Friday, February 26, 2010

கீழ்த்தரமான மருத்துவர்கள்

சமீபத்தில் ஒரு மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. தர்மபத்தினி படியில் கால் சறுக்கி எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. நகரின் புகழ் பெற்ற எலும்பு நிபுணர். வழக்கமான ஸ்கேன் பரிசோதனை எல்லாம் முடித்து மாவு கட்டு போட்டார்கள். வலி குறைவதற்காக மாத்திரை எழுதிகொடுத்தார். கையில் கொண்டுபோன பணம் பற்றவில்லை என்பதால் மாத்திரையை அப்புறம் வாங்கி கொள்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.

வீட்டிற்கு வந்தபின் பணம் எடுத்துகொண்டு ஒவ்வொரு மருந்துகடையாக ஏறி இறங்கியும் அந்த டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரைகள் எங்கும் கிடைக்கவில்லை. கடைக்காரர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.

சார்...இது எங்கே ட்ரை பண்ணாலும் கிடைக்காது. அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் அல்லது அருகில் இருக்கும் மருந்துகடையில் தான் கிடைக்கும். இவர் எழுதி இருப்பதில் Tablet - ஐ குறிக்கும் T மட்டும்தான் தெரிகிறது. மற்ற எழுத்துகள் எதுவும் புரியவில்லை. இது ஒரு வியாபார தந்திரம். சிரமம் பார்க்காமல் அங்கேயே போய் வாங்கிகொள்ளுங்கள் என்றார்.


(அந்த டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டு)

மருத்துவர்களின் கையெழுத்து புரியாமல் இருப்பதற்கு அவர்கள் மெத்த படித்தவர்கள் என்பது தான் காரணம் என்று நினைத்திருந்தேன். ஒரு டிவி பேட்டியில் கூட பிரபல மருத்துவர் ஒருவர், நோயாளியின் தன்மையை பொறுத்து, அவர்களை குனபடுத்த கூடிய ஒரு 100 மருந்துகளின் பெயரையாவது மனம் ஞாபகபடுத்தும். அதில் சரியானவற்றை தோன்றும் போது வேகமாக எழுதுவதால் அவ்வாறு மருத்துவர்களின் கையெழுத்து கோணலாக இருக்கிறது என்றார். வியாக்யானம் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் அதற்க்கு பின்னால் இருக்கும் உள்குத்து, வியாபார புத்தி இப்போது தான் இந்த மரமண்டைக்கு எட்டியிருக்கிறது.

இதைவிட கொடுமை என்னவென்றால் ஒரு அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரின் அனுபவம். இவரும் ரொம்ப பிரபலமானவர் தான். இவரின் சிகிச்சைக்காக காத்திருக்கும் அமெரிக்கர்கள் ஏராளம். இவர் ஒரு நாள் விடுமுறை என்றாலும், அவர் வந்தபிறகு சிகிச்சைக்கு வருவதாக சொல்லும் அளவுக்கு அவர் கைராசிக்காரர். இந்நிலையில் அமெரிக்க வாழ்க்கை அலுப்பு தட்டவே இந்தியா வந்து செட்டிலாகும் ஆசையில் இந்தியா வந்திருக்கிறார். அவரின் பெருமையை பற்றி அறிந்திருந்த இங்குள்ள மருத்துவமனைகளின் முதலாளிகள் வழக்கம் போல், அவரை வளைத்து போட்டு கல்லா கட்ட முயற்சிதிருக்கிறார்கள்.

ஆறு இலக்க சம்பளம், கார், வீடு என்று சலுகைகளை அடுக்கி இருக்கிறார்கள். இவரும் பிரபலமான ஒரு மருத்துவமனையில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்க்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிய appointment letter கண்டதும் அதிர்ந்து பின்னங்கால் பிடரியில் பட அமெரிக்காவிற்கே ஓடி விட்டாராம். அதிலிருந்த விபரம் இது தான், ஒரு நாளைக்கு அவர் பரிந்துரை செய்ய வேண்டிய
ஸ்கேன் - 15 ,
இரத்த / சிறுநீர் பரிசோதனை - 10
ECG / ECP / இருதய பரிசோதனை - 5
ஆபரேஷன் - வாரம் 2
எழுதிதரவேண்டிய மருந்துகள் மற்றும் உபகரணங்களின் விபரம்.

மக்கள் சேவை மகேசன் சேவை என்ற போர்வையில் உலாவரும் வெள்ளுடை தரித்த கருப்பாடுகளின் லட்சணம் இது தான். கேட்டால் படிப்பதற்கே 50 லட்சம் செலவாகிறது. மருத்துவமனை கட்ட கோடி கணக்கில் செலவளித்த பணத்தையெல்லாம் நங்கள் எப்படி எடுப்பது என்ற கேள்வி வேறு. சாதாரண மக்களின் உயிரைபற்றி கவலைப்பட இங்குயாரும் இல்லை. சீட்டுக்கு 40 லட்சம் வாங்கும் கல்லூரி முதலைகள் பெரும்பாலனோர் மக்கள் தேர்ந்தெடுத்த அரசியவா(ந்தி)திகள் தான். வசூல்ராஜா M B B S என்ற படத்தின் பெயர் தங்களை கேவலபடுத்துவதாக உள்ளது என்று போர் கொடி தூக்கிய மருத்துவர்கள், ரமணா படத்தில் செத்த பிணத்தை வைத்து இவர்கள் செய்யும் அட்டூழியத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பொழுது வாய்மூடி கொண்டுதானே இருந்தார்கள்.




முன்பெல்லாம் நடுத்தர, சாதாரண மக்கள் பல சிரமங்களுக்கிடையில் நன்கு படித்து டாக்டராக உயர்ந்தார்கள். இன்றெல்லாம் அப்படியில்லை. புறம்போக்கு, பொறுக்கி, அரசியவாதி, உஊரையடிது உலையில் போடுவனின் வாரிசுகள் தான் டாக்டருக்கு படிக்க முடிகிறது. பின் எங்கிருந்து இவர்களிடம் சேவையை எதிர்பார்க்க முடியும்.

தங்கள் மகனையோ, மகளையோ டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற கனவோடு அரைவயிறு கஞ்சி குடித்து பணம் சேர்க்கும் வெகு சாதாரண மக்களே உங்களக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் நினைப்பது போல் டாக்டர் தொழில் ஒன்றும் அத்தனை புனிதமான நிலையில் இன்று இல்லை. அறைவயிரோடு நீங்கள் காணும் கனவெல்லாம் கோடி கொட்டி கட்டிய பணமுதலாளியின் மருத்துவமனை சுவர்களில் சிமெண்டிற்கு பதிலாக பூசப்படும். உங்கள் வாரிசு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கும் அரைவயிறு கஞ்சி என்றாலும் பரவாயில்லை. பணத்திற்காக நாளை அவனும் நம் போன்றோரின் இரத்தத்தை குடிக்கும் பணவெறி பிடித்த இரத்த காட்டேரியாக மாறாமல் இருந்தால் போதும்.

Wednesday, February 24, 2010

சச்சினின் உலக சாதனை...


நடந்து வரும் இந்திய - தென்னாப்பிரிக்க ஒருநாள் கிரிகெட் போட்டியில் அண்ணாத்தே
சச்சின் டபுள் செஞ்சுரி அடித்து உலக சாதனை புரிந்திருக்கிறார். தன்னை தாத்தா என்று கிண்டல் செய்த யுவராஜ்கும், எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கும் பல நிருபர்கள் மற்றும் கிரிகெட் ஜாம்பவான்களுக்கும் சரியான பதிலடி கொடுத்திருகிறார். இதுவரை யாருமே செய்யாத உலக சாதனை இது. இந்தியாவே தலைவணங்கி அவரை பாராட்டும் என நினைக்கிறன். முதல் பதிவாக இங்கே என் பாராட்டுகளை பதிவுசெய்கிறேன்.

நீண்ட நாட்களாக நமக்கொரு குறை ஒரு நாள் போட்டியில் கபிலின் அதிகபட்ச ரன், ரிச்சர்ட்சால் முறியடிக்கப்பட்டு, பின் அதுவும் சயத் அன்வரால் இந்தியாவிற்கெதிராக முறியடிக்கப்பட்டது. கபிலின் இழந்த பெருமை மற்றும் சயத் அன்வரின் இந்தியாவிற்கெதிரான சாதனை சச்சினாலோ, சேவாகலோ முறியடிக்கபடாத என்று. வந்தது அதற்கான நாள். உலக அரங்கில் இனி இந்தியனின் கொடி உயரபறக்கும். சாதனைகள் முறியடிக்கப்படும். அது எப்போதும் இந்தியனால் என்று தான் இருக்கும் இருக்கவேண்டும்.

இனிமேல் யாரும் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்காமல்
இருந்தால் சரி.

Monday, February 22, 2010

ரஜினி தலைமையில் அஜித் புதிய கட்சி துவக்கம்..!


