Friday, January 22, 2010

"பசை" இல்லை என்றால்

எத்தனை முறை கோர்த்தும்
வார்த்தைகள் சிதறியோடுகின்றன...
பதிவில் பதிவு செய்யமுடியாத
துரோகங்கள்
தினம் தினம் அரங்கேறுகிறது வாழ்வில்.

முகம் அறியாதவனோ...
எதிரியின் துரோகமோ... ஒரு பொருட்டில்லை.

வளையவரும் சுற்றம்,
உலகை காட்டிய தகப்பன்,
கட்டிய மனைவியின்
துரோகங்கள் மீளமுடியாதவை.

எண்ணிக்கையில் அடங்கும் சில
காகிதங்களே
எண்ணங்களை கொல்கிறது.
"பசை" இல்லை என்றால்
உறவு கோட்டைகள் உதிர்த்து போய்விடுகிறது.

4 comments:

  1. //வளையவரும் சுற்றம்,
    உலகை காட்டிய தகப்பன்,
    கட்டிய மனைவியின்
    துரோகங்கள் மீளமுடியாதவை.//

    அழகான வரிகள்...

    ReplyDelete
  2. நல்ல கவிதை.

    "பசை" இல்லை என்றால்
    உறவு கோட்டைகள் உதிர்த்து போய்விடுகிறது". உண்மையான வரிகள்...

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...