறைந்தாலும் குட்டி கட்சிகளை பெட்டிகளையோ, பதவிகளையோ காட்டி கட்டிவைத்திருக்க முடியும். அப்போது விஜயகாந்தின் நிலைமை. ஏற்கனவே ஆட்சில் பங்கில்லை என்று சொல்லிவிட்டார். வெறும் 20 அல்லது 30 M L A வைத்து விட்டுமட்டும் என்ன செய்யமுடியும். பதவியில் இல்லாத அரசியல்வாதி பல் பிடுங்கப்பட்ட பாம்பை போல் தண்டம் தான். தொகுதிக்கு குறைந்தது 5 அல்லது 10 கோடி செலவு செய்துவிட்டு புறங்கையை நக்கி கொண்டு போகவேண்டியது தான்.

இன்னும் ஓரிரு நாளில் மூன்றாம் அணி குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகலாம். எந்த எந்த தொகுதி என்று தே மு தி காவிற்கு ஒதுக்கும் போது பூசல்கள் பெரிதாகி பிரிவுகள் வரலாம். தே மு தி க தலைமையில் நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, பா ஜ க இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று நம்புவோம். ஏற்கனவே எந்த கட்சிக்கும் வாய்ஸ் இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். ஆனால் மூன்றாம் அணியின் தார்மீக நியாயம், வை கோ, விஜயகாந்த் மற்றும் இல.கணேஷன் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்ற முறையில் இ(ற)ரங்கி வருவதற்கும் வாய்ப்பிருகிறது.

ஒருவேளை பா ஜ க தவிர்த்து தே மு தி க தலைமையில் புதிய தமிழகம், நாடாளும் மக்கள் கட்சி, ம தி மு க, மார்க்சிஸ்ட் ,கம்யூனிஸ்ட், சரத்தின் ச ம காவும் இணைந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த கூட்டணியின் ஒரே பிரச்னை வாக்காளர்களுக்கு இவர்களால் வாக்குறுதியை கொடுக்க முடியுமே தவிர, பொன்னோ, பொருளோ, பணமோ தேறாது. சொல்வதற்கில்லை அதற்கும் ஏதாவது வழி வைத்திருப்பார்கள்.



இம்முறையும் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தே மு தி க. விஜயகாந்தின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருகிறார்கள் அ தி மு காவின் தோழைமை கட்சிகள். துக்ளக்கின் 40 வது ஆண்டு விழாவில் அம்மாவிற்கு இருக்கும் அரசியல் ஆளுமை வேறு யாருக்கும் இல்லைஎன்றார் ஆசிரியர் சோ. ஆளுமை என்றால் இதுதானா..? தன்னை நம்பி வீட்டிற்கு வந்தவனுக்கு வயிறார பசியாற்றுபன் தமிழன். வந்தவன் முன்னால் கட்டு கட்டென்று கட்டி விட்டு சட்டியை கவிழ்ப்பது எந்த வகை நாகரீகம் என்பதை சோ சொல்லவேண்டும் .

Tuesday, March 15, 2011

கமலின் புதிய ஜோடி, தட்டி பறித்த சூர்யா

செல்வராகவன் டைரக்சனில் கமல் அடுத்த படத்தில் நடிக்கிறார். இதுவும் பீரியட் படம் போல் தெரிகிறது இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தேடி பிடித்து செல்வராகவனால் அழைத்து வரப்பட்டவர் தான் சோனாக்சி. இவர் வேறு யாருமல்ல பா ஜா கா கட்சியில் அமைச்சராக பதவி வகித்த சத்ருகன் சின்ஹாவின் மகள். மாடலாக வந்து கலக்கிய இவர் சல்மானுக்கு ஜோடியாக டபாங் படத்தில் நடித்தார், படம் சக்கை போடு போட்டதில் அம்மணியின் மார்கெட் சிகரத்தில் நிற்கிறது. பாலிவுடில் இருந்து கோலிவுட் வரை காத்திருகிறார்கள் தயாரிப்பாளர்கள். கமலின் ஜோடி என்றதும் மறு பேச்சில்லாமல் சம்மதம் சொல்லியிருகிறார்.

கேள்விப்பட்ட சூர்யாவும் தனது அடுத்த படத்திற்கு இவரையே நாயகி ஆக்கிகொண்டார். பொதுவாக செல்வராகவன் படம் நீண்ட நாட்கள் படபிடிப்பில் இருக்கும் அதுவும் கமலுடன் என்பதால் எப்போது சூட்டிங் ஆரம்பித்து முடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏழாம் அறிவு முடிந்தவுடன் சூர்யாவின் படம் தொடங்கிவிடும் என்பதால் சோனாக்சியை விரைவில் சூர்யாவுடன் பார்த்துவிடலாம்.

ஜெ ஜெ அ தி மு காவா ச்ச்சே ச்ச்சே அ தி மு காவா..!!

இந்த முறை அ தி மு க கூட்டணி வெற்றி பெற பெரிதாக எதுவும் செய்துவிட வேண்டாம், தி மு காவின் தோல்வியை அவர்களே உறுதி செய்து விட்டார்கள் என்ற நிலையில் கடந்த ஆட்சியின் அவலங்களை மேடை தோறும் பட்டியலிட்டாலே போதும் என்ற நிலை இருந்தது நேற்று வரை. ஆனால் அ தி மு காவின் அண்மைய செயல்பாடுகள் தோல்வி பாதையை நோக்கி செல்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