போற போக்க பார்த்த வெகுவிரைவில் இது நடக்கும் போல தெரியுது...ரஜினியின் அமைதி யாரின் சிக்னலுக்காகவோ வெய்ட் பன்ற மாதிரி தெரியுது. சிக்னல் கிடைச்சிட்ட அப்பறம் அடி தூள் தான். ரஜினியின் ஆன்மிகம் மற்றும் அனுபவம் + அஜித்தின் இளமை கூட்டணி ஆட்சி கட்டிலை பிடித்தாலும் பிடிக்கும்.

அஜித் சொன்னது எந்த விதத்திலும் தவறில்லை. சொன்ன இடம் குறித்து நெருடல் ஏற்படத்தான் செய்கிறது. அதே சமயம் அந்த இடத்தை தவிர வேறு எந்த இடத்தில சொல்லியிருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்போ, விமர்சனமோ எழுந்திருக்காது. நேரிடையாக வீட்டில் சந்தித்து விளக்கமும் கொடுத்தாயிற்று..திரும்ப திரும்ப ஒரு நடிகரின் திருப்திக்காக இதை பெரிதுபடுத்தி, ரஜினி அஜித்க்கு ரெட் கார்ட் என்பதெல்லாம்
ஆளுங்கட்சிக்கே பிரச்சனையை கொடுத்தாலும் கொடுக்கும்.

ஊடகங்களின் வளர்ச்சி மக்களுக்கு எல்லா விஷயத்தையும் வெட்டவெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எந்த விஷயத்தால் ஒரு சாதாரண வாக்காளன் உணர்ச்சி வசப்படகூடும் என்பது புரியாத புதிர். ஒருவேளை ரஜினியை அரசியல் கட்சிகள் கட்டம்கட்ட ஆரம்பித்தால் ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பொங்கிவிடுவார்கள். ரஜினியின் இமேஜ் அப்படி.

இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ...

Thursday, February 18, 2010

பருத்தி பூக்கள்...!



அட...!! செடிகூட
முட்டையிட்டிருகிறதே...

எந்த நாகம் தீண்டியதோ..
நுரைதள்ளும் இச்செடியை

கதிரவன் தலை தூக்க
பனியெல்லாம் கரைகிறது.
கரையாத பனியாவென்று
கதிரவன் அனல் கக்க
வானம் பார்த்து பல்லிளிக்கும்
பருத்தி பூக்கள்...!

ஊருக்கே
உடையளிக்கும் இப்பூக்கள்
வெட்டவெளியில் அம்மணமாய்

Saturday, February 13, 2010

இலக்குகள் மிச்சமுண்டு இதயம் சிதறியபின்னும்..!!



நிகழ்வுகளின்
நெருக்குதல்களில்..
கைபிடித்த உறவும்
கைகொட்டி சிரித்தபின்
ஒளிந்துகொள்ள வழியின்றி..
தோல்வியை ஒப்புகொண்டாயிற்று

அம்மனமானபின்
கைகொண்டு எதைமூட...

சா(கு)ம் பிணங்கள்
சாவிற்கு அழும்,
பிணங்கள் அழுததுண்டா..!!

கல்வீசி சென்றவர்கள்
எல்லோருக்கும்
முகமோ முதுகோ
காட்டிவிட்டேன்.

நிராயுதபாணியின் தோல்வியில்
ஆதாயம் தேடிய முகங்களின்
கைகோர்த்து சிரித்த
பழையமுகவரிகள்
பத்திரமாகத்தான் இருக்கிறது

இலக்குகள் மிச்சமுண்டு
இதயம் சிதறியபின்னும்..!!

அம்மணத்தை தின்றவனின்
கைகொரு வைரகாப்பு
முதுகு பார்க்க
முப்பரிமான கண்ணாடி
கல்வீசிய சிநேகிதர்கெல்லாம்

என் செலவில் பரிசளிக்க
எனக்கான ஒரு நாளில்
நானே வருவேன்
மீண்டு(ம்)

பதிவர்களுக்கான மாத இதழ் வெள்ளிநிலாவில்
இக்கவிதை பிரசுரிக்கபட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

Friday, February 12, 2010

நான் தான்டா செங்கிஸ்கான்..!! (இது தமிழ்படம் பாகம் - 2 அல்ல)

செங்கிஸ்கானுக்கு இருப்பே கொள்ளவில்லை. ஒரே படபடப்பாக இருந்தது..இதுவரை இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியாகி விட்டது. ஒன்றும் முடிவாகவில்லை. ரிலீஸ் தேதி வேறு நெருங்கிவிட்டது. இன்று கடைசிகட்ட பேச்சவார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது டீல் ஓகே ஆக வேண்டும்.

செங்கிஸ்கானின் உண்மையான பெயர் நமக்கு தேவையில்லை. அகில உலக, அண்ட பேரண்ட, பிரபஞ்ச நாயகன் ஒருவர் உண்டென்றால் அது செங்கிஸ்கான் தான் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் புது புது பட்டங்கள் சூட்டி அழகு பார்ப்பது ரசிகர்களின் வழக்கம்...இதில் போட்டி வேறு யாரின் பட்டம் மிக உயர்ந்தது என்று. தேர்வு பெரும் பட்டதை சூட்டியவருக்கு நடிகரின் கையால் மோதிரமோ செயினோ நிச்சயம்..

பட்டங்களையும், கோடிகளையும் அள்ளியவர் அடுத்தடுத்த இரண்டு படங்களின் தோல்வியால் மிகவும் தடுமாறி போய்விட்டார். ஜால்ரா கூட்டம் வேறு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது...புது புது சுள்ளான்கள் எல்லாம் கூட்டம் சேர்த்து கொண்டு, தனக்கு பின்புறத்தை காண்பிப்பது போல் அடிக்கடி கனவு வேறு..

மிகப்பெரிய பட்ஜெட்டில் தானே ஒரு படத்தை தயாரித்து இழந்த இடத்தை பெறுவது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கிவிட்டார். கதைகென்று ஒரு 100 பேர் அடங்கிய குழு ஓன்று... உலகின் எல்லா திசைக்கும் பறந்தது. இறுதியில் ஒரு சீனா படத்திலிருந்து கதையின் ஒன் லைனையும், ஆப்ரிக்கா படத்திலிருந்து காமெடி காட்சிகளையும், ரஷ்ய படத்திலிருந்து சண்டை காட்சிகளையும், அமெரிக்க படத்தின் பிரம்மாண்டத்தையும் சுடுவதென தீர்மானிக்கப்பட்டு பூசையும் போடப்பட்டது. படத்தின் பேரில் ஒரு பயர் வேண்டுமென்றும், இன்றைய சுள்ளான்களுக்குகெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுத்து " நான் தாண்டா செங்கிஸ்கான் " என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சூட்டிங் மிக மிக ரகசியமாக நடத்தப்பட்டு காட்சிகள் வேக வேகமாக எடுக்கப்பட்டதற்கு ஏதோ ஏதோ காரணங்கள் வெளியே கசிந்தது. அதில் ஓன்று எந்தெந்த படத்திலிருந்து காட்சிகள் சுடப்பட்டது தெரிந்து விடக்கூடாது என்பது. மற்றொன்று இந்த படம் வெளிவருவதற்குள் திருட்டு DVD வந்து காரியத்தை கெடுத்து விடகூடாது. இந்த படம் புட்டுகிச்சுன்னா " அண்ணாதே கதி அதோ கதி தான்..."

எல்லாம் முடிந்து ரிலீஸ் தேதியும் குறித்தாகி விட்டது..ஆனாலும் ரஷ் பார்த்த நடிகர் திருப்தி படவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்...தனக்கு இனிமேல் எந்த பட்டமும் தேவியில்லை என்றும், பட்டங்களை இனி என் ரசிகர்கள் சூட்டவேண்டாமென்றும்.

உடனே நெருப்பு பத்திகொண்டது. கோடம்பாக்கம் முதல் ஹாலிவூட் வரை இதே பேச்சாக இருந்தது...பட்டம் இல்லாத கோலிவூத் நடிகரா..அதிசயம் என்று எல்லா தமிழ், தெலுங்கு, ஆங்கில, ஹிந்தி சேனல்கள் அலறின...ஆனால் எல்லாம் ஒரு இரண்டு நாள் தான். பின் அதை எல்லோரும் மறந்து விட்டார்கள். ரிலீஸ் இன்னும் ஒரு வாரம் இருந்தது...ஏதாவது செய்தாக வேண்டும்...?

அப்போது தான் எதிர்க்கட்சி தலைவரின் கைதடி ஓன்று தன்னை வந்து சந்தித்து ஒரு அருமையான திட்டம் சொன்னது...தனக்கும் சரி என்று படவே ஓவர் போனிலேயே டீல் நடந்தது...ஒரே இழுபறியாக இருக்கவே இன்று ரகசிய சந்திப்பிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செங்கிஸ்கானுக்கு அது தான் ஒரே டென்ஷன்..இன்று எப்படியாவது டீல் முடியவேண்டும்...சரியாக 11 .00 மணிக்கு தலைவர் வந்துவிட்டார். ஒருமணி நேர பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது..அட்வான்ஸ் தொகையாக 5 கோடி கைமாறியது..

