Friday, October 22, 2010

மீண்டும் பதிவுலகம் திரும்புகிறேன்.

ஒரு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவுலகம் திரும்புகிறேன்.
தொடர்ந்த தோல்விகளால் ஏற்பட்ட மனத்தொய்வும், சலிப்பும் படிப்பதற்கும்
எழுதுவதற்கும் மனமில்லாமல் போனது...என்ன பெரிசா சொல்லிடபோறோம்
என்ற உறுத்தல் வேறு..

எவ்வளவு பெரிய சாதனையாளனாக இருந்தாலும், வீட்டுக்காரிக்கு புருஷன் தான்..குழந்தைக்கு தகப்பன் தான். பணம் சம்பாதிப்பது தான் மரியாதை....பணத்தை திங்க முடியாது தான். ஆனால் பணம் இல்லாமலும் திங்க முடியாது. எல்லாத்துக்கும் பணம் வேண்டும்...?

சில கசப்புகள் வெளிச்சத்துக்கு வருவதேயில்லை. அதில் ஆண்களின் கண்ணிர்கதைகளும் பல உண்டு...

மற்றபடி நண்பர்கள் அனைவரும் நலமா...அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...