Thursday, February 18, 2010

பருத்தி பூக்கள்...!



அட...!! செடிகூட
முட்டையிட்டிருகிறதே...

எந்த நாகம் தீண்டியதோ..
நுரைதள்ளும் இச்செடியை

கதிரவன் தலை தூக்க
பனியெல்லாம் கரைகிறது.
கரையாத பனியாவென்று
கதிரவன் அனல் கக்க
வானம் பார்த்து பல்லிளிக்கும்
பருத்தி பூக்கள்...!

ஊருக்கே
உடையளிக்கும் இப்பூக்கள்
வெட்டவெளியில் அம்மணமாய்

2 comments:

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...