அதன்படி அமெரிக்க அதிபர் பற்றி காரசாரமாக பேட்டி கொடுக்கவேண்டுமென்றும், தமிழ் நடிகைகளுடன் அவர்க்கு இருக்கும் தொடர்பு பற்றி அம்பலபடுத்த போவதாகவும் ஒரு பேட்டியில் செங்கிஸ்கான் கருத்து தெரிவித்தார். உடனே அமெரிக்கா முதல் அமைஞ்சிகரை வரை பற்றிகொண்டது...எதிர்க்கட்சி தலைவர் இதை ஒரு பெரிய தன்மான பிரச்சனையாக எடுத்துகொண்டார். எம் தமிழ் நடிகைகள் என்ன கற்பு இல்லாதவர்களா..ஒரு அமெரிக்கனின் ஆசைநாயகிகளா..ஐயகோ என் இரத்தம் கொதிக்கிறது...? எப்படி சொல்லலாம் அவர்...?

ஹாலிவூட் நடிகர்கள் வேறு வெள்ளைமாளிகை நோக்கி பேரணி நடத்தி மனு கொடுத்தார்கள். அமெரிக்கா இதில் மூக்கை நுழைத்து, ஆளுங்கட்சிக்கு பெரும் தொல்லை கொடுத்தது..... எதிர்பார்த்த மாதிரி படம் ரிலீஸ் ஆனது...கூட்டம் அலைமோதியது.. இரண்டொரு வசனங்கள் வேறு தீபொறி பறப்பதாக இருந்தது..ரசிகர்கள் உயிரை கொடுத்து படத்தை பார்த்தார்கள். செங்கிஸ்கானின் வசனங்கள் டீக்கடை முதல் சட்டசபை வரை எதிரொலித்தது..."செங்கிஸ்கான் மீண்டும் சிம்மாசனத்தில்" என்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள்...

எதிர்கட்சி தலைவர் தன்னை அவசரமாக பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்தது. படத்தின் வெற்றியை கொண்டாடவும், அடுத்த படத்திற்கு மனதை பிரெஷ்ஷாக்கவும் ஆல்ப்ஸ் மலை புறப்பட விருந்த நடிகர் உடனே திரும்பினார். தலைவர் சொன்னதைகேட்டு மயக்கம் வராத குறைதான். 10 கோடி பேசி 5 கோடி அட்வான்ஸ் வாங்கிவிட்டு இப்போது மேலும் 10 கோடி வேண்டுமென்று அடம்பிடித்தார். ஆளும்கட்சிக்கு நம் விஷயம் தெரிந்து விட்டதென்றும் அவர்கள் தங்கள் பங்காக 10 கோடி கேட்கிறார்கள் என்றும் காரணம் சொன்னார். இல்லையென்றால் வருமான வரி சோதனை வந்து மொத்தமும் அள்ளிவிடுவார்கள். வேறு வழியில்லாமல் அழுது தொலைத்தார்.

சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்தது. அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்ட தொடங்கினார்கள். நடிகர் எல்லாத்தையும் ஓரங்கட்டி மீண்டும் ஆல்ப்ஸ் மலைக்கு
பயணபட்டார். ஏர்போர்டில் விமானத்திற்கு காத்துகொண்டிருக்கும் பொழுது அல்லக்கை ஓடிவந்தார். சார் வீட்டிலிருந்து போன். அவசரமாம் சார்.

போனை வாங்கி "ஹல்லோ" என்றவர் விஷயத்தை கேட்டதும் மயங்கி விழுந்தார்.

தண்ணீர் தெளித்து எழுப்பினர். அரக்க பரக்க வெளியே வந்து வண்டி எடுத்தார். வருமான வரி சோதனைக்காக அதிகாரிகள் வந்திருப்பதாக வந்த போன் தான் அது. யோசித்து கொண்டே வந்தவர் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். ஏதோ யோசித்தவர்
"அது தான் சரி" முடிவுக்கு வந்தவராய் அவரின் ஆஸ்தான கவர்ச்சி நாயகி போர்ஷாவிற்கு போன் செய்தார்.

"ஆமாம்"
"அதனால் தான்"
"நான் பார்த்துகிறேன், தெரியாது என்று சொல்"
ஓக்கேவா...ஓகே ஓகே.."

மறுநாள் செய்திதாளில் ரசிகர்களின் இதய தெய்வம் செங்கிஸ்கான் வீட்டில் வருமான வரி சோதனை கோடிகணக்கான பணம், சொத்துக்கான ஆவணங்கள் மீட்பு - தலைப்பு செய்தியாக இடம் பெற்றது.

இரண்டாம் பக்கம் " நடிகர் கண்ணீர் பேட்டி - நான் அப்பாவி, அவை என் சொத்துகளல்ல நடிகை போர்ஷாவினுடையது. நானும் அவரும் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதாகவும் அவர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும்.....

(மீதி வெள்ளித்திரையில்)

டிஸ்கி :
இந்த படத்தில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. யாரையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிடுவன அல்ல.

Thursday, February 11, 2010

களத்துமேட்டில் ஒரு கருப்பு இட்லி...!!



களத்து மேட்டில் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு கருப்பு இட்லியகாத்தான் பார்த்ததும் நினைக்க தூண்டியது. அளவு மட்டும் கொஞ்சம் பெரிது. பெரிது என்றால் இரண்டு பேர் உட்காரக்கூடிய அளவு இருக்கும்.

குட்டைகாலன் தான் முதல்ல பார்த்து, பயந்து அரக்க பரக்க ஓடி வந்து பண்ணைக்கு தகவல் சொல்லியிருந்தான் .

"காலம்பர வெளிக்கு ஒதுங்க வந்தேன். என்னமோ கருப்ப கிடக்கேன்னு தொட்டேன், கைய சுட்டுபுடுச்சு ஆத்தா, இங்க பாரேன்.." புதிதாக வரும் ஒவ்வொருவரிடமும் சொல்லிகொண்டிருந்தான். இதையே கேட்டு கேட்டு காதில் ரத்தம் வர தொடங்கியது...ஏலே சித்த நிறுத்துடா...சும்மா லோ லோ - ன்னுகிட்டு.

மணியகாருக்கு தகவல் போயாச்சா...பண்ணை உரத்த குரலில் கூடியிருந்தவர்களை பார்த்து கேட்டார். தகவல் சொல்லியாசுங்க, அவரும் போலிசுக்கு தகவல் சொல்லி அப்படியே கூட்டியாரக்கு போயிருக்கிராருங்க...சொல்ல சொல்லவே ஜீப்பின் ஹாரன் சத்தம் கேட்டது.

வெறும் 100 தலைக்கட்டு உள்ள சாதாரண கிராமம் இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் இங்கு தான்.

எம்ஜியாரு தான் இங்க முத முதல்ல வந்தாரு. தண்ணி குழா எல்லாம் அவரு போட்டது தான். இப்ப யார் யாரெல்லாமோ வரபோராவுகலாம் ஊரே தடா புடலாக இருந்தது. பண்ணைக்கு இருப்பு கொள்ளவில்லை. இரண்டு நாளாக வரும் போனிற்கு பதில் சொல்லி நாவே வறண்டு போய்விட்டது.

அவர்கள் வாழும் கிராமத்தின் தோற்றமே மாறிபோய்விட்டதில் மணியகாரர் ராமசாமி கவுண்டருக்கு ரொம்பவே வருத்தம். எப்போதும் ஒரு அமைதியான தோற்றத்தை கொண்டிருக்கும் கிராமம் இந்த இரண்டு நான்கு நாட்களாக அல்லோல பட்டுகொண்டிருக்கிறது. பெரிய பெரிய கார்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. புதிய புதிய முகங்கள். யாருக்கும் மரியாதை தெரியவில்லை. பூட்சு போட்டுகிட்டு தான் எல்லா பக்கமும் போறானுங்க... கையில் ஒரு முழத்துக்கு சிகரெட் வேற...அவரின் தோட்டத்துக்கு மத்தியில் தான் அந்த சனியன் வந்து உட்கார்ந்திருக்கு...அவரால் கூட அந்த பக்கம் போக முடியவில்லை. கிராமத்து ஆள் யாரும் அந்த பக்கம் வரகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவரின் மூத்த மகன் சுரேஷ் மட்டும் அவர்களுக்கு உதவியாக அங்கே வைத்து கொண்டார்கள். பட்டினத்துக்கு படிக்க அனுபினதுக்கு இது தான் கண்ட பலன். அவர்கள் கூட சேர்ந்து எங்கே பையன் கெட்டுவிடுவானோ என்று பயம் வேறு. அவன் அப்போ அப்போ வந்து தகவல் சொன்னால் தான் உண்டு.

மஞ்சகாடு அறுவைக்கு தயார நிக்குது...அங்கனே போக முடியல.." ரொம்ப சலித்துகொண்டாள் கவுண்டச்சி. என்னபுள்ள பன்றது...கெடக்கட்டும் விடு..நஷ்டஈடு தந்திடுவாங்கலாமில்ல. கவுண்டர் சமதானபடுதிகொண்டார். சுரேஷ் தான் வந்து தகவல் சொல்லி இருந்தான். சுத்துபாட்டு ஒரு கிலோமீட்டர் அவங்க கண்ட்ரோல்ல எடுத்துக்குவான்கலாம். நஷ்டத்தை ஈடு கட்டிருவான்கலாம். அங்கனே யாரும் வரக்கூடாதாம்.

