Thursday, December 31, 2009

இன்று ஒரு பொய் கண்ணில் படவில்லை. .

எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

வழக்கம் போல இன்னுமொரு புத்தாண்டு பிறந்து விட்டது. கலாச்சார சீரழிவு என்று கூச்சல் ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கம் போல் எல்லாமே நடந்தேறி விட்டது. வாழ்த்துகளை பெற்றும் கொடுத்தும் பழக்கபட்டாகி விட்டது. நான் யாருக்கும் வாழ்த்துகளை சொல்ல வில்லை என்ற மன உருத்தல்களிளிருந்து தப்பியாயிற்று.

வாழ்த்துகளை வெறுமே வாழ்த்தும் வார்த்தைகளாக எடுத்துகொண்டு நன்றி சொல்லி
விலகி கொள்ளவேண்டியது தான். பதிலுக்கு வாழ்த்து சொன்னாலும் சரிதான். வாழ்த்து சொன்னவன் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்தால் வருடத்தின் முதல் நாளே சோர்ந்து போய் உட்கார்ந்து விட நேரிடும்.

நான் பெற்ற முதல் வாழ்த்திலிருந்து போன நிமிடம் வந்த வாழ்த்து வரை வெறும் சொற்கோர்வையகதான் இருந்தது... தினசரிகளில் அரசியல் தலைவர்களின்
வாழ்த்துக்கள் எதுவும் காணோம்...சந்தோசமாக இருக்கிறது. இன்று ஒரு பொய் கண்ணில் படவில்லை.

No comments:

Post a Comment

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...