கம்யுனிஸ்டுகளின் தொகுதி பங்கீடு காலதாமத படுத்தியது, வை கோவுடன் இன்னுமும் தொகுதி பங்கீடு முடிவடையாதது, முதன் முதல் அ தி மு காவுடன் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவித்த கார்த்திக்கிற்கு இன்னுமும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்காதது, மிக தாமதாமான தொகுதி முடிவுகள் அ தி மு க தொண்டர்களை மட்டுமல்ல நடுநிலையாளர்கள் மத்தியிலும் வெறுப்பையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து, இத்தனை வருடங்களாக கூட்டணியில் இருக்கும் வை கோவை கழட்டி விடும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. பெரும் பாரம் என கட்சிகள் நினைக்கும் பா ம க கூட 30 தொகுதிகளை பெற்று விட்ட நிலையில் வை கோவிற்கு வெறும் 7 அல்லது 8 தொகுதிகளை தான் ஒதுக்க முடியும் என்பது முதுகில் குத்தும் செயல். ஈழ தமிழர்கள் விஷயத்திலும், பிரபாகரன் விஷயத்திலும் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் கூட்டணி தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கருத்துகளை நாகரீமாக எதிர்க்காமல் இருந்தவர் வை கோ. அதே சமயத்தில் ஈழ ஆதரவு என்ற தன கொள்கையிலும் விட்டுதராமல் போராட்டங்களை நடத்தினார்.

ஜனவரி 19ம் தேதி கார்த்திக் தனது ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கோ, தொகுதி பங்கீடு குறித்து பேசவோ அழைக்கவில்லை. 3 தொகுதிகள் கேட்டோம். இரண்டு தொகுதிகளாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்குகூட அழைப்பு இல்லை. எனவே அக்கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். என கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.

கடந்த தேர்தல் வாக்கு விகிதாசாரப்படி தே தி மு க மட்டுமே போதும் என்ற நிலைப்பாடு ஒரு வகையில் சரிதான். குறைந்தது 150 தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை (118 ) பிடித்து விட்டால் எல்லா கட்சிகளின் நிலையும் படு கேவலத்தை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே பா ம க மற்றும் பா ஜா க கட்சிகள் அம்மாவின் நம்பிக்கை துரோகத்திற்கு சாட்சியான வரலாறு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் கேப்டன் அவர்களே உஷார். எந்த நிமிடம் உங்கள் நிலையும் கறிவேப்பிலை ஆவது நிச்சயம்.

சினிமா உலகம் ஒட்டு மொத்தமாக தி மு காவின் மேல் மனகசப்பில் இருப்பது அவர்களுக்கு தெரியாமல் இல்லை. உடனடியாக மருந்து போடும் வேலை நடந்தாக வேண்டும். இல்லையெனில் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொருவராக அ தி மு காவின் பக்கம் வரலாம். சினிமா கவர்ச்சி எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திவிடும் என்பதை கலைஞர் அறியாதவரல்ல.

ஒரு முறை துக்ளக் ஆசிரியர் சோவிடம், தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம் ரவுடிகளாகவும், திருடர்களாகவும் இருந்தால் எப்படி நாம் நல்லவர்களை நம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க முடியும் என்று கேட்கப்பட்ட போது அவர் சொன்னது போட்டி இடுவதிலேய மிக சின்ன ரவுடி, மிக சின்ன திருடனை தேர்ந்தெடுக்க வேண்டியது தான் வேறு வழியில்லை என்றார். நான் சொல்கிறேன் திருடனை கூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே கூடாது.

கோவை, மதுரை என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி தேர்தல் வலைகளை ஜரூராக ஆரம்பித்த அ தி மு க,
இப்போது அமைதியாக கைகளை நகர்த்துவது பதுங்கி பாய்வதற்கு என்று நினைத்தேன். ஆனால் அது எதிர்கட்சிகளின் மீதல்ல தோழமை கட்சிகளின் மீதே என்று இப்போது தான் தெரிகிறது.

Saturday, March 12, 2011

சாயம் வெளுத்த கொங்கு முன்னேற்ற பேரவை..!!

தி மு காவின் கண்டுகொள்ளாமை காரணமாகத்தான் கொங்கு மண்டலத்தில் வீறுகொண்டு எழுந்தார்கள் கவுண்டர் என்றளைக்கபடும் வேளாண் சமூகத்தார்கள். கொங்கு முன்னேற்ற பேரவை உதயமானது.

விவசாயிகளை புறகணித்தது,
சாயப்பட்டறை முதலாளிகளை கட்டுபடுத்த தவறியது,
பவானி ஆற்றை நாசகேடாகியத்தை கண்டு கொள்ளாதது,
கள்ளிறக்கும் தொழிலை அழிக்க முனைந்தது,
தொழில் நகராம் திருப்புருக்கு பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த வித அடிப்படை கட்டமைப்பு விஷயத்தையும் மேற்கொள்ளாதது,
ஒகேனகல் குடிநீர்த்திட்டம்,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தபடுவதை முறைபடுத்துவது
அ தி மு காவின் கோட்டை என்பதால் முற்றாக மக்கள் நல திட்டங்களை புறகணித்தது,
தொடர் மின்வெட்டால் சிறு குறு விவசாயிகள், நூற்பாலை தொழில்களை முற்றிலுமாக அழித்தது என மக்கள் சக்தி பொங்கி எழுந்த போது கவுண்டர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களும் அவர்களை ஆதரித்தார்கள். சாதி வேறுபாடு காட்டாமல் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கவுரமான ஓட்டுகளை பெற்று அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதை நிரூபித்தார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, என சேலம் வரை சுமார் 50 லட்சத்துக்கும் மேல் வசிக்கும் பெருங்கூட்டமாக தங்களின் பலத்தை அவர்களே அப்போது தான் உணர்ந்தார்கள். விட்டுவைக்குமா கட்சிகள்...!

கட்சியை விலை பேச, முற்றாக அழித்துவிட எத்தனையோ பேரங்கள், சதி திட்டங்கள்..இறுதியில் விழுந்தே விட்டது. எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, எந்த கட்சியை எதிர்க்க உருவாகபட்டதோ அந்த கட்சியிடமே தன் மானத்தை அடகு வைத்து விட்டார்கள். மக்கள் சக்தியாக திரண்ட இயக்கம் இரு பெரும் பணக்கார வர்க்க தலைவர்களிடம் சின்னபட்டு போய் நிற்கிறது.