பணப்புழக்கம் இந்த நாட்களில் தாரளமாக இருந்தது. ஊரில் இருந்த ஒரே மளிகைக்கடைக்கு ஜெனியின் அப்பா சுப்பையா டேவிட் தான் முதலாளி. சுப்பையா தான் அவர் பெயர். சென்னையிலிருந்து வந்திருந்த கத்தோலிக்க பாதிரியாரால் மதம் மாறி டேவிட் என்று வைத்து கொண்டார். அந்த பெயருக்கும் அவருக்கும் எந்த தொடர்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. பின் அவரே சுப்பையா டேவிட் மளிகை என்று கடைக்கும் மதம் மாற்றம் செய்து ஞானஸ்தானம் செய்வித்து விட்டார். ஜெனியும் இப்போது அங்கு தான் விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருந்தாள். ஜெனி அருகிலிருந்த டவுனுக்கு சென்று 12 - வது வரை படித்திருந்தால். 17 வயதின் செழுமையுடனும் இளமைக்கே உண்டான துடிப்புடனும் இருப்பவள். ஏனோ துரு துரு என்றிருக்கும் சுரேஷும் ஜெனியும் மாணிக்கம் பிள்ளைக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் கிராமத்தை பற்றி இரண்டு பேரும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார்கள்.

நடக்க போகும் விபரீதம் யாருக்கும் புரியவில்லை.

-------------------------------------------------------------------------------------
ஒரு மலரின் நறுமணம் தீடிரென்று தன்னை தாண்டி செல்வதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் அது எந்த மலரின் நறுமணம் என்று வகைபடுத்த முடியவில்லை.

ரோஜா...இல்லையில்லை மல்லிகை - சுரேஷ்
நோ நோ இட்ஸ் ஜாஸ்மின் என்றாள் ஜெனி. தாமரை மாதிரி இருக்கு என்றார் மாணிக்கம்.

எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து வந்தது என்று ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். அது ஒரு 20க்கு 20 அடி அளவுள்ள அறை. வருவதற்கு ஒரு வழி தான். ஒரே குழப்பமாக இருந்தது. இரண்டு நாட்களாகவே குழம்பி கொண்டுதான் இருந்தார்கள். அதற்க்கு காரணம் இருந்தது.

நல்லாம்பாளையம் கிராமத்தில் வந்திறங்கிய பறக்கும் தட்டு பல பேரின் தூக்கத்தை கெடுத்ததோடில்லாமல், யோசித்து யோசித்து மண்டை காய வைத்து கொண்டிருந்தது. விடை தான் கிடைத்த பாடில்லை.

வந்திரங்கியிருப்பது பறக்கும் தட்டு தான். - எங்கிருந்து வந்தார்கள்...?
யாரும் வெளியே இறங்கி வந்தார்களா..? வந்திருந்தால் எங்கே போனார்கள்...? மண்ணில் வந்திறங்கி இரண்டு நாள் ஆகியும் அதை தொட முடியவில்லை, தொட்டால் பயங்கரமாக சுடுகிறது. இரண்டடி தொலைவில் நின்று தான் பார்க்கமுடிகிறது. அருகில் நெருங்க முடியவில்லை. அப்படியென்ன ஒரு மெக்கானிசம் இது..? வந்தவர்களின் நோக்கமென்ன...? தானியங்கி விமானம் போன்றதா இல்லை ஆட்கள் அல்லது உயிரினங்கள் ஏதாவது வந்திருக்குமா..எண்ணற்ற கேள்விகள்... யாருக்கு பதில் தான் தெரியவில்லை.


அவசரமாக ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டம். மாவட்ட காவல்துறை அதிகாரி முதல் உள்துறை அமைச்சர் முதல் கொண்டு இறுகிய முகங்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். சில வெள்ளைகார முகங்களும் அடக்கம். மந்திரி தான் பேச்சை துவக்கினார். தெளிவான ஆங்கிலத்தில் அமைதியாக பேசினாலும், அவர் கோபத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது.

இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் விசாரணையிலும், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியிலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் நம்மை இந்த விஷயத்தில் எதிர்நோக்கி இருக்கிறது. பிரதமரும் இரெண்டொரு நாளின் வரக்கூடும் என எதிர்பார்கிறேன். சொல்லுங்கள் அந்த வஸ்துவின் நிலை குறித்து உங்கள் கருத்தென்ன..அது பறக்கும் தட்டு என்பதும், அதில் அயல்கிரக உயிரினங்கள் வந்திருக்க கூடும் என்பது உண்மை தானா. ஏன் அதன் அருகில் நெருங்க முடியவில்லை...?

60 வயது மதிக்கத்தகுந்த ஒருவர் எழுந்தார். காதோரம் ஒரு சில நரை முடிகளை தவிர அரைவட்ட நிலவை கவிழ்த்தது போல் இருந்தது அவரின் "பள பள" தலை. மாணிக்கம் பிள்ளையின் சொந்த ஊர் சென்னை. வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான்.
"செவ்வாயில் மனிதனின் காலடி" என்ற அவரின் ஆராய்சிக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்டவர். பழுத்த விஞ்ஞானி, கணீரென்ற குரலில் அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார்.

சார்...நடந்த, நடக்கின்ற, நடக்கபோகின்ற எந்த ஒரு விஷயமும் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. ஒரு மிகபெரும் அசம்பாவிதமும் நடக்கலாம். எதுவும் நடக்காமலும் போகலாம். பறக்கும் தட்டை நெருங்க தகுதியான எந்த ஒரு கவச உடையோ, கருவியோ கூட நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே மனித அறிவின் இயலாமையை, அறியாமையை உங்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன். அதில் இருந்து வெளியாகும் வெப்பம் மிக அதிகம், இரண்டடி வரை தள்ளி நிற்க வேண்டிய நிலைமை. அப்படியே நெருங்கினாலும் அதை திறக்கவோ, கழட்டி ஆய்வு நடத்தவோ முடியும் என்று தோன்றவில்லை.

எங்களுக்கு கிடைத்த சில குறிப்புகள் என்ன என்பதை இஸ்ரேலில் இருந்து வந்திருக்கும் ஸ்டீவ் ராபர்ட்சன் உங்களுக்கு விளக்குவார்.

நெடு நெடுவென்று ஆறரை அடி வளர்ந்திருந்த வெண்ணிற தாடியுடன், பளீர் என்ற புன்னகையுடன் எல்லோருக்கும் காலை வணக்கத்தை சொல்லி ஆரம்பித்தார் ஸ்டீவ்.

அது வந்து இறங்கி நான்கு நாட்கள் ஆகிவிட்டது. எந்த ரேடாரிலும் பதிவானதாக தகவல் இல்லை. யாரும் நெருங்கமுடியாத அளவிற்கு அதிலிருந்து வெப்பம் வெளியாகிறது. ஆனால் அதன் கீழிருக்கும் செடிகள் கருகவில்லை. அதன் மேல் அணைந்து அணைந்து எரியும் விளக்குகள் அவர்கள் கிரகத்திலிருந்து தகவல்களை பெறுவதற்காக இருக்கலாம். அல்லது அதிலிருந்து வெளிய வந்தவர்களுக்கு அதிலிருந்து தகவல் செல்வதோ பெறுவதோ நடக்கலாம். எல்லாம் உத்தேசம்தான். கிராமத்தின் எல்லா பக்கத்திலும் ஆட்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு சிறு அசைவையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். சடிலைட் மூலமாகவும் கண்காணிக்கபடுகிறது. இதுவரை எந்த ஒரு சிறு வித்தியாசமான சம்பவமும் நடந்ததாக தெரியவில்லை.

கோர்வையாக அவர் பேசி நிறுத்தியதும் ஒரு அமைதி நிலவியது. சட்டென்று ஒரு நறுமணத்தை அங்கிருந்த எல்லோரும் உணர தொடங்கினர். எந்த மலரின் வாசனஎன்று உணர முடியவில்லை. ஒரு கலவையாக இருந்தது. ஒருவரையொருவர் முகத்தை பார்த்து கொண்டு ஏதோ...ஸ்மெல் என்று ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பிள்ளை "சைலென்ட்" என்று அலறினார். கூர்மையாக கவனிக்க தொடங்கினார்.

இன்று இரண்டாம் முறையாக இந்த வாசனையை உணர்கிறேன். எந்த முகாந்திரமும் இல்லாமல் வரும் வாசனை. ஒருவேளை அவைகள் இங்கு நடமாட கூடும். மாணிக்கம் சொல்லி நிறுத்தியதும் எல்லோர் முகத்திலும் ஒரு கணம் பயம் வந்து போனது.

-------------------------------------------------------------------------------------

எஷ்னோ..எஷ்னோ..நாம சரியாய் லேன்ட் பண்ணிவிட்டோமா... டார்கெட் இது தானே. .நிச்சயம் இது தான்...நாம் சரியாய் வந்து விட்டோம் தநோயக்.

