Saturday, January 30, 2010

விலங்குகளின் பலான மேட்டர்...!!!


இப்போது டிஸ்கவரி சேனல் தமிழில் வருகிறது. விலங்குகளின் பலான மேட்டர் என்ற விஷயத்தையும் தாண்டி பல நல்ல விஷயங்களை பார்க்க முடிகிறது. (நாங்கெல்லாம் மாநகராட்சி பள்ளி தான் என்ன செய்ய...) வெள்ளைகாரனின் ஆராய்ச்சிக்குரிய விஷயம் கூட புதிது புதிதாக இருக்கிறது. பனிமலை, நீள்கடல், அடர்ந்த காடு என அவனின் காலடி படாத இடமே இல்லை போலிருக்கிறது உலகில். அது சரி வேறோர் கிரகத்தில் வாழும்
உயிரினங்களுக்கே ஆப்பு வைக்க துடிப்பவர்கள் ஆயிற்றே (அவதார் காண்க)

100 கோடி வருடங்களாக பல உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்கிறதாம். இந்த பூமிக்கு இறுதியாக வந்த விருந்தாளிகள் யார் தெரியுமா (நாம் தான்) 10 மில்லியன் வருடங்கள். ஆனால் இன்று எல்லா உயிரினங்களையும் அடிமை படுத்தி அவர்களின் வாழ்வாதரங்களை அழித்து நாம் செழித்து கொண்டிருக்கிறோம். (survival of life)

ஆதிவாசிகளின் சில பழக்க வழக்கங்கள் பிரம்மிக்க வைக்கிறது. ஸ்கை டைவிங் - உலகின் காஸ்ட்லியான திரில்லிங்கான விளையாட்டு ஹவாய் தீவுகூட்ட ஆதிவாசிகளிடமிருந்து சுட்டது தான். (குஷி படத்தில் விஜய் மேலிருந்து விழுவாரே) அழிந்து போன பல நாகரீகங்கள், மன்னர் காலத்திய வாழ்க்கை முறை, பிரம்மனடாம கட்டுமானங்கள் என வியக்க வைக்கும் பல விஷயங்களை தமிழில் அறிந்து கொள்ளமுடிகிறது.



விலங்குகளின் வாழ்க்கைமுறை, தங்களை பாதுகாத்து கொள்ள அவைகளின் தற்காப்பு திட்டங்கள், அதை புரிந்து கொண்டு ஆராய்ச்சியாளர்கள் விளக்கும் விதம் அருமை. நோஞ்சானாக இறந்தாலும் சிங்கத்தின் தோற்றம் ஒரு வித பயத்தை தருவது ஆச்சர்யம். பல நாடுகளில் பாம்புகளின் வகைகள் ஆயிரத்தில் இருந்தும், இந்தியாவில் மற்றும் அதற்கு இருக்கும் மரியாதையே தனி தான். குறிப்பாக ராஜநாகங்கள் இவை இந்திய காடுகளில் தான் அதிகம் உண்டாம்.



நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். டிஸ்கவரி சேனல் நிர்வாகத்தினருக்கு - தமிழில் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நன்றி

டிஸ்கி: தலைப்பை பார்த்து உள்ளே வந்தவர்களுக்கு நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா....
சரி சரி தள்ளி நில்லு காத்து வரட்டும்....

1 comment:

  1. இந்த பூமிக்கு இறுதியாக வந்த விருந்தாளிகள் யார் தெரியுமா (நாம் தான்) 10 மில்லியன் வருடங்கள்.

    எப்ப ஆரம்பிச்சோம் ஆப்பு வைக்கனு புரிஞ்சிருச்சு..

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...