நன்றாக ஞாபகம் இருக்கிறது. கவுண்டர் வீட்டு பெண்கள் எல்லாம் வீதியில் இறங்கி அன்று தேர்தல் வேலை செய்தார்கள். தனித்து போட்டியிட்டதால் அவர்களால் ஓட்டுகளை பிரிக்க முடிந்ததே தவிர பெரிதாக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. நானும் கோயமுத்தூரை சேர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..எங்கள் முதுகில் மட்டுமல்ல குத்தியது மட்டுமல்ல உங்கள் வீட்டு பெண்கள் முகத்திலும் காரி துப்பி விட்டீர்கள்.

எரிசாராய தொழிற்சாலை அனுமதி மற்றும் 100 கோடி பணத்திற்காக தி மு காவுடன் கூட்டு என்று பத்திரிகை செய்திகள் வருகின்றன. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ஸ்பெக்ட்ரம் பூதகர ஊழல் எப்படியும் தங்களை அதல பாதாளத்திற்கு தள்ளி விடும் என்று தி மு கா தெரிந்தே கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கொ மு பேரவையை விலை பேசியிருக்க கூடும். இல்லையென்றால் அ தி மு காவுடன் கூட்டணி என்ற நிலையில் திடீரென்று கட்சி மாறி கூட்டணி சேர வேண்டிய அவசரமென்னா...

தங்களை தனிமைபடுத்தி தோல்வியடைய செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தார் என்கிறார்கள்...உங்களின் பொதுவான கோரிக்கைகளை அவர் ஏற்றுகொண்டாரா என்று பாருங்கள்...!! 10 வருடங்களாக புறக்கனிக்கப்பட்ட உங்கள் சமுதாய மக்களுக்கு, கொங்கு மண்டலத்திற்கு என்ன நல திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேளுங்கள் அதைவிட்டு விட்டு சீட்டுககவோ, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதோ முக்கியமில்லை. கடந்த தேர்தலில் நீங்கள் பெற்ற ஒட்டு உங்கள் சமூகதார்து மட்டுமல்ல, இது நம்ம மண் என்று நினைத்து உங்களை ஆதரித்த கொங்கு மண்டலத்தார் அனைவரது ஓட்டும் உள்ளது. இம்முறை நீங்கள் மண்ணை கவ்வ போவது நிச்சயம் நடக்கும். மக்களை மதிக்காமல், கொண்ட கொள்கைகளையும் நினைத்து பார்க்காமல் விலை போனதற்கு இம்முறை தக்க பாடம் நம் மக்கள் கொடுப்பார்கள்.

அய்யா ஆட்சியாளர்களே, கள்ளோ, மதுவோ இரண்டுமே தடை செய்ய வேண்டிய விஷயம் தான் என்னை பொறுத்தவரை. ஆனால் மக்களை கொல்லும் மதுவை அரசின் கஜானாவை நிரப்புவதற்கும், அரசியல்வாதிகளின் மது தொழிற்சாலைகள் வருமானம் குவிப்பதற்கும் அனுமதிக்கும் போது ஒரு சாதாரண விவசாயின் கள்ளிறக்கும் கோரிக்கையை மறுதலிப்பது கண்டிக்கவேண்டிய விஷயம் தான். மதுவை முற்றிலுமாக ஒழியுங்கள் இல்லையென்றால் கள்ளிறக்குவதை முறைபடுத்தி விவசாயிகளையும் வாழ வையுங்கள்.

உலக கோப்பை இம்முறையும் கோவிந்தா தானா..?

268 / 2 என்ற நிலையில் ரொம்பவும் தெம்பாக விளையாடி கொண்டிருந்த நிலையில் பெரும் புயலென சாய்த்தார் ஸ்டெயின் இந்திய வீரர்களை. மீண்டும் ஒருமுறை 400 தொடும் என்ற நிலையில் 300 கூட தொடமுடியாது போனது வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை காட்டுகிறது.

இன்னும் எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சினை நம்பி தான் இந்திய இருக்கிறது. சச்சின் போனதும் வரிசையாக எல்லோரும் நடையை கட்டியது நாம் இன்னும் வளரவே இல்லையோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அடியது போல் தெரிகிறது. அதுவும் விராத் கோலி மற்றும் யூசுப் பதான் அவுட்டனா விதம் மகா கேவலம்.

இன்னும் 3 ஓவர்களே மீதமுள்ள நிலையில் பந்தை தடவி கொடுத்துகொண்டிருந்த தோணி நிச்சயம் இம்முறை பாராட்டு குரியவரல்ல.

கடைசி நான்கு ஓவரில் 100 ரன்கள் எடுத்து விஸ்வரூபம் எடுத்த நீயூசிலாந்து எங்கே...?
கடைசி ஒன்பது விக்கெட்டுகளை வெறும் 26 ரன்களுக்கு இழந்த இந்திய எங்கே..

கவச்கரும், கங்குலியும் இந்திய அணியை யானை குதிரைன்னு புகழ்த்து தள்ளினாங்க. வடிவேல் சொன்ன மாதிரி நம்ம பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மட்டம் வீக்...ஓவரா பில்ட் அப் கொடுக்கறதா விட்டுட்டு நிஜத்திற்கு வாங்க சாமி.