பூமியின் கால கணக்குப்படி நமக்கு சரியாய் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நாம் வந்த வேலை முடிய வேண்டும். யாரும் டிஸ்கை (பறக்கும் தட்டு ) நெருங்க முடியாதபடி fire alarm ஆன் செய்துவிடு. எல்லா சாம்பிள்களையும் கலக்ட் பண்ணவேண்டும். பட்டியலை சரி பாதியாக பிரித்து ஒரு பகுதியை நீ வைத்து கொள். அதன்படி பொருட்களை சேகரி. மீதி என் பொறுப்பு.

சரியாக 5000 மீட்டர் வரை நீ போகலாம். அதற்கு பின் உன் தொடர்பு அறுந்துபோகும். ஜாக்கிரதை...டிஸ்கின் தொடர்ப்பு போய்விட்டால் உன் உருவம் மனிதாகளின் கண்ணுக்கு தெரிந்து விடும்.

இரண்டு உருவங்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கி அந்த கிராமத்தின் இரு வேறு திசைகளை நோக்கி நடக்க தொடங்கியது. ஆனால் யார் கண்ணிலும் அது படவில்லை. அவை தங்களை தாண்டி செல்லும் போது ஒருவித மலரின் வாசனையை மனிதர்கள் உணர்ந்தார்கள். அதற்கு காரணம் தெரியவில்லை.

இரண்டு உருவங்களும் மனித உடலமைப்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஒரு உருளையை போல் இருந்தது. அந்த உருளையிலிருந்து எண்ணற்ற கை போன்ற, கால் போன்ற அமைப்புகள் வெளியே நீட்டிகொண்டிருந்தது. அவை தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. மனிதன் ஒரு காபி கோப்பையை எப்படி கை நீட்டி எடுகின்றானோ அது போல். ஆனால் ஒரு வித்யாசம். மனிதனுக்கு கை நிரந்தரமாக தொங்கி கொண்டிருக்கிறது. இந்த உருவங்கள் வேண்டும் போது அதை உபயோகபடுதிகொண்டன. தேவை இல்லாத போது அவைகளை உள்ளிழுத்து கொண்டது. அவை தரையில் உருண்டன...நின்றபடியும் அவைகளால் நடக்க முடிந்தது. உருளையின் உச்சியில் மனித தலையை போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் முடியோ, கண், காத்து, மூக்கு எதையும் காணமுடியவில்லை. உச்சியின் மத்தியில் ஒரு சிறிய பல்பை போன்று தெரிந்தது. ஒருவேளை அது கண்ணாக இருக்கலாம். நான்கு அடி வரை உயரம் இருந்தது. ஆனால் தேவைபட்டால் அவற்றால் உயரமாக முடியும் போல் தெரிந்தது. அவைகளின் குரல் மிக மெதுவாக ஒரு தாள லயத்தில் இருந்தது. ஒன்றின் பெயர் எஷ்னோ, மற்றொன்று தநோயக்.

அவற்றின் உருவம் மனித கண்களுக்கு புலப்படவில்லை.

-------------------------------------------------------------------------------------

காலை முதலே சுரேஷிற்கு எதோ விபரீதம் நடக்க போவதாக புரிந்தது. விஞ்ஞானிகளுக்கான கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க பட்டதாக தெரியவில்லை. நமது விஞ்ஞான அறிவிற்கும் மேற்பட்ட ஏதோவொன்று, நம்மை ஆளுமை செய்ய தயாராகிவிட்டதன் அறிகுறி என்று எல்லோரும் பேசி கொண்டார்கள். எப்படி அதன் தாக்குதல் இருக்கும் என்றும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில் ஒரே குழப்பம் தான் நிலவியது. கோவையிலிருந்து எந்நேரமும் இராணுவம் வரல்லம் என்றும் எதற்கும் தயாராக இருக்கும்படி இந்திய இராணுவம் அறிவுருத்தபட்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.

மதியம் 03 :00 மணி.

மதிய உணவை முடித்துவிட்டு ஆராயசிகூடதிற்கு சென்று கொண்டிருந்தான். சுற்றிலும் கரும்பும் மற்றொருபுறம் வாழையும் பயிரிட்டிருந்தார்கள். காற்றின் அசைவினால் ஏற்பட்ட சலசலப்பை தவிர எந்தவொரு ஓசையும் இல்லை. ஒற்றை நாரையொன்று வடக்காக கத்திக்கொண்டு சென்றது. காலையில் உணர்ந்த அதே வாசனை காற்றில் உணரமுடிந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தான். மனதை ஒருமுகபடுதி ஏதாவது அருகில் தென்படுகிறதா என்று பார்த்தான்.

தனக்கு மிக அருகில் ஏதோவொன்று நிற்பதாக உணரமுடிந்தது...ஆனால் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. இதயம் வேகமாக அடித்துகொண்டது. இதய படபடப்பு வெளியே கேட்கதொடங்கியது.

திடீரென்று நெற்றியில் மின்சாரம் தாக்கியதை உணர்ந்தான். அம்மா...என்றலரளோடு மயங்கி சரிந்தான்...

மதியம் 05 : 00 மணி

இரண்டு மணி நேரமாக சுரேஷை காணவில்லை என்றதும் மாணிக்கம் பிள்ளை முதல்முறையாக விபரீதத்தை உணர்ந்தார். ஒருவேளை வீட்டில் இருப்பானோ..? ஆளனுப்பி விசாரிக்க முடிவு செய்தார். நம்மாட்களை அனுப்பி விசாரிக்க செய்தால் ஒருவேளை கிராமத்தார் பதற்றமடைய கூடும். யாரை அனுப்பலாம்...சட்டென்று ஜெனியின் ஞாபகம் வந்தது. ஆம்...அவள் தான் சரியான ஆள்.

ஜெனி..உனக்கொரு அவசர வேலை. சுரேஷ் மதிய உணவிற்கு சென்றவன் இன்னும் வரவில்லை. கொஞ்சம் அழைத்து வருகிறாயா...அவசரம். ஓகே...சார். ஒரு வேளை தூங்கியிருந்தாலும் இருப்பார். நான் போய் அழைத்து வருகிறேன்.

புள்ளிமானாய் விரைந்தாள் ஜெனி.

வரப்பில் நடந்து வந்தவள் மாலை நேர வெயில் பட்டு, தொலைவில் ஏதோவொன்று மின்னுவதை கண்டு அங்கே ஓடினாள். குனிந்து எடுத்தவள் இது..சுரேஷ் சார் வாட்ச் ஆச்சே...ஒருவேளை இந்த வழிய போகும்போது தவற விட்டாரோ..? எடுத்து மடியில் சொருகுகி கொண்டு ஒரு அடி எடுத்துவைக்க தொடங்கியவள் ஒரு கணம் நின்றாள்...அதே மணம்...இது என்று யோசிக்க...தன்னை யாரோ இழுப்பது தெரிந்தது..கையை உதறிக்கொண்டு ஒரு அடி பின் நகர்ந்தாள்...யாரும் தென்படவில்லை. மனப்ரந்தியா..இல்லை தான் இழுக்கப்பட்டது உண்மையா... லேபிற்கே போய் விடலாமா..? மாணிக்கம் சார்க்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே நெற்றியில் சூடாக ஏதோ பட்டது போல் இருந்தது..கையை கொண்டு தேய்க்கும் வினாடி நேரத்திற்குள் மயங்கி விழுந்தாள்.

(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...)

Monday, February 8, 2010

இது பெண்களுக்கான பதிவு...!!



இது பெண்களுக்கான பதிவு என்ற தலைப்பில் இடம் பெறுவதால் ஆண்கள் படிக்க கூடாது என்று அர்த்தமல்ல. பெண்களுக்கான பதிவு என்பதால் ஆண்கள் யாரும் படிக்க போவதில்லை என்றும் நான் நினைக்கவில்லை. எழுதும் நானே ஒரு ஆண் என்பதால் என் அனுபவத்தில் சொல்லும் சில விஷயங்கள் உங்களில் பலருக்கும் ஒத்து போகலாம். சிலர் முரண்படுவார்கள் என்பதையும் நானறிவேன். சமீபத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், சீர்கேடு அடைந்துவரும் குடும்ப உறவுகள், சமுதாயத்தில் நிலவும் பொறுப்பற்ற வணிகம் சார்ந்த சாதக, பாதகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் குறித்தான ஒரு விரிவான பார்வையை முன் வைக்க நினைத்தே இந்த பதிவு.


உலகம் கண் முன்னால் விரிந்துபட்டு கிடக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி, இருபது, இருபத்தைந்து வருடங்களாக கடுமையான உழைப்பின் பலனால் தான் பெற்ற வாழ்வின் அதிகபட்ச ஊதியத்தை, இன்று இளைய தலைமுறை கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடனே வாங்க தொடங்கி விடுவதன் பிரமிப்பால் எதையும் ஆலோசனையாக கூட சொல்ல முடியாத நிலையில் பெற்றோர்கள், ஏற்று கொள்ள விரும்பாத இளசுகள். ரசனைகள் முற்றிலும் மாறிபோய்விட்ட நிலையில் அதன் விளைவுகளையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டிய சூழ்நிலை கைதிகளாக நாம்.