பார்ப்போம் ஜாகிர் கானும், பஜ்ஜியும் என்னசெய்ய போகிறார்கள் என்று

Friday, March 11, 2011

கெட்டபடமா..சிலுக்குவின் வாழ்க்கை

சிலுக்குவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. சிலுக்குவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய மர்ம புத்தகமாவே விரிகிறது.ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகனையும் தன் ஒரு கிறக்க பார்வையாலேய கவர்ந்திழுக்கும் சக்தி அந்த காந்த கண்களுக்கு மட்டுமே உண்டு. அதன் பிறகு எத்தனையோ பேர் வந்தார்கள் போகிறார்கள்..இவரளவு நின்றவர்கள் யாருமில்லை.

சிலுக்குவின் பெயருக்கு ஒரு Brand Maker அந்தஸ்து இருந்தது. திரையுலகில் வெகு சிலருக்கே வாய்க்கும் வரம் அது. நதியா, ரேவதி, ரஜினி போல் ஐவரும் ஒரு காலத்தில் அசைக்க முடியாத வியாபார சக்தியாகவும் இருந்தார். ரஜினியின் சில படங்கள் கூட சிலுக்கின் நடனத்திற்காக காந்திருந்த காலம் அது.

அவரின் உடலசைவும், கவர்ச்சியான கிறக்க பார்வையும் வலிந்து அவராக திரைபடதிற்காக ஏற்றுகொண்டவை. உடலின் குலுக்கல்கள், அவரின் நடன அசைவுகள் எல்லாம் சரோஜா மாஸ்டரின் திறமைக்கு கிடைத்த பரிசுகள் தான். சமீபத்திய பேட்டியில் கூட எங்கோ வீட்டு வேலை செய்துகொண்டிருந்த பெண்ணை, கொண்டு வந்து தங்க வைத்து, உணவு கொடுத்து, நடிக்க கற்று கொடுத்து பெரிய ஆளாகிவிட்டது நான் தான், என்னை ஒரு வார்த்தை கேட்காமல் எப்படி சிலுக்குவின் வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என்று பொரிந்து தள்ளியிருந்தார் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சிலுக்குவை அறிமுகபடுத்திய வினுசக்கரவர்த்தி.

சிலுக்குவின் வேடத்தில் நடிப்பதற்கு யாரையும் மனத்தால் டிக் செய்துவிட முடியாது. ஒரு புதுமுகத்தை கூட ஏற்று கொள்ள முடியும். ஏற்கனவே வேறு ஒரு இமேஜில் பார்த்து பழகி விட்ட யாரும் சிலுக்கின் இடத்தை நிரப்பி விட முடியாது. அதுவும் வித்யாபாலன் அந்த வேடத்திற்கு ரொம்ப நெருடலாகவே இருக்கிறது. கவர்ச்சியை யார் வேண்டுமானாலும் காட்ட முடியும், அதற்கு சிலுக்கிவின் சாயத்தை பூசமுடியாது என்பது தான் உண்மை. பார்ப்போம் எப்படி காட்ட sorry நடிக்க போகிறார் என்று.



யாரும் அறிந்திராத விஜிஎன்ற விஜியலசுமியை அவரை அறிந்திராதவர்களே இல்லை என்னும் அளவிற்கு வளர்த்து விட்டதில் வினுச்சகரவர்த்திக்கும் பங்குண்டு. இவருடன் நடித்த பலரும் வெளிப்படையாக இவரை பற்றி பேச தயாரில்லை என்றாலும் ஒருசிலர் அவளை போல ஒருத்தியை இனி பார்ப்பது கடினம் என்கிறார்கள். அவள் ஒரு நெருப்பு மாதிரி இருந்தாள், ஆரம்ப காலங்களில் அவள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல...ஒரு கிராமத்தில் அடுத்த காட்சிக்காக உடை மாற்றும் போது மரத்தின் மீது ஏறி நின்று அந்த கிராமமே வேடிக்கை பார்த்ததை மனவேதனையோடு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவரால் உதவி பெற்றவர்கள் பலர், கதாநாயகியை விட அதிகம் சம்பளம் பெற்றும் பெரிய அளவில் அவர் சொத்து சேர்க்கவில்லை என்பதில் இருந்தே இது தெரிகிறது. அதுமட்டுமல்ல நம்பிய பலரால் அவர் ஏமாற்றப்பட்டும் இருக்கிறார். இதனாலெலாம் வெறுத்து போய் தான் தன்னை சுற்றி ஒருவரையும் அவர் நெருங்க விடவில்லை. அதையும் மீறி அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியம்..

மனோரமா, வடிவுக்கரசி, வினுச்சரகவர்த்தி போன்ற ஒருசிலர் தான் அவரின் இறுதி ஊரவலத்தில் கூட கலந்துகொண்டார்கள். ஆனால் ஒரு காலத்தில் இரவு நேரங்களின் அவரின் வீட்டுகதவை தட்டாத கைகள் மிகவும் குறைவு.



இப்படி நடிக்க வந்தவரை...???



இப்படி மாற்றியது யார் குற்றம்..??

ஒரு கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி, அவருக்குள் ஒரு மனித நேய முகம் இருந்ததை அவரின் ஒரே பதில் உலகிற்கு சொல்லியது. ஆனால் அவரின் உடல் கவர்ச்சியை தாண்டி எதையும் சிந்திக்க அவரின் ரசிகர்கள் தயாரில்லை. "அது நடிக்க வராவிட்டால் நான் ஒரு நக்சல் ஆகியிருப்பேன் என்று ஒரு பேட்டியில் சொன்னது"
ஒருவேளை இந்த பதிலிற்கு பின்னிருந்த வேதனைகளையும் திரையுலகமும், ரசிகனும் புரிந்து கொண்டிருந்தால் அவர் ஒருவேளை இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம். ஒரு கௌரவமான மனுசியாக..!!