அதிகார மனோபாவம் என்பது பணிசார்ந்த விஷயமாகி, நடைமுறை சமுதாயத்திற்கும் பரவி, இன்று இயல்பான குணமாகவும் மாறி போய்விட்டது. வீட்டில் எலி, வெளியே புலி என்பது போய் இன்று எப்போதும் புலியாக உருமிகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன...? அதனால் அடைந்து விட்டிருப்பது என்ன..?
முந்தய தலைமுறை வரை நம்மவர்களுக்கிருந்த சகிப்புத்தன்மை என்கிற ஒரு வஸ்து இன்று காணாமலே போய்விட்டது. "ஜஸ்ட் லைக் தட்" என்கிற மேற்கத்திய கலாசாரத்தின் வரவால் நாம் பெற்று கொண்டதை விட இழந்தது மிக அதிகம். அத்தகைய இழப்புகளில் ஓன்று தான் இந்த சகிப்புத்தன்மை. எடுத்ததுமே இந்த சகிப்புத்தன்மையை பற்றி பேசி உங்களை இம்சிப்பதற்கு காரணம் பெண்கள் மிக மிக அவசியமாக கொள்ளவேண்டிய ஒரு குணம் இது. கிட்டத்தட்ட இது அவர்களின் ஒரு உடலின் பாகமாக தான் இருந்திருக்கிறது முந்தய காலங்களில். " பொண்ணு ரொம்ப அமைதியான குணம் " , " முகத்தை பார்த்தாலே சாந்தமா, மகாலக்ஷ்மியாட்டம் இருக்க போங்கோ " என்றெல்லாம் பெண் பார்க்கும் வீடுகளில் எப்போதும் நாம் கேட்கும் வார்த்தை இது. ஆனால் இன்று இது ஒரு குறையாக கருதபடுகிறது. பொண்ணு active - அ இல்லமா.. ரொம்ப டல்லடிச்ச மாதிரி இருக்கா.."

கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து போய்விட்டத்தின் எதிரொலியாக நமக்கு கிடைத்திருக்கும் தனி மனித சுதந்திரத்தை அனுபவிக்க கூட முடியாமல் மனநெருக்குதலுக்கு உள்ளாக்கும் பொருளாதார சுமைகள், கூடுதல் பொறுப்புகளால் விழிபிதுங்கும் நிலையில், போட்டி நிறைந்த வியாபார உலகில் நீடித்திருக்க மேற்கொள்ளபடுகின்ற அலுவலக நடைமுறைகள் நம்மை மேலும் சோர்வடைய செய்வதுடன் ஒரு தன்னிரக்க நிலைக்கு தள்ளப்பட்டு, தன்னை தவிர உலகில் எல்லோரும் சுகமாக இருக்க தனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை என மனம் வெம்ப செய்கிறது.

சரி இதெல்லாம் பொதுவான இன்றைய யதார்த்த உலகின் அம்சங்கள் தானே, இதில் ஆண்பால், பெண்பால் எங்கு வந்தது...? உங்கள் கேள்வி நியாயம் தான். நாம் இழந்ததை எல்லாம் பெண்கள் நினைத்தால் தான் திரும்ப பெறமுடியும் என்பதால் தான் இந்த பதிவு பெண்பாளிர்கானது என்று தலைப்பிட்டேன். பெண்களால் மட்டும் தான் என்று கூட நான் குறிப்பிடலாம். ஆனால், அதனாலேயே முளைத்துவிட காத்திருக்கும் கொம்புகளுக்கு நான் வேலை கொடுக்க போவதில்லை. அதே சமயம் ஆண்களுக்கென்று எந்த பொறுப்பும் இல்லையென்று அர்த்தமல்ல. பெண் எடுக்கும் ஒரு முயற்சிக்கு ஆண் துணை நிற்பான் என்ற நம்பிக்கை தான்.

" If you are not going to be a looser, why dont you try something new "

இந்த வாசகத்தை எப்போதாவது கேள்விபட்டிருகிரீர்களா...? இப்போது நான் சொல்லபோவதும் இது தான். 3 ரூபாய் கொடுத்து வாங்கும் தினசரி அன்று மதியமே கிழிபடுவது போலதான். ஒருமுறை இதை படித்துவிட்டு மறந்தாலும் சரி, மண்டையில் ஏற்றினாலும் சரி. நீங்களோ நானோ இழக்கபோவது எதுவுமில்லை. ஏதாவது கிடைத்தா என்பதை உங்கள் பின்னூட்டம் தான் சொல்லவேண்டும்.

மிக படித்தவர்கள் வாழும் கேரளாவில் இன்றைய விவாகரத்து நிலவரம் என்ன தெரியுமா. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட சதவிகிதம் 350%, இதற்கு அடுத்து தான் டெல்லி மற்றும் பெங்களூர். ஒட்டுமொத்த இந்தியாவின் விவாகரத்து சதவிகிதம் அதிகரித்து கொண்டே போவதாகவும் ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அதிகமான படிப்போ, வங்கி கணக்கை நிரப்பும் ஐந்து இழக்க சம்பளமோ தொலைத்து கொண்டிருக்கும் உங்களின் நிம்மதியையும், கனவுகளை கருவாக்கி சுமந்த வாரிசின் பாதுகாப்பற்ற எதிர்கால வாழ்க்கையையும் உங்களின் ஒரு நிமிட சகிப்புதன்மை மீட்டெடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பொறுமையோ, விட்டுகொடுதலோ அவமானமல்ல..அது காதலின் உச்சகட்டம். அதிகார போட்டி, பணப்போட்டி, ஆணவ போட்டி இதெல்லாம் உங்களக்கு தெரியும். சிலருக்கு இயல்பான குணமும்மாக கூட உண்டு. விட்டுகொடுதலில் யாரேனும் போட்டி இட்டதுண்டா...முயற்சி செய்து பாருங்கள். அதன் இனிமை புரியும். காதலின் இன்னொரு பரிணாமும், அதன் நீட்சியாக நீங்கள் மலர்வதை உங்களால் உணர முடியும். காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற ஓஷோவின் தத்துவார்த்தம் இதே தான் சொல்கிறதோ என்னவோ.

ஏன் தாய்வழி பாட்டியும், தாத்தாவும் எப்போதும் சண்டையிட்டு கொண்டையிருப்பர்கள். ஆனால் வயதாக வயதாக அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு விட்டுகொடுத்தல் இருந்தது. "தாத்தா எனக்கு முன்னாடியே போய் விடணும். பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது" என்பார் பாட்டி. தாத்தாவோ எனக்கு முன்னாடியே அவ போய்டணும், நான் போய்ட்ட அவள கஷ்டபடுதிருவாக" என்பார். அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அவர்களின் அன்பும் காதலும், அவர்களுக்குள் இருந்த விட்டுகொடுத்தலும். அவர்கள் சண்டை இட்டது தங்களின் ஈகோவை திருப்தி படுத்த. மற்றபடி அவர்களுக்குள் அந்தரங்கமாக இருந்த விட்டுகொடுதலை அவர்கள் யாருக்கும் சொல்லி கொண்டிருக்கவில்லை.

பணம் பணம் என்று அலைகிறோமேயொழிய அதை ஆளுமை செய்யகூடிய திறன் 99% பேருக்கு கிடையாது என்பது தான் கசப்பான உண்மை. இதைதான் நம்ம சூப்பர் ஸ்டார் முத்து படத்தில்

"கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்க்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்று பாடினார்.

கழுத்து வரைக்கும் காசு இருந்தாலும் அதற்கு எஜமானனாக இருக்க கூடிய பக்குவம் நம்மில் பலருக்கும் கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஆணோ பெண்ணோ கை நிறைய சம்பாரிப்பது சந்தோசம் தான். ஆனால் அதற்கு விலையாக நீங்கள் கொடுப்பது உங்களின், உங்களை சார்ந்தோரின் அமைதியான வாழ்க்கையை. எப்படி வேண்டுமானாலும் வாழ்வது மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு சரி. நம் கலாசாரத்திற்கு அது ஏற்றதல்ல. இன்னும் சொல்லபோனால் அவர்களே கூட நம் கலாசாரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பது அதில் எங்கோ தவறிருக்கிறது என்பதை தான் நமக்கு காட்டுகிறது. காசை தண்ணீராய் செலவழிப்பதும், பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற ஹீரோயிச மனோபாவத்தால் இன்றைய இளைஞர்கள் பிரச்னைகுள்ளாகிரார்கள். இன்னொரு பக்கம் காசை சிக்கனமாக சேர்த்து வைப்பவர்களும், சேமித்து சொத்து சேர்ப்பவர்களும் தலையில் கொம்பு முளைத்தது போல் திரிகிறார்கள். தவறுகளை திரும்பி பார்கவோ, திருத்தி கொள்ளவோ நேரமில்லாத வேகமான உலகில் இழப்புகள் தவிர்க்க முடியாததாகிறது.