இப்போது சொல்லுங்கள் சிலுக்குவின் வாழ்வையொட்டி தயாராகும் படத்திற்கு கெட்டபடம் என்று பெயர் வைக்கலாமா..?!!இந்த சமூகத்தால் கெட்டு போனவளின் படம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்

Thursday, March 10, 2011

ஹர்பஜன் சிங்கும் மன்மோகன் சிங்கும்

என்னைய்யா இது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடறேன்னு பார்கறீங்களா...மேல படிங்க விஷயமிருக்கு. எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்திடுவோம்.

காரணம் ஓன்று - இவர்கள் இரண்டுபேருமே இன்றைய நிலையில் இருக்கும் இடத்திற்கு பாரமாகதான் தான் இருக்கிறார்கள். ஆனால் வெளியேறவும் விருப்பம் இல்லை.

காரணம் இரண்டு - ஒருவர் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர், ஒருவர் மகா மௌனம். தன் துறை சம்பத்தப்பட்ட தானாலும் சரி அடுத்தவர் துறைஎன்றாலும் சரி முடிவெடுக்க கூடியதில் ஆமை வேகம்.

காரணம் மூன்று - ஒருவர் தோனியின் தயவில் வாழ்பவர் மற்றொருவர் சோனியின் தயவில் சாரி சோனியாவின் தயவில்.



காரணம் நான்கு - ஆடிக்கொரு முறை விஸ்வரூபம் எடுப்பார் விளையாட்டுக்காரர். நீதிமன்றம் சவுக்கெடுத்தால் தான் உண்மையை போட்டுடைப்பார் அரசியல்காரர்

காரணம் ஐந்து - ஒருவர் சுழலுக்கு தலைமை வகிப்பவர் மற்றவர் ஊழலுக்கு தலைமை.

காரணம் ஆறு - சக வீரரை கன்னத்தில் அறைந்தவர். எல்லோருக்கும் கன்னத்தை மட்டுமல்ல முதுகையும் காட்டுபவர்.

காரணம் ஏழு - விமர்சனம் எழும்போதெல்லாம் வெகுண்டு எழுவார், அப்போது மட்டும் இவரின் பேட்டும் பேசும், கை விரல்களும் பேசும் பஜ்ஜிக்கு. என்னை விட்டாபோதும் நான் விளையாட்டுக்கு இல்லை என்பவர் இரண்டாமவர்.

காரணம் எட்டு - உலக கோப்பை பெற்று தருவோம் என்பது இவரின் கனவு. கருப்பு பணத்தை கொண்டுவருவோம் என்பது அவரின் கனவு.

ஒண்ணுமே இல்லைதா விஷயத்தை யோசிச்ச கூட லட்டு லட்டாய் எட்டு விஷயம் கிடைத்து விட்டது. நீங்களும் யோசிங்க ஏதாவது கிடைக்கும்

Tuesday, March 8, 2011

டெல்லியில் கிண்டப்பட்ட இருட்டுக்கடை அல்வா

அவசர அவசரமாக ராஜினாமா கடிதத்தை தூக்கிக்கொண்டு டெல்லி சென்ற மந்திரிகள் வெற்றி கொடி நாட்டிவிட்ட மகிழ்ச்சியில் வாய் நிறைய புன்னகையோடும் கைநிறைய அல்வாவோடும் வந்து கொண்டிருகிறார்கள். தமிழக மக்களுக்கும் குறிப்பாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அல்வா பொட்டனங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.



வேண்டா விருந்தாளியாக இருக்க எங்களுக்கு விருப்பமில்லை, காங்கிரஸ் எங்கள் கூட்டணியை விரும்பவில்லை என்று தி மு காவும், விட்டது ஏழரை நாட்டு சனி என்று இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரசாரும் முகத்தை எங்கே கொண்டு வைப்பார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் ஒரு பொழப்பு என்று சத்தம் வர்ற பக்கமெல்லாம் சிரிக்கிறான் தமிழன். குலாம் நபி சாரின் கடைசி வார்த்தை தான் உலக மகா காமெடி...இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுமாம்.

இந்த நாடகத்தை இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, சவத்தை கூட விட்டு வைக்காமல் வன்புணர்ச்சி செய்த சிங்கலனையும், அவனுக்கு துணை போன மத்திய அரசையும் கண்டித்து நடத்தியிருந்தால் காங்கிரஸ் கூட்டணிக்காக கைகட்டி காத்திருக்க தேவை இல்லையே இன்று. தலை நிமிர்ந்து தனித்து நிற்கலாமே அய்யா. தமிழன் மானத்தோடு கைகோர்த்திருப்பன் உங்களோடு. மானம் விட்டு, ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் ஆடி 60 ஆண்டு கால அரசியல் வாழ்கையை இன்று அஸ்தமித்து போகும் நிலைக்கு ஆளாகிருக்கவேண்டாம்.

இருட்டடிப்பு செய்யப்பட்ட தயாநிதி மாறன், டெல்லி பக்கம் தலைவைத்து படுக்கவே அஞ்சும் அழகிரி போன்றோர் அடித்து பிடித்து கூட்டணியில் காங்கிரசை இடம் பெற செய்ய பேச்சு நடத்தபோகிறார்கள். எங்கே ஒரு 30 தொகுதி கூட வெற்றிபெறாமல் போய்விடுமோ என்றஞ்சி ஓடினார்கள் என்றா நினைக்கிறீர்கள் இல்லை ஒருவேளை கூட்டணி நிரந்தராமாக முறிந்தால் குடும்பமே திகாருக்கும் சென்னைக்கும் அலையவேண்டி வருமோ என்றஞ்சி ஓடுகிறார்கள். சி பி ஐ கொடுத்த 63 பேர் பட்டியலில் விசாரணைக்கு உட்படவேண்டியவர்கள் தி மு காவில் இன்னமும் இருக்கிறார்கள். அந்த பயம் தான். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் காங்கிரஸ் கேட்பதும் 63 , சி பி ஐ விசாரணைக்கு அனுமதி கேட்பதும் 63 .

அடுத்த ஜோக் நமது பிரதமர் வாயிலிருந்து பொன் எழுத்துகளாக உதிர்ந்திருக்கிறது. தாமஸ் மீதான ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது அவருக்கு தெரியாதாம். அச்சாபீஸ் குமாஸ்தா ரேஞ்சிற்கு தவறு நடந்துவிட்டது, தவறுக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் என்கிறார். தாமசை அந்த பொறுப்பிற்கு நியமித்ததில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை கண்டுகொள்ளாமல் செய்வதும் ஓன்று தான். ஆனால் அதற்குள் காட்சிகள் மாறிவிட்டன. அவரை நியமிப்பதற்கு முன்னாள் சுஷ்மா சுவராஜ் ஆட்சேபம் தெரிவிக்கும் போதெல்லாம் பிரதமர் எந்த உலகில் இருந்தார் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் கேள்வி கேக்கும் வரை மௌனம் காத்துவிட்டு இப்போது எனக்கு தெரியவில்லை என்பதெல்லாம் உங்கள் பதவிக்கு அழகில்லை. வேற என்னத்த சொல்றது..

Saturday, March 5, 2011

தி மு க - காங்கிரஸ் கூட்டணி முறிவு - கேப்டன் உஷார்..

திடுக்கிடும் திருப்பங்கள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது. சற்று முந்தைய தகவலின் படி தி மு க மத்திய அரசில் இருந்து விலகி விட்டது. பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு என்று தீர்மானம் போட்டிருகிறார்கள். அனேகமாக கூட்டணி முறிந்து விட்டதாகவே தெரிகிறது. இனிமேலும் காங்கிரஸ் இரங்கி வந்தால் அது அத்தனை ஆரோக்கியமானதாக காங்கிரசிற்கு இருக்காது. எனவே அ தி மு க கூட்டணியின் வெற்றி கிட்டதட்ட உறுதி படுத்தபட்டுவிட்டதாகவே தெரிகிறது.

அதிக தொகுதிகளை பெற வேண்டும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சின்ன கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடித்து விடாலாம் என்று குருட்டு கனவு வெறும் கனவாகவே களைந்து போய்விட்டது. என்ன செய்ய போகிறது காங்கிரஸ் தனித்து போட்டியா..பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து விட்ட நிலையில் மூன்றாம் அணிக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கலைஞர் அவசர அவசரமாக பா ம காவிற்கு சீட்டு ஒதுக்கி தங்கள் கூட்டணியில் சேர்த்து கொண்டதன் காரணம் இப்போது புரிகிறது.

ஆட்சியில் பங்கு கேட்டவர்கள் உள்ளதும் போச்சுடா..நொள்ள கண்ணா நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். வாய்சொல் வீரர்கள் இனி என்ன செய்வார்கள். தங்களின் பலத்தை குறித்து தப்பு கணக்கு போட்டுவிட்ட இளைஞர் காங்கிரசார் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பார்களா...இல்லை இருக்கவே இருக்கிறது தங்களின் பரம எதிரி பா ஜா க அதனோடு கூட்டு சேருவார்களா..அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..

இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது இன்று. ஓன்று அ தி மு காவின் வெற்றி உருதிபடுத்தபட்டிருக்கிறது. இரண்டு ஆ. ராசாவின் ஊழல் விசாரணை விஸ்வரூபமெடுக்க போகிறது. தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை இனி தி மு காவின் ஆட்சி தமிழகத்தில் இல்லை என்பது தான் இனி காங்கிரசார் எடுக்க போகும் நிலையாக இருக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு அ தி மு க - தே மு தி காவில் உரசல் ஏற்பட்டால் கூட அ தி மு காவோடு காங்கிரஸ் கை கோர்க்கும் நிலை வரலாம். கேப்டன் உசாராக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

Friday, March 4, 2011

மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் - முக்கிய பிரமுகர் தகவல்

மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று இன்று அதிகாலை கடற்கரையில் நடை பயிற்சியில் இருந்த ஒரு முக்கிய பிரமுகர் தெரிவித்தார். யார் அவர் என்பது பின்னால் சொல்கிறேன். அவர் சொன்ன இன்னும் சில தகவல்கள் உங்களுக்காக....

தற்போதைய சூழ்நிலையில் அ தி மு காவின் வெற்றி உறுதி படுத்தப்பட்டு விட்டாதகவே தெரிகிறது. 2006 - ல் பெற்ற ஓட்டு சதவிகிதம் படி இவர்களின் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் இன்று இருக்கும் சமூக சூழ்நிலை, பொருளாதார நிலை, மலைக்க வைத்த ஊழல் புகார்கள், இலங்கை தமிழர்களின் கண்ணீர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நசுக்கபடுவது என இந்த கூட்டணி ஓட்டு சதவிகதங்களை இன்னும் கொஞ்சம் அதிகம் பெறுவதற்கும், மாபெரும் வெற்றி பெறுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.

அ தி மு க வெற்றி பெற எப்படி தே மு தி க காரணமாக போகிறதோ அதே போல் தி மு க தோல்விக்கு பா ம க காரணமாக போகிறது. அதெல்லாம் என்ன கட்சி என்று இவர்கள் கூட்டணியில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. பக்கா சுயநலவியாதி "ராமதாஸ் அய்யாவின்" அந்திம காலம் நெருங்கி விட்டதாகவே எனக்கு தெரிகிறது. வெட்டி பந்தாவிற்கு மதுக்கடை ஒழிப்போம், வீண் விளம்பரத்திற்கு ஏதோ ஒரு இளிச்சவாய நடிகையையோ, நடிகனையோ பயமுறுத்தி அழவைப்பது, ஆதாயம் பெருமிடம் கட்சியை அடகு வைப்பது என்று இவர்கள் கட்சி நடத்தும் விதம் தமிழக மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு, அவ்வளுவுதான். மற்றபடி தமிழகத்தை இவர்கள் தலை நிமிர வைக்கவேண்டாம், தலை குனிய வைக்காமல் இருந்தால் போதும். இவர்கள் வண்டாவலத்தை வெளியே கொண்டுவர அன்புமணி அமைச்சராக இருந்த காலத்தில் அனுமதி பெற்ற அணைத்து மருத்துவ கல்லூரிகளையும் நோண்டினால் போதும்.