உங்கள் கல்வி தகுதியோ, வசிக்கும் தலைமை பதவியோ வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பட்டை தீட்டப்பட்டு, வெளியே சோதித்தறிய பட வேண்டுமேயொழிய, கத்தியை வீசுவதற்கு உங்கள் தகப்பனோ, மனைவியோ, கணவனோ இலக்கு அல்ல. உங்கள் சாதனையை சொல்லி சிரிக்க வேண்டிய வீட்டில் அதை அதிகாரத்தோடு நிலை நிறுத்த விரும்புவது பிரச்சனையை விலை கொடுத்து வாங்குவது போல் தான். உங்களின் தகுதிக்காக கொடுக்கப்பட்ட அதிகாரம் உங்களை சுவீகாரம் செய்து கொண்டு உங்களின் சுயதன்மையை மழுங்கடித்து விடுகிறது. நீங்கள் விரும்பி அணிந்து கொண்ட முகமூடியே உங்களின் உண்மை தன்மையாக மாறிவிடும் அதிசயம் இது. ஆனால் இது உங்களின் இயல்பான வாழ்விற்கும் அமைதியான தோற்றத்திற்கும் நீங்கள் கொடுக்கும் விலை.

நகரில் பேர் சொன்னால் தெரியும் அளவிற்கு பிரபலம். Used Car Dealer. வேகமாக வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். சமீபத்தில் அவரை சந்திக்க நேர்ந்த பொழுது அவர் சொன்ன ஒரு வார்த்தை. " சொந்த பந்தங்களை காணும் போது அவமானம் பிடுங்கி தின்கிறது சார்...அப்ப கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்" என்றார். என்ன சார்.. என்ன விஷயம்.. என்றேன்.

அவர் சொன்னது. கல்யாணமான முதல் வருடம் நல்ல இருந்தது. அதன் பின் தான் பிரச்சனைகள் ஆரம்பம். வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் சுணக்கம், வீட்டிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. பணபிரச்சனை தலை விரித்தாடியது. வேறு எங்கும் முடியாமல் மனைவி வழியில் ஏதாவது புரட்ட முடியுமா என்று முயற்சிக்க பிரச்னை இன்னும் பெரிதானது. தன் மகளை வரதட்சணை கொடுமை செய்வதாக அவர்கள் வீட்டில் குற்றம் சாட்டினார்கள். இதை விட பெரிய கொடுமை எல்லா விஷயமும் தெரிந்த மனைவியே நான் கொடுமை செய்வதாக பச்சை பொய் சொன்னது தான். அதன்பின் தினமும் சண்டை தான். தினம் தினம் பஞ்சாயத்து. ஒருவருக்கொருவர் சேற்றை வாரி முகத்தில் அடித்து கொண்டோம். அந்தரங்கத்தில் நாங்கள் பரிமாறிகொண்ட எங்களின் இளவயது சிறு சிறு தவறுகள் நான்கு பேர் முன்னிலையில் பூதாகரபடுத்தபட்டு அசிங்கபடுத்தி கொண்டோம்.

பத்து வருடங்களாகி விட்டது. எல்லாம் தாண்டி வந்தாயிற்று. பணம், புகழ், வீடு என எல்லாம் சம்பாதித்து விட்டோம். ஆனால் ஒரு நல்லது, கெட்டதில் கலந்து கொள்ளும் பொது அன்று பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் தவறாமல் கேட்பது " இப்பெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லேய...அனுசரிச்சு போப்பா.." இதை கேட்டாலே அவமானம் பிடுங்கி தின்கிறது சார். தலை குனிந்து விலகுவதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை என்றார்.

நான் சொல்ல வருவதும் இது தான். குறைகள் இல்லாத மனிதர் இங்கு யாரும் இல்லை. பொறுமைதான் நமது உண்மையான செல்வம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆணாதிக்கம், பெண் சமத்துவம், பெண் சமஉரிமை என்பதெல்லாம் "பொழப்பு கேட்ட வேலை" தான் என்னை பொறுத்தவரை. உங்களிடம் காசும், அதிகாரமும் இருந்து விட்டால் நீங்கள் எது செய்தாலும் மூடி மறைக்கலாம். எல்லா அமைப்புகளும் உங்கள் பின்னால் நின்று பாதுகாப்பு கூட கொடுக்கும்.

வயிற்று பிழைப்புக்காக தன்னை நொந்துகொண்டு வரப்பு ஓரம் ஒதுங்கும் பெண்களை பிடித்து விபசாரத்தில் தள்ளும் சமூகம், காசு வாங்கி கொண்டு, தான் செய்யும் காரியத்தால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் என்று தெரிந்த, நன்கு படித்த சினிமா நடிகைகளை ஒன்றும் செய்வதில்லை. அவர்களுக்கு குடை பிடிப்பதும், கால் பிடிப்பதும் சமுக அந்தஸ்தாக கருதிகொள்கிறது. என்ன செய்கின்றன இந்த மாதர் சங்கங்கங்கள். புருஷன் மனைவி குடும்ப சண்டையில் மூக்கை நுழைத்து, மனைவியின் மனதை கெடுத்து விவாகரத்து வரை கொண்டு செல்வது தான் இவர்களின் வேலை போலிருக்கிறது. சினிமா, டிவி, வெகுஜன பத்திரிக்கை போன்ற எல்லா ஊடகங்களிலும் பெண் தன் உடலை, விற்பனை பொருளாக, சந்தை படுத்துவதை யாரும் தட்டிகேட்பதில்லை. தட்டி கேட்கவேண்டியவர்களே வியாபாரிகளாக, விற்பனை பொருளாக உள்ள போது ஆரோகியமான சமூகத்தை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு. குறைந்தபட்சம் நம்மை நாம் காபந்து செய்து கொள்வதை தவிர நம் எதுவும் செய்துவிட முடியாது.

திருமணதிற்கு பின்னும் ஏற்படும் தனிமை மிக மிக கொடியது. அவளை பிரிந்து என்னால் வாழமுடியும் என்று நினைத்தேன். ஆனால் நான் அவளின் ஆளுமைக்கு எவ்வளுதூரம் உட்பட்டிருக்கிறேன் என்பது இப்போது புரிகிறது. சமைப்பதோ, வீட்டு வேலையோ எனக்கொரு பிரச்சனையல்ல. ஆனால் அவளிலாத தனிமையை தாங்க முடியவில்லை. அவள் பேசாமல் இருந்த போது கூட நான் இந்தளவு தனிமையை உணரவில்லை. முறைப்படி விவாகரத்திற்கு அப்பளை செய்து விட்டு தனி தனியாக வாழும் என் நண்பரின் வரிகள் தான் இது. எத்தனை சத்தியம் இந்த வரிகள் என்பது குடும்பஸ்தர்களுக்கு நான்றாகவே புரியும். கட்டில் சுகம் மட்டுமல்ல தாம்பத்யம்.

நாட்டில் நிலவும் அணைத்து பிரச்சனைக்கும் நம்மால் தீர்வு காண முடியாது தான். குறைந்தபட்சம் நமது வீடு சந்தோசமாக இருந்தால், ஒரு ஆரோகியமான தலைமுறை நம்மால் உருவாக்கபட்டால் உங்கள் வாழ்வை நிறைவாக வாழ்ந்தவர்கள் ஆவீர். பெண்ணே வீட்டின் சந்தோசம். அமைதி. செழிப்பு எல்லாம். ஆணின் உண்மையான சந்தோசம் ஒரு பெண்ணின் அரவணைப்பில் தான். ஒரு பெண் தன் கணவனுக்காக, குடும்பத்திற்காக தன்னை அர்பணிப்பது எவ்வகையிலும் அடிமைத்தனம் அல்ல.

Friday, February 5, 2010

வில்வ இலை பறித்து பூசை செய்யும் அதிசய நாகம்...!!

இன்று எனக்கொரு ஈமெயில் தகவல் வந்தது. பார்த்ததும் ஒரு கணம் மெய் சிலிர்த்து போனேன். பதிவுலகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்காக இதோ..















நண்பர் அனுப்பிய ஈமெயில் தகவல் இது தான்.

Kumbakonam: At the Siva Temple in Thepperumanallur, large numbers of devotees witnessed a miracle of a Cobra doing Archana for Siva Lingam with Vilvam leaves. Just before Solar Eclipse, at about 10:30 AM Sivachariar Satish, priest of the Temple, noticed a Cobra lying on top of the Siva Linga.

The snake slowly descended from there and went towards the Vilvam tree which is the Sthala Viruksham- Holy tree of the temple. It climbed the tree and picked a Vilvam leaf and came back and entered the Sannadhi.

It hissed at any devotee trying to get near it. It climbed onto the Siva Linga and opened it hood and dropped the Vilvam Leaf. This miracle was witnessed by all devotees who were excited.

Then the Cobra went again and again to do the same repeated two or three times.

As the news spread all over the village, hundreds of villagers rushed to the Temple to have the Dharshan of this event of Cobra with Siva.