புழுத்து போன ஒரு ரூபாய் அரிசி, உபயோக படவேண்டியவர்களுக்கு உபயோக படாத இலவச தொலைகாட்சி,
திண்ணை கட்ட கூட பத்தாத இலவச வீடு கட்ட உதவி என மக்கள் நல திட்டம் எல்லாவற்றிலும் சொதப்பல். ஆனால் அதே சமயம், செம்மொழி மாநாடு என்ற பெயரில் கொள்ளை, இலவச காப்பிடு என்ற பெயரில் பகல் கொள்ளை, மணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் என மக்களை மிரள வைக்கிறது தி மு காவின் கடந்த கால சாதனைகள் . இவர்கள் எப்படி மக்கள் முன்னாள் ஓட்டு கேட்க செல்வார்கள் என தெரியவில்லை.

காங்கிரஸ், ராசாவை வைத்து இன்னுமும் தி மு காவை மிரட்டி கொண்டிருப்பது வெட்டி வேலை. தனித்து போட்டியிட மூத்த தலைவர்கள் கிட்டத்தட்ட முடிவு எடுத்துவிட்ட மாதிரி தான் தெரிகிறது. தனித்து விடபட்டால் தி மு க கூட ஒரு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை பெற வாய்ப்பிருகிறது. ஆனால் காங்கிரசின் நிலைமை பீகாரையும் விட மோசமாகிவிடும். ஐவர குழுவுக்கு இது தெரியுமா...இளைஞர் காங்கிரசாற்கு முதலில் இதை உணர்த்தவேண்டும். ராகுல் என்ற கவர்ச்சி இங்கும் எடுபடாது. ஆமாம் அப்படி அவர் என்னதான்ய செய்துவிட்டார்..?
இந்தியாவின் தலைஎழுத்தை மற்ற கூடிய ஒரு சக்தி வாய்ந்தவரின் பிள்ளை.. எதிர்கால இந்தியாவின் பிரதமராக வாய்பிருக்க கூடிய ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவர்...அப்படி இருந்தும் சும்மா குடிசையில போய் உட்கார்ந்திட்டு கஞ்சி குடிப்பதை விட்டுவிட்டு குடிசைகளே இல்லாத நாடாக்க வழியை யோசிக்க சொல்லுமையா...
எதை செய்தாலும் அப்பாவி மன்மோகன் சிங் போன்றவர்களை பலிகடா ஆக்காமல் தானே முன்னின்று செய்யட்டும்.
அப்பறம் யோசிக்கலாம் தனித்து போட்டியிடுவதை.

சாதிக்கட்சிகளின் பலம் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சம அளவிலேயே இருக்கிறது. என்னை பொறுத்தவரை சாதி கட்சிகளை ஓன்று விடாமல் கலைத்துவிட வேண்டும் என்பது தான் விருப்பம். சாதியின் பெயரால் ஒதுக்கீடு என்பதே நம்மை நாம் இன்னும் நாகரீகம் பெற்றவர்கள் என்பதை ஒப்புகொள்ள மறுக்கிறது. எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எல்லாவற்றிலும். ஆனால் இந்த ஒழுங்கற்ற ஜனநாயக நாட்டில் இதை எல்லோரும் முன்னெடுத்து செல்ல பல நூற்றண்டுகள் ஆகலாம். அதுவரை இந்த அரசியல்வியாதிகளின் ஆட்டங்களை சகித்து தான் ஆகவேண்டும்.

எனகென்னவோ மே - 15 ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அந்த முக்கிய பிரமுகர் வேறு யாருமல்ல அடியேன் தான்.........(ஐயோ..அம்மா..என்னை கொல்றாங்களே...காப்பாத்துங்க...) என்ன நடுநிசியில் கைது ஞாபகம் வருதா....!!!

Wednesday, March 2, 2011

கலைஞரின் ஆச்சர்யமும், ஜெயலலிதாவின் ஆதங்கமும்..

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அறிக்கைகளை தரபோகிறது ஆளும் / எதிர் கட்சிகள். பெட்ரோல் விலை குறைப்பு என்று கலைஞர் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். பாவம் அவருக்கு ஆட்சி முடிவிலாவது மக்கள் படும் துயரங்கள் கண்ணில் பட்டதே என்று ஒருவகையில் நாம் ஆசுவாசபட்டுகொள்வோம்.

பா ம க - தி மு க கூட்டணி சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்தே இருக்கிறான் என்பதை கலைஞர் மறந்து விட்டார். சு.சாமி கட்சி போல் இந்த தேர்தலுக்கு பிறகு பா ம கவும் தனி நபர் கட்சியானால் ஆச்சர்யபடுவதற்கொன்றுமில்லை. அவர்கள் தனிமை படுத்தப்பட வேண்டும், வெறும் வாய்சவடால் பேர்வழிகளால் மக்களுகென்று எதுவும் நடக்கபோவதில்லை. சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது மதுவை / சிகரெட்டை தடை செய்ய முயற்சி எடுக்காமல் இப்போது கூப்பாடு போடுவது இவர்களின் கையாலாகத்தனம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எந்த வகையில் மக்களுக்கு உதவுமென்று தெரியவில்லை. இதுவே பெரிய சாதனையென்று மார்தட்டி கொள்கிறார்கள்.