Thanks to Dinamalar / Dinakaran
15.01.2010

Tuesday, February 2, 2010

சொந்த கால்ல நில்லுன்னு சொன்னதுக்கு அர்த்தம்...!!

மனிதவரலாற்றின் மகத்தான கண்டுபிடிப்பு...!!

அமெரிக்க அராய்ச்சிகுழு (47 நாட்டின் விஞ்ஞானிகளை கொண்ட ஒரு பெரிய குழு) அவர்களின் பத்தாண்டு கால ஆராய்ச்சி குறிப்புகளை வெளியிட்டிருகிறது. ஆதாவது மனிதனின் மிக தொன்மையான உடற்பாகங்களை (எலும்புக்கூடுகள்) தேடி செல்லும் அவர்களின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக எதியோப்பவின் கடுமையான பாலைவன பரப்பில் 44 லட்சம் வருடங்களுக்கு முந்தய மனித உடற் படிமங்களை கண்டு பிடித்திருகிறது. மனித வரலாற்று பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான சான்றாக இது கருதபடுகிறது. ஆர்டிபெதகிஸ் என்று இந்த மனிதனுக்கு பெயரிட்டிருகிறார்கள்.



மனித குரங்குகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையாதாக இந்த மனித உடற் படிமங்களின் அமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது. இன்றைய விஞ்ஞானிகளின் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக நம் எல்லோருக்கும் இருக்ககூடிய ஒரு கேள்வி மனித குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்றால் இன்னும் மனித குரங்குகள் இருப்பது ஏன்..? எந்த ஒரு மனித குரங்கும் நம் காலத்தில் மனிதனாக பரிணாம வளர்ச்சி பெறாதது ஏன்..?

முக்கியமான இந்த கேள்விகளுக்கு ஓரளவு தற்போது விடை கிடைத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். மனித குரங்குகளுக்கும், அதன் மிக நெருங்கிய தொடர்புடைய ஆர்டிபெதகிஸ் மனிதனுக்கும் இருக்க கூடிய வித்தியாசங்களை இந்த உடற் படிமங்களை வைத்து ஓரளவு கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அதாவது நாலு காலில் நடந்து கொண்டிருந்த இந்த விலங்குகள் இரண்டு காலில் நடக்க தொடங்கியதின் விளைவு தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்கிறார்கள். (அதாவது இன்றைய அனைத்து விஞ்ஞான வளர்ச்சிக்கும் அடிப்படை) அப்படி என்றால் அவை நான்கு காலிலிருந்து இரண்டு காலில் நடக்க வேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டிருக்கும்...?

1 . தங்களை ஆபத்திலிருந்து காத்து கொள்ள நான்கு காலில் ஓடுவதை விட இரண்டு காலில் ஓடுவது வேகமாக இருந்திருக்கலாம். சமதளங்களை விட கரடு முரடான பாதைகளை இரண்டு காலில் கடப்பது எளிதாக இருந்திருக்க கூடும்.

2 கொஞ்சம் யோசித்து பார்த்தல் நான்கு காலில் நடக்கும் போது உங்களால் எதையாவது கொண்டு செல்ல முடியுமா (carry )..? ஆனால் இரண்டு காலால் நடக்கும் போது கையில் கொண்டு செல்ல முடியும். முக்கியமாக இரையை மிக நீண்ட தூரம் தூக்கி செல்ல இரண்டு கால்களை கையாக உபயோகபடுத்தி கொள்ளலாம்.

3 தன் இணையை கவர இரண்டு காலில் நடந்து சாகசம் செய்ய முயற்சித்திருக்கலாம், சண்டையிட்டிருக்கலாம்.

ஆர்டிபெதகிஸ் மனிதன் இரண்டு காலில் நடக்க ஆரம்பித்ததின் தொடக்ககால உருவத்திலிருந்து இரண்டு விஷயங்களை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. ஓன்று அவைகளின் கோரை பற்கள் கூர்மயகவோ, பெரிதாகவோ இல்லாமல் மனித பற்களை போல் இருப்பது. மனித குரங்கின் பற்கள், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, சண்டையிட, எதிரிகளை பயமுறுத்துவது போல் மிக பெரியதாக இருக்கும். ஆனால் அவை எழுந்து நடக்க ஆரம்பித்த காலங்களில் அவை சிறியதாக மாற என்ன காரணம் இருக்க முடியும்..? மற்றொன்று கை, கால்களில் இருக்க கூடிய பெருவிரல் மிகவும் சிறியதாக இருந்து சராசரி வளர்ச்சி அடைந்துள்ளது. (இன்றைய தோற்றத்திற்கு)

இதற்க்கு காரணமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுவது,

தன் இணையை கவர நினைத்த ஆண் குரங்குகள், பாதுகாப்பான இடங்களில் அவர்களை, குழந்தைகளை தங்க வைத்து வேட்டைக்கு கிளம்பிருக்க வேண்டும். வேட்டை முடிந்து இரையை நீண்ட தூரத்திலிருந்து கொண்டு வந்து தன் இணைக்கும், வாரிசுகளுக்கும் கொடுத்திருக்க வேண்டும். (கையில் தான் கொண்டுவந்திருக்கு முடியும்)



பாதுகாப்பான தூரங்களில் இடம் பெயர்ந்ததன் விளைவாக தங்களின் கோரை பற்களை அவை உபயோக படுத்தவேண்டியதிற்கான காரணங்கள் குறைந்திருக்க கூடும். மேலும் நேராக நடக்க ஆரம்பித்ததன் விளைவாக அவற்றுள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள புதிய வழிவகைகளை அவை அறிந்து கொண்டிருக்க கூடும். அதாவது பெண் குரங்குகள் தங்கள் இணை ஆக்ரோசமான ஒன்றாக இல்லாமல் சாந்தமனதாக, அன்பை பொழியகூடியதாக அவை தேர்ந்தெடுத்திருக்க கூடும்.

காலபோக்கில் நீண்ட கோரைப்பற்களுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. இரைக்ககவோ, தங்கள் இணையை கவர்வதற்காகவோ நீண்ட தூரம் பயணப்பட்ட ஆர்டிபெதகிஸ் மனித இனம், மனித குரங்குகூட்டதுடன் இருந்த தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனி உயிரினமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க கூடும். நான்கு காலில் நடக்கும் போது, மரத்தில் தாவும் போது அதற்க்கு ஒத்திசைவாக இருந்த பெருவிரல் நேராக நடக்க ஆரம்பித்ததன் விளைவாக அளவிலும் பயன்பாட்டிலும் மாற்றம் பெற்றிருக்கும்.





நடக்க ஆரம்பித்தான் விளைவாகவே மனிதனிடம் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தரையில் பாதங்களை அழுந்த ஊன்றும் போது அவை மனித மூளையில் பல அதுவரை பயன்படுத்த படாத சிந்தனை நரம்புகளை தூண்டிவிட்டுருக்கும். அதில் முளைவிட்டு தான் இன்று அயல்கிரக உயிரனங்களை பற்றி ஆராயும் அளவிற்கு மனிதனை உந்தி தள்ளியிருக்கிறது. அதுமட்டுமில்ல பொண்டாட்டி கிட்ட அடி வாங்காம தப்பிகறது எப்படிங்கரதிலிருந்து டூ - வீலர ஓரங்கட்டி மாமுல் வாங்கற ஐடியா வரை எல்லாமே மூளை நரம்புகளுக்குள் அடக்கம்.

இப்பதான் பெரியவங்க சொந்த கால்ல நில்லுன்னு சொன்னதுக்கு அர்த்தம் புரியுது...

நன்றி: டிஸ்கவரி சேனல் Mega Monday நிகழ்ச்சி மற்றும் சில இனைய குறிப்புகள், படங்கள்

Monday, February 1, 2010

அவன் தொழில் கொலை செய்வது..!

அவன் தொழில் கொலை செய்வது. இதுவரை 2000 - ற்கும் மேற்பட்ட உயிரை பரலோகம் அனுப்பியாயிற்று. தினம் தினம் கொலை தொழில். விடுமுறை தினங்களில் அவன் கைகள் இரத்தத்தால் குளிப்பாட்டபட்டிருக்கும். முகம் உடை என எங்கு நோக்கினும் ரத்த சிதறல்களாக தானிருக்கும். தலையா, காலா எதுவென்றாலும் அவனிடம் தனி ரேட் தான்.

இரத்தத்தை கண்டு அவனுக்கு பயமில்லை. அவன் தோற்றம் கண்டால் எல்லோருக்கும் ஒரு கிலி பிறக்கும். அவன் ஓய்ந்து இங்கு யாரும் பார்த்ததில்லை. அவனுக்கு விடுமுறையும் கிடையாது.

ஆனால் இந்த ஒரு வாரமாக அவனை பார்க்க முடியவில்லை. செய்த பாவத்திற்கு அவனக்கு என்ன கதி கிடைத்ததோ..

பெரும் தொல்லை. இனி கோழிக்கறி வாங்க வேண்டுமென்றால் மெயின் ரோட்டை தாண்டி ரொம்ப தூரம் போகணும். இந்த கோழிக்கடை சண்முகம் எங்கே பொய் தொலைந்தானோ...?!!

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...