அ தி மு க மேல் பெரிய எதிர்பார்ப்பு விழுந்திருக்கிறது. இம்முறை இவர்கள் வெல்ல நிறைய வாய்ப்புகள், காரணங்கள் இருக்கின்றன. அதை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்தாலே போதும். தே மு தி க கூட்டணி ஒருவகையில் இவர்களுக்கு பலம் தான். மக்கள் தீர்மானம் என்ன என்பது போக போக தான் தெரியும். கலைஞரின் தேர்தல் கால அறிக்கைகள் எப்போதுமே மிக கவர்ச்சியானவை. இந்திய அளவில் மிக பிரசித்தி பெற்றவை. இவர் என்ன சொல்ல / செய்ய போகிறார் என்பது தான் தற்போது அம்மாவை தூக்கம் தொலைக்க வைக்கிறது.

இவர்கள் சொல்லுவது இருக்கட்டும் நாம் என்ன நினைக்கிறோம், எதிர்பார்க்கிறோம் என்பது இவர்களுக்கு தெரியுமா..யாராவது இதுவரை இவர்களுக்கு நமது தேவைகளை சொல்லி இருக்கிறார்களா..? அதை தேர்தல் வாக்குறுதிகளாக பெற்றிருக்கிறோமா..? பெற்றதை இவர்கள் நிறைவேற்றி இருகிறார்களா..? நிறைவேறாத தேர்தல் அறிக்கைகளுக்காக, தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ நடவடிக்கை எடுக்க முடியுமா..? இந்த அமைப்புகள் அரசியல் வாதிகளின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க என்ன செய்ய வேண்டும்..? நிறைவேற்றபடாத தேர்தல் அறிக்கைகளுக்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியுமா..? பதில் தெரியாத / கிடைக்காத எத்தனையோ கேள்விகள் தோன்றும் நேரம் இது தான். தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல மறந்து விடுவோம்.. யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்க சார்...!! மச்சான் நீ கேளேன்..கதை தானா..?

இந்த லட்சணத்தில் தேர்தல் முடிவு வேறு ஒரு மாதம் தள்ளிதானாம். அப்பறம் எதுக்கு சாமி ஓட்டு இயந்திரம். பட்டனை தட்டினால் முடிவு தெரியும் என்கிறார்கள். பட்டனை தட்ட ஒரு மாதமா. நீ ஆணியே புடுங்க வேணாம் போ..!! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கலைஞர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான். தொட்டிலையும் ஆட்டிவிட்டு புள்ளையையும் கிள்றது இது தானா...எத்தனை கள்ளவோட்டோ...எத்தனை ஓட்டு இயந்திரங்கள் கொள்ளை போகுமோ..பெரியாருக்கே வெளிச்சம்.

13 - பேயை விரட்டும் நம்பராம். கேப்டன் சொல்கிறார். பேயை ஆட்சியை விட்டு விரட்டுங்க...தப்பில்லை ஆனால் அது உங்கள் மனசில இடம் தராம பார்த்துகங்க.

வரப்போகும் ஜூன் மாதம் மீண்டும் ஒரு நாள் நள்ளிரவில் "என்னை கொல்றங்கோ..காப்பாத்துங்கோ.."என்ற அலறல் எல்லா டிவி சேனல்களிலும் ஒளிபரப்பபட்டாலும் படும். கெடுவான் கேடு நினைப்பான்...!!

இரண்டு வருடங்களாக நடந்து வரும் ஒரு வழக்கில் முக்கிய ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக சி பி ஐ தெரிவித்திருப்பது மகா கேவலம். ராசா மிக விரைவில் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதும் நடக்கும். கூட்டணி உறுதியாகிவிட்டால் போதும் காங்கிரஸ் பிடி தளர்ந்து விடும். சி பி ஐ என்பது என்ன..ஆளுங்கட்சியின் அல்லக்கை தானே..!! இந்த கலோபரங்களுகிடையில் ஆதர்ஷ் ஊழலை சுத்தமாக மறக்கடித்து விட்டது தான் காங்கிரசின் தந்திரம். நாம என்ன தான் தலைகீழ நின்னாலும் இந்த தொகையை மிஞ்ச முடியாதே... குழந்தையா குட்டியா..தஞ்சாவூர் வாரிசுகள் ஒன்னு சேர்ந்தாலும் கஷ்டம் தான் என்பது தான் அம்மாவின் எதிர்கால ஆதங்கம்.

அமாம் ஒரு சந்தேகம்...? ஏன் இந்த நாசமா போன அரசு கல்லூரி மாணவர்கள் மட்டும் பஸ் டே கொண்டாடுகிறார்கள். தனியார் கலை / பொறியியல் கலோரிகள் தங்கள் மாணவர்களுக்கென்று பிரத்தியோகமான பஸ்கள் வைத்திருந்தும் அவர்கள் எல்லாம் பஸ் டே கொண்டாடுவதில்லையே...!!? ஓஹோ...வடிவேல் கணக்கு போல...இது உங்கள் சொத்து...!!

அமைதிக்கும் குளுமைக்கும் பெயர் பெற்ற கோவை நகரம் வர வர காமகொடூரங்களின் கூடாரமாகிவிட்டது. 7 வயதே நிரம்பிய பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கற்பழிக்கபட்டிருக்கிறாள். ஆள்பவர்களை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறப்பாக தான் இருக்கிறது. எப்படி இந்த அம்மா ஆட்சியில் மட்டும் ரவுடியிசம் கட்டுபடுத்தபடுகிறது என்பது கலைஞரின் நிரந்தர ஆச்சர்யங்களுள் ஓன்று. அதுக்கு காவல் துறையை தன பொறுப்பில் வைத்திருந்தால் மட்டும் போதாது. அவர்களை கொஞ்சம் வேலை செய்ய விடவேண்டும் அய்யா. கடவுளே...உலகம் எப்போ அழியும்...!!?

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...